Tuesday, 13 September 2011

உதிரும் மின்மினிகள்


உதிரும் மின்மினிகள்


ஆலமரத்தினடியில்
மழைக்குச் சில
ரயில் நிலையங்களும்
ஒதுங்கிவிடுகின்றன...

இரவு வானத்தைத் துளைத்துப்
புகும் பால்வெளிகளை
மின்மினியென‌ நினைத்து
கவர்ந்துவிடுகின்றன
ஆலம் இலைகள்...

இலைகளினின்றும் சொட்டுசொட்டாய்
உதிரும் மின்மினிகளை
கவனமாய்ச்சேகரிக்கிறது
தெளிந்த குட்டையொன்று...





- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)