என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday 2 May 2019

புதுமைப்பித்தனின் 'காஞ்சனை'

புதுமைப்பித்தனின் காஞ்சனை


மாய எதார்த்த கதைகளின் முன்னோடியாக தமிழில் காணப்படுவது புதுமைப்பித்தனின் காஞ்சனை.

எழுத்தாளன் ஒருவனின் மனைவி ஒரு நாள் ஒரு பிச்சைக்காரியை, வீட்டு வேலைக்கென எடுப்பதில் துவங்குகிறது. அதன் பின் அவள் மனுஷியா, பேயா என்பதில் தொடர்கிறது, அப்படியே முடிந்தும் விடுகிறது.

இன்றைக்கு இந்தக் கதையை வாசிக்கையில் இவ்வளவுதானா என்று தோன்ற வைக்கலாம். ஆனால் இந்தக்கதையின் சிறப்பு என்னவெனில், சிறுகதைகளின் எல்லா வகைமைகளையும் முயன்று பார்த்த புதுமைப்பித்தன் இந்த முயல்வுகளையெல்லாம் 1940 களிளேயே செய்திருக்கிறார்.

பெரும்பாலும் அற உணர்வுகளை வெளிப்படுத்தும், 'இறுதியில் எல்லாம் சுபமே' என்கிற தனமான குடும்ப கதைகளுக்கு மத்தியில் புதுமைப்பித்தனின் படைப்புகள் மிக மிக வித்தியாசமாகவும், அந்த  காரணத்துக்காகவே ஆங்காங்கே சலசலப்பையும் உருவாக்கியவதாகவும் இருந்திருக்கக்கூடும்.

இன்றைக்கு மாய எதார்த்த கதை உலகம் வெகுவாக விரிவடைந்துவிட்டது. அவற்றில் எனக்கு பிடித்தமானவை பெரும்பாலும் கணிதம் மற்றும் இயற்பியல் சார்ந்தவைகள். உதாரணமாக flatland. புதுமைப்பித்தனின் காஞ்சனையை இப்போது வாசிக்குங்கால் இன்றைக்கு முதிர்ச்சியுடன் எழுதப்படும் மாய எதார்த்த கதைகளின் வடிவத்துக்கு இந்த சிறுகதையின் வடிவம் துல்லியமாய் ஒத்திருப்பது ஆச்சர்யம்.

ஆயினும் புதுமைப்பித்தன் கணித சிறுகதை ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று தேடிப்பார்க்கிறேன். ஒன்றும் சிக்கவில்லை. அதற்கு அவரை குறை சொல்ல இயலாது. ஏனெனில் கணிதம் இப்போது போல் அப்போது அத்தனை முதிர்ந்த நிலையில் இல்லை. நியாயமாக இந்த வகைமையை முயற்சித்திருக்க வேண்டியது சுஜாதா தான். ஆனால் அவரும் இந்த வகைமையை ஏனோ தொடவில்லை.

புதுமைப்பித்தனோ, சுஜாதாவோ இந்த காலகட்டத்தில் இல்லாதது எனக்குத்தான் இழப்பு. அவர்கள் உயிருடன் இருந்திருந்தால்,  நேரில் சந்திக்கையில் எனது 'உங்கள் எண் என்ன?' நாவலுக்கு ஒரு 'அட!' எனக்கு கிடைத்திருக்கலாம்.