என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 24 November 2023

கேலக்ஸி முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி- 2023

 கேலக்ஸி முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி- 2023ல் மொத்தம் 212  கதைகளில் சிறுகதைத் தொகுதி  நூலுக்கென தேர்வு செய்யப்பட்ட 18 சிறுகதைகளில் ஒன்றாக எனது 'போர்' சிறுகதையும் தேர்வாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  

எனது சிறுகதையைத் தேர்வு செய்த கேலக்ஸி சிறுகதைப்போட்டி நடுவர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.   

எதிர்வரும் 2024 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இச்சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிடப்படும்.


கேலக்ஸி முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி- 2023 முடிவுகள்
அனைவருக்கும் வணக்கம்,
கேலக்ஸியின் முதலாமாண்டு சிறுகதைப் போட்டியின் முடிவுகளை உங்களுக்குத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
எங்களின் எதிர்பார்ப்பைக் கடந்து வந்து குவிந்த கதைகளில் 212 கதைகள் முதல் சுற்றுக்குத் தேர்வாகின. அதிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் 92 கதைகள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகின. அதன்பின் 25 கதைகள் மூன்றாம் சுற்றுக்குத் தேர்வாகின. நிறைவுச் சுற்றுக்கு 18 கதைகள் என்றிருந்த நிலையில், எல்லாக் கதைகளும் போட்டி போட்டுக் கொண்டு மதிப்பீட்டில் முன்னும் பின்னுமாய் நிற்க, 25 கதைகளையும் முதன்மை நடுவருக்கு அனுப்பிக் கொடுத்தோம். அவரும் தனது பணிகளுக்கு இடையே, துலாக்கோல் கொண்டு தேடி, மிகச் சிறந்த பதினெட்டுக் கதைகளைத் தேர்வு செய்து, அதிலிருந்து சிறந்த 5 கதைகளைப் பரிசுக்குரிய கதைகளாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி.
இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத்தொகையான ரூ.12000-த்தை தமிழ் மீது கொண்ட காதலாலும், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நல் எண்ணத்தாலும் கல்லிடைக்குறிச்சி, தேசியக் கல்வி அறக்கட்டளை நிறுவனர், தமிழ்ப் பற்றாளர், முனைவர் ஆ. முகமது முகைதீன் அவர்கள் வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்வுடனும் நன்றியுடனும் கேலக்ஸி குழுமம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறது.
போட்டி முடிவுகள் :
முதல் பரிசுக்கதை : அமிர்தத்துளி - விஜிரவி, ஈரோடு
இரண்டாம் பரிசுக்கதை : பூரணம் - காயத்ரி.ஒய், சென்னை
மூன்றாம் பரிசுக்கதை : காலங்கள் மாறும் - அனந்த் ரவி, பெரும்பாக்கம்
சிறப்புப் பரிசுக் கதைகள்
1. : மனித யானை - ஆர். இராஜசேகரன், சென்னை
2. : சாதாரணன் சிவா - படிப்பகத்தான், கடியப்பட்டணம்
சிறுகதைத் தொகுப்புக்குத் தேர்வான மற்ற கதைகள்:
6. பாவமும் பரிகாரமும் - எம்.சங்கர், சென்னை.
7. எல்லோரும் கொண்டாடுவோம் - கல்பனா சன்யாசி, சென்னை.
8. சக்தியின் வடிவம் - எஸ். அர்ஜூன் சிவகாமிநாதன், சென்னை.
9. வடக்கிரு - மாலா மாதவன், சென்னை.
10. உனக்கும் கிழக்கு உண்டு - ப்ரஸன்னா வெங்கடேஷ், நவி மும்பை.
11. சபதம் - ஆர்.சுமதி, மஹாராஸ்டிரா.
12. ஹோம் மேக்கர் - தி.சுதா, ஸ்ரீரங்கம்.
13. சுயம் - ‘அலை ’ யுவராஜன், கல்பாக்கம்.
14. போர் - ராம்பிரசாத்
15. மீனாட்சி திருக்கல்யாணம் - மைதிலி கல்யாணி
16. நீங்கள் கேட்டவை - ஜெயசீலன் சாமுவேல் [ஜெ.சா]
17. அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் - பூபதி பெரியசாமி, புதுச்சேரி
18. இவள் வேற மாதிரி - ஜே. செல்லம் ஜெரினா, சென்னை
வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

போட்டி முடிவுகள் கலந்து கொண்ட 212 பேருக்கும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Saturday 18 November 2023

Yarkovsky Effect

Yarkovsky Effect


பென்னு ஒரு குறுங்கோள். NEO பட்டியலில் இருக்கிறது. டைனோசார்கள் அழிவுக்குக் காரணமான ஒரு அழிவை ஏற்படுத்திவிடக்கூடியது இந்த பென்னு. ஆனால், இப்போதைக்கு ஆபத்தில்லை என்று உலக நாடுகள் அறிவித்திருக்கின்றன. 


அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்; இது குறித்துப் பகடி செய்து ஒரு படம் எடுத்திருந்தார்கள். படத்தின் பெயர் 'Don't Look Up'. டிகாப்ரியோ, ஜெனீஃபர் லாரன்ஸ் நடித்த படம். முடிந்தால் பாருங்கள்; அரசாங்கங்களின் கள்ள மெளனத்திற்கு அர்த்தம் புரியும்.


Yarkovsky Effect பற்றிச் சொல்ல வேண்டும். இது என்னவென்றால், எந்தக் குறுங்கோளும் விண்வெளியில் தன் போக்கில் தன்னையே சுற்றக்கூடியது. சூரிய ஒளியின் வெப்பம் அதன் மீது படுகையில், வேதியியல் மாற்றங்களால் , சிறிய அளவில் ஆற்றல் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல், குறுங்கோளின் சுழற்சியால் உந்து விசையாக மாறுகிறது.  இந்தக் குறுங்கோள் 2182ம் வருடம் பூமி மீதே மோதலாம் என்கிறார்கள். 


இத்தனை காலம் ஏன் இந்த ஆபத்து இல்லை? திடீரென எப்படி இது முளைத்தது என்காதீர்கள்?

Yarkovsky effectஆல், இந்தக் குறுங்கோலின் சுற்றுப்பாதை ஆண்டுக்கு 934 அடி மாற்றம் காண்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்; பூமியை அழிக்கும் அளவுக்கு பூமிக்கு அருகாமையில் வர அந்தக் குறுங்கோளுக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கிறது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த விசையால், இத்தனை தசாப்தங்களாய் பூமிக்கு அருகாமையில் தொடாமல் கடந்து சென்று கொண்டிருக்கும் இப்படியான எத்தனை குறுங்கோள்கள் பாதை மாற இருக்கின்றனவோ தெரியவில்லை.  

உங்களை பயமுறுத்த இதைச் சொல்லவில்லை. Choose your priorities என்று சொல்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். நாம் வாழும் இந்த பூமி, நமது நிலம், நம் வீடு, அது அமைந்திருக்கும் தெரு, நமதென்று நாம் நினைக்கும் அத்தனையும் ஒரே நொடியில் மூட்டைப் பூச்சி  நசுக்கப்படுவது போல் நசுக்கப்படலாம். 


பூமிக்கிரகம் இதுகாறும் ஐந்து பேரழிவுகளைச் சந்தித்திருக்கிறது. ஆறாவதுக்கு மிக அருகாமையில் மனித இனம் இப்போது இருப்பதாக எண்ணம் முளைத்தபிறகு தான் அவசர அவசரமாக வேறு கிரகங்களில் வாழ முடியுமா என்று தேடத்துவங்கியிருக்கிறார்கள். Von Braun எழுதிய 1953 Mars Project ன் ஆரூடம் பலிக்கிறதா பார்க்கலாம்.


அப்படி ஒன்று கிடைக்கும் பட்சத்தில், பிழைக்கப்போவது உலகின் பெரும்பணக்காரர்கள் மட்டுமே.  எப்படி என்பதை 'Don't look up' காட்சிகளாக நகைச்சுவையாகச் சொல்லும். ஆக, பிழைக்கப்போவது நீங்களோ நானோ அல்ல.  


பூமிக்கிரகத்தின் ஐந்து பேரழிவுகளின் போதும், பேரழிவுக்கு முன் 'பேரழிவு வரப்போகிறது' என்பதை அப்போது பூமியில் வாழ்ந்த உயிர்கள் முன்னுணர சாத்தியமிருக்கவில்லை. அந்த வகையில், மனித இனம் அதிர்ஷ்டசாலி இனம் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. ஆனால், அந்த அதிர்ஷ்டமிருந்தும் நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால், இருப்பதிலேயே மடத்தனமான இனம் இதே மனித இனமாகத்தான் இருக்கும். இல்லையா? Now that we know what is in store, wrap up things quickly. 


ஏற்கனவே சொன்னது போல, கல்லூரியின் கடைசி நாளில் பிடித்தவன், பிடிக்காதன் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரின் மேலும் ஒரு அன்பு வரும்.... அதுதான் நமக்குத் தேவை...  I mean, அந்த மனநிலை வாய்க்குமென்றால், அந்த உண்மையைப் பகிர்ந்தால் தான் என்ன என்பதே என் வாதம் ...