Monday, 28 November 2011

பிழைச்சமூக‌ம்


பிழைச்சமூக‌ம்


மண்ணைப் பிழிந்து
நீரை உரிஞ்சுகின்றன
ஆலமரத்தின் வேர்கள்...


தனக்கான நீரின்றி
துவள்கிறது அருகிலேயே
செவ்வாழையொன்று...


குடியோன் பசிக்கு
நிழலை அள்ளியள்ளித்
தந்துவிட்டு கைபிசைந்து
நிற்கிறது ஆலமரம்...

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
திண்ணை இணைய இதழ் (http://puthu.thinnai.com/?p=6403)