என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday 30 December 2020

2020 எப்படி இருந்தது?

2020 எப்படி இருந்தது?
2020 புத்தாண்டு பிறந்தபோது அது 'இப்படி' த்தான் இருக்கப்போகிறது என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க வாய்ப்பில்லை. கோரோனா வந்து உலகமே ஊரடங்கை எதிர்கொண்டது வரலாற்றுத் திருப்பம். 2020 முடிவுக்கு வரும் இந்தத் தினத்தில், இந்த வருடம் எப்படி இருந்தது என்றால், கலவையான எண்ணங்கள் சூழ்கின்றன.
இந்த வருடத்தில்
1. கோரோனாவுக்கு அஞ்சி work from home தந்துவிட்டார்கள். வீட்டிலேயே தான் பெரும்பான்மை நேரமும்.(ஆனால், அதற்கு மாற்றாக pay rate ல் சுமார் பதினைந்து விழுக்காடு கைவைத்துவிட்டார்கள்.) அது ஒரு சோகம்.
2. சுமார் இருபத்தி ஐந்து சிறுகதைகளுக்கு மேல், தமிழில் மட்டும் எழுதினேன். அனைத்தும் விஞஞானப்புனைவுகள். பலதரப்பட்ட பின்னூட்டங்கள் வந்தன. குறிப்பாக, கண்காட்சி, அதிர்ஷ்டம், அவன், கடவுளைத்தேடி, ஆவரேஜ், பேய், பொறி, பூமி, புதிய உலகம், காதல், போன்றவை குறிப்பிடத்தக்கனவாக அமைந்தன.
இவற்றில் சில கதைகளை முதலில் ஆங்கிலத்தில் எழுதி பிறகு தமிழில் மொழி பெயர்த்தும், சிலவற்றை தமிழில் எழுதி பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததினால், ஆங்கிலத்தில் சுமார் பதினைந்து சிறுகதைகள் கிட்டின.Literary Yard, Readomania, MadSwirl போன்ற தளங்களில் அவை வெளியாகின.
இச்சிறுகதைகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க உதவிய, பதாகை, வாசகசாலை, கனலி, சொல்வனம் போன்ற தளங்களுக்கும், Literary Yard, Readomania, Madswirl போன்ற தளங்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
3. 'அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்டம்' வாயிலாக அரசுப்பள்ளி மாணவர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது மனதுக்கு நிறைவு தந்த ஒரு நிகழ்வாக அமைந்தது. இது எனது வெகு நாள் கனவு. ஒரு அரசுப்பள்ளியில் படித்த மாணவன் என்ற அடிப்படையில், இப்படி ஒன்றை என்றாவது ஒரு நாள் செய்ய வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், துபாய் ரவி அவர்கள் அந்த வாய்ப்பை, வெகு எளிதாக சாத்தியப்படுத்திவிட்டார். அதற்கு S2S அமைப்புக்கும் மற்றும் நிகில் கம்யூனிகேஷன்ஸுக்கும், Ravi Chokkalingam அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
4. 'கவிதை மட்டும்' வாட்ஸாப் குழுவின் கவிதைப் போட்டியில் நடுவராக இருந்து, பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்தது ஒரு இனிய நிகழ்வாக அமைந்தது. ஒருவர் இத்தனை திரைப்படங்களில் வேலை பார்த்திருக்க முடியுமா என்று வியக்க வைத்தவர் திரு.ஏகாம்பவாணன் அவர்கள். இந்த நிகழ்வு திரை உலகில் மிகவும் அனுபவமிக்க ஒருவருடனான நட்பை சாத்தியப்படுத்த இந்த நிகழ்வு உதவியது எனலாம். வாய்ப்பளித்த திரு Ekambavanan Filmmaker அவர்களுக்கு இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
5. 'அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி'யில் தமிழ்த்துறைப் பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கு பெற்றது ஒரு நெகிழ்வான அனுபவம். உலகத்தமிழர் இலக்கியமும் வாழ்வியலும் என்ற தலைப்பில் அமெரிக்க அறிபுனை இலக்கியங்கள் குறித்துப் பகிர்ந்திருந்தேன். பொதுவாகவே எனக்கு மாணவர்களுடன் உரையாடுவது பிடிக்கும். அந்த வகையில் இந்த நிகழ்வு மனதுக்கு நெகிழ்ச்சி தருவதாக அமைந்தது. இந்த வாய்ப்புக்கும் S2S அமைப்புக்கும் மற்றும் நிகில் கம்யூனிகேஷன்ஸுக்கும், Ravi Chokkalingam அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
6. விஞ்ஞானச்சிறுகதைகள் மட்டுமல்லாது சில குறு நாவல்களும் எழுதினேன். 'புராதன ஏலியன்கள்', 'மெட் செயலி' ஆகியன தமிழிலும், 'Met App' என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் எழுதினேன். ஆங்கிலத்தில் எழுதிய Met App, கோரோனா காரணமாக Emerald Publishers மின் நூலாக வெளியிட்டார்கள்.
மொத்தத்தில் 2020ம் சிறப்பாகத்தான் அமைந்தது்.
இவ்வருடத்தை, கோரோனா சூழலிலும் சிறப்பானதாக்கிய Ravi Chokkalingam, Ekambavanan Filmmaker ஆகியோர்களுக்கும், என் சிறுகதைகள், கவிதைகளை வெளியிடும் பதாகை, வாசகசாலை, கனலி, சொல்வனம், ஆனந்த விகடன், Literary Yard, Readomania, MadSwirl போன்ற பத்திரிக்கை மற்றும் தளங்களுக்கும், மற்றும் என் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் இத்தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Commen

Tuesday 29 December 2020

Summary: Published Short Stories in Online Journals in 2020

For those who are not familiar to TAMIL as a language, here is a summary of all my short stories published in variour online journals in 2020..

SETI

http://madswirl.com/short-stories/2020/12/seti/

Orphan

https://www.readomania.com/story/orphan-2

Ghost

https://literaryyard.com/2020/07/02/ghost-2/

School Project

https://literaryyard.com/2020/08/08/school-project/

Little Secret

https://literaryyard.com/2020/04/19/little-secret/

Exotic Vacation

https://literaryyard.com/2020/04/09/exotic-vacation/

Fortune

https://literaryyard.com/2020/09/19/fortune

SETI @ MadSwirl

HEADS UP to all those who are not familiar to Tamil as a language. Here is one of my writeup that you can actually read. 

This is really a new-year stuff!!

I am really glad to have been featured in MadSwirl after such a long time. This texas-based magazine has never failed from being an enthu-filled and charged-up zine, all through the year.

You can find all my compositions published by MadSwirl here: 

http://madswirl.com/author/srapth/ 




Sunday 27 December 2020

காதல் சோலை - 1

 காதல் சோலை - 1

எதையோ தேடுவதாகச் சொல்லி
நடிக்கும் எல்லோரும்
யாருக்கும் தெரியாமல்
உன்னைத்தான் தேடுகிறார்கள்....
என்ன கேட்டாலும்
வெட்கத்தை மட்டுமே தருவாய்
என்பது
முன்னமே தெரிந்திருந்தால்
உன் வெட்கத்தையே
கேட்டிருப்போம்....
நீ
கரையிலேயே தான்
நிற்கிறாய்...
'புயல் கடலில்
மையம் கொண்டிருக்கிறது'
என்றறிவிக்கிறார்கள்
வானொலியில்...
காதலை விதைத்து
எங்களைப் பெரியவர்களாக்கும் நீ
இன்னமும்
குழந்தையாகவே இருக்கிறாய்...
நீ
உன் ஆடைகளை
சரி செய்கையில்
நாங்கள்
கலைந்து விடுகிறோம்....
- ராம்பிரசாத்

காதல் சோலை - 2

காதல் சோலை - 2


நீ எத்தனை பாரபட்சமானவள்

தெரியுமா?
நான் உன்னை தேவதை ஆக்கினேன்...
நீயோ என்னை பைத்தியமாக்குகிறாய்...
உன் அடையாள அட்டையில்
"என்னைப் பார், காதல் வரும்!!!'
என்று தான்
எழுதவேண்டும்....
'இலவசங்களே வேண்டாம்'
என்று சொல்லும் நீ
எனக்குக் காதலைத் தந்தது
இலவசமாகத்தான்...
நீ வரையும் கோலங்கள்
அழகாய்த்தானிருக்கின்றன...
உன்னையும் உன் கோலத்தையும்
பார்க்கும் நான் தான்
அலங்கோலமாகிவிடுகிறேன்....
செத்துப்போனவன் மீது கூட
வெறுப்பு வருகிறது...
அவனுக்கு நீ
மெளன அஞ்சலி செலுத்தினால்....
ஒரு மரங்கொத்தி போல்
துளையிட்டு
நிரப்புகிறாய் காதலை
என் பிஞ்சு நெஞ்சுக்குள்.....
- ராம்பிரசாத்

Sunday 13 December 2020

குப்பை - சிறுகதை - சொல்வனம்

 சொல்வனம் 236வது இதழில் எனது சிறுகதை 'குப்பை' வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதையின் சுட்டி இங்கே.


கவிதை மட்டும் - போட்டி முடிவுகள்

ராம்பிரசாத் எழுத்தாளர் தேர்வுசெய்த பரிசுக்கவிதைகள், கவிதை மட்டும் " வாட்ஸ்ஆப் குழுவின் தினசரி கவிதைப்போட்டியின்-3 நவம்பர்,2020 அன்று நடந்த போட்டியில் வென்ற கவிதைகளை அட்மின் என்.ஏகம்பவாணன் அறிவிப்பு ,Ramprasath writer Selected poems in KAVITHAI MATTUM WhatsApp group daily poem competition at 3/11/2020 Announced by Admin N.EKAMBAVANAN

https://youtu.be/-pjxEM5DGbw

Parallel Thought

Parallel Thought


லிங்கா திரைப்படம் வெளியான நேரம் அது.

கதா நாயகன், நகைக்கடையில் சாவி இருக்கும் இடத்தை கை விரல்களால் அளந்து குறித்து கொள்ளும் காட்சி ஒரு ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டிருந்தது.

அப்போது தயாரிப்புத் தரப்பில், அது, "Parallel Thought" என்று விளக்கம் தரப்பட்டது.

அதாவது, முன்னவரின் ஆக்கத்தை வாசிக்காமலேயே அல்லது காணாமலேயே பின்னவர் தானாகவே அக்கதைக்கான கருவையும், கதையின் பிற அம்சங்களையும் தனது சொந்த சிந்தனையில் அடைந்துவிட்டார் என்பது.

மேற்கத்திய திரை மரபில் 'Parallel Thought' வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், தமிழ் திரை உலகில் பயன்படுத்தப்படுவது போல் இல்லை. மேற்குலகில் யாரும் திரைக்கதை விவாதம் என்று ஆறு மாதங்கள் தொடர்ந்து ஆறேழு பேர் ஒரு கதையை, அதன் காட்சிகளை, அமைப்பை, கட்டுமானத்தைப் பேசிப் பேசி விவாதித்து உருவாக்குவதில்லை.

கதையை ஒருவர் எழுதுவார். அவர் தன் கதைக்கான அத்தனை அம்சங்களையும் தன் ஸ்கிரிப்டில் வைத்து எழுதித்தந்துவிடுவார். பின் அதை மறவாமல் காப்புரிமையும் பெற்றுவிடுவார். அதை வாசிக்கும் தயாரிப்புத் தரப்புக்கு அந்தக் கதை பிடித்திருந்தால், அதை நேர்மையுடன் அங்கீகரித்து அணுகி ஸ்க்ரிப்டை முதலில் வாங்குவார்கள். ஸ்கிரிப்டைத் தர எழுத்தாளர் முன்வரவில்லை என்றால் தயாரிப்புத் தரப்பால் ஒன்றும் செய்ய இயலாது. அவன் முன்வருகிறார் என்றால், அவரைக் கொண்டே கதையில் தேவையான அம்சங்களை எழுதி வாங்கிப் படமாக்கிவிடுவார்கள்.

இந்த நிலையில் 'Parallel thought' என்று வருபவரும் முன்னவரின் கதையைப் படிக்காமலேயே, வேறு யாருடனும் விவாதிக்காமலேயே, தானாக ஒரு கதையை எழுதுகிறார். பின் அதைத் தன் பெயரில் பதிவு செய்கிறார். இப்போது ஒரே கதை, இரண்டு பெயர்களில் இரண்டு காலகட்டத்தில் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் பின்னவருக்கே திரை வாய்ப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து, முன்னவரின் படைப்பை அறியாமலேயே பின்னவரின் கதை படமாக்கப்படுகிறது. ஆனால், திரைக்கு வருகையில் முன்னவரின் உழைப்பு கவனத்துக்கு வருகிறது. Parallel Thought!

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால்,
1. முன்னவரும் சரி, பின்னவரும் சரி... ஒற்றை ஆள் தான். ஒற்றை மனிதனின் படைப்பாக்கம் தான்.

ஆனால் தமிழ் திரையுலகில் இது வேறு. இங்கே ஸ்க்ரிப்டை ஒருவர் முழுவதுமாக எழுதுவதில்லை. ஆறேழு பேர் சேர்ந்து விவாதிக்கிறார்கள். இந்த விவாதத்தில் ஐடியாக்கள் சகட்டுமேனிக்கு பகிரப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஐடியாவைப் பற்றி அதற்கு முன் கேள்வியே பட்டிராத ஒருவர் அந்த ஐடியாவைக் கேட்டுவிட்டு, அதன் அடுத்தகட்டத்தை தன் கற்பனையால் வளர்க்க முனைவார். இப்படிக் கூட்டாஞ்சோறாகக் கிடைக்கும் பற்பல ஐடியாக்களில் சிலவற்றைக் கொண்டு ஒரு துவக்கம், ஒரு முடிவு, இடைப்பட்டு சில சீன்கள் என்று கதை உருவாகிறது. இந்தக் கதையை ஒருவர் தன் பெயரில் பதிந்துவிடுவார்.

இதில் திருட்டு நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், இந்த கதை விவாதத்தில் பங்கேற்ற ஆறேழு பேர் வேறு கதை விவாதங்களிலும் பங்கேற்பார்கள். அங்கும் இதே ஐடியாக்களைப் பகிர்வார்கள். இந்த ஐடியாக்களும் இணையத்தில் வாசிக்க இலவசமாகக் கிடைக்கும் சிறுகதைகள், நாவல்களிலிருந்தே அந்தந்த ஆசிரியருக்குத் தெரியாமலேயே உருவப்படும் ஐடியாக்கள் தான். ஒரே ஐடியாக்கள் பற்பல கதைகளில் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொன்றும் வெவ்வேறாக மாறுபாடாடையும். ஒன்றில் சாவி இருக்கும் இடத்தை விரல்களால் அளப்பது ரஜினி என்றால், இன்னொன்றில், ஒரு பெண் அதைச் செய்வார். இரண்டுமே ஒன்று தான்.

ஆக, கதையை ஒரே ஒருவர் சுயமாக எழுதி, காப்புரிமை வாங்கியிருந்தால் ஒழிய அதைக் 'Parallel Thought' என்று சொல்வதற்கில்லை. கதைத்திருட்டு என்றே கொள்ள வேண்டி இருக்கிறது.

லிங்கா ஒரு தனி நபர் கதை அல்ல. தனி நபர்க் கதையல்லாத எல்லாக் கதைகளும் திருட்டுக் கதைகளே என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால், எதுவுமே எவரின் உள்ளீடுமற்ற ஒரே ஒருவரின் சொந்தக் கற்பனை அல்ல.

plagarism என்பது ஒரு நோய். அறிவுச்சொத்தை மலினமாக்குவது, திருட்டுக்கு வேறு அடையாளம் தருவது என்று எல்லாமுமே மனிதத்தை, மானுடத்தை நாங்கைந்து படிகள் கீழே தள்ளிவிடக்கூடியவைகளே.

ஒரு கதாசிரியனுக்கு இந்த கடமையும், பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். அதே நேரம், அடுத்தவர் ஐடியாவைத் திருடித்தான் ஒரு கதை செய்ய முடியும் என்பதே அந்தக் கதாசிரியனின் படைப்பூக்கத்தை கேள்விக்கு உட்படுத்துவது போலத்தான். ஒரு கதாசிரியன், தனக்கு தேவைப்படுவதான ஒரு கதையைத் தானாகவே எவருடைய உள்ளீடும் இல்லாமல் உருவாக்கிவிட முடியவேண்டும். அப்படியே, அகஸ்மாத்தாக, அவன் எழுதிய கதை வேறொருவருடைய கதையை ஒத்து அமைந்துவிடினும் (தற்செயலாக), அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன் அடுத்த படைப்பிலேயே அப்படி ஒரு பிரச்சனை எழாத ஒரு கதையைத் தரக்கூடிய வல்லமையை நிரூபிக்க வேண்டும். இது முடியக்கூடியவர்கள் தங்களை கதாசிரியர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்வது பொறுத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இது முடியாதவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம்: lets face it. வராத ஒரு திறனை, வலிந்து தனக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ள வேண்டிய தேவைகள் என்ன?

நிறைய பேர் நிறைய எழுதுகிறார்கள். பத்திரிக்கைகளை அண்டுகிறார்கள். எந்தப் பத்திரிக்கையும் அந்த ஆக்கத்தைத் தேர்வு செய்யாத பட்சத்தில் உடனே கிண்டிலில் வெளியிட்டுவிட்டு, அவர்களுக்கு அவர்களே கதாசிரிய பட்டம் கொடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில், தங்கள் எழுத்தை வெளியிட்டுக்கொள்ள பத்திரிக்கைகளைத் தாங்களே உருவாக்குவதும் நடக்கிறது. ஏன்? எதற்கு என்பது கேள்வி.

ஒரு கதாசிரியன் எப்படிக் கேட்டாலும் கதை எழுத வேண்டும். அவன் கையாலும் உத்திகளிலும், தேர்வு செய்யும் தலைப்புகளிலும் அவனுக்கான ஸ்டைல் இருக்கலாம். இசைக்கு இளையராஜா, ARR என்று துருவங்கள் இருப்பது போல. அவ்விதம் எழுதத்தெரியாதவர்கள் ஒரு வருடம் முயன்று பார்க்கலாம். அப்படியும் வரவில்லை என்றால் விட்டுவிடலாம். எதற்காக வலிந்து எதையாவது எழுதி கிண்டிலில் வெளியிட்டு, வலிந்து தன்னை ஒரு கதாசிரிய பிம்பத்துக்குள் திணித்துக்கொள்ள வேண்டும், தனக்கு ஆமாம் சாமி போடக்கூடிய ஒரு கூட்டத்தை தன்னைச்சுற்றி எப்போதும் இருத்திக்கொண்டே வளைய வர வேண்டும், என்பதே கேள்வி.

கதாசிரிய இடம் என்பது அப்படி ஒன்றும் 'கதி மோட்சம்' அடையே வேண்டிய இலக்கு இல்லை. இந்த உலகில் எத்தனையோ திறமைகள். அதில் அதுவும் ஒன்று. அது ஒருவருக்கு நிச்சயமாக இருக்க வேண்டுமென்பதுமில்லை. இல்லாவிட்டால் அதில் எந்தக் கீழ்மையும் இல்லை.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" என்கிறார் திருவள்ளுவர்.

இந்த உலகில் உள்ள எல்லா கீழ்மைகளுக்கும் அடித்தளம், தவறானவர்கள், சரியான இடத்திற்கு சென்று சேர்ந்துவிடுவதே. சமூகத்துக்கு அறிவு சொல்லும் இடத்திலிருப்பவர்களே, இதைச்செய்வது ................................................................

வேறொன்றும் சொல்வதற்கில்லை.

Sunday 29 November 2020

புராதன ஏலியன்கள் - குறு நாவல்


மீண்டும் ஒரு அறிவியல் புனைவுக் குறு நாவலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

மேற்குலகில் இலக்கிய நாயகர்களை வைத்து அறிவியல் புனைவாக கதை சொல்வதில் 'Avengers' ஒரு மாபெரும் படைப்பு. அது போல் ஒன்று தமிழில் இருக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த 'புராதன ஏலியன்கள்' கதைக்கு உந்து விசை எனலாம். 

இந்தக் குறு நாவலின் அத்தியாயங்களில் வரும் வாதங்கள், நிகழ்வுகள் வாசகர்களுக்கு சற்று அதிர்ச்சியைத் தரலாம் என்பது என் ஊகம். 

இதற்கு என் பதில்: எல்லா ஹாலிவுட் அறிவியல் புனைக்கதைகளிலும் சொல்லப்படும் கருத்தாக்கங்களே உலகிற்கு முன்மாதிரியாக இருக்கின்றன. அதை அப்படியே காப்பி அடிக்காமல் புதிதாக எதையேனும் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே இந்தக் குறு நாவல் இவ்விதம் முடிந்தத்தற்கு ஒரே காரணம். இந்த அறம் நிறைந்த காரணத்தை வாசகர்கள் ஏற்றுக்கொண்டு அதரிப்பார்கள் என்று நம்புகிறேன். 

புதிய கருத்தாக்கத்தை செயல்படுத்துவதன் மூலம் திணிப்பது ஒரு விதமான வன்முறை. அதே புதிய கருத்தாக்கத்தை, சமூக விவாத செயல்பாடுகளுக்கென, அறிவுசார் தளத்தின் பார்வைக்கு பொதுவில் வைப்பது ஒரு Socio-friendly அணுகுமுறை என்பது என் வாதம். அப்படித்தான் இந்த வாதங்கள் இந்தக் குறு நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையால், இந்த வாதங்களை, அறிவுத்தளத்தில் மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு வாசகர்களையும், நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி, இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன் தான் நானும் என்பதையும் இங்கே தெளிவுற பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். நன்றி.

கிண்டில் நூலை வாசிக்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

புராதன ஏலியன்கள்

https://www.amazon.com/dp/B08P63QM35


கிண்டிலும் உள்ள எனது இதர நூல்கள் இங்கே


காதல் சோலை - கவிதைக்கிறுக்கல்கள்

https://www.amazon.com/dp/B089454W6X


கதாவனம் - சிறுகதைத் தொகுதி

https://www.amazon.com/dp/B089Q2XXSR


அட்சயபாத்திரா - நாவல்

https://www.amazon.com/dp/B08F6DFZHM


ஹென்றியின் டைரியில் கிடைத்த கதைகள் - சிறுகதைத் தொகுதி

https://www.amazon.com/dp/B08BP1V4DP


குறுங்கதைகள்

https://www.amazon.com/dp/B089KQ2MM3


குற்றக்கதைகள்

https://www.amazon.com/dp/B089S9K16F


உங்கள் எண் என்ன - கணித நாவல்

https://www.amazon.com/dp/B08CSWC988

Tuesday 24 November 2020

சொல்வனம் 235வது இதழில் எனது சிறுகதை 'காதல்'

 சொல்வனம் 235வது இதழில் எனது சிறுகதை 'காதல்' வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதையின் சுட்டி இங்கே.

அன்னை வயலட் கலை, அறிவியல் கல்லூரி - பன்னாட்டு கருத்தரங்கம்

 சென்னை மேனாம்பேட்டில் அமைந்துள்ள, அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் "உலகத்தமிழர் இலக்கியமும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடக்கிறது.

வரும் நவம்பர் 27, 28 திகதிகளில் இரண்டு நாட்கள் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இலண்டன், கொழும்பு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து உரையாளர்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்கா சார்பில் நான் பங்கேற்கிறேன். "அமெரிக்கத் தமிழ் எழுத்துகளில் அறிவியல்" என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன்.
என் தந்தை திரு.ரங்கசாமி அவர்கள் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. ஒரு கட்டட பொறியாளர். தமிழக அரசாங்கத்தில் பொதுப்பணித்துறையில் சுமார் முப்பத்தி ஐந்து வருடம் எவ்விதக்குறையும் இன்றி வேலை பார்த்தவர். பணி ஓய்வுக்குப் பிறகு அக்கம்பக்கத்து பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகள் எடுக்கிறார். அவரிடம் சுமார் ஐம்பது முதல் அறுபது பேர் படிக்கிறார்கள். இந்த மாணவர்களில் பலருடைய நெருக்கமான சொந்தத்திலிருந்தும், நட்புறவிலிருந்தும் அனேகம் பேர் இந்தக்கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் வகுப்புகள் படிப்பதாக, டியூஷனுக்கு வரும் பிள்ளைகள் மூலம் முதன் முதலில் பரிச்சயமான இந்தக் கல்லூரியில் தற்போது உரையாற்ற இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
"அமெரிக்கத் தமிழ் எழுத்துக்களில் அறிவியல்" என்பதுதான் தலைப்பு. தமிழாசிரிகளை விடவும் 'தமிழ் எழுத்துக்களில் அறிவியல்' குறித்து நாமென்ன விஸ்தீரணமாகப் பேசிவிட முடியும்? 'கல்லூரிக்குப் பிறகு என்ன?' என்பதே மாணவர்களின் ஆர்வமாக இருக்கும் என்பது என் ஊகம். ஆதலால், என் சிற்றுரையை முடித்துவிட்ட பிறகு மாணவர்களிடமிருந்தே கேள்விகளைப் பெற்று அதற்கேற்றார்போல் பதிலளிக்கலாம் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது. எப்படியாகினும், மாணவர்கள் ஊக்கமுடன் கலந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஊக்கமுடன் கலந்துகொள்ள நாம் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதுதான் கேள்வி பதிலாக நிகழ்வை நகர்த்திச் செல்ல முயல்வதன் நோக்கம். பார்க்கலாம்.
இந்த அரிய வாய்ப்பை நல்கிய S2S நிறுவனர் திரு.இரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். விருப்பமுள்ள நண்பர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.





Monday 2 November 2020

கவிதைப்போட்டி - நடுவர் - திரு ஏகம்பவாணன் அவர்கள்

பல்வேறு காலகட்டங்களில் பல திரைப்படங்களை என் உறவுக்கூட்டத்தில் குடும்பம் குடும்பமாகப் பார்த்து ரசித்திருக்கிறோம். சிலாகித்திருக்கிறோம். சின்னப்பிள்ளையாக இருந்து கேபிளிலில் பார்த்துப் பழகிய திரைப்படங்கள் அவைகள். அப்படி நாங்கள் பார்த்த பல படங்களின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர் திடீரென உள்பெட்டியில் அணுகினால் எப்படி இருக்கும்? 

அப்படித்தான் இருந்தது திரைப்பட இயக்குநர்கள் சங்க இணைச்செயலாளரும், இணை இயக்குநரும், வசனகர்த்தாவுமான திரு.ஏகம்பவாணன் அவர்கள் முக நூலில் அணுகி தான் நடத்தும் கவிதை குழுவிற்கு 'நீங்கள் நடுவராக இருந்து கவிதைகளைத் தேர்வு செய்து தர வேண்டுகிறேன்'  என்றபோது. 

ஒரு மனிதர் இத்தனைத் திரைப்படங்களில் வேலை பார்த்திருக்க முடியுமா? ஆச்சர்யம் தான். உடனே ஒப்புக்கொண்டுவிட்டேன். சினிமா உலகில் பல திரைப்படங்களில், பல்லாண்டுகளாகப் பல்வேறு பணிகள் செய்திருக்கும் ஒருவருடன், இணையக் கிடைத்த வாய்ப்பாகவே இதைக் கொள்கிறேன். வாய்ப்பளித்த திரு.ஏகம்பவாணன் அவர்களுக்கு எனது நன்றிகளும், அன்பும்.


  


Friday 30 October 2020

அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்டம்

அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்டம்


5 அரசுப்பள்ளி மாணவர்களில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களை ஊக்கப்படுத்துவிதமாகவும், அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் உரையாற்ற ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்து ஒருங்கிணைக்கும் நிகழ்வு தான் 'அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்டம்" என்பது.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள திரு ரவி சொக்கலிங்கம் அவர்கள் அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது. 'எப்படிக் கண்டுபிடிக்கிறாங்க? மண்டை மேல கொண்டையை மறந்திட்டமோ" என்று தான்.

நான் அரசு உதவி பெறும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில், அரசின் மெரிட் உதவித்தொகையுடன் பள்ளிப்படிப்பை முடித்தவன். பொறியியலும் மெரிட் சீட் தான். பெயருக்குத் தான் அரசு உதவி பெறும் பள்ளி. தரத்தில் அரசுப்பள்ளி அளவில் தான் இருக்கும். 

ஐந்து அரசுப்பள்ளி மாணவர்கள் முன் நான் போய் நின்றால் அந்த மாணவர்களுக்கு என்ன தோன்றும்?

"இவனாலேயே அமெரிக்கா போகமுடியுதுன்னா, அப்போ நம்மாளயும் கண்டிப்பா முடியும்" என்று தானே.

(உடனே "ஏம்பா அமெரிக்கா போறதுதான் சாதனையா"ன்னு கேக்கக்கூடாது. அந்த சின்ன முதிர்ச்சி அற்ற வயதில், இது போன்ற சில வார்த்தைகள் தான் நம் மனதில் இருப்பதை அவர்களுக்கு கடத்தும் என்கிற அடிப்படையிலேயே இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கையாள்கிறேன்.. ) 

எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இதை வைத்துப்பார்க்கையில், நான் இந்த உயர்ந்த நோக்கத்துக்கு மிக மிகக் கச்சிதமான ஆள் தான் என்று தோன்றியது. ஆதலால், திரு ரவி சொக்கலிங்கம் அவர்கள் முகநூலில் அணுகி அழைத்தவுடன் ஒப்புக்கொண்டுவிட்டேன்.

நிகழ்வு நவம்பர் மாதம் ஆறாம் திகதி இந்திய நேரப்படி மாலை நான்கு மணிக்கு வலைதமிழில் நடக்க இருக்கிறது. 

இந்த நிகழ்வில் பங்கு பெற இருக்கும் பள்ளிகள்:

1. அரசு உயர் நிலைப்பள்ளி, ஊனையூர், திருச்சி மாவட்டம்

2. அரசு உயர் நிலைப்பள்ளி, காருகுடி

3. ஊ.ஒ.தொடக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிபுதூர், திருச்சி

4. ஞானாம்பிகா அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி, கருப்பம்புலம், வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம்.

5. ஊ.ஒ. நடு நிலைப்பள்ளி, பரப்பாளையம், திருப்பூர்.

தயாரிப்பெல்லாம் ஒன்றும் தேவை இருக்காது என்றே எண்ணுகிறேன். அவர்கள் முன் நான் போய் நின்றாலே போதுமானது.  மற்றதெல்லாம் தெள்ளத்தெளிவாக அவர்களுக்கே புரிந்துவிடும்.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைக்கத் தேர்வு செயததற்கு திரு ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கும், நிகில் கம்யூனிகேஷன்ஸுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.





Monday 26 October 2020

உங்கள் எண் என்ன? - விமர்சனம் - Priya Baskaran

எழுத்தாளர் ராம்பிரசாத்தின் “ உங்கள் எண் என்ன “ என்ற நாவலை Amazon Kindle ல் வாசித்தேன். இவர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் ஆவார்.

ஆரம்ப அத்தியாயத்தை வாசித்தவுடன், இதில் எங்கிருந்து எண்களைப் பற்றிச் சொல்லப் போகிறார், என நினைக்க வைத்தது. பிறகு கதைக்களம் ஒரு சில அத்தையாங்களைக் கடந்த பின் மாறுபட்ட தளத்தில் பயணிக்க ஆரம்பித்து என்னையும் உடன் இழுத்துச் சென்றது. அந்த கதைக்களத்துக்கு ஏற்ற முன் அத்தியாயங்களையும் அமைத்ததின் பின்னணியும் புரிந்தது.
திருமண உறவுகள் நிலைத்து இருக்க, துணை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை எண்களை வைத்து ஆழமான, வித்தியாசமான கதைக் களத்தை உருவாக்கி உள்ளார்.
முதலில் நம்முடைய தகுதிகள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு,
திருமண உறவுகள் நிலைத்து நிற்கத் துணையைத் தேர்ந்தெடுக்க
“Ram’s Organized Dependent Essence Chart - RODE” என்ற ஒரு chart ஐ அறிமுகப்படுத்தி, உலகம் எப்படி எண்களால் இயங்குகிறது என்பதையும், ஆண், பெண் உறவில் அப்படிப்பட்ட கணித எண்கள் எப்படி உறவைச் சமன் செய்கிறது என்பதையும் அற்புதமாக விளக்கியுள்ளார்.
உறவு நிலைத்து இருக்க அரத்தங்கள் முக்கியமானவையேத் தவிரத் தேர்வுகள், விருப்பங்கள் அல்ல என்பதைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். அதாவது அர்த்தங்கள்
என்பதை “ ஒரு conservative கடைசி வரை conservative ஆகத்தான் இருப்பார். ஒரு extrovert கடைசி வரை extrovert ஆகத்தான் இருப்பார். இதெல்லாம் மனநிலையோ, காலமோ மாறினாலும் மாறாதது” என்பதை விளக்கி இருக்கிறார்.
சிலர் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள்,
சிலர் எதனையும் பார்ப்பதில்லை. ஆனால்
இந்தக் கணிதப் பொருத்தம் எப்படி ஒரு பந்தத்தை நிரந்தரமாகத் தொய்வில்லாமல் தொடர உதவும் என்பதைக் காட்சிகளுடன், சூழ்நிலைகளுடன், அன்றாட நிகழ்வில் ஏற்படும் நிதர்சனத்துடன் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு வெகு சிறப்பு.
ஒரு வேலைக்குப் போனாலே, முதல் சுற்று, இரண்டாம் சுற்று, இறுதிச் சுற்று என நேர்காணல் வைத்துத் தேர்ந்தெடுக்கப் படுகிறோம். எதனால்..? அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாம் எவ்வாறு பங்களிக்க இயலும் என்று அறிவதற்காய். இந்த வேலை இல்லை என்றால் வேறு வேலை தேடிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் இருக்கும் ஒரு பணிக்கே எவ்வளவு நாம் தயார்ப்படுத்திக் கொள்ளும் போது, இருப்பதே இந்த ஒரு பிறவி.
அதில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நமது கலாச்சாரத் திருமண உறவில் ஏமாற்றம், சலிப்பு, மன உலைச்சல் இவற்றைத் தவிர்ந்து, இன்பமுடன், நிலையான, மெய்யான, உறவாய் நிலைத்திருக்க இந்த கணித எண் பொருத்தத்தைப் பெற்றோரால் ஏற்பாடு செய்த திருமணமானாலும், காதல் திருமணமானாலும் பின்பற்றிப் பார்ப்பதில்லை தவறில்லை
எனத் தோன்றுகிறது.
இந்த நாவல் வாழ்வியல் எதார்த்தங்களைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. மிகவும் விறுவிறுப்பான அத்தியாயங்கள் அமைந்த அருமையான நாவல். அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல். முக்கியமாகப் பெண்கள் குடும்பச் சுமை, பணிச்சுமை இரண்டிலும் சவாரி செய்ய வேண்டிய காலகட்டத்தில் சரியான துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.
மேலும் இந்த நாவல் University of Charleston ஐச்சேர்ந்த அமெரிக்க
கணிதவியாலர் Alex Kasman இந்த நூலைக் கணித நாவல் என்று அங்கீகரித்து கணித நூல்களுக்கான பட்டியலில் இணைத்திருக்கிறார்.
வித்தியாசமான கதை மற்றும் அருமையான ஒரு கணித chart ஐ கொடுத்த எழுத்தாளர் ராம்பிரசாத்திற்கு நன்றிகள் . மேன்மேலும் பல நாவல்களைப் படைக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.



Monday 12 October 2020

அனாதை - அறிபுனை - சொல்வனம்

 சொல்வனம் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதையின் சுட்டி இங்கே.

Sunday 11 October 2020

உ.பி. விவகாரத்தில் ஆண்களுக்கு...

 

உ.பி. விவகாரத்தில் ஆண்களுக்கு ஏதும் ஆலோசனைகள் இல்லையா என்ற கேள்விகள் எழுந்தன. அதுவும் நியாயம் தானே. எழுதக்கூடாது என்றெல்லாம் இல்லை. 


ஆதலால் இந்தப் பத்தி ஆண்களுக்கு. எந்த ஆண்களுக்கு? பொறுப்பற்ற, அறவுணர்வற்ற, சமூகக் கடமைகள் என்ற ஒன்று இருப்பதையே உணர்ந்திருக்காத, அதீத self-centric ஆக இயங்கும் விதி விலக்கான ஆண்களுக்கு.. 


Ok Guys. உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?   நீங்கள் ஒரு பெண்ணை அண்டியும், அவள் உங்களை சீந்தாமல் போனால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? "குறைந்தபட்சம்" அதை அவர்களின் அறியாமை என்று கருதி நீங்கள் கடந்து போகலாமே? ஏன் நீங்கள் கடந்து போவதில்லை? அதற்கு உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். அது உங்களுக்கு இல்லை என்பதாலா? ஆனால், அது உங்கள் பிரச்சனை அல்லவா? அதை நீங்கள் தானே சரி செய்து கொள்ள வேண்டும்? 


1. ஒரு பெண்ணின் நிராகரிப்பை, கோபத்தால் எதிர்கொள்ளாதீர்கள். அதற்கு, வேறு மார்க்கங்கள் இருக்கின்றன. அதே பெண்ணை 'இவனை என்னன்னே தெரியாம மிஸ் பண்ணிட்டோம்' என்று தங்கள் செயலுக்கு வருந்த வைப்பதும் பிரச்சனையை எதிர்கொள்ளும் ஒரு மார்க்கம் தான். அதில் தான் உங்கள் அசலான 'ஆண்மை'யும் இருக்கிறது என்பது என் வாதம்.  ஆண்மை என்றால் 'ஆணாக பிறந்திருப்பது' என்பது உங்கள் புரிதல் எனில், I am sorry. You need to be educated. ஆண் எப்படி பிறப்பாலேயே ஆணாகிவிடுவதில்லையோ, அதே போல, பெண் பிறப்பாலேயே அழகாகிவிடுவதில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


2. பெண்களுக்கு, அவர்களின் புற அழகின் காரணமாய் எழும் பாதுகாப்பின்மைக்கு - தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கிச் செல்லவும் அவர்கள் புறக்கணிக்கப் பழகியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் judgement எல்லா நேரங்களிலும் சரியாக இருப்பதில்லை.( நம்மில் யாருக்குத்தான் நம் judgements எல்லா நேரமும் சரியாக அமைந்திருக்கிறது?) புறக்கணிக்க வேண்டியவர்களுடன் நட்பு பாராட்டுவதும், நட்பு பாராட்டவேண்டியவர்களை புறக்கணிப்பதும் பெண்களால் சில  நேரங்களில் தவறுதலாய் நடந்துவிடுவதுமுண்டு. அவர்கள் ஒன்றும் கடவுள்கள் இல்லையே? தவறே செய்யாமல் இருக்க? ஆகையால் அவர்களின் புறக்கணிப்பை 'அந்த நேர நிலைப்பாட்டாய்' எடுத்துக்கொண்டு கடந்து போவதில் தான் நீங்கள் உண்மையிலேயே 'ஆண்களாவீர்கள்' என்பது என் வாதம். 


3. பெண்கள் எல்லோரும் கடைந்தெடுத்த நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை. விதிவிலக்குகள் இருபாலரிலும் இருக்கிறார்கள். ஆனால், நல்ல விதமாய் வளர்க்கப்பட்ட பெண்களுள் சிலர் ஒரு ஆண் தன்னை வந்து அண்டுகையில், அவளது அந்த நேர சூழலைப் பொறுத்து 'இவனுக்கு நான் பொறுத்தமா? இல்லையா?" என்கிற குறைந்தபட்ச கேள்வியையாவது தனக்குள்ளே எழுப்புகிறாள். அதன் பதில், பாதகமாக அமைவதற்கு உண்மையிலேயே நீங்கள் எவ்விதத்திலும் காரணமில்லாமலும் இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, உடல் அளவில் மண வாழ்வுக்கு தகுதி யில்லாத பெண், ஒரு ஆண் தன்னை அண்டி வருகையில், புறக்கணிப்பாள். எல்லோரிடமும் தன் உடல் தகுதி குறித்து ஒருவர் விளக்கமளித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை அல்லவா? அதில் அவரது பொதுவாழ்வும் இருக்கிறது. ஆனால் உங்கள் பார்வைக்கு அவள் உங்களை நிராகரிப்பதாய்த் தெரியலாம். அது காட்சிப்பிழை தான். ஒரு பெண் உங்களை நிராகரிக்கிறாள் எனில், அதில் உங்கள் நல்வாழ்வும் இருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். அவளின் நிராகரிப்பு உங்களுக்குள் கோபத்தை விதைக்காது. மாறாக அன்பையே விதைக்கும். ஏனெனில், ஒரு ஆண் இப்படியாக தன்னை நாடி வரும் பெண்ணுக்கு, இத்தனை நேர்மையாக பதிலளிப்பான் என்று தோன்றவில்லை. நிஜத்தில் நடப்பதுமில்லை என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.


4.பெண்ணின் வனப்பு உங்களை ஈர்க்கலாம். அழகு யாரைத்தான் ஈர்ப்பதில்லை? பெண்களின் புற உடற்கூட்டின் டிசைன் அப்படி. இந்த நிதர்சனங்களைச் சிலர் புரிந்திருக்கிறார்கள். அதற்கேற்ப தங்களின் இயக்கங்களைத் தகவமைத்துக்கொள்கிறார்கள். இவ்விதமானவர்கள் வாழ்வனுபவங்கள், வாழ்வின் வளமான சாத்தியங்கள், மானுட வாழ்வியல் பரிமாணங்களில் அடுத்தடுத்த கட்டங்கள் குறித்தெல்லாம் நல்ல புரிதலைக் கொண்டிருக்கிறார்கள்.


அந்தப் புரிதல் அற்றவர்களால் தான், எவ்வித தயாரிப்புமில்லாமல், பெண் உடலை ஆதிக்கம் செலுத்தக் கிடைத்த வஸ்துவாகப் பார்க்க இயலும். எல்லா பெண்களும் வாழ்வில் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம், நல்ல வாழ்வனுபவமாவது இருக்க வேண்டுமென்று எண்ணுபவர்களாக இருக்கிறார்கள். அதற்குத் தேவைப்படும் ஒத்தாசைகளை ஒருவருக்கொருவர் செய்துகொள்ள பெரு விருப்பமும் கொண்டிருக்கிறார்கள். அவர்களை போகப்பொருளாகப் பார்ப்பது 'பெண் என்றால் என்ன?' என்பது உங்களுக்கு சுத்தமாகப் புரியவில்லை என்பதையே காட்டுவதாக அமையும். உங்களைப் போன்றவர்களுக்கு தாயாக, மகளாக, சித்தியாக, அத்தையாக அமையப்பெறும் அத்தனைப் பெண்களுமே துரதிருஷ்டசாலிகள் தான். உங்களுடன் வாழ்கையில், அதையும் அவர்கள் உணர்ந்தே தான் இருப்பார்கள். அதையும் தாண்டி அவர்கள் உங்களைப் புழங்க அனுமதிப்பது, என்றாவது நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று தான். 


5. மரபணுவிலேயே ஆணின் மீது 'தேர்வை' நிகழ்த்தும் பண்பு பெண்களுக்கு இருக்கிறது. (பெண் இனம் தான் உலகில் முதலில் தோன்றியது என்பதையும், ஆண் இனம் என்பது ஒரு பிறழ்வாக பிற்பாடு உதித்த ஒன்று என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.) ஆகையால் ஒரு பெண்ணைக் கவர உங்களுக்கு இருக்கும் ஒரே மார்க்கம், அவளின் பார்வையில் தேர்வாவது தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தத் தேர்வில் பெண்களின் judgements எல்லா நேரமும் சரியாக இருக்க வேண்டியதில்லை. (ஏனெனில் அவர்கள் கடவுள்கள் இல்லை. தவறு செய்யக்கூடிய மனிதர்கள் தான்) அவள் தவறு செய்கையில், புன்னகையுடன் கடந்து போய்விடுவது தான் உங்கள் 'ஆண்மைக்கு' அழகு சேர்க்கும். வம்பு செய்வதல்ல. அப்படி இங்கே நம்மைச் சுற்றி தினம் தினம் நடந்து கொண்டு தானே இருக்கிறது. There are women who have lost finest men. வெளிப்பார்வைக்கு தெரியாமல் போனாலும் இதுதான் உண்மை.


6. There is something called 'Dignity'. சுயமரியாதை, மதிப்பு போன்றவைகள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களை நீங்கள் விரும்புங்கள். மதியுங்கள். உங்களை உங்களாலேயே விரும்ப முடியாவிட்டால், ஒரு பெண்ணால் எப்படி முடியும்? 

6.1. உங்களை உங்களால் விரும்ப முடியும் போது தான் ஒரு பெண் உங்களைப் புறக்கணிக்கையில் 'அவளுக்கு புரியவில்லை' என்று கடந்து போக முடியும். 

6.2. உங்களில் எத்தனை பேர் ' I deserve more' என்கிற மூன்று வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

6.3. உங்களில் எத்தனை பேர்,  ஆண்களைப் பற்றி ஒரு பெண் இளப்பமாகப் பேசும்போது மட்டுறுத்தியிருக்கிறீர்கள்?

6.4. உங்களில் எத்தனை பேர், பொதுத்தளத்தில் ஆண்கள் குறித்து மட்டமாகப் பேச்சு எழும்போது, 'எல்லோரும் அப்படி அல்ல' என்று கோபப்பட்டிருக்கிறீர்கள்?


7. பிறப்பாலேயே ஒரு ஆண் உயர்ந்தவராகிவிடமாட்டார். வெறும் புற அழகாலேயே ஒரு பெண் அழகாகிவிடவும்மாட்டார். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். யாரையும் தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள். பெண்களை அவர்களின் வாழ்வியல் நோக்கங்களுடன் அணுகுங்கள். எல்லா பெண்களிடம் dignity இருக்கிறது.  அதீதமான நேர்மையுணர்வும், அறவுணர்வும் இருக்கிறது. அவர்களாக யாரையும் எதற்காகவும் மனசாட்சிக்கு விரோதமாக ஏமாற்ற மாட்டார்கள். அதற்கு மதிப்பளியுங்கள். 


உதாரணமாக, 

நீங்கள் ஒரு பெண்ணை அணுகி அதற்கு அவர் எறிந்து விழுகிறார் என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

அ. அவரை அதற்கு முன் சிலர், அவரின் புற அழகுக்காய் மட்டுமே அணுகியிருக்கலாம். அதனால் வெறுப்புற்றவர் உங்களையும் அவ்விதமே பார்க்க வாய்ப்பிருக்கிறது. 

ஆ. அவருக்கு மண வாழ்வே பிடிக்கவில்லை என்றும் இருக்கலாம். 

இ. உங்கள் அணுகுமுறை அவரை cheap ஆக்குவதாக இருக்கலாம். அது எப்படி cheap என்பது அவர் பார்வையில் தான் விளங்கும். உங்கள் பார்வையில் அல்ல. ஏனெனில், நீங்கள் அவரை அணுகும் பலரில் ஒரே ஒருவர்.

ஆக, எறிந்து விழுவதற்கெல்லாம் கோபப்பட வேண்டியதில்லை. எல்லா பெண்களிடமும் ஒரு நியாய உணர்வு இருக்கிறது. தான் செய்தது தவறென்று தெரிந்தால் அவரே வந்து மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய விருப்பத்திற்கு மதிப்பளித்து ஒதுங்கி நிற்பது மட்டும் தான். 


8. இறுதியாக, விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பான்மை பெண்களுக்கு செக்ஸை விட, ரொமான்ஸில் தான் ஆர்வம் அதிகம். கைபிடித்து நடப்பதும், ஒன்றாகக் கோயிலுக்கோ அல்லது சினிமாவுக்கோ செல்வதும், பிடித்த டாபிக் குறித்து அளவளாவுவதும், நண்பர்கள் வீட்டு விருந்துக்கு சென்று அரட்டை அடிப்பதும் மிகப்பிடித்தமான விஷயங்களாக எப்போதும் இருந்திருக்கின்றன. செக்ஸ் இவர்களுக்கு இரண்டாம், அல்லது மூன்றாம் பட்சமாகத்தான் இருந்திருக்கிறது. இது அவர்களின் வெளிப்புற அழகிற்கு முற்றிலும் முரணானது தான். ஆனால், அதுதான் அவர்களது டிசைனும் கூட. 

இங்கே அவர்களது அறவுணர்வைப் பற்றி மேலும் பகிர்வது பொருத்தமாக இருக்கும். எந்த உறவிலும் உண்மையாக இருக்க முயல்வார்கள். உண்மையையே பேசுவார்கள். அறவுணர்வை தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டு, எந்த ஒரு உண்மையையும் எதிர்கொள்ளும் மன நிலையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இதையெல்லாம் ஆண்களிடம் எதிர்பார்க்கவே இயலாது. ஆணுலகம் இதற்கு முற்றிலும் எதிரானது. 

ஆண்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இதைத்தான். பெண்களை புரிந்துகொள்ள முயலுங்கள். அதுதான் எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக இருக்குமென்பது என் தாழ்மையான கருத்து. 

Monday 5 October 2020

some valuable comments

Some valuable comments from valuable and insightful readers for the recent short stories.  இந்தப் பின்னூட்டங்களுக்கு நிகர் வேறெதுவும் இல்லை... யோசித்துப் பார்த்தால், இந்தப் பின்னூட்டங்கள் விருதுகளை விடவும் அர்த்தமுள்ளவை, முக்கியத்துவம் வாய்ந்தவை.... 


கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் எனது நன்றிகள்...


கடவுளைத் தேடி

https://solvanam.com/2020/09/27/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/

பூமி

https://www.vasagasalai.com/boomi-short-story-ramprasath/

Orphan

https://www.readomania.com/story/orphan-2