என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 15 February 2022

2022 சென்னை புத்தகத் திருவிழா

சென்னையில் 2022ம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்னும் சில மணி நேரங்களில் துவங்க இருக்கிறது. இந்த ஆண்டு புத்தகத்திருவிழாவில் என்னுடைய பங்களிப்பாக


Fancy Nuptials (2022) - Emerald Publishers
மாசறு பொன் (2022) - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் - சிறுகதைத் தொகுதி நூல் (Stall: 553)
இடம்பெறுகிறது. இது தவிர விற்பனைக்கு இருக்கும் என்னுடைய ஏனைய நூல்கள்
ஒப்பனைகள் கலைவதற்கே - நாவல் (Kaavya)
உங்கள் எண் என்ன? - நாவல் (Kaavya)
இரண்டு விரல்கள் - நாவல்
அட்சயபாத்திரா - நாவல்
வரதட்சணா - நாவல் (Kaavya)
ஏஞ்சலின் மற்றும் சிலர் - நாவல் (Kaavya)
வதுவை - நாவல் (Kaavya)
வாவ் சிக்னல் - சிறுகதைத் தொகுதி (Padaippu)
Inexhaustivle - Novel (Emerald)
Those Faulty Journeys - Novel (Emerald)
Met App - Novel (Emerald)
Stall Details:
Kaavya 376-377
Emerald 06F
Padaippu 469
Annai Rajeshwari 553

************************************************

Fancy Nuptials

We are at a time when shout-outs on 'normalizing divorces' are heard from everywhere. 99/100 times, creators try to capture a woman's struggle in remarriage, because it guarantees instant success. But what about men's struggles? Are there no victims in men? Are men insufferable? Women empowerment is ok but should it be at the cost of men?

I wanted to touch that 1/100 scenario, capture/document what happens to a genuine good guy post-divorce and what are their social implications. I wanted to touch this primarily because I just went by the saying that says 'Try the one that is both difficult and seldom touched by others'. (In fact, this is one of the prime mottos behind each of my works).

As usual most reputable publishing houses ignored this work the same way they ignored my other works on Mathematical fictions. Who really cares about topics that are 'considered' not so very sell-worthy? As usual Emerald is doing the needful to bring out such muffled and choked voices and make them heard (which is literature by itself in my opinion!!). I thank them for that.





Sunday, 13 February 2022

காதலர் தின வாழ்த்துக்கள்...

 நண்பர்கள் எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்...


முதலில் காதல் சோலை போடலாம் என்று தான் இருந்தேன். ஆனால், சமீப காலமாக நம்மைச் சுற்றி நடப்பதையெல்லாம் பார்த்தால், எல்லோருக்கும் பயன்படும் படியான சில பயனுள்ள குறிப்புகள் பகிர்வது பொறுத்தமாக இருக்குமென்று நம்புகிறேன்.

1. 96 ராம் போல எந்தப் பெண்/ஆண்க்காகவும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்காதீர்கள். அதிகபட்சமாக சில மாதங்கள். பேசிப்பாருங்கள். ஆர்வம் காட்டவில்லை என்றால் அடுத்த பெண்ணை/ஆணைப் பார்த்துப் போய்விடுங்கள். 96 ராம், பெண்ணை impress செய்ய வேலை வெட்டியெல்லாம் விட்டுவிட்டு தெருவில் காத்திருப்பது எல்லாம் சினிமாவில் வேண்டுமானால், பார்க்க அழகாக இருக்கலாம்.

2. கடந்த காதல்களை எக்காரணம் கொண்டும் திரும்பியும் பார்க்க வேண்டாம். அது நிகழ் காதல்களுக்கு இழைக்கும் அநீதி மட்டுமல்ல. அது உங்கள் தெளிவற்ற அணுகுமுறையையே காட்டும். அதுவே உங்களுக்கு பலவீனமாக அமையும்.

உதாரணமாக, நீங்கள் உங்கள் காதலைச் சொல்லியும் அந்தப் பெண்ணோ/பையனோ ஏற்காமல் போய்விட்ட பின், நீங்கள் திருமணம் செய்து settle ஆகிவிட்டீர்கள். இப்போது பழைய காதலை திரும்பியும் பார்க்காதீர்கள். பழைய காதலி/காதலன் குறித்த பேச்சு வந்தால் கூட 'நியாபகமே இல்லை' என்று அபாண்டமாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். எது உங்களை, உங்கள் மதிப்பை காலத்தே உணரவில்லையோ, அது இருந்தால் என்ன, இறந்தால் என்ன?




3. Don't ever be someone's backup. இது இக்காலங்களில் அதிகம் நடக்கிறது. ஆண், பெண் என்று பாலின வேறுபாடு இன்றி அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்லக் கேட்கிறேன். யாருக்கும் இரண்டாவது தேர்வாக இருக்காதீர்கள். அது போல் ஒரு toxicity வேறு இல்லை.

4. Women empowerment என்பது தேவை தான். ஆனால், equality அதை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வரதட்சணை ஆண்களிடம் கேட்கப்பட்டாலும், பெண்களிடம் கேட்கப்பட்டாலும் இரண்டுமே தவறு தான்.

5. No means No. இது ஆண்களுக்கும் பொறுந்தும். நீங்கள் வாழ்க்கையில் No சொன்னதே இல்லை என்றால், நிச்சயம் நீங்கள் சம நிலைப்பாட்டில் இல்லை என்று பொருள். இந்த நிலைப்பாட்டில் இருந்தபடி எந்த உறவையும் துவங்காதீர்கள். அது மகா மட்டமான விளைவுகளைத் தரவே வாய்ப்பிருக்கிறது.

6. உங்கள் நியாயமான கோரிக்கைகள் honor செய்யப்படவில்லை என்றால், அந்த உறவை நீங்கள் தலைமுழுகுவது தான் சரி. But, this has a catch. உங்களுக்கு தேவையானதெல்லாம் 'நியாயமான கோரிக்கை' என்றாகிவிடாது.

7. Trust your instincts. உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கவனியுங்கள். But, this also has a catch. உங்களுக்கு சமூகப் புரிதல் குறைவாக இருந்தால், உங்கள் உள்ளுணர்வும் தவறாக இருக்கவே வாய்ப்பதிகம். சமூகப் புரிதல்களை உருவாக்கும் நூல்களை ஏன் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களுள் ஒன்றாக இதைக் கொள்ளலாம்.

8. முதல் காதலுக்கு அவசரமே வேண்டாம். முடிந்தவரை நேரமெடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை முதலாவது காதலை வெற்றியாக்க கடுமையாக முயலுங்கள். முதல் காதலுக்கு எந்த அளவுக்கு நேரமெடுத்துக்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு அது நிலைக்க வாய்ப்பு மிகுக்கும்.

9. செயற்கைத்தனம் வேலை செய்யவே செய்யாது. உங்கள் அசல் முகத்தைப் பார்த்து வரும் காதலே நிலைக்கும். ஏமாற்றத்தில் துவங்கும் உறவுக்கென நீங்கள் தான் வாழ் நாள் முழுவதும் மெனக்கெடுவதைப் போலாகும்.

10. அதிர்ஷ்டம் பெரும்பாலும் சோகத்தைத் தரவே வாய்ப்பதிகம். உங்கள் தகுதிக்கேற்ப ஆசைப்படுவதும், ஏற்பதுமே பாதுகாப்பானதாகும். அதிர்ஷ்டத்தின் பெயரால் ஒன்றை ஏற்றுக்கொண்டால் பின் அதைத் தக்க வைக்க வாழ் நாள் முழுவதும் நீங்கள் போராட வேண்டி இருக்கும்.

இனி வருவதுதான் பிரம்மாஸ்திரம்.

11. Expect the unexpected. நீங்கள் (ஆணோ/பெண்ணோ) நல்லவர் என்றால் நீங்கள் ஏமாற்றப்படவே வாய்ப்பதிகம். அப்படிப்பட்ட சூழலில், குறைந்தபட்சம் விவாகரத்தை normalize செய்வது குறித்து தெளிவான பார்வை கொண்டவராக இருப்பது நலம். அப்போதுதான் உங்களை ஏமாற்ற யாருக்கும் தைரியம் வராது. இந்தப் பின்னணியில், pre-nup பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நல்லவராக இருக்கும்பட்சத்தில், இந்த அணுகுமுறை தான் இந்தக் காலத்தில், உங்கள் வாழ்க்கை சிறக்க உதவும்.

Friday, 11 February 2022

தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாடுதல்

தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் சில காரியங்கள் தன்னாலே துவங்கி, தன்னாலே உருவம் பெற்று , நம்மை வெறும் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு நடந்து முடிந்தே விடும். வேறு சில காரியங்களை எத்தனை முக்கினாலும், எத்தனை முயற்சித்தாலும் ஒரு இன்ச் கூட நகராது. பிறப்பிலேயே தலையில் எழுதப்படவில்லை போல. மருத்துவம் படிப்பது, குறும்படம் எடுப்பது, ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலில் விழுவது ஆகியன இந்த வகையில் வரும். இது போல மொக்கையாக முடிந்த பலவற்றில் தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாடும் முயற்சியும் ஒன்று. வாசித்த நூல்களுக்கு விமர்சனம் எழுதுவதிலிருந்து துவங்கலாம் என்று முடிவு செய்து துவங்கினேன்.. தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டுமென்று ஒரு எண்ணம் எப்போதும் இருக்கும். சுமார் நான்கைந்து எழுதியிருப்பேன். முதல் தடங்கல்: அலுவலகத்தில் வேலை வந்து விட்டது. (பின்வருவன கிடைத்த நேரத்தில் எழுதியது) செல்லம்மாள் - சிறுகதை - புதுமைப்பித்தன் http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/1.html கதவு - சிறுகதை - கி.ராஜ நாராயணன் http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/2.html நகரம் சிறுகதை - சுஜாதா http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/3.html ஞானப்பால்- சிறுகதை - நா.பிச்சமூர்த்தி http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/4.html பாற்கடல் - லா.ச.ராமாமிருதம் http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/5.html எங் கதெ - இமையம் http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/blog-post.html சரி அதை முடித்துவிட்டுத் தொடரலாம் என்றால் மறுபடி சிக்கல். இந்த முறை சிக்கல் என்னவென்றால், அமெரிக்காவில் இருப்பதால் நூல்களை வாசிக்க இயலவில்லை. அதனால் என்ன? நூல்களை அனுப்ப ஆயிரம் வழிகள் இருக்கின்றனவே என்று யாரேனும் சொல்லலாம். அதிலும் சிக்கல். சுமார் இரண்டாயிரம் ரூபாய்க்கு நூல்களைப் பட்டியலிட்டு வாங்கி அனுப்பச் சொல்லியிருந்தேன். அவர் அனுப்பியிருந்தார். எதிர்பார்த்த தேதிக்கும் மிக மிக தாமதமாக. அனுப்பியதைச் சொல்லியிருக்கலாம். சொல்லவே இல்லை. திடீரென்று எனக்கு ஒரு பார்சல், என் அறைக்கு வந்தது. உடன் ரூம்மேட்டாகத் தங்கியிருந்த அறைத்தோழர்கள் ஆள் ஆளுக்கு ஒரு கதை சொன்னார்கள். இங்கே திடீரென்று யார் வீட்டுக்காவது பார்சல் அனுப்பிவிடுவார்களாம். உள்ளே போதை சமாச்சாரம் அது இது என்று. பார்சலில் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. தொலைப்பேசியில் சம்பந்தப்பட்ட ஆட்களை அழைத்துக் கேட்கலாம் என்றால், அப்போது இந்தியாவில் நள்ளிரவு. அப்போது அழைத்தால், வழக்கிலிருக்கும் எல்லா கெட்டவார்த்தைகளையும் கேட்க வேண்டி வரும். ஆதலால் எதற்கு வம்பு என்று திருப்பி அனுப்பிவிட்டேன். பதிப்பகத்தை அழைத்துக் கேட்டால், 'பார்சல் தானே பாஸ்.. வாங்கிப் பார்க்க வேண்டியதுதானே' என்றார்கள். அந்த ஐடியா ஃப்ளாப். புத்தகமும் இல்லை. பணமும் அவுட். அப்படி இப்படி என்று சென்னை வரும் சமயத்தில் வாங்கி சூட்கேஸில் அடைத்தால் வீட்டில் கண்டபடி திட்டினார்கள். மளிகைப் பொருட்களாவது எடுத்துச்செல்லலாம். இப்படி பெட்டி முழுக்க நூல்களா என்று. எல்லாவற்றையும் வாங்கிக்கட்டிக்கொண்டு அமெரிக்கா வந்தால், ஆறு மாதத்தில் மூன்று அறைகள் மாற வேண்டியதாகிவிட்டது. போகிற இடமெல்லாம் நூல்களைத் தூக்கித் திரிந்து பெண்டு நிமிர்ந்துவிட்டது. இது ஏதுடா வம்பாப்போச்சு என்றெண்ணி தெரிந்த நண்பர் ஒருவரிடம் சொல்லி அவர் வீட்டில் வைத்துவிட்டு வேண்டுமென்கிறபோது எடுத்துக்கொள்ளலாம் என்று ஐடியா செய்தேன். அடுத்த முறை சென்றபோது நான் தந்த நூல்களை, garageல் வைத்திருந்தார். அவர்கள் வீட்டு நாய், அந்த நூல்களை சரமாறியாகக் கடித்துத் துப்பியதில் ஒன்றுமே மிஞ்சவில்லை. 2009ல் துவங்கிய எழுத்து. 12 ஆண்டுகளில் சுமார், 9.5 ஆண்டுகள் வெளி நாடுகளிலேயே கடத்தியிருக்கிறேன். எல்லா இடத்திலும் Room sharing தான். இதில் எங்கிருந்து நூல்களை வருவித்து வாசிக்க. ஆக, தமிழ் நூல் வாசிப்புக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இப்படியாக வெட்டவெளிச்சமாகிவிட்டது. தமிழ் இலக்கியத்திலேயே முகம் பார்த்து, பல் விளக்கி, காபி குடித்து, டிபன் சாப்பிட்டு, அலுவல் செய்யும் பாக்கியம் கிடைத்தவர்களையெல்லாம் பார்த்தால் பொறாமையாக இருக்கும். என் அலுவலகத்தில் எங்கு திரும்பினாலும் படேல்களும், குஜராத்திகளும் தான். இவர்களுடன் என்னத்தை தமிழ் கவிதைகள், சிறுகதைகள் பேச. ஒரு சிறுகதை எழுதினால், வாசிக்கத் தந்துபார்க்கக் கூட ஆள் கிடையாது இங்கே. என்ன செய்வது? இந்த தேசத்தில் பிடித்துச் செய்கிற காரியத்தை முழு நேர வேலை ஆக்கி விட முடிகிறதா என்ன? பிடித்துச் செய்யும் வேலை ஒன்று. வயிற்றுப்பிழைப்புக்குச் செய்யும் வேலை மற்றொன்று என்று தானே இயங்க முடிகிறது. இந்த லட்சணத்தில் எங்கிருந்து கொண்டாட. தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதற்கும் ஒரு முகரை வேண்டுமோ என்னவோ.

Monday, 31 January 2022

Mentoring

Mentoring


இது குறித்து உள்பெட்டியிலும்  நேரிலும் சிலர் கேட்டிருக்கிறார்கள்  என்பதால் எல்லோருக்கும் பொதுவாக இதைச் சொல்லிவிடலாம் என்று இந்தப் பத்தி. 

முதலில் நானுமே 'Its doable' என்று தான் கருதியிருந்தேன்.  அதைத்தொடர்ந்து நாள்பட நாள்பட, சிலருடனான வாத-விவாதங்களின் வழி, ஒரு புரிதல் அடைந்தபிறகு தான் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. 

எல்லாவற்றையும் சீர் தூக்கி யோசிக்குங்கால், கலையை mentor செய்ய முடியுமா என்பது உண்மையிலேயே தெரியவில்லை. Mentor செய்ய முதலில் , அது குறித்து முழுக்க தெரிந்திருக்க வேண்டும். அப்படி ஒருவர் இருக்கவே முடியாது. அது சாத்தியம் இல்லை. 

mentoring என்பதையே அர்த்தமற்றுப் போகச்செய்யக் கூடிய காரணங்கள் வேறு சிலதும் இருக்கிறது. அதில் முதலாவது, எந்த ஒரு கலை வடிவமும், அது இலக்கியமாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம், சிற்பமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அதை ஒவ்வொருவரும் உள்வாங்கி வெளிப்படுத்தும் விதம் எல்லோருக்கும் ஒன்றே போல் இருக்காது. 

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஒவ்வொரு விதமாக வெளிப்படும். சிலரது கலை, அவர்களது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து மட்டுமே வெளிப்படும். அனுபவப்படாமல் அவர்களால் எதையும் எழுத முடியாது. சிலருக்கு கலைக்கு தனிப்பட்ட அனுபவம் தேவையே இல்லை. சிந்தனையாலும், கற்பனையாலும் அந்தக் கலையை விஸ்தரித்து பலம் கூட்டிவிடுவார்கள். இவர்களை அனுபவம் கட்டுப்படுத்தாது. 

சிலருக்கு நிறைய வாசிக்க வேண்டும். எல்லா வாசிப்புப் போட்டிகளிலும் இவர்கள் இருப்பார்கள். 'சென்ற வருடம் வாசித்து நூல்கள்' என்று சுமார் அறுபது நூல்களைப் பட்டியல் இடுவார்கள்.  

வேறு சிலர் எதையுமே வாசிக்கமாட்டார்கள். ஆனால், நிறைய சிந்திப்பார்கள். சிந்தனையின் வாயிலாகவே வாசிக்காததையும் வாசித்துவிடுவார்கள்.


இன்னும் சிலர் இருக்கிறார்கள். அனுபவமே எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்திருக்கும். ஒன்றிரண்டு தான் வாழ் நாளிலேயே எழுதியிருப்பார்கள். ஆனால், நிலைத்த பெயர் இருக்கும். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். 

ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். கலைக்கு இட்டுச்செல்லாத வழிகள் இருக்கின்றன.

இயல்பாகவே ஒருவருக்கு ஓவியம் என்னும் கலை கைவருகிறது எனில், ஒரு ஓவியம் எக்காரணத்திற்கெல்லாம் reject செய்யப்படுகிறது என்பதை ஓவியர் அறியமாட்டார். Rejectionஐ சந்திப்பவர்களுக்கு சொல்வதற்கு அவரிடம் எதுவும் இருக்காது. அவர் அப்படி எதுவும் சொல்வதில்லை என்பதாலேயே "நீங்கள் எந்த மெயில் ஐடிக்கு உங்கள் ஓவியங்களை அனுப்புகிறீர்கள்? அதைச் சொல்லுங்கள்.  நானும் அனுப்புகிறேன்" என்று கேட்க இயலாது.

தேர்வு செய்யப்படும் எல்லாமும் ஏதோ ஒரு தனிப்பட்ட உறவின் நிமித்தம் தேர்வாவது என்று எடுத்துக்கொள்வது, நம் ஆக்கத்தில் உள்ள தவறுகளை அடையாளம் காண முடியாமல் செய்துவிடும். இது ஒரு தவறான approach. தனிப்பட்ட உறவின் நிமித்தம் ஒன்றிரண்டை வேண்டுமானால் வெளியிட்டு விடலாம். தொடர்ந்து வெளியிட, தனிப்பட்ட உறவு உதவாது. என் வரையில், பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது, தேர்வாகாவிட்டால், நம் ஆக்கத்தில் என்ன தவறு என்று பார்ப்பது. தவறேதும் தென்படாவிட்டால், இன்னுமொரு பத்திரிக்கைக்கு அனுப்புவது. அங்கும் தேர்வாகாவிட்டால், எனக்கு ஏதோ தெரியவில்லை என்று எடுத்துக்கொள்வது. அது என்ன என்ற தேடலில் இறங்குவது. இதைத்தான் நான் 2009ல் எழுதத் துவங்கியதிலிருந்து பின்பற்றுகிறேன்.

இன்னுமொன்றையும் சொல்லலாம். எந்த ஒரு கலைவடிவமும் அடிப்படையில் எளிமையாகவே பார்வைக்குத் தோன்றும். ஓவியம் என்று எடுத்துக்கொண்டால், நிறங்கள். எழுத்து என்று எடுத்துக்கொண்டால், வார்த்தைகள். பத்து ஓவியங்களைப் பார்த்தால், பதினொன்றாக நமக்கும் ஒரு ஐடியா தோன்றும் தான். அதை வைத்தெல்லாம் நாமும் ஓவியர் என்று நினைத்துக்கொள்வது அபத்தமாகவே முடியும். 

எந்த ஒரு கலைவடிவமும், அது கை கொள்ளப்படாவிட்டால், அது ஒன்றும் பெரிய குற்றம் ஆகிவிடாது. வலிந்து அதற்குள் நம்மைத் திணித்துக் கொள்ளவும் வேண்டியதில்லை. எழுத்தாளர்கள், ஓவியர்கள், குறும்பட இயக்குனர்களை எல்லாம் பைத்தியக்காரர்கள் என்று சொல்லித்திரியும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. அவர்களுக்குள்ளும் வெற்றிகரமான, பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழில் முனைவோர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை, எவ்வித கலைகளின் உள்ளீடும் இன்றி, அவர்களுக்கும் ஆனந்தமாக, அமைதியாக, சந்தோஷமாகக் கழிகிறதுதான். அவர்களுக்கெல்லாம் கலை தெரியவில்லை என்பது ஒரு பொருட்டே இல்லை. எந்தக் கலைக்குள்ளும் நாம் நம்மை வலிந்து திணித்துக்கொள்ள வேண்டியதில்லை. அந்த அளவிற்கு கலை ஒன்றும் அத்தனை பெரிய சமாச்சாரமும் இல்லை. கலை வராதது ஒரு பெரிய குற்றமே இல்லை. அதையும் நாம் மனதில் கொள்வது நலம். 

Sunday, 23 January 2022

Glad to be among The Best of Mad Swirl : 01.22.22.

Glad to be among The Best of Mad Swirl : 01.22.22.


Happy to share the space with

Harley White | lulia Gherghei | Paul Tristram | KJ Hannah Greenberg | Anthony Ward | Sam Silva | Jim Bates

Wednesday, 19 January 2022

"மாசறு பொன்" சிறுகதைத் தொகுதியில் என் சிறுகதை

தற்காலச் சிறுகதைகள் தொகுப்புக்கென திரு.எஸ்.சங்கர  நாராயணன் ஒரு சிறுகதை கேட்டு அணுகியபோது, எழுதி வெளியிடாமல் சுமார் 4 சிறுகதைகள் வைத்திருந்தேன். (இந்த எண்ணிக்கை இப்போது 9 ஆகிவிட்டது). அதில் இரண்டை எடுத்து அனுப்பினேன். இரண்டுமே அறிவியல் புனைவுகள் தான். அவர் தேர்வு செய்த சிறுகதை 'சோஃபி'. 

பொதுவாக, தற்காலச் சிறுகதைகள் தொகுப்பு என்பது, அதன் காலத்தில் எழுதப்படும் சிறுகதைகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கொடுப்பதாக அமையும். சிறுகதை என்கிற எழுத்து வடிவத்தை முயல்பவர்களுக்கும், பயிற்சிகள் மேற்கொள்பவர்களுக்கும், சமகால எழுத்தை உற்று நோக்குபவர்களுக்கும் இவ்வகையான தொகுப்புகள் வெகுவாகப் பயன்படும். நாம் கிணற்றுத் தவளையாக இருக்கிறோமா என்பதை சரிபார்த்துக்கொள்ள இது ஒரு நல்ல வழி.

அ.முத்துலிங்கம் | எஸ்.சங்கர  நாராயணன் | இரா.முருகவேள் | காலத்துகள் 

உள்பட இன்னும் சில எழுத்தாளர்களுடன்   "மாசறு பொன்" சிறுகதைத் தொகுதியின் பக்கங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. 

பிரதிகளுக்கு பதிப்பாளர் உதயகண்ணன்

அலைபேசி 94446 40986




Tuesday, 18 January 2022

"Delete" appears in MadSwirl

"Delete" appears in MadSwirl..


I thank the editorial board for offering mine a home...




Thursday, 13 January 2022

இருவாட்சி இலக்கிய துறைமுகம், பொங்கல் சிறப்பு வெளியீடு - 13ல் எனது 'மொழித்திறன்' கட்டுரை

இருவாட்சி இலக்கிய துறைமுகம், பொங்கல் சிறப்பு வெளியீடு - 13ல் எனது 'மொழித்திறன்' கட்டுரை வெளியாகிறது.

லா.ச.ரா.சப்தரிஷி | ஏ.ஏ.ஹெச்.கே.கோரி | காலத்துகள் | செல்வராஜ் ஜெகதீசன் உள்ளிட்ட
இன்னும் பல எழுத்தாளர்களுடன் இந்த இதழின் பக்கங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
இவ்விதழில் கட்டுரை எழுத அழைத்த எழுத்தாளர் திரு. எஸ்.சங்கர நாராயணன் அவர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.



Monday, 3 January 2022

மாணவ முன்னேற்றத்திட்டம் நிகழ்வு - 14

 இரண்டு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. எவ்விதத் தயாரிப்பும் இன்றி பால்யம் சார்ந்து, நிறைய பேசினேன். மாணவிகள் ஆர்வமுடன் கேள்வி கேட்டார்கள். ஒரு இனிமையான நிகழ்வாக நடந்தேறி மனதுக்கு நிறைவாக இருந்தது நிகழ்வு.


நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்த திரு.ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, 1 January 2022

மாணவ முன்னேற்ற திட்டம் - 2022

 சுமார் பத்தொன்பது பள்ளிகளின் மாணவர்களுடனான இந்த நிகழ்வு 2022 புத்தாண்டின் முதல் இணைய நிகழ்வாக அமைவதில் பெருமகிழ்ச்சி.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராகப் பங்குபெற அழைத்த S2S நிறுவனர் திரு.ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கும், நிகழ்வை சாத்தியப்படுத்தும் ஊடக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.