என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்










குங்குமம் இதழ் - விமர்சனம்













வதுவை நாவல் - விமர்சனம் முத்து காளிமுத்து


எழுத்தாளர் ராம் பிரசாத்தின் “வதுவை” நாவலை வாசிக்கும் அனுபவம் அண்மையில் அமையப்பெற்றது. கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களம் கொண்ட நாவல்தான் இது.
திருமணத் தகவல் மையத்தில் வேலை பார்க்கும் கதையின் நாயகன் அர்ஜுனின் வேலை அனுபவமாக கதை நகர்கிறது. எழுத்தாளர் இதற்கு முன்பு ஏதாவது ஒரு திருமண மையத்தில் பல வருடங்கள் வேலை பார்த்தாரென்றா தெரியவில்லை. அவ்வளவு ஆழமான பார்வை இந்தத் துறையப் பற்றி. அர்ஜுன் மற்றும் அவன் உடன் வேலைபார்க்கும் அறை நண்பர்களான வினீத், கௌரவ், பாயல் மற்றும் ப்ரியா நடுவில் அர்ஜுனின் முதல் வரன் வேலை சம்பந்தமான உரையாடல்கள் எல்லாம் அழகான, சிந்திக்க வைக்கக்கூடியவை. கொஞ்சம் நகைச்சுவை கூடுதலாக கலந்து எழுதி இருக்கலாம், இன்னும் சுவையாக இருந்திருக்கும் வாசிக்க.
அழகான, ஒழுக்கமான, பன்முக திறமை வாய்ந்த ஆனால் மறுமண வரன் தேடும் கிருஷ்ணாவைத் தான் எத்தனை பெண்கள் நிராகரிப்பார்கள். ஒரு வரனுக்கே அத்தனை அலைச்சல், உழைப்பு அர்ஜுனுக்கு.
இன்னொரு கதாபாத்திரமான காதலனால் ஏமாற்றப்பட்ட ரம்யாவின் தற்கொலை முடிவு ஏமாற்றமாக இருந்தது. அதே மாதிரி கிருஷ்ணா-வனஜா சந்திப்பு, அவர்களுக்கிடையான உரையாடல்கள் என இன்னும் அதிகம் எழுதியிருக்கலாம்.
சராசரி மனிதர்களின் வரன்கள் பற்றிய எதிர்பார்புகள்தான் எத்தனை? எந்த மாதிரியான மணபொருத்தங்கள் அமைந்தால் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் நல்லது என ஆசிரியரின் விளக்கங்கள் அருமை.
ஒரு சில குறைகள் இருந்தாலும், திருப்தியாகவே இருந்தது முழுக்கதை வாசிக்க. புதுப்புது கதைக்களதோடு எழுதிவரும் ராம் பிரசாத்தின் ஒன்பதாவது நாவல் இது. இன்னும் பல உயரங்கள் தொடுவார் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
வதுவை - அருமை!



Inexhaustible - Review by Gayathri Devaraj




Reading is one of the pleasurable hobby which takes you entirely out of your world virtually ! And Ram Prasath is one of the author who has such power to converse with others brain and mind and give such pleasure through his writing !
Inexhaustible :
I have read many novels and this is one of the best thriller that I have come across. This book speaks about how IT can be used to exploit by intelligent brains. Also it very well portrays the typical behaviour of a selfish modern women. And clearly expresses the need for money would lead you to do anything.
On a positive note the author has maintained the feeling of uncertainity till the last page which made me very curious to read what next.More usage of IT jargand in the novel made it very close to my heart being an IT programmer.The supporting cast of characters is excellent. Especially Varsha.Her character has been portrayed very pragmatic in the novel.
On a note of Critic,the author could have used more adjectives to define the characters. And also the high usgae of IT terminology in couple of chapters of this book could have made reader friendly for all type of Readers (Not only IT ). Few thing that were described in the novel was not used much or didnt help much to support the context.
This is one of Ram's best Thriller and he has a complete control over his concept and style. Despite critics,it's a pleasure to accompany the author on his journey. The unexpected ending is a fitting denouement to the novel. I strongly recommend my friends to read this who loves to read Thrillers. This book is definitely a piece of work by a Creative Genius !
Ram Prasath - Thank you so much for giving the readers a chance to live with Varsha, Arvind and Vimal !!!
Eagerly waiting to read your other books !





Those Faulty Journeys - Aruna Subramaniam

If there is any subject that would kindle interest in almost all souls in the universe, that is love. However, it is not the case when it comes to mathematics. It remains a dreadful subject to many. Reason being that mathematics was used so far as a mere support to the discoveries, researches or philosophies. Numbers, formulas, theorems and equations are thought of more as gaining academic excellence and something never consciously applied to the daily life even though our lives are bounded by lot of numbers.
Relationship holds the key to the very existence of the mankind and is a source for many problems around us. Many social issues which we witness in the modern world can be linked directly or indirectly to the relationship issues. It is a fact that modernization is alarmingly affecting the human relationships. It is interesting to note that this novel connects these two contrasting topics, love and mathematics and proposes a solution for problems arising out of one through another.
It is quite a challenge to arrive at a mathematical model to represent human choices and preferences with respect to relationships. The author had taken this ingenious task and have successfully brought out a masterpiece. The novel is aimed at bringing an ideal relationship in mankind and thus preserving the balance of the ecosystem of our species. This goal is highly appreciable and very relevant to the modern world where the cases of conflicts are in a rise. The book is unique in its representation of human relationships in the form of numbers and proposes a mathematical model to address the social issues.
Is it possible? Life is all about uncertainties. Do we really have the control of the outcomes of our decisions? Choosing a life partner for instance! The biggest decision of our life. Can we really predict the outcome of a marriage? The novel gives a satisfactory and logically rational answer to this through numbers.
It is highly commendable how this challenge has been carried out in the form of amazing story through which a reader can relate to.
The plot is well narrated and guarantees a great experience for the readers. The storyline is very simple based on the lives of two young couples. It appears to be a usual neighborhood story as one can come across in today’s life. But, when one of the men stumbles upon a betrayal and seeks an outside help for a solution, the novel shifts to a different dimension. The inquisitive character entering at the later part introduces numbers and equations in a rational mapping to the essences of life. The facts laid out by the character are quite convincing and the author have done the painful task of conveying the nuances of the mathematics to the readers in an appreciable manner.
I sincerely recommend this book for everyone to read. It would be great if this concept can be taken to a medium like movies or short film which would reach more people.
The book is available as kindle


Those Faulty Journeys - Anonymous Review




Those Faulty Journeys - Reviews




வதுவை (குறுநாவல்) - விமர்சனம் - ஷ்ரினிவாசன் பாலகிருஷ்ணன்





வேலை தேடி அலையும் இளைஞன் ஒருவனுக்கு திருமண தகவல் மையத்தில் வேலை கிடைக்கிறது. திருமண தகவல் மையம் என்றால் கொஞ்சம் மொக்கையாகத் தோன்றுகிறது இல்லையா? இந்தியாவின் தலைசிறந்த மேட்ரிமோனி நிறுவனமான முக்தி மேட்ரிமொனியில் வேலை. அவனை வேலைக்கு எடுக்கும் நிறுவன அதிபர் அவனிடம் ஒரு கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விக்கான பதிலில் இருந்து நாமும் கதைக்குள் பயணிக்கத் தொடங்குகிறோம். அந்த பதிலைப் பற்றி கூறும் முன் நாவலாசிரியர் குறித்து ஒரு தகவல். ராம் பிரசாத் கணிதவியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதை அறிந்த போது கொஞ்சம் ஆச்சரியமாகவும், கணிதவியல் சார்ந்து எழுதப்பட்ட ஒருசில புனைவுகளில் ராம் பிரசாத்தின் புனைவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்ற தகவலும் அவர் உழைப்பின் மீது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திருமண தகவல் மையத்தில் வேலையில் சேர்ந்த கையேடு அவனுடைய வாழ்க்கையிலும் சில மாற்றங்களை மேற்கொள்கிறான். அதில் முதலாவது அவன் அதுவரைக்கும் தங்கியிருந்த அறையை மாற்றுவது. திருமண தகவல் மையத்தில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுடன் அறைத்தோழர்களாக மாறுகிறான். வினீத், கௌரவ், ப்ரியா, பாயல் என அர்ஜூனும் அவர்களுடன் சேர்ந்துகொள்வதன் வாயிலாக சில சுவாரசியமான தருணங்களை எதிர்கொள்கிறான். ஒரு வீட்டை இளவயது ஆண் மற்றும் பெண் தோழர்கள் பங்குகொள்வது என்பதை நினைக்கும் போதே சற்றே குறுகுறுப்பு ஏற்படுகிறது என்றாலும் அதே போன்ற மனநிலைக்குத்தான் அர்ஜுனும் தள்ளப்படுகிறான். அதன் சாதக பாதகங்கள் ஒவ்வொன்றாக அவனுக்குப் புரிபடுகிறது.

இடையே பணி நிமித்தமாக அர்ஜூன் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறார்கள். திருமண பந்தம் ஏற்படுத்துவதற்காக அர்ஜுன் சந்திக்கும் அவன் வாடிக்கையாளர்களும் சரி அர்ஜுனும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் சூழ்நிலையே வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அர்ஜுனின் வாடிக்கையாளர்களாக வந்து சேரும் நபர்கள் கிருஷ்ணா மற்றும் ஆர்த்தி.

கிருஷ்ணா சற்றே வித்தியாசமான மனிதன். படைப்பு சார்ந்து இயங்கும் கலைஞன். அழகன். கட்டுமஸ்தான உடற்கட்டமைப்பைக் கொண்டவன். புறவயத் தோற்றங்களின் படி எல்லாவித்ததிலும் ஒரு திருமணத்திற்கு தகுதியானவன். ஒரேயொரு குறையைத் தவிர. கிருஷ்ணா ஒரேயொருமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றவன் என்பதைத் தவிர. அவனுடன் நெருங்கிப் பழகும் அர்ஜுன், கிருஷ்ணாவுடன் ஒருவித தோழமை உணர்வு ஏற்படுத்தை கவனிக்கிறேன். அவனுக்கு எப்படியேனும் நல்லதொரு வரன் அமைத்துக்கொடுத்துவிட வேண்டும் தீவிர தேடலில் இறங்குகிறான். கிருஷ்ணாவிற்காக அவன் ஒப்பீடு செய்யும் வரங்கள் அனைவரும் கிருஷ்ணாவைப் பின்தொடரும் விவாகரத்து என்கிற ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள். கிருஷ்ணாவிற்கு எந்தப் பெண்கள் எல்லாம் பொருத்தமாக இருக்கும் என நினைத்தானோ அந்தப் பெண்கள் அனைவரும் அவர்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத கனவான்களை கணவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த குழப்பமான விந்தை அர்ஜுன் அதுவரைக்கும் கட்டமைத்திருந்த உலகை வேறு கோணத்தில் பார்க்கச் செய்கிறது. இடையே அவன் அறைக்குள் நிகழும் காதல் மற்றும் கள்ளக் காதல் களியாட்டங்கள், அறை தோழி ப்ரியாவுடன் மலரும் காதல், ஊடல் என அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்த உலகை மிகத்தீவிரமாக புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் நாயகனின் பார்வையில் விரிகிறது.

தனுஜா என்கிற நவநாகரிக மாடல் உடனான தொடர்பு அவனுக்கு சற்றும் தொடர்பு இல்லாத வேறோர் உலகை அறிமுகம் செய்கிறது. நாவல் முழுக்க அர்ஜுன் சந்திக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் ஏதோ ஒரு விதத்தில் அவனுள் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அவனும் அவர்கள் உலகில் சிறு அசைவையேனும் நிகழ்த்துகிறான். இந்த வேலை அவனுக்கு பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் பல்வேறு அனுபவங்களையும் ஒருசேர கற்றுக்கொடுக்கிறது. ஒருசமயம் சந்தோஷத்தையும் ஒரு தருணம் மனப் பிறழ்வையும் உண்டு செய்கிறது. மனம் பிறழ்ந்த தருணங்களில் அவன் செய்யும் காரியங்கள் சில அதிர்சிகரமான தேடலில் சென்று சேர்க்கின்றன. அதன் மூலம் வேறோர் நிழல் உலக பரிட்சியம் ஏற்படுகிறது. கண்ணுக்கும் முன் அவன் கணக்கும் போட்டு கட்டமைத்த சில கணங்கள் அவன் எதிர்பார்த்தது போலவே நிகழ்கின்றன, சில புதிராக தலைகீழ் மாற்றம் பெற்றுள்ளன.

அர்ஜுன் எதிர்பார்த்தது போல கிருஷ்ணாவிற்கு திருமணம் செய்து வைத்தானா? ப்ரியா என்னவானாள்? வினீத்தின் கள்ளக் காதல் என்னவாயிற்று? நிழல் உலக குற்றவாளிகள் என்னவானார்கள் என புதிர்போட்டு அந்தப் புதிரை சுவாரசியமாக அவிழ்த்திருக்கிறார் நாவலாசிரியர் ராம் பிரசாத். வதுவை என்கிற இந்த குறுநாவல், தற்கால இளைஞர்களின் மனவோட்டத்தையும், நவீன திருமண தகவல் மையங்கள் இயங்கும் முறையை கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.  

 நன்றி
சீனிவாசன் பாலகிருஷ்ணன்


வதுவை  - வாசிப்பு அனுபவம் 


"வதுவை" குறுநாவல் குறித்தான எனது அனுபவத்தை இங்கு பதிவிடுகிறேன்.

திருமணத் தகவல் மையத்தில் புதிதாக வேலைக்கு சேரும் கதையின் நாயகன் அர்ஜுன் சந்திக்கும் மனிதர்கள், அவனது முதல் பணி அதன் மூலம் அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள், காதல்,  இன்றைய காலக்கட்டத்தில் திருமணத்திற்கான எதிர்ப்பார்ப்புகள்  என்று விரியும் கதைக்களம். இதுவரையில் எங்கும் சொல்லப்படாத வித்தியாசமான கதைக்களம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாது முற்றிலும் புதிய, வேறுபட்ட கோணத்தில் இந்நாவல் படைக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. 

தனது நேர்முகத்தேர்வில் "out of the box" பதில் ஒன்றைக் கூறி திருமணத் தகவல் மையத்தில் தனக்கொரு வேலையைத் தேடி கொள்ளும் அர்ஜுன் ஒரு ஆவலுடன் இந்த கதைக்குள் நம்மை ஈர்க்கிறான். தொடர்ந்து ஆணும் பெண்ணுமாய் நால்வர் சேர்ந்து வாழும் ஒரு வீட்டில் ஐந்தாவது நபராய் நுழையும் அர்ஜுன் மூலம் நமக்கு என்ன என்ன அனுபவங்கள் சொல்லப்பட இருக்கின்றன என்ற ஆவலை தூண்டுகிறது.




கதையின் நாயகன் அர்ஜுன் மூலம் விரிவான உளவியல் தர்க்கங்கள் கதையெங்கும் நம்முன் வைக்கப்படுகின்றன.  இந்த தர்க்கங்கள் நவீனம் என்ற போர்வையில் நாம் வழமையாக்கத் துடிக்கும் சில வாழ்க்கைமுறைகளை கேள்விக்குட்படுத்துகின்றன.  அர்ஜுன் மூலம் மட்டுமல்லாது கிருஷ்ணா மூலமும் இப்படியான கேள்விகள் நம்முன் வைக்கப்படுகின்றன. சராசரிக்கும் அதிகமாய் அநேகமாய் தகுதிகளை தன்னிடத்தில் வைத்திருக்கும் கிருஷ்ணா திருமணச்சந்தையில் புறக்கணிக்கப்படுவதன் காரணம் என்ன?    கிருஷ்ணாவை புறக்கணிக்கும் பெண்கள் தேர்வு செய்யும் ஆண்கள் யார்? அவர்களைக்  காட்டிலும் கிருஷ்ணா எந்த விதத்தில் தகுதி குறைவானவன் என்ற கேள்விகளுக்கு விடைகளை நாம் கண்டுகொண்டாலே இந்த நாவலின் நோக்கம் நமக்கு புலனாகும். 

ஆரம்ப காலகட்டங்களில் தனக்கான ஆண்மகனை பெண் தான் தேர்வு செய்தாள். வீரம், ஆள்பலம், விவேகம் என்று  பெண்ணால் தேர்வு செய்யப்பட்ட தகுதியுடைய  ஆண்கள் மூலம் அடுத்த  அடுத்த தலைமுறைகள் வலுவாக அமைந்தன.  இப்படியான தேர்வில் தகுதியில்லாத ஆண்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவ்வாறு  புறக்கணிக்கப்பட்ட ஆண்களுக்கும் பெண் கிடைக்கும் வழிமுறைகளைத் தான்  இடைப்பட்ட காலங்களில் குடும்பம் என்னும்  அமைப்பு செய்து கொண்டிருக்கின்றது. பெண்ணை அடக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மானுடம் கண்டுகொண்ட வழியிது.  ஆணுக்குப்பெண் நிகர் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த நவீன காலகட்டத்திலும் தன் துணையை தானே தேர்வு செய்யும் நிலை முற்றிலும் பெண்களிடம் இல்லை என்பது தான் உண்மை.  ஆனால் அப்படியான வாய்ப்பு கிடைக்கப்பெற்றிருக்கும் பெண்களும் அந்த வாய்ப்பை ஒரு நல்ல துணையை  தேர்வுசெய்ய பயன்படுத்துகிறார்களா என்பதே இந்த நாவல் முன்வைக்கும் கேள்வி.

சராசரிக்கும் அதிகமான தகுதிகளைகொண்டிருந்தும்  பல  பெண்களால் புறக்கணிக்கப்பட்ட கிருஷ்ணாவை  தனது தெளிவானபுரிதலில் தேர்ந்தெடுக்கும்  தனுஜா ஒரு மாடல். இத்தொழில் பெரும்பான்மை ஆண்களின் தேர்வாக  இருக்காது என்று அர்ஜுன் சொல்கையில் தகுதியுடைய ஆண் கிடைப்பின் என்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதை ஒரு ஆய்வுக்குட்படுத்த மனம் விழைகிறது.  கதையின் முடிவில் தனது சம்பாத்தியங்களை கிருஷ்ணாவிடம் ஒப்படைத்து இனி மாடலிங் செய்வதில்லை வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைக்கிறன் என்று தனுஜா சொல்வது நெருடலாகிறது.
இதுவும் தனக்கு ஏற்றவளாய் பெண்ணை வடிவமைத்துக்கொள்ள ஆணினம் கட்டமைத்து வைத்திருக்கும் இன்னும் ஒரு வழிமுறை தானே  என்று என் பெண்மனம் கேள்வி எழுப்புவதை தவிர்க்க முடியவில்லை.

முடிவாக,  "வதுவை"  பல அடுக்குகளை கொண்டுள்ள இச்சமூகத்தை ஒரு கிராஸ் செக்ஷனல் ஸ்டடிக்கு உட்படுத்தி நம்முன் பல தரவுகளை வைத்துள்ளது. பெண்களின், பெண்களின் பெற்றோர்களின்  தேர்வுகளையும் கேள்விக்குட்படுத்தி நமக்குள் பல சிந்தனைகளை தூண்டிவிடுகின்றது. நாவலில் சிற்சில குறைபாடுகள் இருப்பினும் இக்கதையின் நோக்கம் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க நாம் என்ன செய்யலாம் என்ற  வழிக்காட்டுதலை முன்மொழிவது பாரட்டத்தக்கதொன்று.

-அருணா சுப்ரமணியன் 


அட்சயபாத்திரா - வாசிப்பு அனுபவம் 


ஒரு நாவல் வாசகனை ஆரம்பம் முதல் இறுதி வரை வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தன்னிடத்தே கையகப்படுத்தி ஒரே மூச்சில் படித்து முடிக்க வைக்குமானால் என்னை பொறுத்த வரை அது மிகச் சிறந்த நாவல்.. அட்சயப்பாத்திரா அந்த விதத்தில் நூறு சதவிகிதம் மிகச் சிறந்தவோர் நாவல். நாவலில் சொல்லப்பட்ட கதை இவ்வுலகில் நடக்கக் கூடிய சாத்தியம் உள்ளது. எனினும் , இது வரை எங்கும் சொல்லப்படாத ஒரு கோணம் என்றே கருதுகிறேன்..
கதையின் மையக்கரு வங்கி கொள்ளையாக இருப்பினும் என்னை மேலும் கவர்ந்த சில விஷயங்கள் உண்டு.


 நவீன கால காதல் கதையை போன்று தொடங்கும் இக்கதை மெல்ல வேறொரு பரிமாணம் எடுக்கிறது. இப்போதைய தலைமுறையின் மனப்போக்கை உறவுகளின் பால் அவர்களின் அணுகுமுறையை படம்பிடித்துக் காட்டுகின்றது.  உறவுகள் பொருள்சார் நன்மைகளை நோக்கி வழிநடத்தப்பட்ட ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இதில் பங்கு உண்டு. உண்மையான அன்பும் அர்த்தமுள்ள உறவுகளும் இன்று மலிந்து போயின. பணமே பிரதானமாய் இந்த மில்லினியத்தில் எந்தவொரு உறவின் போக்கையும் வழிநடத்துகிறது. இந்த உண்மையை நாவல் நன்றாக சித்தரிக்கின்றது.  

நவீனத்துவம் என்னும் போர்வையில் சிதறுண்டு போகும் இன்றைய காதலை படம் பிடித்து  காட்டுகிறது. பொருண்மை உலகில் தொலைந்து கொண்டிருக்கும் உன்னதங்களை மறைமுகமாக மேற்கோள் காட்டிவிடுகிறது.   வர்ஷா, விமல் மற்றும் அரவிந்த் இடையில் உருவாகும் ஒரு விநோத ஒப்பந்தத்திற்கு மூலமாய் "அட்சயபாத்திரம்"  கண்டெடுத்த அரவிந்தின் மூளை இருக்கிறது. அள்ள அள்ளக்  குறையாத செல்வத்தை தன்னகப்படுத்திக் கொள்ள இவர்களில் ஒருவர் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்று நாவலை தொடர்ந்து வாசிக்க நம்மை இருத்தி வைக்கின்றது. எதிர்பாராதொரு  முடிவோடு இக்கதை மனதில் குடிகொண்டுவிடுகிறது. 

ஒரு முழு நீள திரைப்படத்திற்கான அனைத்து சாராம்சங்களையும் பெற்றுள்ளது இந்நாவல். இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு படைப்பு!!


- அருணா சுப்ரமணியன் 





Those Faulty Journeys - Nyaletey Emmanuel, Software Engineer, USA

This is one of the most moving, and eye-opening mathematical fiction I’ve ever read. I read this book only because I met Ramprasath and he mentioned this book after an interesting discussion about mathematical logic. After reading the first chapter, I was very excited about what the next chapters would present. I began to see myself in the life of Ajay. This isn't only because I’m also a software developer but also because we seem to share the same professional and personal challenges as well. 

I should not  be surprised as Ramprasath, a software engineer himself, have seen and or experienced a lot of what this character goes through. The power of this connection is shown in how complex and yet detailed the author expresses his ideas about the characters in this novel. The author makes be stop and reconsider and rethink the many variables that come to play in my daily life decision. This novel puts you inside the minds of the characters and forces you to begin to think about the mathematical constructs that flow from one chapter to the next. This is a tremendous treasure of a book and I'm sure it's staying in my read again list for a long time. Highly recommended!








உங்கள் எண் என்ன? -  நாவல் - விமர்சனம் - Kamaraj M Radhakrishnan


இப்போது வாசித்து முடித்த நாவல் திரு. ராம்பிரசாத் அவர்களின் "உங்கள் எண் என்ன?'.

அட்டகாசமான நாவல். சமீபத்திய வாசிப்புகளில் பிரமிப்பை ஏற்படுத்தியது. முகப்பு அட்டையில் உள்ளதுபடி தமிழின் முதல் மேதமெடிகல் ஃபிக்ஷன் தான்.

உண்மையில் இந்தநாவல் ஒரு 25-30 வருடங்களுக்குமுன் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்டிருக்கவேண்டும். அபூர்வமாகத்தான் இதுபோன்ற நாவல் வெளிவரும். வாசகர்களின் உளவியலை பொதுவாக அசைத்துப்பார்க்கும் வகைமையில் இந்த நாவல் ஒரு புயலை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இதனை வாசித்து உள்ளுணர்ந்துகொள்வதற்கே ஓர் பக்குவமும் முதிர்ச்சியும் தேவைப்படும்.

தம்பதியர்களுக்கிடையேயான புரிதல் , ஏக்கம், காதல், ஈகோ, காமம் , ஆசை, ஈர்ப்பு, எண்ணங்கள், பொறாமை, பழிவாங்கல் , சிந்தனைகள் போன்ற மனித உணர்வுகளுக்கும் கணிதத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா ?

ஆம். உள்ளது என்று ஆணித்தரமாக ராம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் நிறுவுகிறது இந் நாவல்.

ஆண்களையும் பெண்களையும் 1லிருந்து 9வரையில் தகுதி அடிப்படையில் எண்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள். தகுதி என்பது இங்கே எளிய குறுகிய வாழ்க்கை முறையிலிருந்து சர்வதேச அறிவுஜீவி வரை கொள்ளலாம் , இரு பாலருக்கும். இந்த வகையான மனித வகைப்பாட்டியல் நாம் உறவுகளை பேணுவதற்கு அத்தியாவசியமான ஒன்று. அதோடுமட்டுமல்ல நமக்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வதற்கும்.

சிக்கலற்ற பரஸ்பர புரிதல் நிறைந்த வாழ்க்கை என்பது 1×1, 2×2, ....இப்படி 9 ×9 வரையான இணையர்களை கொள்ளலாம்.

மாறாக, 4 என்ற எண்ணுடைய ஆணோ பெண்ணோ 8 என்ற பெண்ணோ ஆணுடனே இயல்பான வாழ்க்கையை நடத்திச்செல்வதென்பது சவால்களும் சிக்கல்கள்களும் நிறைந்ததாகவே இருக்கும்.

செல்வம் - சரளா மற்றும் மாதவன்- வனஜா தம்பதிகளை வைத்து இயங்கும் நாவல் , ராம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு மாபெரும் உளவியல் பரிணாமத்தை எண்களை வைத்து கட்டமைத்து பகுக்கிறது. நாவல் என்ற கச்சித வடிவத்தை அடைய மேற்கண்ட ஐந்து கதாபாத்திரங்களே போதுமானது.

நாவல் சம்பவங்களை தர்க்கங்கள் நிறைந்த கணைகளை கொண்டு வீழ்த்தி மறு உருவம் தருகிறது. இது அபாரம்.

நாவல் என்ற சட்டகத்தில் அதன் உச்சத்தை அடைந்துள்ளது. வாசகனின் மன விரிவிற்கு உத்தரவாதமளிக்கும் நாவல் இது.

நாவல் முடிந்தபின் சில நுண்ணுணர்வுடைய வாசகர்களுக்கு ஒரு பிடி கிடைக்கும். சாதாரண மனித உணர்வுகளை மறுவிசாரணைக்கு உட்படுத்தலாம். மொத்தத்தில் இது ஒரு
ஆயத்த அளவீட்டுக்கருவி.

இந்த நாவலின் அடிப்படை கணிதவியல் என்பது என்னுள்ளேகூட பலவருடங்களாக வடிவில்லா ரூபத்தில் அலைந்துகொண்டிருந்தது என்பேன். நண்பர்களின் குடும்ப/காதல் சிக்கல்களை ஏதோ ஒரு வகையில் வகைமைப்படுத்த திணறிக்கொண்டிருந்தேன்.

உங்கள் எண் என்ன என்ற ராம்பிரசாத் அவர்களின் நாவல் சிக்கல்களை ஒரு கணித கோட்பாடுகளுடன் அடுக்கடுக்காக தீர்வுகளை தர்க்கரீதியில் சமன்பாடுகளை கொண்டு இறுதியில் LHS = RHS என நிறுவுகிறது.

எனது நண்பர்கள் அனைவருக்கும் தயக்கமே இல்லாமல் உடனடியாக பரிந்துரை செய்யும் நாவல் "உங்கள் எண் என்ன?"

நாவல் இளைய தலைமுறையினரை சென்று உலுக்கவேண்டும் என்பது எனது பெருவிருப்பம்.

°°°
எழுத்தாளர் ராம்பிரசாத் அவர்களுக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்.

தனிப்பட்ட முறையிலான எனது எதிர்தரப்பு என்னவெனில், நாவலுக்கான பெயர்.

"உங்கள் எண் என்ன? " என்ற பெயர் நாவல் தன்மைக்கு ஓர் அன்னியத்தை ஏற்படுத்தியிருப்பதாக உணர்கிறேன். ஒரு ஜோதிட எண் வகைமை என பலர் எண்ண நேரிடும். வேறு நல்ல பெயரை தேர்ந்தெடுப்பதில் உங்களைத்தவிர யாருக்கும் தகுதி இல்லை. நிச்சயம் பரிசீலியுங்கள்.



உங்கள் எண் என்ன? - நாவல் விமர்சனம் - முத்து 


தமிழின் முதல் கணித நாவல் என்பதுதான் புத்தகத்தை முதலில் வாசிக்க தூண்டிய விஷயம். ராம் எனக்கு Science Fiction கதைகள் மூலமாக ஏற்கனவே அறிமுகமாகி இருந்தார். அவர் கதைகளில் இருக்கும் தேர்ந்த கதாபாத்திரங்கள், சுவரஸ்யமான கோட்பாடுகள் எப்போதுமே ரசிக்க வைப்பவை. 'உங்கள் எண் என்ன?' ஒரு ஆழமான, அடிப்படை உறவுசார் கோட்பாட்டை கணித முறையில் எடுத்து கொண்டு அதன் அடிப்படையில் உறவுகளை, அது எப்படி அமைய வேண்டும் என்பதை, எப்படி மாற்றி யோசிக்க வேண்டும் என்பதை, மாற்றம் எது என்பதை எல்லாம் விவாதிக்கின்றது. மாற்று சிந்தனையின் ஒரு நல்ல விஷயம். அது ஒரு தீர யோசித்து அமைக்கபட்ட கோட்பாடினை கொண்டு வளரும் போது, மேலும் சிந்தனை விரிவாக்கதுக்கு உதவுகிறது. இந்த நாவலிலும் அதுதான் நிகழ்கிறது. நிறைய நாவல் இலக்கணங்களை தகர்த்து போகும் எழுத்தும் அமைப்பும் வலுவூட்டுகின்றன. ஒரு புதிய வாசிப்பு அனுபவம் தேவை எனும் போது இந்த புத்தகம் பரிந்துரை செய்யலாம்.










உங்கள் எண் என்ன? - விமர்சனம் - Priya Baskaran (Michigan, US)

எழுத்தாளர் ராம்பிரசாத்தின் “ உங்கள் எண் என்ன “ என்ற நாவலை Amazon Kindle ல் வாசித்தேன். இவர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் ஆவார்.
ஆரம்ப அத்தியாயத்தை வாசித்தவுடன், இதில் எங்கிருந்து எண்களைப் பற்றிச் சொல்லப் போகிறார், என நினைக்க வைத்தது. பிறகு கதைக்களம் ஒரு சில அத்தையாங்களைக் கடந்த பின் மாறுபட்ட தளத்தில் பயணிக்க ஆரம்பித்து என்னையும் உடன் இழுத்துச் சென்றது. அந்த கதைக்களத்துக்கு ஏற்ற முன் அத்தியாயங்களையும் அமைத்ததின் பின்னணியும் புரிந்தது.
திருமண உறவுகள் நிலைத்து இருக்க, துணை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை எண்களை வைத்து ஆழமான, வித்தியாசமான கதைக் களத்தை உருவாக்கி உள்ளார்.
முதலில் நம்முடைய தகுதிகள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு,
திருமண உறவுகள் நிலைத்து நிற்கத் துணையைத் தேர்ந்தெடுக்க
“Ram’s Organized Dependent Essence Chart - RODE” என்ற ஒரு chart ஐ அறிமுகப்படுத்தி, உலகம் எப்படி எண்களால் இயங்குகிறது என்பதையும், ஆண், பெண் உறவில் அப்படிப்பட்ட கணித எண்கள் எப்படி உறவைச் சமன் செய்கிறது என்பதையும் அற்புதமாக விளக்கியுள்ளார்.
உறவு நிலைத்து இருக்க அரத்தங்கள் முக்கியமானவையேத் தவிரத் தேர்வுகள், விருப்பங்கள் அல்ல என்பதைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். அதாவது அர்த்தங்கள்
என்பதை “ ஒரு conservative கடைசி வரை conservative ஆகத்தான் இருப்பார். ஒரு extrovert கடைசி வரை extrovert ஆகத்தான் இருப்பார். இதெல்லாம் மனநிலையோ, காலமோ மாறினாலும் மாறாதது” என்பதை விளக்கி இருக்கிறார்.
சிலர் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள்,
சிலர் எதனையும் பார்ப்பதில்லை. ஆனால்
இந்தக் கணிதப் பொருத்தம் எப்படி ஒரு பந்தத்தை நிரந்தரமாகத் தொய்வில்லாமல் தொடர உதவும் என்பதைக் காட்சிகளுடன், சூழ்நிலைகளுடன், அன்றாட நிகழ்வில் ஏற்படும் நிதர்சனத்துடன் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு வெகு சிறப்பு.
ஒரு வேலைக்குப் போனாலே, முதல் சுற்று, இரண்டாம் சுற்று, இறுதிச் சுற்று என நேர்காணல் வைத்துத் தேர்ந்தெடுக்கப் படுகிறோம். எதனால்..? அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாம் எவ்வாறு பங்களிக்க இயலும் என்று அறிவதற்காய். இந்த வேலை இல்லை என்றால் வேறு வேலை தேடிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் இருக்கும் ஒரு பணிக்கே எவ்வளவு நாம் தயார்ப்படுத்திக் கொள்ளும் போது, இருப்பதே இந்த ஒரு பிறவி.
அதில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நமது கலாச்சாரத் திருமண உறவில் ஏமாற்றம், சலிப்பு, மன உலைச்சல் இவற்றைத் தவிர்ந்து, இன்பமுடன், நிலையான, மெய்யான, உறவாய் நிலைத்திருக்க இந்த கணித எண் பொருத்தத்தைப் பெற்றோரால் ஏற்பாடு செய்த திருமணமானாலும், காதல் திருமணமானாலும் பின்பற்றிப் பார்ப்பதில்லை தவறில்லை
எனத் தோன்றுகிறது.
இந்த நாவல் வாழ்வியல் எதார்த்தங்களைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. மிகவும் விறுவிறுப்பான அத்தியாயங்கள் அமைந்த அருமையான நாவல். அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல். முக்கியமாகப் பெண்கள் குடும்பச் சுமை, பணிச்சுமை இரண்டிலும் சவாரி செய்ய வேண்டிய காலகட்டத்தில் சரியான துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.
மேலும் இந்த நாவல் University of Charleston ஐச்சேர்ந்த அமெரிக்க
கணிதவியாலர் Alex Kasman இந்த நூலைக் கணித நாவல் என்று அங்கீகரித்து கணித நூல்களுக்கான பட்டியலில் இணைத்திருக்கிறார்.
வித்தியாசமான கதை மற்றும் அருமையான ஒரு கணித chart ஐ கொடுத்த எழுத்தாளர் ராம்பிரசாத்திற்கு நன்றிகள் . மேன்மேலும் பல நாவல்களைப் படைக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.





முகநூலில் திரு.கந்தசாமி அவர்கள் என்னைப் பற்றி சில வார்த்தைகள் எழுதியுள்ளார்...அதை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி...



 "திறமைகளும் அப்பாவித்தனமும் இணையக் கூடாது. இணைந்தால் என்போல் ஒரு அப்பாவி மனிதன் உருவாகிறான்" என்கிறார் ராம்பிரசாத்.

எழுத்தாளர் ராம்பிரசாத் கவிஞர், எழுத்தாளர், மென்பொறியாளர்.
இவர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா என்ற நகரில் வசித்து வருகிறார்.
இவர் இதுவரையில் ஏழு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். குறு நாவல்களும் எழுதியுள்ளார். முகநூலில் கவிதைகள் எழுதி வருகிறார். தன்னுடைய நூல்களைப் பற்றியும் பதிவிடுகிறார். தனது கருத்துகளையும் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.
"தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியலில் பரிச்சயம் இல்லை. அறிவியல் மாணவர்கள் தமிழில் இயங்குவதில்லை. இரண்டும் இரண்டு தண்டவாளங்கள் போல் ஒட்டாமலே பயணிக்கின்றன. கல்வியை உள்வாங்கும் நபர்கள் எங்கோ பிறழ்ந்து போகிறார்கள். எப்பொழுதெல்லாம் மனிதம் மீது நம்பிக்கை பொய்க்கிறதோ அப்போதெல்லாம் இள ரத்தங்கள் மீதுதான் பார்வையைத் திருப்ப வேண்டியுள்ளது" என்கிறார்.
இவரது சிறுகதைகள் வாசகசாலை, சொல்வனம், பதாகை, கனலி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவருடைய முதல் நாவல் "ஒப்பனைகள் கலைவதற்கே" தேவி கண்மணி நாவலிதழில் வெளியானது. இதை 2014 இல் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டது. பின்னர் உங்கள் எண் என்ன?, வரதட்சணா, ஏஞ்சலின் மற்றும் சிலர், வதுவை ஆகிய நூல்களை காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. இவரது இரண்டு விரல்கள், அட்சயப்பாத்திரா ஆகிய நூல்களை வாதினி பதிப்பகம் வெளியிட்டது. அதன் பின்னர் இவரது 'வாவ் சிக்னல்' என்ற சிறுகதைத் தொகுப்பை படைப்பு பதிப்பகம் வெளியிட்டது.
இவரது முகநூல் பதிவுகள் வாயிலாகவே இவரைப் பற்றி அறிந்து கொண்டேன். வித்தியாசமான நாவல்களையும், சிறுகதைகளையும் படைக்கும் இந்த இளம் எழுத்தாளருடன் முகநூல் நட்பில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


வாவ் சிக்னல்- ராம் பிரசாத் - அறிவியல் சிறுகதைத்தொகுப்பு- பதிப்பகம்- படைப்பு- முதல் பதிப்பு, 2020- பக்கங்கள்- 148
வாவ் சிக்னல்- ஒரு அற்புத அறிவியல் சிறுகதைத்தொகுப்பு
எழுத்தாளர் பற்றி:
இந்த நூலை எழுதிய எழுத்தாளர் திரு ராம் பிரசாத் அவர்கள் மயிலாடுதுறையை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தமிழில் 7 நூல்களும். ஆங்கிலத்தில் மூன்று நூல்களும் வெளியிட்டு இருக்கிறார்.
புத்தகம் பற்றி:
மொத்தம் 12 தலைப்புகளும் 148 பக்கங்கள் கொண்ட இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள அனைத்து அனைத்து சிறுகதைகளும் மிகவும் அருமையாக அமைந்துள்ளது .
முதல் தலைப்பான கண்காட்சி என்னும் சிறுகதையில் போன்சாய் மனிதர்கள் பற்றிய கதை என்று சொல்லலாம். உண்மையில் நிகழ்காலத்தில் போன்சாய் மனிதர்கள் என்று இருக்கிறார்களா அல்லது போன்சாய் மனிதர்கள் என்றால் என்ன என்று இணையத்தில் தேடியபோது தான் சில தகவல்கள் கிடைத்தன உண்மையில் போன்சாய் தாவரம் போல நிகழ்காலத்தில் போன்சாய் மனிதர்கள் என்று உருவானால் எப்படி இருக்கும் என்பதே கதை.
அடுத்த தலைப்பான பேய் என்கிற சிறுகதை மிகவும் ஒரு சுவாரசியமான சிறுகதை காரணம் இந்த சிறுகதையில் மின்னலை வைத்துதான் மொத்த கதையும் நகர்கிறது. ஒரு மலைப் பிரதேசத்திற்கு செல்லும் தம்பதிகளில் ஒருவர் காணாமல் போக. அதன்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி கதை
அடுத்த கதையான அவன் என்கிற கதை ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசி பற்றிய கதை இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் மருத்துவமனைக்கு போனவுடன் உயிரோடு இருப்பதாக தகவல் வருகிறது. அதன்பின் நடக்கும் சில சம்பவங்களுக்கு பிறகு அவர் காணாமல் போகிறார் என்ன நடக்கிறது அவர் எப்படி உயிரோடு வந்தார். மீண்டும் எங்கே சென்றார் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்
அடுத்த கதையான பொறி என்கிற கதை . டைம் லூப் என்று சொல்லப்படும் கருத்தை மையமாக வைத்து புனையப்பட்ட கதை
அதுபோல அதிர்ஷ்டம் என்கிற சிறுகதை இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த சிறுகதை என்று சொல்வேன் காரணம் இது ஒரு விபத்து . அதன் பின்னால் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையப்படுத்தி செய்யப்பட்டிருக்கும் ஒரு கதை.
அதுபோல் அடுத்த கதையான ஆதாம் ஏவாள் என்ற சிறுகதையும். விண்வெளியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.
இது மட்டுமில்லாமல் அடுத்த தலைப்பான பூமி, கடவுளைத் தேடி, அவரேஜ், அனாதை போன்ற சிறுகதைகளும் விண்வெளியை மையமாக வைத்து எழுதிய கதை
என்னுடைய பார்வை:
கிட்டத்தட்ட இந்த புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது என்ன சுவாரசியம் இருந்தது அதே சுவாரசியம் கடைசி தலைப்பை படித்து முடிக்கும் வரையிலும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட அறிவியல் தகவல்கள் அதுவும் வரும் காலத்தில் சாத்தியம் என்று நம்பப்படும் தொழில்நுட்பங்கள் இந்த புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறுகதைத் தொகுப்பு இது. — with எழுத்தாளர் ராம்பிரசாத்.




ஒப்பனைகள் கலைவதற்கே - ஒரு பின்னூட்டம்/விமர்சனம்
ஒப்பனைகள் கலைவதற்கே - ஒரு பின்னூட்டம்/விமர்சனம்
Hi this is Arthi, dentist. We met in book fair during novel release. I think u remember me.. novel is so good. I think this novel has to read by all women.. I enjoyed. Ur view towards society is nice but changing it is very difficult. Ur view towards girl's choosing a guy is perfect but sorry to ask u, had any experience? Excellent keep on writing. Please do make many people to read this novel. Thank u.