என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday 15 February 2024

வாவ் சிக்னல் - தமிழக அரசு விருதை செய்தித்துறை அமைச்சர் திரு மு.பெ சாமிநாதன் அவர்களிடமிருந்து என் தந்தை பெற்றுக்கொண்டார்.

 12 பிப்ருவரி அதிகாலை என் அப்பா அனுப்பிய குறுஞ்செய்தியில் தான் எனது நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதே தெரிய வந்தது. 14ம் நாள் மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வந்து விருதைப் பெற்றுக்கொள்ளும்படி என் தந்தைக்கு அலைபேசியில் தகவல் சொல்லியிருக்கிறார்கள். விருதை நேரில் சென்று பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்தாலும் இத்தனை குறுகிய கால இடைவெளியில் விமானப் பயணத்திற்கு நேரமே இல்லை என்பதால் அப்பா-அம்மாவையே எனக்கு பதிலாக விருது வாங்கிக்கொள்ள அனுப்பி வைக்க வேண்டியதாகிவிட்டது. கொஞ்சம் முன்னமேயே தெரிவித்திருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை தான். விருதை நேரில் பெற பெருவிருப்பம் இருந்தும் இயலாமல் போவது இது இரண்டாவது முறை: முதலாவது 2022க்கான ஜீரோ டிகிரி இலக்கிய விருது.

என் 'வாவ் சிக்னல்' நூலுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலுக்கான விருதை செய்தித்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் திரு மு.பெ சாமிநாதன் அவர்களிடமிருந்து என் தந்தை என் சார்பில் பெற்றுக்கொண்டார்.
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...