என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 14 January 2012

பிழைச்சமூகம்

பிழைச்சமூகம்

மண்ணைப் பிழிந்து
நீரை உரிஞ்சுகின்றன
ஆலமரத்தின் வேர்கள்...

தனக்கான நீரின்றி
துவள்கிறது அருகிலேயே
செவ்வாழையொன்று...

குடியோன் பசிக்கு
நிழலை அள்ளியள்ளித்
தந்துவிட்டு கைபிசைந்து
நிற்கிறது ஆலமரம்...

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
வடக்குவாசல் கலை இலக்கிய இதழ் (டிசம்பர் 2011)