சொல்வனம் 362வது இதழில் எனது "எதிர்மறை சோதனை வழக்கு" சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சிறுகதையை வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்:
பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
சொல்வனம் 362வது இதழில் எனது "எதிர்மறை சோதனை வழக்கு" சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சிறுகதையை வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்:
நீண்ட நாட்களாக அறிவியல் புனைவு வாசிக்கவில்லையே என்கிற ஒரு ஆதங்கம் தலைதூக்க, முகநூலில் தோழமைகள் பரிந்துரைத்த எழுத்தாளர் ராம் பிரசாத் அவர்களின் ஒன்றிரண்டு நூல்களை வாங்கியிருக்கிறேன்.
அதில் முதலில் வாசித்தது #வாவ்_சிக்னல் 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. அத்தனையும் சுவாரசியமான அறிவியல் புனைவு சிறுகதைகள். அதிலும் இயற்கை விதிகளை புரிந்து அதை முன்பின்பாக மாற்றி அவைகளுக்கு இடையான முரண்பாடுகளை எழுதி சுவாரசியமூட்டி இருக்கிறார்.
ஆழ்ந்த கருத்துகளோடும் எளிமையான விவரணங்களோடும் எழுதியிருக்கிறார் எழுத்தாளர். இந்த நூலில் என்னை பெரிதும் ஈர்த்தது ஆங்காங்கு அவர் தெளித்திருக்கும் மெய்யியல் சார்ந்த கருத்துருக்கள். அறிவியலும் மெய்யியலும் ஏதோ ஒரு புள்ளி ஒன்றுபடுகின்றன என்று சொல்வார்கள். இவருடைய ஒவ்வொரு கதையிலும் அதை நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். அதில் சில துளிகள்...
" நான் ஒரு முழுமையான, எல்லா சுகங்களும், ஆஸ்திகளும் கிடைக்கப்பெற்ற ஒரு வாழ்க்கைக்காக ஏங்கவில்லை. இந்த உலகின் முழுமையின்மைகளை, குறைகளை கடந்து போக அந்த குறைகளுடனே வாழ்ந்து மரித்துப் போக, கொஞ்சமே கொஞ்சம் அன்பு மட்டும்தானே கேட்கிறேன்."
"எவரின் கீழ்மையும் சரி செய்யும் வார்த்தைகள் உலகின் எந்த மொழியிலும் இல்லை எனும் போது இந்த புதிய உலகில் மட்டும் இருந்த விடவா போகிறது?"
கீழ்மை செய்பவனின் மூளை அந்த கீழ்மைக்கு பழகி விடுகிறது. எல்லாவற்றிலும் கீழ்மயையே பார்க்கின்றன. கீழ்மையே தேடுகின்றன. நாளடைவில் அம்மூளைகளுக்கு மேன்மையோ, அதன் வாசமோ, அதன் போக்கோ, பிடிபடுவதே இல்லை"
"எது உன்னுடையது இல்லையோ, அது நீ எத்தனை முயற்சித்தாலும் உன்னுடையதாகப் போவதில்லை"
"எந்த அன்பையும் அக்கறையும் நீங்கள் மலைபோல் குவித்தாலும், அதற்கு எவ்வித நியாயத்தையும் வழங்கிடாதவர்களுக்கே தொடர்ந்து அந்த அன்பையும் அக்கறையும் வழங்கிக் கொண்டே இருப்பது செக்கு மாட்டுத்தனமா? கையாலாகாததனமா?"
"சூரியனைச் சுற்றிய 9 கிரகங்களின் விசைகள் தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டு சமன்படும் இடங்களில் தான் ஒவ்வொரு கிரகத்தின் இருப்பும் சாத்தியப்படுகிறதா? சமன்படுதலும் சமரசமும்தான் குடும்பம் என்கிற ஒருங்கிணைப்பின் மையமா?"
👌👌
விரைவில் முழு விமர்சனம்...
ஜெருசலேம் பொறியியல் கல்லூரி - முன்னாள் / இன்னாள் மாணவர்கள் சந்திப்பு
**************************************************************
சற்றேரக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு, என் கல்லூரி மாணவர்களிடம் பேசும் வாய்ப்பு கிட்டியது. எனக்கெல்லாம் அந்த வயதில், அப்துல் கலாமே வந்து பேசியிருந்தாலும், கவனம் இருந்திருக்காது.
கல்லூரி மாணவர்களுக்கு என்ன தேவை? வேலைவாய்ப்பு. அது தவிர ஏனைய எல்லாமும் இந்த வயதில் தேவையற்றதாகத்தான் நினைப்பார்கள். அதுதானே நம் 'கலாச்சாரமும்'?! இல்லையா?
அதற்காக, மாணவர்களுக்கு நம் அனுபவங்களைப் பகிராமல் இருக்க முடியுமா? யாருக்கேனும் பயன்படட்டும் என்று பகிர்வதுதானே இதெல்லாம்.
பெரும்பாலும் AI தான் பேசப்பட்டது. பிரதானமாகப் பார்க்கப்பட்டது. எல்லோரும் பேசியதும் அதைத்தான். 'உனக்கு என்ன பிடித்தமோ அது விளையாட்டோ, எழுத்தோ, ஓவியமோ அதிலும் சிறந்து வர, வருமானம் ஈட்ட, ஒரு முழு நேர வேலையாகக் கொள்ள இக்காலத்தில் வாய்ப்புகள் அதிகமாகியிருக்கிறது' என்று பேசியிருக்கிறேன்.
எத்தனை பேரைச் சென்றடைந்தது என்பதெல்லாம் இனி தான் தெரிய வரும். விதைகள் என்பது தூவப்படுவதுதானே.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இயங்கும் காலாக்ஸி பதிப்பகத்தின் மாத இதழான 'விண்மீன்' இதழில் எனது இரண்டு கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.
எனது கவிதைகளைத் தெரிவு செய்து வெளியிட்ட விண்மீன் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
என் கல்லூரி மாணவர்களிடையே பேச இருக்கிறேன்.
2002ல் முடித்த பொறியியல் படிப்பு. 23 வருடங்கள் ஆகிறது. பொறியியல் படிக்கும் வரை, துரதிருஷ்டவசமாக, நல்ல நட்புகள் வாய்க்கவில்லை. வாய்த்த நட்புகளிடமும் போதிய புரிதல் இல்லை. இப்போது, இலக்கியம் பரிச்சமாகிவிட்ட பிறகு, இப்போதிருக்கும் முதிர்ச்சியுடன் யோசித்துப் பார்த்தால், முற்றிலும் வேறொருத்தனாக, அந்தக் கூட்டத்திற்கு,அந்த வளாகத்திற்குப் பொருந்தாத தகுதிகள் கொண்ட ஒருத்தனாக அப்போதே இருந்திருக்கிறேன் என்பது புரிகிறது.
அவர்களுக்கு என்னைப் 'பார்க்க'த் தெரியவில்லை. அவர்களுக்கு புரியும் விதமாய் 'விளக்க' எனக்கும் தெரிந்திருக்கவில்லை. இப்படி பல இல்லைகளோடு துவங்கி முடிந்த கல்லூரி வாழ்வு அது.
என் அனுபவங்களில் அவர்களுக்கு பாடங்கள் இருக்கலாம். அதைத்தான் பகிரப் போகிறேன்.
இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும், ஜெரூசலேம் பொறியியல் கல்லூரி ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.🙏🙏🙏
Where we end up together is important. It marks the point in time when our efforts have brought us all to a common point. That way, the first day at any organization is unique. Twenty-seven of us have come together from different corners of the world. There is only one thing connecting us all: Science Fictions!!"
ஓரிடத்தில் நாம் சென்று சேரும் தருணம் முக்கியமானது. காலத்தின் போக்கில், நம் முயற்சிகளின் விளைவுகள் நம்மை ஒரு புள்ளியில் நிறுத்திய தருணம் அது. ஆகையால், முதல் நாள் ஒவ்வொரு நிறுவனத்திலும் பிரத்தியேகமானது தான். இருபத்தி ஏழு பேர் சேர்ந்திருக்கிறோம், உலகின் வெவ்வேறு மூலையிலிருந்து. இணைப்பது ஒன்றே ஒன்று தான். அறிவியல் புனைவுகள்!!
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் காலாக்ஸி பதிப்பகத்தின் நிறுவனர் திரு பாலாஜி பாஸ்கரன் அவர்கள் வாசிப்பை, தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் நோக்குடன் தினம் தினம் ஒரு சிறுகதை என நூறு நாட்களுக்கு நூறு சிறுகதைகள் வாசிக்கிறார்.
அவர் நூல் அறிமுகம் செய்து விமர்சிக்கும் 52வது சிறுகதையாக, குவிகம் சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதைகள் அடங்கிய காலாக்ஸி பதிப்பகம் வெளியிட்ட "தோப்பு" தொகுப்பில் உள்ள எனது "போர்" சிறுகதை இடம்பெறுகிறது.
அவருக்கு எனது நன்றிகள். அவருடைய வாசிப்பை பின் வரும் சுட்டியில் காண்க:
https://www.youtube.com/watch?v=k0PH2oLK37g&t=3s
எதிர்வரும் 2026 புத்தகக் கண்காட்சியில் எனது அறிவியல் புனைவு மற்றும் கணிதப் புனைவு நூல்கள் கிடைக்குமிடம்:
படைப்பு பதிப்பகம் ஸ்டால்: 561
8 ஜனவரி முதல் 21 ஜனவரி வரை, YMCA மைதானம், நந்தனம், சென்னை.
1. வாவ் சிக்னல் - விஞ்ஞானச் சிறுகதைகள்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த சிறுகதை நூல் - 2020 விருது பெற்ற முதல் அறிவியல் புனைவுச் சிறுகதை நூல்.
2. மரபணுக்கள் - விஞ்ஞானச் சிறுகதைகள்
மரபணுக்களை மையமாக வைத்துப் புனையப்பட்ட பத்து விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுதி.
2.அ. 'தழுவு கருவி' - அரூ அறிவியல் புனைவுச் சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதை.
2.ஆ. 'எப்போதும் பெண்' - கொலுசு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை.
2.இ. 'கண்ணாடிச் சுவர்' - குவிகம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை.
2.ஈ. 'பிரதியெடுக்காதே' - இச்சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Mismatch' வார்த்தைக்கு எட்டு அமெரிக்க செண்ட் வீதம் விற்பனை ஆகி, அமெரிக்காவின் புகழ்பெற்ற Science Fiction and Fantasy writer's Associationல் இணை உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
2.உ. 'சோஃபி' - இச்சிறுகதை எழுத்தாளர் திரு.சங்கர நாராயணன் தொகுத்த 'மாசறு பொன்' தொகுதியில் இடம்பெற்றது. இதன் மற்றோரு வர்ஷனான, சோஃபியா ஜீரோ டிகிரி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
3. தீசஸின் கப்பல் - சிறார் விஞ்ஞானச் சிறுகதைகள்
'பூனையற்ற புன்னகை' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Sensed Presence', Allegory Science Fiction, Fantasy, Horror Magazineல், 'Honorable Mention' அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது.
4. கம்ப்யூட்டா - சிறார் கணிதச் சிறுகதைகள்
Banach-Tarski Paradox, Infinite Monkey Theorm, Thompson's Lamp Paradox முதலான சுமார் அரை டஜனுக்கும் மேலான கணிதக் கோட்பாடுகள் மற்றும் தேற்றங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி நூல். இந்திய மொழிகளிலேயே இருக்கும் முதல் கணிதச் சிறுகதைத் தொகுதி நூல் தமிழில் உள்ள இந்த நூல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
4.அ. Infinite Monkey Theoremல் அமைந்த 'கூடை மனிதன்' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'The Bucket Man', L.Ron Hubbard Writer's of the Future Contestல், 'Honorable Mention' அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது.
4.ஆ. தொகுப்பின் முதல் சிறுகதையான, Logarithm அடிப்படையிலான 'மடக்கை' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியல் புனைவிதழான AntipodeanSF ல் April 2026ல் வெளியாகத்தேர்வாகியிருக்கிறது.
எனது வலைப்பூவை வாசிக்கும் சிங்கப்பூர் அன்பர்கள் யாரேனும் இருந்தால், எனக்கு மின்னஞ்சல் இடவும். ramprasath.ram@gmail.com
நன்றிகள்.
ராம்பிரசாத்
SFWA Member
Semi-Pro & Pro Sales