“From Biscuits To Brides, Indian Parents Want To Decide Everything” என்கிறார் சேத்தன் பகத் சியா விவகாரத்தில்.
பெண்கள் குறித்து எழும் எல்லா பிரச்சனைகளிலும், எல்லா பெண்களையுமே defaultஆக, accomplished, independent, earning woman victimized by societal pressure என்கிற ரீதியிலேயே அணுக வேண்டியதில்லை என்பது என் வாதம். சியா 12வது ஃபெயில் என்கிறார்கள். பத்தொன்பது வயதுதானாம்.
பெற்றவர்களுக்குத் தெரியாதா மகளின் யோக்கியதை? "இது எங்கே தேறப்போவுது?" என்று அவர்கள் எண்ணி கேத்தனுக்கு மணமுடிக்க சம்மதித்திருக்கலாம் என்பது என் ஊகம். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. பெற்றவர்களாக, தங்கள் மகளின் நல்வாழ்வுக்காக அப்படி யோசித்திருக்கலாம். எல்லா பெற்றொர்களும் அப்படி யோசிப்பார்கள் தாம். இல்லையா? அது தவறென்றால், சியா அதைச் சரியாக்க என்ன மெனக்கெட்டார் என்பது குறித்து ஏதும் இதுகாறும் தெரியவரவில்லை. ஆனால், ரகசிய காதலருக்குத் தர, ஒரு கோடி வரை கேத்தனிடமே 'கரந்திருக்கிறார்' என்று தான் தெரியவருகிறது. இதை வைத்து என்ன முடிவுக்கு வந்தாலும் அது சியாவுக்கு எதிராகத்தான் போகிறது.
ஆனால், சில Genz பெண்கள் போல இன்ஸ்டாகிராமில் ஆடைகளை அவிழ்த்துவிட்டு நின்றால் லட்சாதிபதி ஆகிவிடலாம், அந்தப் பின்னணியில், சியா தன்னைத்தானே independent, capable woman என்று 'அங்கீகரித்து' வாழ்ந்துவந்திருக்கலாம் தான். என்ன செய்வது? Who is going to tell them?
ஒரு சுமாரான ஏரியாவில், ஓரளவு நல்ல வசதி கொண்ட வீட்டிற்கே வாடகை இருபதாயிரம் ஆகிவிடுகிறது. அடிக்கும் வெய்யிலில், ஏசி இல்லாமல் வாழ்கையே இல்லை. மின் கட்டணம் சொல்லவே வேண்டாம். காய்கறி, மளிகை சாமான் என்று ஒரு நடுத்தர குடும்பத்திற்கே மாதம் ஐம்பதாயிரம் தேவைப்படுகிறது. இதுவெல்லாம் பிள்ளைகளின் கல்விக்கட்டனம் இல்லாமல். அதையும் சேர்த்தால் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் கூட போதாது. இந்தச் சூழலில் 12வது ஃபெயிலை வைத்து என்ன செய்ய முடியும் என்று சியாவின் பெற்றோர்கள் வாழ்வின் நிதர்சனத்தை வைத்து யோசித்திருக்கலாம் தான்.
சியா புத்திசாலியாக இருந்திருப்பின் சூழலைப் புரிந்துகொண்டு கிடைத்த வாய்ப்போடு ஒதுங்கியிருப்பார். யாராவது பொன் முட்டையிடும் வாத்தை கொல்வார்களா? சியா செய்திருக்கிறார்.
பத்தொன்பது வயது என்பது, காதல் குறித்து மற்றவர்களைக் காட்டிலும் தனக்கு ஏதோ தெரியும் என்று தோன்றச்செய்கிற வயதுதான். மீடியா ட்ரெண்டிங்கில் பேசப்படும் ஃபெமினிசக் கருத்துக்களையெல்லாம் தங்கள் வசதிக்கு உள்வாங்கிக்கொண்டு, தன் இயலாமைக்கு அடுத்தவனைக் காரணம் காட்டித்திரியும் வெற்று வீம்பைத்தவிர சியாவின் தரப்பிலிருந்து வேறெதுவும் உருப்பாடியாக இதுகாறும் வெளிப்படவில்லை. அவர் ஆர அமர உட்கார்ந்து யோசித்தால், 12வது ஃபெயிலான தனக்கு எப்பேற்பட்ட வாய்ப்பு கிடைத்திருந்திருக்கிறது? அதை அறிவே இல்லாமல் எப்படி உதைத்துத் தள்ளியிருக்கிறோம் என்பதை அவர் புரிந்துகொள்வார் என்று தான் நினைக்கிறேன்.
மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தையெல்லாம் வைத்து எல்லா பெண்களும் இப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. அவர்கள் முதலில் தங்கள் குறை, நிறைகள் குறித்து நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். நிறைகளை விடக் குறைகள் அதிகம் என்னும் போது, சூதனமாக நடந்துகொள்ள முனைகிறார்கள். வாய்ப்பு தானாகக் கிடைக்கவில்லை என்றால் வலிந்து உருவாக்கிக்கொள்கிறார்கள். அதில் போய் கச்சிதமாக செட்டிலாகியும் விடுகிறார்கள். இது ஒரு தனி உலகம். இங்கெல்லாம் independent earning respectful intelligent woman என்பதெல்லாம் செல்லாது. Accomplishments, independence, earning, intelligence ஆகியன இல்லாத இடத்து பிழைத்தல் என்ன என்கிற ரீதியில் விரியும் உலகங்கள் இவை.
மொத்தத்தில், தன் இயலாமை மற்றும் மந்த புத்தியின் குறியீடாக ஒரு கொலையை நிகழ்த்திவிட்டு, குட்டு வெளிப்பட்டு நிற்கிறார் சியா.

