அறிவிப்பு!!
சர்வதேச அளவில் அறிவியல் புனைவிதழ்கள் குறித்து நமக்கெல்லாம் ஒரு பொதுவான பரிச்சயம் இருக்கிறது. Analog, Asimov, Clarkesworld போன்றவை அவற்றுள் சில.
இவை எதனால் பிரபல்யமான இதழ்களாக இருக்கின்றன? வார்த்தை ஒன்றுக்கு எட்டு சென்ட் வீதம் எழுத்தாளர்களுக்கு வெகுமதி வழங்குவதால். அதென்ன கணக்கு வார்த்தைக்கு எட்டு சென்ட்? இதை நிர்ணயிப்பது யார்? அதென்ன சொல்லி வைத்தாற்போல் Analog, Asimov, Apex போன்று எல்லா இதழ்களிலும் ஒரே வெகுமதி: ஒரு வார்த்தைக்கு ஒரு சென்ட்?
இதற்குக் காரணம், ஒரு அமைப்பு. அதன் பெயர் Science Fiction and Fantasy Writer's Association. சுருக்கமாக, SFWA. மேற்சொன்ன இதழ்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது இந்த SFWA தான். இந்த இயக்கம் தான் சர்வதேச தரத்திலான அறிவியல் புனைவுகளுக்கான இலக்கிய தரம் நிர்ணயித்தல், இலக்கிய இதழ்களை ஒருங்கிணைத்தல், அறிவியல் புனைவெழுத்தாளர்களுக்கான வருவாயை/ஆக்கத்திற்கான சன்மானத்தை நிர்ணயித்தல், அது எழுத்தாளரைச் சென்றடைகிறதா என ஊர்ஜிதம் செய்தல், என்பன போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்து முறையாக நிர்வகிக்கிறது.
வார்த்தைக்கு எட்டு சென்ட் என்பது இந்த அமைப்பு நிர்ணயிக்கும் விலை/சன்மானம் தான். இத்தகு இதழ்களை Professional Market என்றும், இதில் விலைபோகும் எழுத்துக்களை Professional Sales என்றும், இத்தரத்திலான ஆக்கத்தை எழுதிய எழுத்தாளரை, Professional Writer அல்லது Pro-Writer என்றும் விளிப்பது சர்வதேச அறிவியல் புனைவிலக்கிய வெளியில் நடைமுறை தான். அதே போல, இந்த அமைப்பில், இந்த விலையில் ஆக்கத்தை விற்பனை செய்வது, இந்த அமைப்பில் உள்ள எல்லா இதழ்களின் தரத்தை எட்டியதாகவே கருதப்படுகிறது.
சமீபத்தில் எனது 'Mismatch' சிறுகதையை இந்த முறையில் Protocolized இதழுக்கு விற்ற வகையில், இந்தத் தரத்தை எட்டியிருக்கிறேன் என்பதை இணைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இத்தருணத்தில் ஈதனைத்தும், எல்லாம் வல்ல இறைவனின் அருளன்றி வேறல்ல என்பது திண்ணம். இறைவனுக்கும், இந்த இயற்கைக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
ஆதலால், இனி வரும் காலங்களில் என்னை 'Professional Writer' அல்லது 'Pro-Writer' என்று விளிப்பது பொறுத்தமாக இருக்குமென்பதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் பிரதிநிதியாக, சர்வதேச அறிவியல் புனைவிலக்கிய அமைப்பின் உறுப்பினராக உருவாகியிருப்பது, உலகம் முழுவதும் பரவி விரிந்திருக்கும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடயம் மட்டுமன்றி, சர்வதேச அரங்கில் நிகழ்காலத் தமிழ்ச்சமூகத்தின் அறிவியல் தேடலுக்கான அடையாளமாகக் கொள்ளலாம் என்பது என் பரிந்துரை.
பொதுவிலேயே எனது வாசிப்பு குறைவு தான். இதில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அமெரிக்காவில் வழங்கப்படும் 'Nebula Awards' போன்ற பல விருதுகளுக்கு வாக்களித்து விருதாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கடமை உள்ளவர்கள் என்பதால், சக வாக்காளர்களுடன் விவாதங்களில் ஈடுபட ஏதுவாக இருக்கவேண்டி, சர்வதேச அறிவியல் புனைவிலக்கியம், அதன் சரித்திரம், பூகோலம் எல்லாவற்றையும் அவசரஅவசரமாக தேர்வுக்குப் படிப்பது போல் படித்துக்கொண்டிருக்கிறேன்.
இது, சில காலத்திற்கு தமிழில் எழுதுவதை சற்று சிக்கலாக்கும் என்றே கருதுகிறேன். ஆயினும், தொடர்ந்து சிறுகதைகள் கொணர முயல்கிறேன். நண்பர்கள் பொறுத்தருள்க. எழுத்து முழு நேரப் பணி இல்லை என்பதால், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மேலாண்மை செய்வதில் விழி பிதுங்குகிறது. எனினும் முயற்சிக்கிறேன். நன்றி.
Saturday, 25 October 2025
அறிவிப்பு!!
Saturday, 18 October 2025
****PROFESSIONAL SALES****
****PROFESSIONAL SALES****
--------------------------------------------------
For a few months now, I have had to keep a secret. Naturally, I was itching to tell it to the whole world. Well, the time is here now.
My science fiction story was accepted in Protocolized a few months ago. I am beyond excited to say that the story is out now. Here's the link. Go read!
https://protocolized.summerofprotocols.com/p/mismatch
Another important part with this is, this is a 'professional sale' (well above pro-rates).
Monday, 13 October 2025
ஆஸ்திரேலிய அறிவியல் புனைவிதழில் எனது சிறுகதை
இணைய நண்பர்களுக்கு,
ஒரு ஆஸ்திரேலிய அறிவியல் புனைவிதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகத் தேர்வாகியிருக்கிறது. இதழ் ஆசிரியரான Ion Combe, இதழின் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பவும் எனது சிறுகதையைத் தெரிவு செய்திருப்பதால், சிறுகதைக்கு ஒலி வடிவம் தர நல்ல குரல் வளம் கொண்ட narrator தேவை.
யாருக்கேனும் விருப்பம் இருந்தால் உள்பெட்டிக்கு வரவும்.
நன்றி.
Dear friends,
An Australian Science Fiction magazine has chosen one of my short stories to feature in its upcoming issue. The editor, Ion Combe, has requested an audio version as he wants to air the piece(in English) in Australia & New Zealand.
Any narrator in the network, interested, please inbox me.
Thanks
Ramprasath
Tuesday, 7 October 2025
நான் வாசித்த எழுத்துக்கள் - 3
நான் வாசித்த எழுத்துக்கள் - 3
சுஜாதா, பாலகுமாரன் என்று வாசிப்பு வழி எழுத்துக்கள் நுழைந்திருந்த காலம் அது. கீற்றுவில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். Speculative Fiction வகையறாக்கள் தான். அப்போது உயிர்மை பதிப்பகம் உயிரோசை என்றொரு இணைய வார இதழ் துவங்கினார்கள். அதில் எழுதத்துவங்கியிருந்தேன்.
சீனியர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்பது கல்லூரி முதலாம் ஆண்டில் கற்ற பாலபாடம்.
தமிழ் எழுத்துலகின் மும்மூர்த்திகளான சாரு, ஜெமோ, எஸ்.ரா மூவரையும் ஒரே நேரத்தில் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது பணி நிமித்தம் லண்டனில் இருந்தேன். அதிகாலை ஐந்தரை மணிக்கே அலுவலகம் வந்துவிடுவேன். அப்போது அலுவலகமே வெறிச்சோடிக்கிடக்கும். மடிக்கணினியைத் திறந்ததுமே சாரு, ஜெயமோகன், எஸ்.ரா பக்கங்களை ஏதோ அலுவலகத்துக்கு வந்தால் அடையாள அட்டையைத் தேய்ப்பது போல், தினசரி இந்த மூவரின் இணைய பக்கங்களை வாசித்துவிட்டுத்தான் அந்த நாளே துவங்கும்.
துரதிருஷ்டம் என்னவென்றால், அப்போது உடன் பணியில் இருந்தவர்களில் யாருக்குமே வாசிப்புப் பழக்கம் இருக்கவில்லை. அதனால், வாசிப்பது, எனக்குள் அசை போடுவது, இணையத்தில் மற்றவர்கள் விமர்சனங்களைப் படிப்பது, எழுதுவது என்று இருந்த காலகட்டம்.
சாருவின் நான் லீனியர் எழுத்து, எழுத்தையே வேறு விதமாகப் பார்க்க அணுக வைத்தது. அவருடைய ஜீரோ டிகிரி நூலை வாங்கி வாசிக்க வைத்திருந்தேன். அம்மா இரண்டு பக்கங்கள் புரட்டிப் பார்த்துவிட்டு, கடுமையாகத் திட்டினார். பின், ஒளித்து மறைத்துத்தான் படித்து முடிக்க வேண்டி இருந்தது. ஜெமோ பக்கங்களில் நிறைய இலக்கிய சிறுகதைகள், இலக்கிய சர்ச்சைகள், விமர்சனங்கள் பகிரப்படும். எஸ்.ராவின் எனது இந்தியா போன்ற நூல்களைத் தேடி வாங்கி வாசித்தேன். கே.கே.நகரில் இருந்த மறைந்த எழுத்தாளர் ஞானி அவர்களின் கேணி இலக்கிய சந்திப்பு நிகழ்வில் எஸ்.ராவை ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தன் எழுத்துக்கென 'தேசாந்திரி' பதிப்பகம் துவங்கியிருந்தார். அதற்குள் பணி நிமித்தமாக அமெரிக்கா வரவேண்டியதாகிவிட்டது.
அமெரிக்கா வந்த பிறகு இணையம் மட்டுமே வழியாகிப்போனது. ஆதலால், கண்ணில் படுவது எல்லாவற்றையும் வாசிக்கத்துவங்கினேன். கிட்டத்தட்ட, தமிழ்ச்சூழலில் நடப்பில் எழுதும் எல்லா எழுத்தாளர்களையும், குறைந்தபட்சம் அவர்களின் ஒரே ஒரு ஆக்கத்தையாவது இணையமென்னும் மாபெரும் கடலில் இருந்து பொறுக்கியெடுத்து நான் ஒரே ஒரு முறையேனும் வாசித்திருப்பேன் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ஆனால், என்னால் எதைச் சொல்ல முடியாதென்றால், இத்தனை எழுத்தாளர்கள் குறித்து, நான் வாசிக்க நேர்ந்த அவர்களின் அந்த ஒரு ஆக்கத்தை வைத்து என்னால் எந்த தீர்மானத்துக்கு வர முடியாது என்பது தான். ஏனெனில், இங்கே அமெரிக்காவில் வேலையை தக்க வைக்கும் பிரயத்தனத்திலேயே பெரும்பான்மை நேரங்கள் கழிந்துவிடுகிறது. வாசிக்கக் கிடைக்கும் நேரத்தில் பெருமளவு எழுத்திற்கும், மொழிபெயர்ப்புக்கும் போய் விடுகிறது. இந்தப் பின்னணியில், வாசிக்க நேரமே இருப்பதில்லை.
கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டுப் பார்த்தால் எனக்குக் கிடைப்பது இதுதான். இதுவரையில் எழுதியவர்கள் எல்லோரையும் வாசித்த பிறகு தான் எழுத வர வேண்டும் என்றால், அதற்கு ஆயுள் போதாது. வாசிப்பே இல்லாமல் இருத்தலும் சரியில்லை. ஆக, வாசிப்பது பாதி, எழுத்து மீதி என்பதுதான் சரியான விகிதாச்சாரம். தமிழ் இலக்கிய உலகம் என்பது ஒரு பரந்துபட்ட களம். அதில் தேர்ச்சி என்றொரு நிலையே கிடையாது. நாம் எல்லோரும் மாணவர்களே. எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற ஒரே ஒருவர். எஞ்சிய எல்லோரும் 'முயற்சிப்பவர்கள்' மட்டுமே. ஆகையால், காலத்தின் போக்கினூடே எழுத்தோடு கிடைக்கிற நேரத்தில், தேவைக்கு ஏற்ப வாசித்தல் தான் எனக்குச் சரியாக வருகிறது. அதை தான் நானும் செயல்படுத்துகிறேன்.


