நிசப்தங்களைக் கிழித்துவிடும் சொற்கள்
மிச்சமின்றி தன்னை
நிறைத்துக்கொண்டது நிசப்தம்
நானிருந்த அறைக்குள்...
ஒற்றைப்புள்ளியில் மையல்
கொண்டுவிட்ட விழிகளின்முன்
கடந்துபோன நிகழ்வுகளின்
அணிவகுப்பு...
நிசப்தங்களைக் கிழித்துவிடும்
சொற்களை எதிர்னோக்கி
பயணிக்கிறது என் தனிமைகள்...
அந்தச் சொற்கள்
மலரப்போகும் இதழ்கள்
எப்போது வேண்டுமானாலும்
வந்துவிடலாமென்று காத்திருக்கிறேன் நான்...
- ராம்ப்ரசாத், சென்னை ( ramprasath.ram@googlemail.com)
நன்றி
கீற்று இலக்கிய இதழ்
வல்லினம் சமூக கலை இலக்கிய இதழ்
Wednesday 23 June 2010
Subscribe to:
Posts (Atom)