என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday 29 November 2020

புராதன ஏலியன்கள் - குறு நாவல்


மீண்டும் ஒரு அறிவியல் புனைவுக் குறு நாவலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

மேற்குலகில் இலக்கிய நாயகர்களை வைத்து அறிவியல் புனைவாக கதை சொல்வதில் 'Avengers' ஒரு மாபெரும் படைப்பு. அது போல் ஒன்று தமிழில் இருக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த 'புராதன ஏலியன்கள்' கதைக்கு உந்து விசை எனலாம். 

இந்தக் குறு நாவலின் அத்தியாயங்களில் வரும் வாதங்கள், நிகழ்வுகள் வாசகர்களுக்கு சற்று அதிர்ச்சியைத் தரலாம் என்பது என் ஊகம். 

இதற்கு என் பதில்: எல்லா ஹாலிவுட் அறிவியல் புனைக்கதைகளிலும் சொல்லப்படும் கருத்தாக்கங்களே உலகிற்கு முன்மாதிரியாக இருக்கின்றன. அதை அப்படியே காப்பி அடிக்காமல் புதிதாக எதையேனும் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே இந்தக் குறு நாவல் இவ்விதம் முடிந்தத்தற்கு ஒரே காரணம். இந்த அறம் நிறைந்த காரணத்தை வாசகர்கள் ஏற்றுக்கொண்டு அதரிப்பார்கள் என்று நம்புகிறேன். 

புதிய கருத்தாக்கத்தை செயல்படுத்துவதன் மூலம் திணிப்பது ஒரு விதமான வன்முறை. அதே புதிய கருத்தாக்கத்தை, சமூக விவாத செயல்பாடுகளுக்கென, அறிவுசார் தளத்தின் பார்வைக்கு பொதுவில் வைப்பது ஒரு Socio-friendly அணுகுமுறை என்பது என் வாதம். அப்படித்தான் இந்த வாதங்கள் இந்தக் குறு நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையால், இந்த வாதங்களை, அறிவுத்தளத்தில் மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு வாசகர்களையும், நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி, இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன் தான் நானும் என்பதையும் இங்கே தெளிவுற பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். நன்றி.

கிண்டில் நூலை வாசிக்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

புராதன ஏலியன்கள்

https://www.amazon.com/dp/B08P63QM35


கிண்டிலும் உள்ள எனது இதர நூல்கள் இங்கே


காதல் சோலை - கவிதைக்கிறுக்கல்கள்

https://www.amazon.com/dp/B089454W6X


கதாவனம் - சிறுகதைத் தொகுதி

https://www.amazon.com/dp/B089Q2XXSR


அட்சயபாத்திரா - நாவல்

https://www.amazon.com/dp/B08F6DFZHM


ஹென்றியின் டைரியில் கிடைத்த கதைகள் - சிறுகதைத் தொகுதி

https://www.amazon.com/dp/B08BP1V4DP


குறுங்கதைகள்

https://www.amazon.com/dp/B089KQ2MM3


குற்றக்கதைகள்

https://www.amazon.com/dp/B089S9K16F


உங்கள் எண் என்ன - கணித நாவல்

https://www.amazon.com/dp/B08CSWC988

Tuesday 24 November 2020

சொல்வனம் 235வது இதழில் எனது சிறுகதை 'காதல்'

 சொல்வனம் 235வது இதழில் எனது சிறுகதை 'காதல்' வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதையின் சுட்டி இங்கே.

அன்னை வயலட் கலை, அறிவியல் கல்லூரி - பன்னாட்டு கருத்தரங்கம்

 சென்னை மேனாம்பேட்டில் அமைந்துள்ள, அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் "உலகத்தமிழர் இலக்கியமும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடக்கிறது.

வரும் நவம்பர் 27, 28 திகதிகளில் இரண்டு நாட்கள் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இலண்டன், கொழும்பு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து உரையாளர்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்கா சார்பில் நான் பங்கேற்கிறேன். "அமெரிக்கத் தமிழ் எழுத்துகளில் அறிவியல்" என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன்.
என் தந்தை திரு.ரங்கசாமி அவர்கள் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. ஒரு கட்டட பொறியாளர். தமிழக அரசாங்கத்தில் பொதுப்பணித்துறையில் சுமார் முப்பத்தி ஐந்து வருடம் எவ்விதக்குறையும் இன்றி வேலை பார்த்தவர். பணி ஓய்வுக்குப் பிறகு அக்கம்பக்கத்து பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகள் எடுக்கிறார். அவரிடம் சுமார் ஐம்பது முதல் அறுபது பேர் படிக்கிறார்கள். இந்த மாணவர்களில் பலருடைய நெருக்கமான சொந்தத்திலிருந்தும், நட்புறவிலிருந்தும் அனேகம் பேர் இந்தக்கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் வகுப்புகள் படிப்பதாக, டியூஷனுக்கு வரும் பிள்ளைகள் மூலம் முதன் முதலில் பரிச்சயமான இந்தக் கல்லூரியில் தற்போது உரையாற்ற இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
"அமெரிக்கத் தமிழ் எழுத்துக்களில் அறிவியல்" என்பதுதான் தலைப்பு. தமிழாசிரிகளை விடவும் 'தமிழ் எழுத்துக்களில் அறிவியல்' குறித்து நாமென்ன விஸ்தீரணமாகப் பேசிவிட முடியும்? 'கல்லூரிக்குப் பிறகு என்ன?' என்பதே மாணவர்களின் ஆர்வமாக இருக்கும் என்பது என் ஊகம். ஆதலால், என் சிற்றுரையை முடித்துவிட்ட பிறகு மாணவர்களிடமிருந்தே கேள்விகளைப் பெற்று அதற்கேற்றார்போல் பதிலளிக்கலாம் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது. எப்படியாகினும், மாணவர்கள் ஊக்கமுடன் கலந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஊக்கமுடன் கலந்துகொள்ள நாம் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதுதான் கேள்வி பதிலாக நிகழ்வை நகர்த்திச் செல்ல முயல்வதன் நோக்கம். பார்க்கலாம்.
இந்த அரிய வாய்ப்பை நல்கிய S2S நிறுவனர் திரு.இரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். விருப்பமுள்ள நண்பர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.





Monday 2 November 2020

கவிதைப்போட்டி - நடுவர் - திரு ஏகம்பவாணன் அவர்கள்

பல்வேறு காலகட்டங்களில் பல திரைப்படங்களை என் உறவுக்கூட்டத்தில் குடும்பம் குடும்பமாகப் பார்த்து ரசித்திருக்கிறோம். சிலாகித்திருக்கிறோம். சின்னப்பிள்ளையாக இருந்து கேபிளிலில் பார்த்துப் பழகிய திரைப்படங்கள் அவைகள். அப்படி நாங்கள் பார்த்த பல படங்களின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர் திடீரென உள்பெட்டியில் அணுகினால் எப்படி இருக்கும்? 

அப்படித்தான் இருந்தது திரைப்பட இயக்குநர்கள் சங்க இணைச்செயலாளரும், இணை இயக்குநரும், வசனகர்த்தாவுமான திரு.ஏகம்பவாணன் அவர்கள் முக நூலில் அணுகி தான் நடத்தும் கவிதை குழுவிற்கு 'நீங்கள் நடுவராக இருந்து கவிதைகளைத் தேர்வு செய்து தர வேண்டுகிறேன்'  என்றபோது. 

ஒரு மனிதர் இத்தனைத் திரைப்படங்களில் வேலை பார்த்திருக்க முடியுமா? ஆச்சர்யம் தான். உடனே ஒப்புக்கொண்டுவிட்டேன். சினிமா உலகில் பல திரைப்படங்களில், பல்லாண்டுகளாகப் பல்வேறு பணிகள் செய்திருக்கும் ஒருவருடன், இணையக் கிடைத்த வாய்ப்பாகவே இதைக் கொள்கிறேன். வாய்ப்பளித்த திரு.ஏகம்பவாணன் அவர்களுக்கு எனது நன்றிகளும், அன்பும்.