என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 3 May 2019

விடியுமா - கு.ப.ரா

விடியுமா - கு.ப.ரா


இந்தக்கதையில் வரும் பெண்ணின் கணவன் சீரியஸ் என்று தந்தி வருகிறது. உடனே மனைவியானவள் சொந்தங்கள் சகிதம் ரயிலேறி சென்னைக்கு வருகிறார். வரும் வழியில் 'இவரால என்ன சொகத்தை கண்டேன்' என்கிற ரீதியில் புலம்புகிறார். வந்து சேர்ந்தபோது அவரின் கணவர் முந்தினம் இரவே இறந்திருப்பது தெரிய வரும்போதும் 'விடிந்துவிட்டதாக' அர்த்தப்படுகிறது.

கு.ப.ரா என்கிற கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைகளில் குடும்பம் என்கிற அமைப்பைத்தாண்டி, பெண்கள் அவர்களின் உண்மையான சுயத்தோடு  வெளிப்படுவார்கள். இது கு.ப.ராவின் காலத்திலான மரபார்ந்த பாத்திரப்படைப்புகளிடமிருந்து வெகுவாக விலகி இருக்கும். கு.ப.ரா அறியப்படுவதற்கு காரணம், கு.ப.ராவின் காலகட்டத்தில் அவர் சுவீகரித்துக்கொண்ட நவீனத்துவ சிறுகதை வடிவம். அந்த வடிவத்தில் அவருடைய பெரும்பாலான சிறுகதைகள் பேசியது பெண்ணுலகம். அந்த உலகின் அந்தரங்க அபியலஷைகள், அதற்கு எதிராக இயங்கும் குடும்ப அமைப்பு.

புதுமைப்பித்தன் சிறுகதை வகைமைகளை முயற்சித்தார் என்றால் கு.ப.ரா ஒரு குறிப்பிட்ட வகைமை, அதாவது நவீனத்துவ கதை சொல்லலில் பெண்களின் தீரா உளக்கிடக்கைகளை காட்சிப்படுத்துவதில் முன்னோடியாக தன்னை முன்னிருத்திக்கொண்டவர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கலாம்.

கு.ப.ராவின் எழுத்தின் அடையாளம் அதுதான் என்று நினைக்கிறேன்.