என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 22 April 2024

வாகை இலக்கிய கூடல் - மயிலாடுதுறை - வாவ் சிக்னல் - நூல் அறிமுகம்

 மயிலாடுதுறை நான் பிறந்த ஊர். அப்பாவுக்கு அரசு பி.டபிள்யூ.டீ யில் உத்தியோகம் என்பதால் 3-4 வயது இருக்கையிலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டோம். ஆயினும், வருடா வருடம் விடுமுறைக்கு, திருவிழாக்களுக்கு என்று மயிலாடுதுறை வருவது வழக்கமாக இருந்தது. 2005 வரை ரயில் மற்றும் பேருந்துப் பயணங்கள். 2005 முதல், வைத்தீஸ்வரன் கோயிலில் நிறுத்தி சாமி கும்பிட்டுவிட்டு மயிலாடுதுறை செல்வது வழக்கமாகிப்போனது. மயிலாடுதுறையை அடுத்த பேரளம் ஊரில் சில வருடங்கள் தாத்தா குடிபெயர்ந்திருந்தார். பேரளம் ஊர் துவங்குவதே ஒரு சிறிய கோயிலில் தான். அந்தக் கோயிலுக்கு அருகாமையில் தான் வீடு. ஆக கோயில் தான் எங்கள் விளையாட்டுத்தளமே.

அப்போதெல்லாம் மாலையானால் சித்தி, மற்றும் மாமா பிள்ளைகளுடன் நடந்தே பேரளம் ரயில் நிலையம் செல்வோம். அங்கே அப்போதெல்லாம் காலை, மாலை இரண்டே ரயில்கள் தான் வரும். ரயில் நிலையத் தண்டவாளத்தில் எங்களை விளையாட விட்டுவிட்டு பெரியவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். எங்கள் வீட்டில் அரசு அலுவலர்கள் ஏராளம். ஒரு சித்தி, அப்போது திருத்துறைப்பூண்டியில் சப்-கலெக்டராக இருந்தார். மாமா  மின்சார வாரியத்தில் பொறியாளராக குற்றாலத்தில் பணியில் இருந்தார். பெரியப்பாவும் மின்சார வாரியத்தில் பொறியாளரே.

பொறியியல் ஏ.வி.சி ல் தான் படிப்பதாக இருந்தது. கடைசி நிமிடத்தில் தான் ஜெரூசலேம் பொறியியல் கல்லூரி என்றானது. இன்னும் எத்தனையோ சொல்லலாம். இப்போது நினைத்தாலும் பசுமையான நினைவுகள்.

எதிர்வரும் 28ம் திகதி அன்று மயிலாடுதுறையில் வாகை இலக்கியக் கூடலின் நூல் அறிமுகக்கூட்ட நிகழ்வில் எனது தமிழக அரசின் சிறந்த சிறுகதை நூல் விருது பெற்ற 'வாவ் சிக்னல்' நூலும் இடம்பெறுகிறது. 

நான் பிறந்த ஊரில், எனது நூல் அறிமுகம் நடைபெறுவது இதுவே முதல் முறை. அதைச் சாத்தியப்படுத்தும் வாகை இலக்கிய கூடல் அமைப்புக்கும், ஒருங்கிணைக்கும் தோழர் முருக தீட்சண்யா அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். 

வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளவும்.





Wednesday 27 March 2024

ஜெரூசலேம் பொறியியல் கல்லூரி - சென்னை

 


வருடம் 1998.

அண்ணா பல்கலைக்கழகத்தில் DOTE single window system முறையில், கல்லூரி தேர்வு செய்ய வேண்டும். என் முறை வந்தபோது எந்தக் கல்லூரியைத் தெரிவு செய்வது என்று குழப்பம். 

பல கல்லூரிகளின் இணையப்பக்கத்தைத் தேடி முன்னாள் மாணவர்களின் சாதனைகள், placement தரவுகள் தான் அடிப்படை. அதை வைத்துத்தான் கல்லூரியின் தரம் குறித்து ஒரு அனுமானத்திற்கு வரவேண்டி இருக்கும். எல்லோருக்குமே தெரிந்த நடைமுறை இதுதான்.


மயிலாடுதுறை AVC

சென்னையில் ஜெரூசலேம்

இவ்விரண்டு தான் 1998ல் எனக்கு இருந்ததிலேயே சிறந்த ஆப்ஷன்கள். மயிலாடுதுறை AVC ஓகே தான். ஆனால், சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு இடம் பெயர்ந்து ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டி இருந்தது.

சென்னையில் ஜெரூசலேத்தில் அந்த இடமாற்றம் பிரச்சனை இல்லை. ஆனால், 1995ல் திறக்கப்பட்ட கல்லூரி. முதல் batch மாணவர்களே இன்னும் வெளியே வந்திருக்கவில்லை. இருப்பினும் ஜெரூசலேம் கல்லூரியைத் தேர்வு செய்தது, அது சென்னையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத்தான். 

இன்று அதே கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் Distinguished Alumni பட்டியலில் கல்லூரியின் தரம் குறித்து சான்றளிக்கும் இடத்தில் இருப்பது பெருமகிழ்ச்சி. 

(படத்தைப் பார்த்துவிட்டு, பொறியியல் படித்து விட்டு இலக்கியம் பக்கம் ஒதுங்கிவிட்டான் என்று நினைக்கவேண்டாம். கல்லூரி முடித்த ஆண்டிலிருந்து இன்றுவரை கணிணி மென்பொருள் துறையில் WIPRO, TCS, CSC, CAPGEMINI போன்ற  நிறுவனங்களுக்காய் இன்றளவும் பணியில் இருந்துகொண்டே தான் எழுத்து வாழ்வும் பயணிக்கிறது என்பதைக் கூறிக்கொண்டு....)

 ஆம். உண்மையிலேயே அனாயாசமான கல்லூரி தான். மாணவர்களின் நலனின் உண்மையான அக்கறை கொண்ட ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகம். தைரியமாகச் சேர்ந்து படிக்கலாம்.




Tuesday 26 March 2024

Horror - Lightning - QuailBell Magazine

How often do writers end up becoming movie makers? When they do, it's inspiring.

Christian Stoddard, who was the then founding editor of Quail Bell Magazine (which seems still running), has become that inspiring one. "Sirena's Gallery" is her work as a feature film available for watching in Tubi.

Our roads last crossed with my unreal " Lightning " in 2015. I am glad someone I knew and have worked with has made it with a gentle nod - "Yes, it is possible."

http://www.quailbellmagazine.com/the-unreal/fiction-lightning

I wish her good luck!!




 

Saturday 23 March 2024

'தோப்பு' தொகுதியில் எனது 'போர்' சிறுகதைக்கு வந்த மின்னஞ்சல்

 'தோப்பு' தொகுதியில் எனது 'போர்' சிறுகதைக்கு வந்த மின்னஞ்சல்....வாசகருக்கு நன்றிகளும், அன்பும்....






Tuesday 19 March 2024

அரூ அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு நூல்

அரூ அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு நூல் எழுத்துப் பிரசுரம் வாயிலாக வெளியாகியிருக்கிறது. எனது 'தழுவு கருவி' சிறுகதை இடம்பெறும் இது நான் பங்குபெறும் ஏழாவது தொகுப்பு நூல் ஆகும்.

சிறுகதை நூலைப் பெற பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

https://www.zerodegreepublishing.com/products/aroo-ariviyal-sirukathaigal-4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4


Aroo's fourth Science Fiction and fantasy anthology, which includes my short story 'Thazhuvu Karuvi,' is out now through Ezhuthu Prasuram. 

Click the link below to secure your copies.

https://www.zerodegreepublishing.com/products/aroo-ariviyal-sirukathaigal-4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4




Wednesday 6 March 2024

சரோஜாதேவி புத்தகம் - பின்னூட்டங்கள்

சமீபத்திய சிறுகதைகளுக்கு வந்த பின்னூட்டங்கள்!..

Reviews/Feedback on recent short stories...

சொல்வனம்

https://solvanam.com/2024/02/11/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

இச்சிறுகதையின் ஒலி வடிவத்தை Saraswathi Thiagarajan  அவர்கள் தன் இனிமையான குரலில் பதிந்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவரது குரலில் சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்: 

https://www.youtube.com/watch?v=utch_UDt5Yw 




Thursday 15 February 2024

வாவ் சிக்னல் - தமிழக அரசு விருதை செய்தித்துறை அமைச்சர் திரு மு.பெ சாமிநாதன் அவர்களிடமிருந்து என் தந்தை பெற்றுக்கொண்டார்.

 12 பிப்ருவரி அதிகாலை என் அப்பா அனுப்பிய குறுஞ்செய்தியில் தான் எனது நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதே தெரிய வந்தது. 14ம் நாள் மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வந்து விருதைப் பெற்றுக்கொள்ளும்படி என் தந்தைக்கு அலைபேசியில் தகவல் சொல்லியிருக்கிறார்கள். விருதை நேரில் சென்று பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்தாலும் இத்தனை குறுகிய கால இடைவெளியில் விமானப் பயணத்திற்கு நேரமே இல்லை என்பதால் அப்பா-அம்மாவையே எனக்கு பதிலாக விருது வாங்கிக்கொள்ள அனுப்பி வைக்க வேண்டியதாகிவிட்டது. கொஞ்சம் முன்னமேயே தெரிவித்திருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை தான். விருதை நேரில் பெற பெருவிருப்பம் இருந்தும் இயலாமல் போவது இது இரண்டாவது முறை: முதலாவது 2022க்கான ஜீரோ டிகிரி இலக்கிய விருது.

என் 'வாவ் சிக்னல்' நூலுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலுக்கான விருதை செய்தித்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் திரு மு.பெ சாமிநாதன் அவர்களிடமிருந்து என் தந்தை என் சார்பில் பெற்றுக்கொண்டார்.
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...



Tuesday 13 February 2024

வாவ் சிக்னல் - தமிழக அரசின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது (2020) பெறுகிறது

 வாவ் சிக்னல் - தமிழக அரசின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது (2020) பெறுகிறது

*******************************************************
எனது 'வாவ் சிக்னல்' விஞ்ஞானச் சிறுகதைத் தொகுதி நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலாகத் தேர்வாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது இந்த அறிபுனைச் சிறுகதைத் தொகுதிக்கு மாநில அரசின் விருது கிடைத்திருப்பது மட்டட்ட மகிழ்ச்சியையும், மென்மேலும் தீவிரமாக இயங்க உத்வேகத்தையும் தருகிறது.
மாநில அரசு விருதாளர்களின் பட்டியலில் இணையச்செய்ததில் மாநில அரசுக்கும், தேர்வுக்குழுவுக்கும், இந்த இயற்கைக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். 🙏🙏🙏
விருதுக்கென எனது நூல் அனுப்பப்பட்டதே எனக்குத் தெரியாது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். விருதுக்கென என் நூலை அனுப்பி வைத்ததற்கு ஒரு பதிப்பாளரின் கடமை உணர்வுடன் அனுப்பி வைத்த பதிப்பாளர் ஜின்னா அவர்களுக்கு எனது பிரத்தியேக நன்றிகள்.🙏🙏🙏
All reactions:
Kamaraj M Radhakrishnan, Rajesh Vairapandian and 16 others

Sunday 11 February 2024

சரோஜாதேவி புத்தகம் - அறிபுனைச் சிறுகதை - சொல்வனம்

 சொல்வனம் 312வது இதழில் எனது அறிபுனைச் சிறுகதை 'சரோஜாதேவி புத்தகம்' வெளியாகியிருக்கிறது.

சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றிகள்...
சிறுகதையை சொல்வனம் இதழில் வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.