என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday 27 March 2013

ஒப்பனைகள் கலைவதற்கே - சமூக‌ குறுநாவல்


ஒப்பனைகள் கலைவதற்கே ‍- சமூக குறுநாவல்

இன்று...

தேவியின் கண்மணியின் 03.04.2013 தேதியிட்ட இந்த வார இதழில் 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பிலான எனது முதல் சமூக குறுநாவல் வெளியாகிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த மார்ச் 8ம் திகதி, அண்ணா சாலையில் உள்ள தேவியின் கண்மணி அலுவலகத்தில் குறுநாவலை பகிர்ந்துகொண்டது துவங்கி வெளியான இன்றுவரை சுவையான நிகழ்வுகள் பல. அவற்றையெல்லாம் மிகப்பொறுத்தமான தருணமொன்றில் பகிர்ந்துகொள்ள‌வென‌ சேமிக்கிறேன்.

எனது குறுநாவலை தேர்ந்தெடுத்து வெளியிட்டமைக்கு தேவியின் கண்மணி ஆசிரியர் குழுவுக்கும், மற்றும் நிர்வாக குழுவுக்கும் முதற்கண் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

குறுநாவல் மிக அழகாக வந்திருக்கிறது.

பிரபல ஓவியர் மாருதி மிக மிக அழகாக மூன்று சித்திரங்கள் வரைந்திருக்கிறார். குங்குமம் இதழில் வெளியான எனது ஒரு சிறுகதைக்கும் அவரே தான் வரைந்திருந்தார். எனது முதல் குறுநாவலுக்கும் அவரே வரைந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறுநாவ‌லின் அட்டைப் பக்கம் ம‌ற்றும் பின்ப‌க்க‌ங்க‌ளின் பிர‌திக‌ள் இங்கே.



குறுநாவல் வாசிக்க கிடைத்த நண்பர்கள், உங்கள் கருத்துக்களை என்னுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்