என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 27 March 2021

தேவியின் கண்மணி - முதல் நாவல்

 உண்மையில் என் நாவல்களில் மிக அதிகம் பேரைச் சென்றடைந்த நாவல் 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற நாவலாகத்தான் இருக்க முடியும். ஏனெனில், 8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தேவியின் கண்மணி பத்திரிக்கையில் அந்த நாவல் முதன் முதலாக வெளியானது. 


சம காலத்தில் ஒரு நாவல் எழுதி, அதை பெருவாரியான மக்களின் பார்வைக்கு வேறெப்படியும் கொண்டு சேர்த்துவிட முடியுமா தெரியவில்லை. ஒரு நூல் எழுதினால் ஒரு பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டால், மிஞ்சி மிஞ்சிப் போனால், ஒரு ஐம்பது பேர் வாசிப்பார்கள். அதில் 25ஐ நாம் தான் பிடிஎஃப் தந்து படிக்கவைக்க வேண்டும்.  இந்த 25 பேர் நல்ல விமர்சனம் எழுதினால் மேற்கொண்டு 25  பேர் வாசிப்பார்கள். அவ்வளவுதான். 


ராயல்டி என்பது வெகு சில பதிப்பகங்கள் தருவது தான். மற்ற பதிப்பகங்களில் இந்தக் கேள்வியே எழாது. ஆனால், தேவியின் கண்மணி வெளியிட்ட இந்த நாவலுக்கு 2013ல் நான்காயிரம் ரூபாய் சன்மானமாக அளித்தார்கள். இன்று ஒரு நூல் எழுதி வெளியிட்டாலும் கூட ராயல்டியாக இந்தத் தொகை வருவது என்பது  நடக்காத காரியம்.


அப்போது Capgeminiல் பணியில் இருந்தேன்.


கிறுக்கிப் பார்த்தபோது "நாம் எழுதுவதெல்லாம் கவிதையா?" என்ற கேள்வி எழுந்து, எனக்கு நானே நிரூபித்துக்கொள்ள முயன்று பத்திரிக்கைகளுக்கு அனுப்ப, இலக்கிய பத்திரிக்கைகள் அத்தாட்சி வழங்கின. குறிப்பாக உயிர்மையின் உயிரோசை. 

சிறுகதை எழுதிப்பார்த்தபோது " நாம் எழுதுவதெல்லாம் சிறுகதையா?" என்ற கேள்வி எழுந்து எனக்கு நானே நிரூபித்துக்கொள்ள  முயன்று பத்திரிக்கைகளுக்கு அனுப்ப, இலக்கிய பத்திரிக்கைகள் அத்தாட்சி வழங்கின. கணையாழி, உயிர்மை என்று.

ஒரு கன்னி முயற்சியாக நெடுங்கதை 'எழுதிப்பார்த்த' எனக்கு, ' நீயும் ஒரு நாவலாசிரியன் தான்' என்று ஒரு பெரிய பத்திரிக்கை சான்றிதழ் வழங்கியது போலிருந்தது இந்த வெளியீடு. 





தமிழ் நாட்டில் வாராந்திர, மாதாந்திர பத்திரிக்கைகள் விற்ற எல்லா பெட்டிக் கடைகளிலும் சுமார் இரண்டு வாரங்களுக்கு விற்பனைக்கு தொங்கிக்கொண்டிருந்தது ஒரு இனிய அனுபவம்..  முதல் முறையாக நான் எழுதிய 90 பக்க நெடுங்கதையை ஒரு பிரபலமான பத்திரிக்கை மொத்தமாக அங்கீகரித்து வெளியிட்ட மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல்,  நூல் வெளியான ஒரு வாரத்திற்கு சென்னையில் நான் செல்ல  நேர்ந்த இடங்களில் இருந்த கடைகளிலெல்லாம் தேவியின் கண்மணி கேட்டு வாங்கிச் சேர்த்துக்கொண்டிருந்தேன். கடைக்காரர் புத்தகத்தை என்னிடம் தரும்போது புத்தகத்தில் இருந்த புகைப்படத்தையும் என்னையும் ஒரு கணம் மாறி மாறிப் பார்ப்பதைக் காண்பதில் ஒரு பரவசம் கிடைத்தது. இப்படி வாங்கிச் சேர்த்தது. சுமார் நாற்பது பிரதிகள் இருக்கலாம். ஒரே புத்தகத்தைப் பைத்தியம் போல் பணம் கொடுத்து வாங்கிச் சேர்த்ததற்கு வீட்டில் கடுமையாகத் திட்டு வாங்கிய நினைவும் இருக்கிறது. 


நூல் களுடனான உறவை பலப்படுத்தியதில், இந்த எழுத்துக்கு நிறையவே பங்கிருக்கிறது. என் வீட்டில் யாருக்குமே நூல்களுடன் எவ்விதத்தொடர்பும் இல்லை. இருந்தும், எனக்குள் இருந்த எழுத்தாளனை வெளிப்படுத்தியது இந்த எழுத்து தான். இந்த எழுத்துக்கு ஆயுசுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.


Friday 19 March 2021

ஏழு கடல், ஏழு மலை தாண்டி - சிறுகதை - விமர்சன பார்வைகள்

ஏழு கடல், ஏழு மலை தாண்டி - சிறுகதை

https://solvanam.com/2021/03/14/%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/






ஏழு கடல், ஏழு மலை தாண்டி - சிறுகதை

சொல்வனம் 242வது இதழில் 'ஏழு கடல், ஏழு மலை தாண்டி' என்ற என் அறிவியல் அதிபுனைவுச் சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற கருத்துப் பகிர்வுகளே, விவாதங்களுக்கு இட்டுச்செல்லும்.

இதழில் சிறுகதையை வாசிக்க பின் வரும் சுட்டியை சொடுக்கவும்:

Sunday 14 March 2021

விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரி

விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரி


விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரி  திருச்செங்கோட்டில் அமைந்திருக்கிறது. 

சுமார் 23000 மாணவிகள் வெவ்வேறு படிப்புகளை எடுத்துப் படிக்கிறார்கள்.  நான் பேசிய வரையில், கல்லூரியில் மாணவிகளுக்கான அத்தனை சுய முன்னேற்றப் பயிற்சிகளையும் கல்லூரி நிர்வாகமே வழங்குகிறது. தவிர எழுத்து பழக விரும்பும் மாணவிகளை ஊக்குவிக்க, கல்லூரிக்கென அச்சிதழ்கள் கொண்டு வருவதிலும் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.

என்னைக் கேட்டால், இந்தச் செயல்பாடுகளுக்கெனவே இந்தக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்பேன். வேலை வாய்ப்பு குதிரைக்கொம்பாகிக்கொண்டிருக்கிற இக்காலத்தில் மாணவிகள் சுயமாகவே சொந்தக்காலில் நிற்க ஏது செய்யும் அத்தனையையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் கல்லூரி கிடைப்பது மாணவிகளுக்கு வரம். மாணவிகள் மீதான ஆசிரியப்பெருந்தகைகளின் அக்கறை குறிப்பிடத்தக்கது.

விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரியில் 'அறிவியல் தமிழின் அவசியம்' என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன். இணைய வழிப் பன்னாட்டு கருத்தரங்கமாக நிகழ இருக்கும் இந்த நிகழ்வு வரும் 17ம் திகதி நடைபெற உள்ளது.

வாய்ப்புள்ள நண்பர்களைக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இணைய வழியின் முகவரி விரைவில் பகிரப்படும்.










Saturday 13 March 2021

உங்கள் எண் என்ன? - நாவல் - விமர்சனம்

உங்கள் எண் என்ன? - நாவல் - விமர்சனம்


வணக்கம் ,,,. விதி வலியது.. விதியை மதியால் மாற்ற முடியாது..!! 

மாற்ற முடியும் எனும் விதி இருப்பவரால் மட்டுமே முடியும்.. 

இந்த வாசகங்களை மீறி ... விதி என்று ஒன்றுமில்லை.. வாழ்க்கைக்கு எது தேவையோ அத முன் கூட்டியே யோசித்து .. சிறப்புறச் செய்து கொண்டால் விதியின் மீது பழிபோட வேண்டாம்.. 

இன்று நேற்று நாளை என டைம் மெஷினை வைத்து தமிழ் படம் ஒன்று வந்தது. அதில் செய்த செயல் திருப்தி இல்லை என்றால்.. டைம் மெஷின் மூலம் பழய காலத்திற்கு ென்று அதே நிகழ்வை மாற்றி , அதன் மூலம் இப்போதய நிகழ்காலத்தை வளமாக .,,,,,, 

ஆனால் எழுத்தாளர் ராம் பிரசாத் அல்ஜீப்ரா பாணி,,, கணித எண்கள் மூலமும் .. சமண்பாடுகள் மூலமும்,,, செயல்களுக்கு .இணாதிசயங்களுக்கு ம்.. ஆண் பெண் என இருவருக்கும் ஒவ்வோர் எண் கொடுத்து,,, அதன் மூலம் ப்ரச்சனையை அலசி ஆராய்ந்து,,, புதிய கோணத்தில் புதிய பார்வையில்,, தர்க்கம் மற்றும் ஆதாரத்தின் ..மூலம் தீர்வுகள் சொல்கிறார்,, 

தவறுகள.. தவறு செய்பவர்களை மறப்போம்.. மன்னிப்போம் : என விடுவதவிட அவர்களை ஒதுக்கி புதிய மனிதர்களோடு புதிய பாதையில் செல்வது நலம் என்கிறார் .. ப்ரச்சனைகள யோசித்து தேவையான எண்கள் மூலம் வரிசைபடுத்தி ... தீர்வுகளை நெறிபடுத்தி .. வாழ்ந்தோமானால் அதுவே சிறப்பென்கிறார், 

இதனை செல்வம் கொலம்பஸ் என இருவர் மூலம் விவாதங்களாக நிகழ்த்தி,,, வர்ணனைகள் ஏதுமின்றி ..நாவலை திறம்பட எழுதியுள்ளார். கதையில் மொத்தம் மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் .. அதிலும் இரண்டு ஆண்கள் மட்டுமே ப்ரச்சனைகளை தீர்வு களை விவாதிப்பர்.. புதிய கணித எண் (ஜோதிட.....எண் கணிதம் அல்ல) சமண்பாடுகள்,,,, மூலம் .முடிவுச் சங்கிலி என்ற விளக்கப்படங்களின் மூலம் .. தீர்வுகள் .,

அழகிய கதை.. குழப்பங்கள் ஏதுமின்றி விவாதங்கள்.. தர்க்கங்கள்..தீர்வுகள் ..தமிழின் முதல் மே தமேடிக்கல் FICTiON... விறுவிறுப்பு குறையாத .,, ஆர்வத்தை தூண்டும் எழுத்து ,,,அற்புத அருமையான நாவல் உங்கள் எண் என்ன?. எழுத்தாளர் ராம் பிரசாத்தின் புதிய முயற்சிக்கு மனமார்ந்த பாரட்டுகள்,,,,, நன்றி


Ramkumar/Bsnl Retd/Chennai.600 107..Ct.no.....9444950559...





'கதையாடல்' 52-ஆம் நிகழ்வு - சேஷம் - ராம்பிரசாத்

பனுவல் புத்தக விற்பனை நிலையத்துடன் #வாசகசாலை இணைந்து வழங்கும் 'கதையாடல்' 52-ஆம் நிகழ்வு நேரடி அரங்க நிகழ்வாக இன்று மாலை (13/03/21) நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பு இதோ உங்கள் முன்னால்...!

பிப்ரவரி மாத அச்சு மற்றும் இணைய இதழ்களில் இருந்து இம்முறை உரையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ள கதைகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
அச்சு இதழ்கள்:
காலச்சுவடு
சாட்டை - எம்.ரிஷான் ஷெரீப்
அந்திமழை
உத்தரவு - எம்.கோபாலகிருஷ்ணன்
இணைய இதழ்கள்:
சொல்வனம்
சௌவாலி - மஹாஸ்வேதா தேவி (தமிழில்: எம்.ஏ.சுசீலா): https://bit.ly/3erUggr
யாவரும்
உலகின் அழகிய துயரம் - ஜீவ கரிகாலன்: https://bit.ly/3lhTC6J
வாசகசாலை
சேஷம் - ராம்பிரசாத்: https://bit.ly/3cl9RvA
நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு #வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது. நன்றி. மகிழ்ச்சி..!
குறிப்பு:
(1) நிகழ்வில் சமூக இடைவெளி முழுமையாக கடைபிடிக்கப்படும்.
(2) முகக்கவசம் அணியாத நண்பர்கள் கண்டிப்பாக அரங்கினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.




Thursday 11 March 2021

'கதையாடல்' 52-ஆம் நிகழ்வு - சேஷம் - ராம்பிரசாத்

பனுவல் புத்தக விற்பனை நிலையத்துடன் #வாசகசாலை இணைந்து வழங்கும் 'கதையாடல்' 52-ஆம் நிகழ்வு நேரடி அரங்க நிகழ்வாக வரும் சனிக்கிழமை மாலை (13/03/21) நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பு இதோ உங்கள் முன்னால்...!

பிப்ரவரி மாத அச்சு மற்றும் இணைய இதழ்களில் இருந்து இம்முறை உரையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ள கதைகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
அச்சு இதழ்கள்:
காலச்சுவடு
சாட்டை - எம்.ரிஷான் ஷெரீப்
அந்திமழை
உத்தரவு - எம்.கோபாலகிருஷ்ணன்
இணைய இதழ்கள்:
சொல்வனம்
சௌவாலி - மஹாஸ்வேதா தேவி (தமிழில்: எம்.ஏ.சுசீலா):
யாவரும்
உலகின் அழகிய துயரம் - ஜீவ கரிகாலன்:
வாசகசாலை
சேஷம் - ராம்பிரசாத்:
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேச விரும்புவோர், உடனடியாக கீழ்க்காணும் அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
வாட்ஸப்:
கார்த்திகேயன் - 9942633833
அருண் - 9790443979
மாரி செல்வம் - 9600348630
நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு #வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது. நன்றி. மகிழ்ச்சி..!
குறிப்பு:
(1) நிகழ்வில் சமூக இடைவெளி முழுமையாக கடைபிடிக்கப்படும்.
(2) முகக்கவசம் அணியாத நண்பர்கள் கண்டிப்பாக அரங்கினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Friday 5 March 2021

Fictions: Mathematical and Science Fictions

 Have got two Mathematical fictions (that are acknowledged by Alex Kasman, an American Mathematician and Researcher, from North Carolina), to my credit.

THOSE FAULTY JOURNEYS - 2017
MET APP - 2020
Should you want to know what kind of fiction can you expect from me, please go through some of my fiction published in national and international journals. If you like my work, you may consider utilizing the opportunity at the ongoing book festival in Chennai.
The books are available for purchase at Emerald Publishers.

முக்கியமான நூல்கள்

எல்லோருக்கும் வணக்கம்.

நடந்துகொண்டிருக்கும் 2021 புத்தக திருவிழாவை மனதில் கொண்டே இந்தப் பதிவு.
அறிவியல் புனைவுகள் வாசகர்களுக்காய் என் 'வாவ் சிக்னல் - விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுப்பு' படைப்பு பதிப்பகம் வாயிலாக வெளியாகியிருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் வாசகசாலை, பதாகை, கனலி, சொல்வனம் போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
"உங்கள் எண் என்ன? - நாவல்" தமிழின் முதல் கணித நாவல். கணித நாவல் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்காக அமேசான கிண்டிலில் இருக்கிறது. அமெரிக்க கணிதவியலாளரான Alex Kasman, இந்த நூலை அங்கீகரித்திருக்கிறார். (Those Faulty Journeys - இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. இந்த நூலை Emarald Publishers வெளியிட்டிருக்கிறது)
"Met App" இன்னுமொரு கணித நாவல். இதுவும் கணித நாவலென அங்கீகரிக்கப்பட்டதே.
கணித நாவல்களின் கிண்டில் சுட்டிகளை இப்பதிவுடன் இணைத்திருக்கிறேன்.

உங்கள் எண் என்ன? - நாவல்

Met App

வாவ் சிக்னல் - விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுப்பு படைப்பு பதிப்பகத்தின் ஸ்டால் F19ல் கிடைக்கிறது.

வாசக நண்பர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.