என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 16 January 2023

பன்னாட்டு புத்தகத் திருவிழா - சென்னை

சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில்  வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்  விவரங்களுடன் அவர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  இந்தப் பயணம் தொடரும். 

முதன்முறையாக சென்னையில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழா மிகச்சிறப்பாக தொடங்கியுள்ளது. இதில் அமெரிக்கா,கனடா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டன.  அடுத்தடுத்த ஆண்டுகளில் இது மேலும் விரிவு செய்யப்பட்டு தமிழ் நூல்கள் பிற மொழிகளுக்கும்,பிற மொழி நூல்கள் தமிழுக்கும் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்று நம்பலாம். 





குவிகம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பில் எனது 'கண்ணாடிச்சுவர்' சிறுகதை

குவிகம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பில் எனது 'கண்ணாடிச்சுவர்' சிறுகதை



குவிகம் மற்றும் பிரபாராஜன் அறக்கட்டளை இணைந்து நடத்திய  சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதைகள் அடங்கிய 'சோளக்காட்டு பொம்மை தேர்ந்தெடுத்த சிறுகதைகள்' தொகுப்பில் எனது 'கண்ணாடிச்சுவர்' சிறுகதை இடம் பெற்றுள்ளது.  இச்சிறுகதையும் அறிவியல் புனைவுச் சிறுகதையே. இத்தொகுப்பைப் பற்றிச் சொல்வதானால், பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது; மொத்தம் முப்பது சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. 

நிகழும் புத்தகத் திருவிழாவில் இந்நூல் தள்ளுபடி விலையில் விற்பனையில் இருக்கிறது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வாசக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.  தொகுப்பு நூலின் அட்டைப் படத்தை இங்கே இணைத்திருக்கிறேன். 




Thursday 5 January 2023

46வது சென்னைப் புத்தகக் கண்காட்சி

46வது சென்னைப் புத்தகக் கண்காட்சி


தம் எழுத்தை அச்சில் காண்பதன்றி ஒரு எழுத்தாளனுக்கு வேறெது பேருவகையைத் தந்துவிடப்போகிறது?  ஆனால், அச்சில் கொணர்வது அத்தனை லேசான காரியமா என்ன?. 

இலக்கியம் தெரிந்தவர்கள் ஏற்க வேண்டும்; அங்கீகரிக்க வேண்டும்; அவ்விதம் ஏற்கப்பட்டதிலேயே நம்முடையது சிறப்பு கவனிப்பும் தேர்ச்சியும் பெற வேண்டும்; அதனை 'இலக்கிய வாசகர்களின் தேவை/தேடல்' உணர்ந்த ஒரு பதிப்பாளர் ஏற்கவேண்டும்; அச்சுக்குக் கொண்டுவர முன்வரவேண்டும். சந்தைப்படுத்த வேண்டும்; மக்களைச் சென்றடைய வேண்டும். 

ஒரு தொகுப்பு, இது எல்லாவற்றையும் எளிதில் சாத்தியப்படுத்திவிடக்கூடிய ஒன்று. 

ஜனவரி 6 முதல் 22 வரை, 46வது சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த முறை, என் பங்களிப்பு தொகுதி நூல்களில் தாம் அதிகம்.

1. 'சோஃபி' சிறுகதை 'மாசறு பொன்' தொகுப்பில் இடம் பெறுகிறது.

2. கதம்பம் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 'எப்போதும் பெண்' சிறுகதை, 'புராதன ஏலியன்கள்' தொகுப்பில் இடம் பெறுகிறது.

3. 2022ம் ஆண்டிற்கான ஜீரோ டிகிரி இலக்கிய விருது வென்ற 'சோஃபியா' சிறுகதை '2022- ஜீரோ டிகிரி இலக்கிய விருது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்' தொகுப்பில் இடம்பெறுகிறது.

4. குவிகம் வெளியிடும் சிறுகதைத் தொகுப்பில் எனது 'கண்ணாடிச்சுவர்' சிறுகதை இடம்பெறுகிறது.

இது மட்டுமல்லாமல்,  கணித நாவலான 'உங்கள் எண் என்ன?' சில மாறுதல்களுடன் '220284' என்ற தலைப்பில் கிடைக்கிறது.  'வாவ் சிக்னல்' அறிபுனைச் சிறுகதைத் தொகுதி நூல் படைப்பு ஸ்டாலில் கிடைக்கும்.