என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday 30 December 2020

2020 எப்படி இருந்தது?

2020 எப்படி இருந்தது?
2020 புத்தாண்டு பிறந்தபோது அது 'இப்படி' த்தான் இருக்கப்போகிறது என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க வாய்ப்பில்லை. கோரோனா வந்து உலகமே ஊரடங்கை எதிர்கொண்டது வரலாற்றுத் திருப்பம். 2020 முடிவுக்கு வரும் இந்தத் தினத்தில், இந்த வருடம் எப்படி இருந்தது என்றால், கலவையான எண்ணங்கள் சூழ்கின்றன.
இந்த வருடத்தில்
1. கோரோனாவுக்கு அஞ்சி work from home தந்துவிட்டார்கள். வீட்டிலேயே தான் பெரும்பான்மை நேரமும்.(ஆனால், அதற்கு மாற்றாக pay rate ல் சுமார் பதினைந்து விழுக்காடு கைவைத்துவிட்டார்கள்.) அது ஒரு சோகம்.
2. சுமார் இருபத்தி ஐந்து சிறுகதைகளுக்கு மேல், தமிழில் மட்டும் எழுதினேன். அனைத்தும் விஞஞானப்புனைவுகள். பலதரப்பட்ட பின்னூட்டங்கள் வந்தன. குறிப்பாக, கண்காட்சி, அதிர்ஷ்டம், அவன், கடவுளைத்தேடி, ஆவரேஜ், பேய், பொறி, பூமி, புதிய உலகம், காதல், போன்றவை குறிப்பிடத்தக்கனவாக அமைந்தன.
இவற்றில் சில கதைகளை முதலில் ஆங்கிலத்தில் எழுதி பிறகு தமிழில் மொழி பெயர்த்தும், சிலவற்றை தமிழில் எழுதி பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததினால், ஆங்கிலத்தில் சுமார் பதினைந்து சிறுகதைகள் கிட்டின.Literary Yard, Readomania, MadSwirl போன்ற தளங்களில் அவை வெளியாகின.
இச்சிறுகதைகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க உதவிய, பதாகை, வாசகசாலை, கனலி, சொல்வனம் போன்ற தளங்களுக்கும், Literary Yard, Readomania, Madswirl போன்ற தளங்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
3. 'அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்டம்' வாயிலாக அரசுப்பள்ளி மாணவர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது மனதுக்கு நிறைவு தந்த ஒரு நிகழ்வாக அமைந்தது. இது எனது வெகு நாள் கனவு. ஒரு அரசுப்பள்ளியில் படித்த மாணவன் என்ற அடிப்படையில், இப்படி ஒன்றை என்றாவது ஒரு நாள் செய்ய வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், துபாய் ரவி அவர்கள் அந்த வாய்ப்பை, வெகு எளிதாக சாத்தியப்படுத்திவிட்டார். அதற்கு S2S அமைப்புக்கும் மற்றும் நிகில் கம்யூனிகேஷன்ஸுக்கும், Ravi Chokkalingam அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
4. 'கவிதை மட்டும்' வாட்ஸாப் குழுவின் கவிதைப் போட்டியில் நடுவராக இருந்து, பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்தது ஒரு இனிய நிகழ்வாக அமைந்தது. ஒருவர் இத்தனை திரைப்படங்களில் வேலை பார்த்திருக்க முடியுமா என்று வியக்க வைத்தவர் திரு.ஏகாம்பவாணன் அவர்கள். இந்த நிகழ்வு திரை உலகில் மிகவும் அனுபவமிக்க ஒருவருடனான நட்பை சாத்தியப்படுத்த இந்த நிகழ்வு உதவியது எனலாம். வாய்ப்பளித்த திரு Ekambavanan Filmmaker அவர்களுக்கு இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
5. 'அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி'யில் தமிழ்த்துறைப் பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கு பெற்றது ஒரு நெகிழ்வான அனுபவம். உலகத்தமிழர் இலக்கியமும் வாழ்வியலும் என்ற தலைப்பில் அமெரிக்க அறிபுனை இலக்கியங்கள் குறித்துப் பகிர்ந்திருந்தேன். பொதுவாகவே எனக்கு மாணவர்களுடன் உரையாடுவது பிடிக்கும். அந்த வகையில் இந்த நிகழ்வு மனதுக்கு நெகிழ்ச்சி தருவதாக அமைந்தது. இந்த வாய்ப்புக்கும் S2S அமைப்புக்கும் மற்றும் நிகில் கம்யூனிகேஷன்ஸுக்கும், Ravi Chokkalingam அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
6. விஞ்ஞானச்சிறுகதைகள் மட்டுமல்லாது சில குறு நாவல்களும் எழுதினேன். 'புராதன ஏலியன்கள்', 'மெட் செயலி' ஆகியன தமிழிலும், 'Met App' என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் எழுதினேன். ஆங்கிலத்தில் எழுதிய Met App, கோரோனா காரணமாக Emerald Publishers மின் நூலாக வெளியிட்டார்கள்.
மொத்தத்தில் 2020ம் சிறப்பாகத்தான் அமைந்தது்.
இவ்வருடத்தை, கோரோனா சூழலிலும் சிறப்பானதாக்கிய Ravi Chokkalingam, Ekambavanan Filmmaker ஆகியோர்களுக்கும், என் சிறுகதைகள், கவிதைகளை வெளியிடும் பதாகை, வாசகசாலை, கனலி, சொல்வனம், ஆனந்த விகடன், Literary Yard, Readomania, MadSwirl போன்ற பத்திரிக்கை மற்றும் தளங்களுக்கும், மற்றும் என் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் இத்தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Commen

Tuesday 29 December 2020

Summary: Published Short Stories in Online Journals in 2020

For those who are not familiar to TAMIL as a language, here is a summary of all my short stories published in variour online journals in 2020..

SETI

http://madswirl.com/short-stories/2020/12/seti/

Orphan

https://www.readomania.com/story/orphan-2

Ghost

https://literaryyard.com/2020/07/02/ghost-2/

School Project

https://literaryyard.com/2020/08/08/school-project/

Little Secret

https://literaryyard.com/2020/04/19/little-secret/

Exotic Vacation

https://literaryyard.com/2020/04/09/exotic-vacation/

Fortune

https://literaryyard.com/2020/09/19/fortune

SETI @ MadSwirl

HEADS UP to all those who are not familiar to Tamil as a language. Here is one of my writeup that you can actually read. 

This is really a new-year stuff!!

I am really glad to have been featured in MadSwirl after such a long time. This texas-based magazine has never failed from being an enthu-filled and charged-up zine, all through the year.

You can find all my compositions published by MadSwirl here: 

http://madswirl.com/author/srapth/ 




Sunday 27 December 2020

காதல் சோலை - 1

 காதல் சோலை - 1

எதையோ தேடுவதாகச் சொல்லி
நடிக்கும் எல்லோரும்
யாருக்கும் தெரியாமல்
உன்னைத்தான் தேடுகிறார்கள்....
என்ன கேட்டாலும்
வெட்கத்தை மட்டுமே தருவாய்
என்பது
முன்னமே தெரிந்திருந்தால்
உன் வெட்கத்தையே
கேட்டிருப்போம்....
நீ
கரையிலேயே தான்
நிற்கிறாய்...
'புயல் கடலில்
மையம் கொண்டிருக்கிறது'
என்றறிவிக்கிறார்கள்
வானொலியில்...
காதலை விதைத்து
எங்களைப் பெரியவர்களாக்கும் நீ
இன்னமும்
குழந்தையாகவே இருக்கிறாய்...
நீ
உன் ஆடைகளை
சரி செய்கையில்
நாங்கள்
கலைந்து விடுகிறோம்....
- ராம்பிரசாத்

காதல் சோலை - 2

காதல் சோலை - 2


நீ எத்தனை பாரபட்சமானவள்

தெரியுமா?
நான் உன்னை தேவதை ஆக்கினேன்...
நீயோ என்னை பைத்தியமாக்குகிறாய்...
உன் அடையாள அட்டையில்
"என்னைப் பார், காதல் வரும்!!!'
என்று தான்
எழுதவேண்டும்....
'இலவசங்களே வேண்டாம்'
என்று சொல்லும் நீ
எனக்குக் காதலைத் தந்தது
இலவசமாகத்தான்...
நீ வரையும் கோலங்கள்
அழகாய்த்தானிருக்கின்றன...
உன்னையும் உன் கோலத்தையும்
பார்க்கும் நான் தான்
அலங்கோலமாகிவிடுகிறேன்....
செத்துப்போனவன் மீது கூட
வெறுப்பு வருகிறது...
அவனுக்கு நீ
மெளன அஞ்சலி செலுத்தினால்....
ஒரு மரங்கொத்தி போல்
துளையிட்டு
நிரப்புகிறாய் காதலை
என் பிஞ்சு நெஞ்சுக்குள்.....
- ராம்பிரசாத்

Sunday 13 December 2020

குப்பை - சிறுகதை - சொல்வனம்

 சொல்வனம் 236வது இதழில் எனது சிறுகதை 'குப்பை' வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதையின் சுட்டி இங்கே.


கவிதை மட்டும் - போட்டி முடிவுகள்

ராம்பிரசாத் எழுத்தாளர் தேர்வுசெய்த பரிசுக்கவிதைகள், கவிதை மட்டும் " வாட்ஸ்ஆப் குழுவின் தினசரி கவிதைப்போட்டியின்-3 நவம்பர்,2020 அன்று நடந்த போட்டியில் வென்ற கவிதைகளை அட்மின் என்.ஏகம்பவாணன் அறிவிப்பு ,Ramprasath writer Selected poems in KAVITHAI MATTUM WhatsApp group daily poem competition at 3/11/2020 Announced by Admin N.EKAMBAVANAN

https://youtu.be/-pjxEM5DGbw

Parallel Thought

Parallel Thought


லிங்கா திரைப்படம் வெளியான நேரம் அது.

கதா நாயகன், நகைக்கடையில் சாவி இருக்கும் இடத்தை கை விரல்களால் அளந்து குறித்து கொள்ளும் காட்சி ஒரு ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டிருந்தது.

அப்போது தயாரிப்புத் தரப்பில், அது, "Parallel Thought" என்று விளக்கம் தரப்பட்டது.

அதாவது, முன்னவரின் ஆக்கத்தை வாசிக்காமலேயே அல்லது காணாமலேயே பின்னவர் தானாகவே அக்கதைக்கான கருவையும், கதையின் பிற அம்சங்களையும் தனது சொந்த சிந்தனையில் அடைந்துவிட்டார் என்பது.

மேற்கத்திய திரை மரபில் 'Parallel Thought' வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், தமிழ் திரை உலகில் பயன்படுத்தப்படுவது போல் இல்லை. மேற்குலகில் யாரும் திரைக்கதை விவாதம் என்று ஆறு மாதங்கள் தொடர்ந்து ஆறேழு பேர் ஒரு கதையை, அதன் காட்சிகளை, அமைப்பை, கட்டுமானத்தைப் பேசிப் பேசி விவாதித்து உருவாக்குவதில்லை.

கதையை ஒருவர் எழுதுவார். அவர் தன் கதைக்கான அத்தனை அம்சங்களையும் தன் ஸ்கிரிப்டில் வைத்து எழுதித்தந்துவிடுவார். பின் அதை மறவாமல் காப்புரிமையும் பெற்றுவிடுவார். அதை வாசிக்கும் தயாரிப்புத் தரப்புக்கு அந்தக் கதை பிடித்திருந்தால், அதை நேர்மையுடன் அங்கீகரித்து அணுகி ஸ்க்ரிப்டை முதலில் வாங்குவார்கள். ஸ்கிரிப்டைத் தர எழுத்தாளர் முன்வரவில்லை என்றால் தயாரிப்புத் தரப்பால் ஒன்றும் செய்ய இயலாது. அவன் முன்வருகிறார் என்றால், அவரைக் கொண்டே கதையில் தேவையான அம்சங்களை எழுதி வாங்கிப் படமாக்கிவிடுவார்கள்.

இந்த நிலையில் 'Parallel thought' என்று வருபவரும் முன்னவரின் கதையைப் படிக்காமலேயே, வேறு யாருடனும் விவாதிக்காமலேயே, தானாக ஒரு கதையை எழுதுகிறார். பின் அதைத் தன் பெயரில் பதிவு செய்கிறார். இப்போது ஒரே கதை, இரண்டு பெயர்களில் இரண்டு காலகட்டத்தில் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் பின்னவருக்கே திரை வாய்ப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து, முன்னவரின் படைப்பை அறியாமலேயே பின்னவரின் கதை படமாக்கப்படுகிறது. ஆனால், திரைக்கு வருகையில் முன்னவரின் உழைப்பு கவனத்துக்கு வருகிறது. Parallel Thought!

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால்,
1. முன்னவரும் சரி, பின்னவரும் சரி... ஒற்றை ஆள் தான். ஒற்றை மனிதனின் படைப்பாக்கம் தான்.

ஆனால் தமிழ் திரையுலகில் இது வேறு. இங்கே ஸ்க்ரிப்டை ஒருவர் முழுவதுமாக எழுதுவதில்லை. ஆறேழு பேர் சேர்ந்து விவாதிக்கிறார்கள். இந்த விவாதத்தில் ஐடியாக்கள் சகட்டுமேனிக்கு பகிரப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஐடியாவைப் பற்றி அதற்கு முன் கேள்வியே பட்டிராத ஒருவர் அந்த ஐடியாவைக் கேட்டுவிட்டு, அதன் அடுத்தகட்டத்தை தன் கற்பனையால் வளர்க்க முனைவார். இப்படிக் கூட்டாஞ்சோறாகக் கிடைக்கும் பற்பல ஐடியாக்களில் சிலவற்றைக் கொண்டு ஒரு துவக்கம், ஒரு முடிவு, இடைப்பட்டு சில சீன்கள் என்று கதை உருவாகிறது. இந்தக் கதையை ஒருவர் தன் பெயரில் பதிந்துவிடுவார்.

இதில் திருட்டு நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், இந்த கதை விவாதத்தில் பங்கேற்ற ஆறேழு பேர் வேறு கதை விவாதங்களிலும் பங்கேற்பார்கள். அங்கும் இதே ஐடியாக்களைப் பகிர்வார்கள். இந்த ஐடியாக்களும் இணையத்தில் வாசிக்க இலவசமாகக் கிடைக்கும் சிறுகதைகள், நாவல்களிலிருந்தே அந்தந்த ஆசிரியருக்குத் தெரியாமலேயே உருவப்படும் ஐடியாக்கள் தான். ஒரே ஐடியாக்கள் பற்பல கதைகளில் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொன்றும் வெவ்வேறாக மாறுபாடாடையும். ஒன்றில் சாவி இருக்கும் இடத்தை விரல்களால் அளப்பது ரஜினி என்றால், இன்னொன்றில், ஒரு பெண் அதைச் செய்வார். இரண்டுமே ஒன்று தான்.

ஆக, கதையை ஒரே ஒருவர் சுயமாக எழுதி, காப்புரிமை வாங்கியிருந்தால் ஒழிய அதைக் 'Parallel Thought' என்று சொல்வதற்கில்லை. கதைத்திருட்டு என்றே கொள்ள வேண்டி இருக்கிறது.

லிங்கா ஒரு தனி நபர் கதை அல்ல. தனி நபர்க் கதையல்லாத எல்லாக் கதைகளும் திருட்டுக் கதைகளே என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால், எதுவுமே எவரின் உள்ளீடுமற்ற ஒரே ஒருவரின் சொந்தக் கற்பனை அல்ல.

plagarism என்பது ஒரு நோய். அறிவுச்சொத்தை மலினமாக்குவது, திருட்டுக்கு வேறு அடையாளம் தருவது என்று எல்லாமுமே மனிதத்தை, மானுடத்தை நாங்கைந்து படிகள் கீழே தள்ளிவிடக்கூடியவைகளே.

ஒரு கதாசிரியனுக்கு இந்த கடமையும், பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். அதே நேரம், அடுத்தவர் ஐடியாவைத் திருடித்தான் ஒரு கதை செய்ய முடியும் என்பதே அந்தக் கதாசிரியனின் படைப்பூக்கத்தை கேள்விக்கு உட்படுத்துவது போலத்தான். ஒரு கதாசிரியன், தனக்கு தேவைப்படுவதான ஒரு கதையைத் தானாகவே எவருடைய உள்ளீடும் இல்லாமல் உருவாக்கிவிட முடியவேண்டும். அப்படியே, அகஸ்மாத்தாக, அவன் எழுதிய கதை வேறொருவருடைய கதையை ஒத்து அமைந்துவிடினும் (தற்செயலாக), அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன் அடுத்த படைப்பிலேயே அப்படி ஒரு பிரச்சனை எழாத ஒரு கதையைத் தரக்கூடிய வல்லமையை நிரூபிக்க வேண்டும். இது முடியக்கூடியவர்கள் தங்களை கதாசிரியர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்வது பொறுத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இது முடியாதவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம்: lets face it. வராத ஒரு திறனை, வலிந்து தனக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ள வேண்டிய தேவைகள் என்ன?

நிறைய பேர் நிறைய எழுதுகிறார்கள். பத்திரிக்கைகளை அண்டுகிறார்கள். எந்தப் பத்திரிக்கையும் அந்த ஆக்கத்தைத் தேர்வு செய்யாத பட்சத்தில் உடனே கிண்டிலில் வெளியிட்டுவிட்டு, அவர்களுக்கு அவர்களே கதாசிரிய பட்டம் கொடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில், தங்கள் எழுத்தை வெளியிட்டுக்கொள்ள பத்திரிக்கைகளைத் தாங்களே உருவாக்குவதும் நடக்கிறது. ஏன்? எதற்கு என்பது கேள்வி.

ஒரு கதாசிரியன் எப்படிக் கேட்டாலும் கதை எழுத வேண்டும். அவன் கையாலும் உத்திகளிலும், தேர்வு செய்யும் தலைப்புகளிலும் அவனுக்கான ஸ்டைல் இருக்கலாம். இசைக்கு இளையராஜா, ARR என்று துருவங்கள் இருப்பது போல. அவ்விதம் எழுதத்தெரியாதவர்கள் ஒரு வருடம் முயன்று பார்க்கலாம். அப்படியும் வரவில்லை என்றால் விட்டுவிடலாம். எதற்காக வலிந்து எதையாவது எழுதி கிண்டிலில் வெளியிட்டு, வலிந்து தன்னை ஒரு கதாசிரிய பிம்பத்துக்குள் திணித்துக்கொள்ள வேண்டும், தனக்கு ஆமாம் சாமி போடக்கூடிய ஒரு கூட்டத்தை தன்னைச்சுற்றி எப்போதும் இருத்திக்கொண்டே வளைய வர வேண்டும், என்பதே கேள்வி.

கதாசிரிய இடம் என்பது அப்படி ஒன்றும் 'கதி மோட்சம்' அடையே வேண்டிய இலக்கு இல்லை. இந்த உலகில் எத்தனையோ திறமைகள். அதில் அதுவும் ஒன்று. அது ஒருவருக்கு நிச்சயமாக இருக்க வேண்டுமென்பதுமில்லை. இல்லாவிட்டால் அதில் எந்தக் கீழ்மையும் இல்லை.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" என்கிறார் திருவள்ளுவர்.

இந்த உலகில் உள்ள எல்லா கீழ்மைகளுக்கும் அடித்தளம், தவறானவர்கள், சரியான இடத்திற்கு சென்று சேர்ந்துவிடுவதே. சமூகத்துக்கு அறிவு சொல்லும் இடத்திலிருப்பவர்களே, இதைச்செய்வது ................................................................

வேறொன்றும் சொல்வதற்கில்லை.