என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 30 April 2012

பூட்டுகளைத் திறக்கும் சாவிகள்


பூட்டுகளைத் திறக்கும் சாவிகள்
பூட்டுகளை உடைத்தெறியும்
சாவிகளை
எவரும் தேடுவது போல்
தோன்றவில்லை...

பூட்டுகள்
செருகியிருக்கும் சுவர்களைப்
மூர்க்கமாக உடைத்துத்
திறக்கிறார்கள்...

உடைத்த சுவர்களை
பட்டுத் துணி கொண்டு
மறைக்கிறார்கள்...

பூட்டுகளைத் திறக்கும்
சாவிகளைச் செய்யும்
கொல்லனை எவரும்
கண்டுகொள்ளவில்லை...





நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5552)

மிஞ்சும் மெளனம்


மிஞ்சும் மெளனம்
துரோகி ஒருவன்
புறமுதுகில் பேசுகையிலும்,

வார்த்தைகளைத் தப்பர்த்தம்
கொண்டவன் விலகி நடக்கையிலும்,

நுனிக் கிளையில் அமர்ந்தவன்
அடிக்கிளையை வெட்டுகையிலும்,

வார்த்தைகளை நம்பாதவனின்
விஷமச் சிரிப்புகளிலும்,

இனி விளக்கி
பயனில்லையெனும் போதும்,

எந்த விளக்கமும்
பயனளிக்காதெனும் போதும்

மெளனமே மிஞ்சுகிறது...



நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5552)

Monday 23 April 2012

தொலையும் வாழ்க்கை


தொலையும் வாழ்க்கை
நம் பயணங்களை
எப்போதும்,
எதை நோக்கியேனும்,
தொடர்ந்தபடியே இருக்கிறோம்...


கடக்க நேரும் எல்லாவற்றிலும்
எங்கேனும் இடையில் நுழைந்து,
எங்காவது இடையில் வெளியேறிவிடுகிறோம்...


இடைப்பட்ட பாதைகளில்
பரிதாபமாய் தொலைகிறது
வாழ்க்கை...


நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5523)

Tuesday 10 April 2012

ராணி (15.4.2012) வார இதழில் என் க‌விதைக‌ள்

15.4.2012 தேதியிட்ட ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'இனிக்கும் இற‌ப்புக‌ள்' என்ற‌ க‌விதையும், 'தாக‌ நிலா' என்ற‌ க‌விதையும் ப‌க்க‌ம் 42 ல் வெளியாகியிருக்கிறது. க‌விதைக‌ள் வெளியான ராணி வார இதழின் 42 வ‌து ப‌க்க‌த்தின் பிர‌தி இங்கே.


இனிக்கும் இறப்புகள்


இந்தத் தேயிலை
என்றோ இறந்திருக்கவேண்டும்...

பசுவின் உதிரத்தில்
க‌டைசி உயிர்
பாலாகிவிட்டிருக்க‌வேண்டும்...

கரும்பு தன்னைப்பிழிந்து
சர்க்கரைக்கு தன்
உயிரை அளித்திருக்கவேண்டும்...

உயிரற்ற தேனீர்
எத்தனை இனிக்கிறது?...


தாகம்



அகண்ட மதிலின் மடியில்
சிறு குட்டையென‌
தேங்கிக்கிடந்த நீரில்
தாகம் தணித்துக்கொண்டிருந்தது
உச்சி வெய்யில்...


ஒரு சிட்டுக்குருவி,
ஒரு துறுதுறு அணில்,
ஒரு சிறிய மியாவ்
என ப‌கிர்ந்துகொண்ட‌ நீரை
பொழுது சாய்ந்தும் வெய்யில்
விடுவ‌தாயில்லை...


நடுநிசியில்
ஒர் இனம்புரியா கண்விழிப்பில்
வெய்யிலை விர‌ட்டிவிட்டு
தாக‌ம் த‌ணித்துக்கொண்டிருந்த‌து
பால் நிலா ...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


நன்றி
ராணி (15.4.2012) குடும்ப வார இதழ்.

என் கவிதைகளை வெளியிட்ட ராணி வார இதழ் ஆசிரியர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.