என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 7 October 2023

பட்டாவளி - சொல்வனம் 300 - பாஸ்டன் பாலா

பட்டாவளி - பாஸ்டன் பாலா - சொல்வனம் 300 

https://solvanam.com/2023/08/13/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF/?fbclid=IwAR34WyD7tdI7vtK0Ck8DFwFD3H75q6zdMThcbN5gyLRlgRPYcfGr51lsb2A



பட்டாவளி

சமீபத்திய தமிழ் எழுத்தாளர்கள் யார்? இப்போதைய காலகட்டத்தில் அவசியம் வாசிக்க வேண்டிய புனைவுகள் என்ன? முக்கிய பதிப்பகங்களில் எந்த நாவல்கள் விமர்சகரின் கவனத்தைக் கோருகின்றன? யுவன் சந்திரசேகர், சாரு நிவேதிதா, அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பா. ராகவன். ஜெயமோகன், இரா. முருகன், அ. முத்துலிங்கம், பாவண்ணன், மாலன் போன்றோர் 2000களில் இணையத்தையும் அச்சையும் கோலோச்சினார்கள். அவர்களைப் போன்றோர் உயிர் எழுத்து, காலச்சுவடு, உயிர்மை, உன்னதம், சொல் புதிது, கல்குதிரை, கலைமகள், கதிர் போன்ற அச்சு இதழ்களிலும் அவரவர் வலையகம் மூலமாகவும் அனுதினமும் கட்டுரையும் கதையும் வெளியிட்டார்கள். இன்றைய இயல், விளக்கு, ஞானபீடம், சாகித்திய அகடெமி, விஷ்ணுபுரம் விருது என்று கவனிப்புகளை அடுத்த தலைமுறையில் எவர் அள்ளப் போகிறார்கள்?

முகவணை

இந்த இதழைத் துவக்கும்போது ஓரிரண்டு பட்டியல்களைக் கொண்டு தயாரித்திருக்க வேண்டும்.

  1. (கவனிக்கப்படாத) சமீபத்திய எழுத்தாளர்கள் பட்டியல்
  2. (அறியப்பெற்ற) சமீபத்திய எழுத்தாளர்கள் பட்டியல்
  3. மேலேயுள்ள இரு பட்டியலில் உள்ளவர்களை அறிமுகம் செய்யக் கூடிய விமர்சகர்கள்
  4. முக்கிய பதிப்பகங்கள் – 2000த்துக்குப் பிறகு எழுந்து வரும் எழுத்தாளர்களை எவர் வெளியிடுகிறார்கள்?
  5. சமீபத்திய சிறுகதைத் தொகுப்புகள்
  6. சமீபத்திய நாவல் நூல்கள்
  7. இளைஞர்களுக்கான விருதுகளின் பட்டியல்
  8. விருதுகளைப் பெற்றவர்கள்
  9. குங்குமம், விகடன் போன்ற வணிக இதழ்களில் முத்திரை சிறுகதை எழுதியவர்கள்
  10. காலச்சுவடு, கல்குதிரை போன்ற இலக்கிய இதழ்களில் கதை எழுதியவர்கள்
  11. இணைய வலையகங்களில் தொடர்ச்சியாக புனைவை அளிப்பவர்கள்

இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. கைவசம் அவர்களைத் தொகுத்துக் கொண்டால், இந்த இதழில் எவரெவரைத் தவற விட்டோமோ, அவர்களை வரும் வெளியீடுகளில் கவனிக்கலாம். வரும் வாரங்களில் வாசிக்க எடுத்து வைக்கலாம். குறைந்த பட்சம் மற்றவர்களையாவது படிக்குமாறு தூண்டலாம்.இதுதான் இந்த பட்டியல் பதிவின் குறிக்கோள்

விருதுகள்

விருதுகள் எவ்வளவு இருக்கின்றன? சமீபத்திய ஆண்டுகளில் எவர் அவற்றைப் பெற்றனர்? பு.பி. பேரை வைத்தே மூன்று வெவ்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன (நன்றிதமிழ் விக்கி)

  1. KRG நாகப்பன் ராஜம்மாள் விருது
  2. அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது
  3. அசோகமித்திரன் விருது
  4. அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை விருது
  5. அமரர் ஜோதிவிநாயகம் நினைவு பரிசு
  6. அமுதன் அடிகள் விருது
  7. அவள் விகடனின் இலக்கிய விருது
  8. அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர் விருது
  9. ஆனந்த விகடன் வைர விழா சிறப்புச் சிறுகதை விருது
  10. ஆனந்தாஸ் எம்.பி கலை இலக்கிய விருது
  11. இலக்கிய சிந்தனை விருது (சிறுகதை)
  12. இலக்கியச் சிந்தனை சிறந்த நாவலுக்கான விருது
  13. இலக்கியப்பேராளுமை விருது
  14. இலக்கியவீதி – அன்னம் விருது
  15. இலங்கை – முரசொலி பத்திரிகையின் முதல் பரிசு
  16. இலங்கை தேசிய சாகித்திய மண்டல விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் விருது
  17. இளைஞர் ஆண்டு நாவல் போட்டி
  18. உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது
  19. எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது
  20. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது
  21. என்.சி.பி.எச். வழங்கும் தொகுதிக்கான விருது
  22. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
  23. ஏலாதி அறக்கட்டளை இலக்கிய விருது
  24. கண்டாவளைப் பிரதேச சபையின் கலாசாரப் பிரிவின் “ஒளிச் சுடர்” விருது
  25. கதா அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருது
  26. கலைஞர் பொற்கிழி விருது
  27. கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது
  28. கவிஞர் வைரமுத்து விருது
  29. களரி அறக்கட்டளை வழங்கும் கு. அழகிரிசாமி நினைவு விருது.
  30. கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் விருது
  31. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் புனைவு விருது.
  32. கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது
  33. காசியூர் ரங்கம்மாள் விருது
  34. கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் “இலக்கியமணி” பட்டமும் தங்கப் பதக்கமும்
  35. கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது
  36. குமுதம் வெள்ளி விழா கதைப்போட்டி
  37. கொழும்பு கலை இலக்கிய கழகத்தின் விருது
  38. கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு
  39. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ‘ரங்கம்மாள் நினைவு விருது
  40. சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியின் ‘படைப்பூக்கத் தமிழ் விருது
  41. சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது
  42. சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது –
  43. சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட குறுநாவல் போட்டி
  44. சிறுகதைத் தொகுப்பிற்காக: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க ‘புதுமைப்பித்தன் நினைவு விருது’
  45. சிற்பி அறக்கட்டளை விருது
  46. சிற்பி இலக்கிய விருது
  47. சுஜாதா விருது
  48. சுஜாதா-உயிர்மை அறக்கட்டளையின் சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது
  49. செயந்தன் நினைவு கவிதை விருது
  50. சென்னை இலக்கிய திருவிழாவின் சிறந்த எழுத்தாளர் விருது
  51. சென்னை இலக்கிய வீதி வழங்கும் அன்னம் விருது
  52. சென்னை ரோட்டரி சங்க விருது
  53. சேலம் தமிழ்ச் சங்கம் விருது.
  54. சௌமா இலக்கிய விருது
  55. ஞானியின் கோலம் அறக்கட்டளையின் ‘அசோகமித்திரன்’ விருது
  56. டிஸ்கவரி புக் பேலஸ் வழங்கும் பிரபஞ்சன் நினைவு விருது
  57. தஞ்சாவூர் நெருஞ்சி இலக்கிய வட்டத்தின் க நா சு விருது
  58. தஞ்சை பிரகாஷ் கவிதை விருது
  59. தமிழக அரசின் கலைமாமணி விருது
  60. தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது
  61. தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது
  62. தமிழக அரசின் சிறந்த நாவல் விருது
  63. தமிழக அரசு எழுத்தாளர் விருது (திருவள்ளுவர் தினம்  பொங்கல் பண்டிகையை ஒட்டி)
  64. தமிழ் முஸ்லிம் திண்ணை வழங்கும் தோப்பில் முகமது மீரான் நினைவு விருது
  65. தமிழ் வித்தகர் விருது
  66. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் புதுக்கவிதை நூலிற்கான பரிசு
  67. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில விருது
  68. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் சிறந்த நாவல் விருது
  69. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாநில விருது
  70. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது
  71. தி இந்து குழுமத்தின் லிட் ஃபார் லைஃப் (lit for life) விருது
  72. தி க சி இயற்றமிழ் விருது
  73. தி. ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டி
  74. திருச்சி எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் பள்ளி வழங்கும் தமிழ் விருது
  75. திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது
  76. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  77. திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கும் சக்தி விருது
  78. திருமதி. செளந்தரா கைலாசம் அறக்கட்டளை விருது
  79. தேனீ இலக்கியக் கழகம் வழங்கும் ‘கவிச்செம்மல்’ பட்டம்
  80. நியூஜெர்ஸி தமிழ்சங்க விருது
  81. நெய்வேலி புத்தகக் கண்காட்சி வழங்கும் சிறந்த எழுத்தாளர் விருது
  82. நெல்லை இலக்கிய வட்டம் வழங்கும் ’எழுத்துலகச் சிற்பி’ பட்டம்
  83. படைப்பு இலக்கிய விருது
  84. பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது
  85. பாவலர் முத்துசுவாமி விருது
  86. புதுச்சேரி அரசின் சிறந்த நாவலுக்கான விருது
  87. பெரியார் விருது
  88. மத்திய அரசின் பரிசு
  89. மலைச் சொல் விருது
  90. மா அரங்கநாதன் விருது
  91. யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு
  92. யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இலக்கியப் பணிக்கான கௌரவிப்பு
  93. ரோட்டரி கிங்க்ஸ் ஆப் தஞ்சாவூர் சாதனை இளைஞர் விருது
  94. லில்லி தேவசிகாமணி விருது
  95. வடக்கு – கிழக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
  96. வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது
  97. வடக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
  98. வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது
  99. வரலாற்றுப் புத்தகத்திற்கான ‘தெற்கு எழுத்தாளர் இயக்க விருது’
  100. வல்லினம் விருது
  101. வள்ளுவ பண்பாட்டு மைய விருது
  102. வாழ்நாள் சாதனைக்காக விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் புதுமைப்பித்தன் விருது
  103. விகடன் விருது (ஆண்டுதோறும்  வருட இறுதியில்)
  104. விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கவிஞர் மீரா விருது
  105. விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது
  106. வீரகேசரி – யாழ் இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய கனக.செந்திநாதன் நினைவுப் போட்டி

இவற்றில் பெரும்பாலானவை தமிழகத்தை முன்வைத்தே வழங்கப்படுபவை. ஈழத் தமிழர்களையும் இலங்கை வாழ் எழுத்தாளர்களின் முக்கியப்படுத்தல்களையும் தனியே பார்க்க வேண்டும்; தேட வேண்டும். இதில் திண்ணை, சொல்வனம், குவிகம், காலம், குருகு, சுவடு, அகழ், அடவி, அழிசி, தன்னறம், பதாகை, தமிழினி போன்ற இணைய இதழ்களின் (மேலும்List of Online Tamil Magazines and How to Write for them | 10 Hot) அடையாளம் என பரிசோ, போட்டியோ, விருதோ, பட்டமோ, கௌரவங்களோ தராதது சோகமா? இயலாமையா? கும்பலோடு கோவிந்தா போடாத அடையாளத் தனித்துவமா? ‘நானும் ரௌடிதான்’ என்னும் இலக்கிய கௌரவத்தை இழக்கும் பரிதாபமா?இவை முகாந்திரம். இந்தக் கேள்விகளுக்கு எளிமையான விடை கிடையாது. நாம் சொல்லும் ஆருடங்கள் பலிக்காமல் போகலாம். என் பரிந்துரைகள் உங்களைக் கவராமல் போகலாம். அதை விட அந்த நூல்களும் புதினங்களும் படைப்புகளும் ருசிக்காமல் போகலாம்.

புதிய முகங்கள் – சமீபத்திய எழுத்தாளர்கள்

சமீபத்தில் எழுதத் துவங்கியவர்களில் அதிகம் கவனிப்பைப் பெறாதவர்களில் துவங்குவோம்.

அதிகம கவனம் பெறாத சிறுகதை எழுத்தாளர்களும் நாவல் புனைவாளர்களும் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கடந்த ஐந்தாண்டுகளுக்குள் எழுதத் துவங்கியவர்கள். இவர்களில் சிலர் ரொம்ப காலமாக எழுதுபவர்கள். ஃபேஸ்புக், டிவிட்டர் எக்ஸ், டிக் டாக், இன்ஸ்டாகிராம், பிண்டெரெஸ்ட் என்று சமூக ஊடகங்களில் சர்ச்சையும் நண்பர்களும் அதிகம் இல்லாமல் சற்றே அமைதியாக உருவாக்கும் படைப்பாளிகளின் பட்டியல்.

  1. ‘பரிவை’ சே.குமார்
  2. அகராதி
  3. அசோக்ராஜ்
  4. அண்டனூர் சுரா
  5. அருண் பாண்டியன்
  6. அனுராதா ஆனந்த்
  7. ஆ.ஆனந்தன்
  8. ஆகாசமூர்த்தி
  9. ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
  10. ஆமினா முஹம்மத்
  11. ஆர். சேவியர் ராஜதுரை
  12. ஆர்.நித்யா ஹரி
  13. ஆவுடை
  14. ஆவுடையப்பன் சங்கரன்
  15. ஆழிவண்ணன்
  16. ஆனந்தி ராமகிருஷ்ணன்
  17. இ. ஹேமபிரபா
  18. இதயா ஏசுராஜ்
  19. இமாம் அத்னான்
  20. இரா. சேவியர் ராஜதுரை
  21. இரா. தங்கப்பாண்டியன்
  22. இராதா கிருஷ்ணன்
  23. இலட்சுமண பிரகாசம்
  24. இளங்கோவன் முத்தையா
  25. இளங்கோவன் ஜி.பி.
  26. ஈப்போ ஸ்ரீ
  27. உக்குவளை அக்ரம்
  28. உத்தமன் ராஜா
  29. எஸ். திவாகர்
  30. எஸ்ஸார்சி
  31. ஏ. ஆர். முருகேசன்
  32. க.சி.அம்பிகாவர்ஷினி
  33. க.மூர்த்தி
  34. கணேசகுமாரன்
  35. கணேஷ் ராகவன்
  36. கணேஷ் ராம்
  37. கண்.சதாசிவம்
  38. கயல்
  39. கரன் கார்க்கி
  40. கனகா பாலன்
  41. கனி விஜய்
  42. கனிமொழி.ஜி
  43. காயத்ரி.ஒய்
  44. கார்த்திக் பிரகாசம்
  45. கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
  46. காளீஸ்வரன்
  47. கிருத்திகா கணேஷ்
  48. கிருஷ்ண ப்ரசாத்
  49. கு. ஜெயபிரகாஷ்
  50. குமரகுரு
  51. கே.உமாபதி
  52. கே.எஸ்.சுதாகர்
  53. கோ. சுனில்ஜோகி
  54. கோமதி ராஜன்
  55. ச.கோ. பிரவீன் ராஜ்
  56. ச.வி.சங்கர்
  57. சக.முத்துக்கண்ணன்
  58. சங்கர்
  59. சங்கர் சதா
  60. சந்தீப்குமார்
  61. சந்தோஷ் மாதேவன்
  62. சந்தோஷ் ராகுல்
  63. சரத்
  64. சாது பட்டு
  65. சாந்தி மாரியப்பன்
  66. சாரதி
  67. சி.வீ.காயத்ரி
  68. சிசுக்கு
  69. சிதம்பரம்
  70. சிவகுமார் முத்தய்யா
  71. சீராளன் ஜெயந்தன்
  72. சுந்தரண்யா
  73. சுப்புராஜ்
  74. சுரேஷ் பரதன்
  75. சுஜித் லெனின்
  76. செல்வசாமியன்
  77. சேகர் சக்திவேல்
  78. சேவியர் ராஜதுரை
  79. சொல் உடையார்
  80. சோ.சுப்புராஜ்
  81. த.அரவிந்தன்
  82. தயாஜி
  83. தர்மு பிரசாத்
  84. தனசேகர் ஏசுபாதம்
  85. தன்ராஜ் மணி
  86. தாமரை பாரதி
  87. தாரிகை
  88. தினேஷ் பாண்டியன்
  89. தீபா நாகராணி
  90. தீபா ஸ்ரீதரன்
  91. தீனதயாளன்
  92. துரை. அறிவழகன்
  93. தெரிசை சிவா
  94. தேவசீமா
  95. தேவராஜ்
  96. தேவிலிங்கம்
  97. நந்தாகுமாரன்
  98. நவநீதன் சுந்தர்ராஜன்
  99. நறுமுகை தேவி
  100. நா. ஞானபாரதி
  101. நா.சிவராஜ்
  102. நித்ய சைதன்யா
  103. நித்வி
  104. நிவேதினி நாகராஜன்
  105. ப. சுடலைமணி
  106. பா. கண்மணி
  107. பா. ரமேஷ்
  108. பா. ராஜா
  109. பாலமுருகன் நெல்லை
  110. பிந்துசாரா
  111. பிரசாத் சுந்தர்
  112. பிரசாத் மனோ
  113. பிரசாத் ரங்கசாமி
  114. பிரசாந்த் வே.
  115. பிரதீப் சிவபெருமான்
  116. பிரதீப் நீலகண்டன்
  117. பிரபு தர்மராஜ்
  118. பிரியா கிருஷ்ணன்
  119. பிருந்தா இளங்கோவன்
  120. புகழின் செல்வன்
  121. போதி
  122. ப்ரசாந்த் கார்த்திக்
  123. ப்ரவீன் ராஜ்
  124. மகாராஜா காமாட்சி
  125. மகேஷ்குமார் செல்வராஜ்
  126. மஞ்சுநாத்
  127. மணிமாலா மதியழகன்
  128. மனோஜ்
  129. மன்னர்மன்னன் குமரன்
  130. மாதவன் பழனியப்பன்
  131. மால்கம்
  132. மாறன். மா
  133. மிதுன் கௌசிக்
  134. முகம்மது ரியாஸ்
  135. முத்தழகு கவியரசன்
  136. முத்துராசா குமார்
  137. மோனிகா மாறன்
  138. மோஹன் ஹரிஹரன்
  139. ரக்‌ஷன் கிருத்திக்
  140. ரமேஷ் கண்ணன்
  141. ரமேஷ் ரக்சன்
  142. ரவிச்சந்திரன் அரவிந்தன்
  143. ராஜா சிவகுமார்
  144. ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
  145. ரெ.விஜயலெட்சுமி
  146. ரெஜி இசக்கியப்பன்
  147. ரேவதி ரவிகாந்த்
  148. லட்சுமிஹர்
  149. லதா ரகுநாதன்
  150. லிவி
  151. வசந்தி முனீஸ்
  152. வளவன்
  153. வாசுதேவன் அருணாசலம்
  154. வாணி ஆனந்த்
  155. வாஸ்தோ
  156. விக்டர் ப்ரின்ஸ்
  157. விக்னேஷ்
  158. வில்லரசன்
  159. விஜயநாகசெ
  160. விஜயராணி மீனாட்சி
  161. விஜய் சுந்தர் வேலன்
  162. விஜய் வேல்துரை
  163. ஜனநேசன்
  164. ஜாபாலன்
  165. ஜார்ஜ் ஜோசப்
  166. ஜி. கார்ல் மார்க்ஸ்
  167. ஜீ. கணேஷ்
  168. ஜெகநாத் நடராஜன்
  169. ஜெகன்மித்ரா
  170. ஜெயந்தி
  171. ஜெயன் கோபாலகிருஷ்ணன்
  172. ஜே.மஞ்சுளாதேவி
  173. ஜேக்கப் மேஷாக்
  174. ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
  175. ஶ்ரீராம் விஸ்வநாதன்
  176. ஷரத்
  177. ஹரிஷ் குணசேகரன்
  178. ஹரீஷ் கணபதி
  179. ஹேமா
  180. ஹேமி கிருஷ்

சமீபத்திய விகடன் படைப்பாளிகள்

ஆனந்த விகடனுக்கென்று ஒரு சிறப்பு உண்டு. அதில் வரும் சிறுகதைகளும் எழுத்தாளர்களும் பரவலாகப் பலரைச் சென்றடைந்து நெடுங்காலமாக இலக்கிய வானில் ஜொலித்த காலம் ஒன்றுண்டு. இப்போதைய காலகட்டத்தில் அது திரைக்கதைக்கும் சினிமாவுக்குமான வாயிலாகிப் போனாலும் இன்னும் அதில் யார் எழுதுகிறார்கள், எப்படிப்பட்ட படைப்புகளைக் கொணர்கிறார்கள் என்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதையொட்டி விகடன் சிறுகதையாசியர்களின் பட்டியல்:

  1. அய்யப்பன் மகாராஜன்
  2. அரவிந்தன்
  3. ஆர். ஸ்ரீனிவாசன்
  4. இமையாள்
  5. எஸ்.பர்வின் பானு
  6. எஸ்.வி.வேணுகோபாலன்
  7. க.அம்சப்ரியா
  8. கணேசகுமாரன்
  9. கவிதைக்காரன் இளங்கோ
  10. கவிப்பித்தன்
  11. கு.இலக்கியன்
  12. கே.பி.சிவகுமார்
  13. சசி
  14. சிவகுமார் முத்தய்யா
  15. துரை.அறிவழகன்
  16. நர்சிம்
  17. நூருத்தீன்
  18. பாலைவன லாந்தர்
  19. பிரபாகரன் சண்முகநாதன்
  20. பிறைமதி குப்புசாமி
  21. புலியூர் முருகேசன்
  22. ம . காமுத்துரை
  23. மாத்தளை சோமு
  24. ரமணன்.கோ
  25. ராஜேஷ் வைரபாண்டியன்
  26. விஜி முருகநாதன்
  27. ஸ்ரீதர் பாரதி
  28. ஹாசிப் கான்

இதே போல் குங்குமம் இதழில் எழுதியவர்கள், காலச்சுவடு போன்ற சிற்றிதழ்கள், பிற சிறுபத்திரிகைகளில் எழுதியவர்களையும் பட்டியலிடலாம்.

பரவலாக எழுதி கவனிப்பைப் பெற்ற படைப்பாளிகள்

அடுத்ததாக வாசிக்க வேண்டிய படைப்பாளிகளின் பட்டியல் பரிந்துரைகள்.

இவர்களில் பெரும்பாலானோர் பல காலமாக எழுதுபவர்கள். பல விருதுகளை அள்ளியவர்கள். பத்திரிகை நடத்துபவர்கள். பல நூல்களை வெளியிட்டவர்கள். இணையத்தில் அறியப் பெற்றவர்கள். சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்ற மோதிரக்கையால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.

  1. அ. ரெங்கசாமி
  2. அ.கரீம்
  3. அகரமுதல்வன்
  4. அகரன்
  5. அமர்நாத்
  6. அமல்ராஜ் பிரான்சிஸ்
  7. அமுதா ஆர்த்தி
  8. அரவிந்தன்
  9. அராத்து
  10. அரிசங்கர்
  11. அருணா சிற்றரசு
  12. அருள்செல்வன்
  13. அனார்
  14. அனோஜன் பாலகிருஷ்ணன்
  15. அஜிதன்
  16. ஆசி கந்தராஜா
  17. ஆதவன் தீட்சண்யா
  18. ஆத்மார்த்தி
  19. ஆர்.அபிலாஷ்
  20. இடலாக்குடி அசன்
  21. இந்திரா ராஜமாணிக்கம்
  22. இராகவன் ச.
  23. இராயகிரி சங்கர்
  24. இலட்சுமி சரவணகுமார் 
  25. இளங்கோ
  26. உதயசங்கர்
  27. உமாஜி
  28. எம். எம். நௌஷாத்
  29. எம். தவசி
  30. எம். ரிஷான் ஷெரீப்
  31. எம்.எம். நௌஷாத்
  32. எம்.எம்.தீன்
  33. எம்.கே.குமார்
  34. எம்.கே.மணி
  35. எம்.ஜி.கன்னியப்பன்
  36. எல்.ஜே வயலட்
  37. என். ஸ்ரீராம்
  38. எஸ்.சுரேஷ்
  39. ஏ. ஆர்.முருகன்
  40. ஏக்நாத்
  41. ஏஜே.டானியல்
  42. ஐ.கிருத்திகா
  43. க.கலாமோகன்
  44. க.ராஜீவ் காந்தி
  45. கணேஷ் வெங்கட்ராமன்
  46. கமலதேவி
  47. கலைச்செல்வி
  48. கறுப்பி சுமதி
  49. கனகராஜ் பாலசுப்பிரமணியம்
  50. கா. ரபீக் ராஜா
  51. கா.சிவா
  52. காந்தி முருகன்
  53. கார்த்திக் பாலசுப்ரமணியன்
  54. கார்த்திக் புகழேந்தி
  55. காலத்துகள்
  56. காளிப்ரஸாத்
  57. கிரிதரன் ரா.
  58. குணா கந்தசாமி
  59. குமாரநந்தன்
  60. கே.என். செந்தில்
  61. கே.பாலமுருகன்
  62. கே.ஜே.அசோக்குமார்
  63. கோ.சுனில்ஜோகி
  64. கோ.புண்ணியவான்
  65. கோவர்த்தனன் மணியன் ம.
  66. ச.துரை
  67. சக்கரவர்த்தி
  68. சந்தோஷ் கொளஞ்சி
  69. சப்னாஸ் ஹாசிம்
  70. சரவணன் சந்திரன்
  71. சர்வோத்தமன் சடகோபன்
  72. சாந்தன்
  73. சாம்ராஜ்
  74. சி.எம்.முத்து
  75. சி.சரவணகார்த்திகேயன்
  76. சித்தாந்தன்
  77. சித்துராஜ் பொன்ராஜ்
  78. சித்ரன்
  79. சியாம்
  80. சிவசங்கர் எஸ்.ஜே
  81. சிவநேசன் ந.
  82. சிவபிரசாத்
  83. சிவா கிருஷ்ணமூர்த்தி
  84. சிவானந்தம் நீலகண்டன்
  85. சிவேந்திரன்
  86. சிறில் அலெக்ஸ்
  87. சுகா
  88. சுசித்ரா
  89. சுரேந்திரகுமார்
  90. சுரேஷ் பிரதீப்
  91. சுனீல் கிருஷ்ணன்
  92. சுஷீல்குமார்
  93. செந்தில் ராம்
  94. செந்தில் ஜெகன்நாதன்
  95. செந்தில்குமார். எஸ்.
  96. செந்தில்குமார். ரா.
  97. செந்தூரன் ஈஸ்வரநாதன்
  98. செல்வேந்திரன்
  99. சேனன்
  100. டி.அருள் எழிலன்
  101. தமயந்தி
  102. தருணாதித்தன்
  103. தனா
  104. தாமிரா
  105. தீபு ஹரி
  106. தெய்வீகன் ப.
  107. தேஜூசிவன்
  108. நஞ்சுண்டன்
  109. நட்சத்திரன் செவ்விந்தியன்
  110. நம்பி கிருஷ்ணன் (நகுல்வசன்)
  111. நவீன் ம.
  112. நாகரத்தினம் கிருஷ்ணா
  113. நாச்சியாள் சுகந்தி
  114. நாராயணி கண்ணகி
  115. நிரூபா
  116. நீலாவணை இந்திரா
  117. நெற்கொழுதாசன்
  118. நொயல் நடேசன்
  119. பத்மகுமாரி
  120. பா. அ. ஜயகரன்
  121. பா.திருச்செந்தாழை
  122. பாலகுமார் விஜயராமன்
  123. பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
  124. பாலா கருப்பசாமி
  125. பாலாஜி பிருத்விராஜ்
  126. பாஸ்கர் ஆறுமுகம்
  127. பிரகாஷ் சங்கரன்
  128. பிரவின் குமார்
  129. பெருந்தேவி
  130. பொன்முகலி
  131. பொன் விமலா
  132. போகன் சங்கர்
  133. ம. காமுத்துரை
  134. மயிலன் சின்னப்பன்
  135. மலர்மன்னன் அன்பழகன்
  136. மலர்வதி
  137. மலேசியா ஸ்ரீகாந்தன்
  138. மானசீகன்
  139. மித்ரா அழகுவேல்
  140. மு. குலசேகரன்
  141. மு.ஆனந்தன்
  142. ராம் தங்கம்
  143. ராம்பிரசாத்
  144. ராஜ சுந்தரராஜன்
  145. ராஜகோபாலன் ஜா.
  146. ராஜேஷ் வைரபாண்டியன்
  147. லலிதா ராம்
  148. லால்குடி என். உலகநாதன்
  149. லாவண்யா சுந்தரராஜன்
  150. லெ.ரா.வைரவன்
  151. லோகேஷ் ரகுராமன்
  152. வளன்
  153. வி. அமலா ஸ்டேன்லி
  154. வித்யா அருண்
  155. விலாசினி
  156. விஜய ராவணன்
  157. விஸ்வநாதன் மகாலிங்கம்
  158. விஷால் ராஜா
  159. வீரபாண்டியன்
  160. வெண்பா கீதாயன்
  161. வேதா
  162. றஷ்மி
  163. ஜ. காவ்யா
  164. ஜா.தீபா
  165. ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
  166. ஜீவ கரிகாலன்
  167. ஜே.பி. சாணக்யா
  168. ஜேகே
  169. ஸிந்துஜா
  170. ஸ்ரீதர் நாராயணன்
  171. ஸ்வர்ணா
  172. ஷாராஜ்
  173. ஷான் கருப்பசாமி
  174. ஹரன் பிரசன்னா

சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருதுகள்

அதே போல் கடந்த பத்தாண்டுகளில் சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களின் ஆசிரியர்கள் – மு. ராஜேந்திரன்அம்பைஇமையம்சோ. தர்மன்எஸ். ராமகிருஷ்ணன்இன்குலாப்வண்ணதாசன்ஆ. மாதவன்பூமணிஜோ டி குரூஸ், எல்லோருமே கிட்டத்தட்ட 2000களிலேயே கவனிக்கப் பெற்றவர்கள். எனவே, இளம் எழுத்தாளர்களில் கவிதையைத் தவிர்த்து பரிசு பெற்றவர்களின் பட்டியல்:

ஆண்டுநூலாசிரியர்நூல்நூலின் தன்மை
2011எம். தவசிசேவல்கட்டுநாவல்
2012மலர்வதிதோப்புக்காரிநாவல்
2014ஆர்.அபிலாஷ்கால்கள்நாவல்
2015வீரபாண்டியன்பருக்கைநாவல்
2016இலட்சுமி சரவணன் குமார் கானகன்நாவல்
2018சுனில் கிருஷ்ணன் அம்பு படுக்கைசிறுகதைகள்
2021கார்த்திக் பாலசுப்பிரமணியன்நட்சத்திரவாசிகள்நாவல்
2023ராம் தங்கம்திருக்கார்த்தியல்சிறுகதைகள்

சமீபத்தில் விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்:[1]

கணடா தமிழ் இலக்கியத் தோட்டம்புனைவு விருது

அ. முத்துலிங்கம் இருப்பதாலோ… என்னவோ! கனடா இயல் விருது வழங்கும்போது அதனுடன் கொடுக்கப்படும் விருதுகள் காத்திரமாக முக்கியமானதாக இருக்கின்றன. அவ்வாறு வழங்கப்படும் புனைவிற்கான கௌரவத்தில் எவர் இடம் பெறுகிறார்கள்?

ஆண்டுவிருது பெற்றவர்நூல்
2012கண்மணி குணசேகரன்அஞ்சலை
2013கீரனூர் ஜாகீர் ராஜாஜின்னாவின் டைரி
2014தேவகாந்தன்கனவுச்சிறை
2015ஷோபாசக்திகண்டி வீரன்
2016சயந்தன்ஆதிரை
2017தமிழ்மகன்வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
2018தீபச்செல்வன்நடுகல்
2020பா. கண்மணிஇடபம்
2021பா. அ. ஐயகரன்பா.அ. ஜயகரன் கதைகள்
2022வேல்முருகன் இளங்கோமன்னார் பொழுதுகள்

கதைத்தொகுப்புகள், நாவல்கள், நெடுங்கதைகள், புனைவுகள் – பட்டியல்

கடைசியாக – என்னுடைய விழைவுப் பட்டியல். எந்த நூல்களை வாங்க நினைக்கிறேன்? வாங்கி வைத்திருந்தாலும் வாசிக்க எடுக்கப் போகிறேன்?

புத்தகப் பரிந்துரைகளை இந்த முறை தர இயலவில்லை. இவ்வளவு நல்ல எழுத்துகள், சுவாரசியமான படைப்புகள், காத்திரமான ஆக்கங்கள் என்று மலைக்க வைக்குமளவு சமீபத்திய இலக்கியகர்த்தாக்கள் தீவிரமாக இயங்குகிறார்கள். அவர்களுக்குள் இந்த நூறு புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் என்று சொல்வதற்கு நிறைய வாசிப்பு தேவை. சரவணன் மாணிக்கவாசகம் மாதிரி பரவலாகத் தொடர்ந்து அனைத்து புனைவுகளையும் வாசிப்பவர்களின் உதவியும் தேவை. அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாவது முடிக்க வேண்டும். பார்ப்போம்.

உரிமை துறப்புகள்

  • கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள், கவனிப்பு கிடைக்கப் பெறாதவர்கள் என்று பகுத்தது என் தேர்வு. நான் அறிந்த வரையில் பரவலாக வாசகர்களைப் பெற்றவர்களை – கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பட்டியலில் போட்டு இருக்கிறேன்.
  • ஒருவரின் எழுத்துகள் இரண்டு மூன்று தளங்களிலாவது தேர்வு செய்யப்பட்டு வெளியாகி இருந்தால் அவரை கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டேன்.
  • இவற்றில் எந்தப் பெயர்கள் பல முறை ஒரே பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை சுட்டவும் – திருத்திக் கொள்கிறேன்
  • எந்தப் பெயர்கள் பலமுறை ஓரிரண்டு பட்டியல்களில் இடம் பெற்றிருக்கின்றன என்பதையும் சொல்லவும்
  • எழுத்தாளர்களின் பெயர் குழப்பத்தினாலோ, முதலெழுத்தை மாற்றிப் போட்டதாலோ, புனைப்பெயரினாலோ பலமுறை திரும்பத் திரும்ப வந்தவர்களைச் சொல்லவும்
  • தவறுதலாக சிங்கள எழுத்தாளரோ, வேற்றுமொழி எழுத்தாளரோ இடம் பெற்றிருக்கலாம் – சுட்டவும். திருத்துகிறேன்
  • எழுபதுகள், எண்பதுகள், 90களிலேயே பிரகாசிக்க ஆரம்பித்துவிட்டவர்களை தவறுதலாக எங்காவது சேர்த்திருக்கலாம். சொல்லவும். பிழைகளைக் களைகிறேன்
  • முக்கியமாக எந்தப் பெயர்களைத் தவற விட்டிருக்கிறேன்? எந்த எழுத்தாளர்களை அடையாளம் காணாமல் இருக்கிறேன்? அவற்றைப் பகிரவும் – சேர்க்கிறேன்.

உசாத்துணை

  1. இலக்கியச் சிந்தனை – சிறந்த சிறுகதைகள் : மாதுமை (viruba.com)
  2. செவ்வியல் – பழம் தின்று கொட்டை போட்ட படைப்பாளிகள் யார்? – சுபமங்களா சிறுகதைகள் – Tamil Wiki
  3. Authors – Adavi Shop | Aadhi Pathippagam
  4. சிறுகதையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  5. சிறுகதை Books – Adavi Shop | Aadhi Pathippagam
  6. படைப்பாளிகள் | அரூ (aroo.space)
  7. பனுவல் – புத்தகங்கள் – சிறுகதைகள் (panuval.com)
  8. சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களின் பட்டியல்
  9. Category:நாவலாசிரியர்கள் – Tamil Wiki
  10. Category:சிறுகதையாசிரியர்கள் – Tamil Wiki
  11. சமர்ப்பிக்கப்பட்ட சிறுகதை (padaippu.com)
  12. நாவல் போட்டிகள் – Saravanan Manickavasagam.
  13. நேர்காணல்கள் – கனலி (kanali.in)
  14. தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Tamil Short Stories | விகடன் சிறுகதைகள் (vikatan.com)
  15. படி | Snap Judgment (snapjudge.blog)
  16. சிறுகதை Archives – தமிழினி (tamizhini.in)
  17. சிறுகதைகள் Archives – வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு (vasagasalai.com)
  18. சிறுகதை – சொல்வனம் | இதழ் 299 |23 ஜூலை 2023 (solvanam.com)
  19. புதிய கதைகள்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  20. புதிய வாசல் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  21. புதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்[ பின்னூட்ட வசதியுடன்] | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  22. சிறுகதை – சுவடு (suvadu.in)
  23. சிறுகதை – வல்லினம் (vallinam.com.my)
  24. சிறுகதைகள் – கனலி (kanali.in)
  25. சிறுகதை Archives – யாவரும்.காம் (yaavarum.com)
  26. காலச்சுவடு பதிப்பகம் | Kalachuvadu Publications
  27. சிறுகதைகள் Archives – Page 32 of 39 – வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு (vasagasalai.com)
  28. ஒரு திறந்த மடல் | பதிவுகள் (bearblog.dev)

Sunday, 1 October 2023

'பரவலாக எழுதி கவனிப்பைப் பெற்ற படைப்பாளிகள்' பட்டியலில்

தமிழ் எழுத்தாளர்களில் 'பரவலாக எழுதி கவனிப்பைப் பெற்ற படைப்பாளிகள்' பட்டியலில்  ...


https://snapjudge.blog/2023/09/05/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-300/?fbclid=IwAR3hKHWpTLkJSXxenlmLGicSty6G1UnAKqFiWz1GF72QL2UeuAX7HzxfudI 



https://solvanam.com/2023/08/13/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf/

பட்டியலில் இடமளித்தவர்களுக்கும், பட்டியல் குறித்த  தகவலை எனக்குப் பகிர்ந்த தோழி அனிதா கோகுலகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்..

Tuesday, 19 September 2023

2022ல் குவிகம் சிறுகதைப் போட்டியில் தேர்வான எனது சிறுகதை

2022ல் குவிகம் சிறுகதைப் போட்டியில் தேர்வான எனது சிறுகதை... அறிவியல் புனைவு வாசகர்களின் வாசிப்புக்கென இங்கே... 





கண்ணாடிச்சுவர் - சிறுகதை




க்ளாரா தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை அவசர அவசரமாகப் புறங்கையால் துடைக்கும் முன்  நான்சி பார்த்துவிட்டிருந்தாள்.


"என்னாயிற்று?" என்றாள் புருவச்சுருக்கங்களுடன். 


தன் திசையில் ஜூலியுடன் தான் மாலையும் கழுத்துமாக நிற்கும் தன் திருமணப் புகைப்படம் இருப்பதை ஒரு முறை பார்த்துக்கொண்டாள்; மனதுக்கு இதமாய் இருந்தது. மேஜையின் இழுவறையிலிருந்து அந்தக் காகிதத்தை எடுத்து மேஜை மீது வைத்தாள்.  நான்சி எதனை எடுத்துப் பிரித்துப் படித்துவிட்டு, உதட்டைப் பிதுக்கினாள்.


" பணி உயர்வு மறுக்கப்பட்டுள்ளதா? ஆண்டின் துவக்கத்தில் ஜூலியுடனான உன் திருமணம் நடந்தபோதே நான் நினைத்தேன். இது நடக்குமென்று." என்றாள்.


"ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? பெண்ணும் பெண்ணும் மனமுவந்து மணம் செய்துகொள்ளக் கூடாதா? கணவன்-மனைவியாக வாழக்கூடாதா? மறைந்து மறைந்து வாழவில்லையே.  பன்னெடுங்காலமாக ஆணைச் சார்ந்து வாழ்ந்ததில் அடிமைப்பட்டதன்றி நாம் அடைந்த பலன் என்ன? எந்த ஆணையும் குறை சொல்லவில்லையே. ஆண்களால் நம் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்னும் போது, நேர்மையாக, எல்லோருக்கும் அறிவித்து, எனக்கு விருப்பமுள்ள பெண்ணை வாழ்க்கைத்துணையாய்க் கரம் பிடிப்பது எத்தகைய பொறுப்பு? அத்தகைய பொறுப்பின் மத்தியிலும் இந்த நிறுவனத்திற்காக நான் நாள் தவறாமல் வேலை பார்த்திருக்கிறேன். அப்படியும்...." என்ற க்ளாரா, அதற்கு மேல் தொடர இயலாமல், உடைந்தாள்.


“நிறுவனத்தில் சென்ற ஓராண்டில் நடந்த பதினைந்து திருமணங்களுமே ஆணும் பெண்ணும் இணையும் திருமணங்கள். இரு சம்பளக்காரர்களிடமுள்ள நிறுவனத்தின் பங்குகள் அவர்தம் பிள்ளைகளுக்கு உரிமையாகும். நிறுவனத்தின் அடுத்த தலைமுறைத் தொடர்ச்சிக்கு வேறென்ன வேண்டும்? உன் ஓரினச்சேர்க்கை திருமணத்தால், நிறுவனத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும், நிறுவனத்துக்கும் என்ன லாபம்?  நீயாக ராஜினாமா செய்ய நிறுவனம் எதிர்பார்க்கிறது போலும்?” என்றாள் நான்சி.


"விடு. இவ்வுலகம் ஆண்களால் கட்டமைக்கப்பட்டது. பெண்களின் பிரச்சனைகள், வாழ்க்கை முறை, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான காதல் அவர்களுக்குப் புரியாது. நாம் கேள்வி கேட்டெல்லாம் எதுவும் மாறிவிடாது. வா, நம் வேலையைப் பார்க்கலாம்." என்றவள், 


"இன்று தானே நாம் மேற்கொண்ட பரிசோதனையின் இரண்டாம் கட்டம்" என்றாள் நான்சி.


பூவுலகில் முதன் முதலில் தோன்றிய உயிரணு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். அதன் பிறகு, பரிணாமம் எவ்விதம் தொடர்ந்தது என்கிற பரிசோதனையின் முதல் கட்டத்தின் முடிவில் இருந்தார்கள் க்ளாராவும், நான்சியும்.  முதல் கட்டம் சற்று சிக்கலானது:  ஒரு கண்ணாடிக் கூண்டில் பூமியில் உயிரணுக்கள் முதன் முதலில் உருவான காலகட்டம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. அப்போதிருந்த நிலப்பரப்பு, சுற்றுச்சூழல், தட்பவெட்பம், நீர், வெம்மை, வெளிச்சம் என்று எல்லாமும் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டது. கண்ணாடிக் கூண்டிற்குள் செயற்கையாகப் பருவ கால மாற்றங்களில் சுழற்சி உருவாக்கப்பட்டது.  


ஆழ்கடலில் நீர் வெப்ப வீழ்படிவுகள் (hydrothermal vent precipitates) சேகரிக்கப்பட்டு குளிர்சாதனப்பெட்டிகளில் பரிசோதனைகளுக்கான மூலப்பொருட்களாக ஆராய்ச்சி நிறுவனம் தந்திருந்தது.


"இந்திரிய.... ...... வாழை....... இரண்டையும் ஒன்றாக்கி........ வெளியில் இருப்பதை உள்....  உள்ளிருப்பது வெளி.... மேல் கீழ்ப்பகுதி, கீழ்ப்பகுதியை மேல்பகுதியை... கொஞ்சம் இந்திரியம்...   நிறை உப்பு உப்பு, சல்ஃபர்... கொஞ்சம் பாதரசம்.... நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ... கூட்டு கலவையை பெரும் நெருப்பு தீண்ட... தீண்டித் தீண்டி மெருகேற.... பிரவாகம்... பெருநாகம்...  அணுக்கள் பிரிந்து.... ஏந்தி... கருவுக்குள் பிரளயம்...  சர்ப்பமும், பிண்டமும் குமிழ்ந்து, குழைந்து...   ஆணையும் பெண்ணையும் ........  உயிர்.... உள் நுழைய...."


பிரிதேதோவோர் ஆராய்ச்சிக்கெனக் கிடைத்தக் குறிப்பில் இருந்ததை வைத்து கொழ கொழவென்ற கரிம (organic) திரவத்தில் வீழ்படிவுகளைக் கொஞ்சமென எடுத்துக் கவிழ்த்திருந்தாள் க்ளாரா.  கருமுட்டை அடங்கிய திரவம் நாலாபுரமும் வழிந்தோட சட்டென அருகே இருந்த கற்கள், பாறைகளை எடுத்து, சுற்றிலும் அடுக்கித் தடுத்திருந்தாள். ஒரு முனையில் சல்ஃபர். மற்றொரு முனையில் உப்பு. நடுவே, பாலம் அமைத்தது போல் பாதரசம். இந்த அமைப்பின் மீது மின்சாரம் பாய்ச்சி, அது சன்னமாக வெடித்தது. அதை அப்படியே தென்னங்கீற்றாலான குடுவை ஒன்றைக் கொண்டு மூடியிருந்தாள். 


இந்த முதல் கட்டத்தின் முடிவில், இம்முயற்சிகளின் கூட்டு பலனாக, கூண்டிற்குள் ஒரு வினோதமான உயிர் உருவாகியிருந்தது. துவக்கத்தில் கூண்டின் ஒரு மூலையில் வெள்ளையாக உருவெடுத்திருந்தது. க்ளாரா அதை அவதானித்துவிட்டு,


"பெண் இனம்" என்றாள்.


"எப்படிச் சொல்கிறாய்?" என்றாள் நான்சி.


"கூண்டுக்குள் நூறில் ஒரு பங்கு பகுதிக்கும் மேலாகப் பரவியிருப்பதைக் கவனிக்கிறாயா? பால் சாரா இனப்பெருக்கம் வாயிலாகப் பெறுகிக்கொண்டிருக்கிறது. தன்னைத்தானே பிரசவிக்கிறது. அப்படியானால் பெண் தானே" 


"மிகவும் சீராக வளர்கிறதல்லவா?" என்றாள் நான்சி. 


க்ளாரா ஆமோதிப்பாய்த் தலையசைக்க, 


"பரிணாமத்தின் வழி, இனி பிறழ்வுகளைச் சோதிக்கவேண்டும். ஆனால், பிறழ்வுகள் தாமாக நேரும் வரை பொறுக்க வேண்டும் போலிருக்கிறதே?" என்றாள் நான்சி.


"தேவையில்லை. சின்னதாக கதிர்வீச்சு தந்தால், பிறழ்வுகள் உருவாக சாத்தியம் உருவாகும்." என்ற க்ளாரா, கதிர்வீச்சுக் கருவியைக் கையிலேந்தி ஒரு பொத்தானை அழுத்த, கருவியிலிருந்து வெளிப்பட்ட கன நேரக் கதிர்வீச்சு நுண்ணியிரிகள் மீது விழுந்து படர்ந்தது. 


"இனி நாம் கண்டுபிடிக்க வேண்டியது பிறழ்வுகள் பாதித்த உயிர்களை. நான் இடமிருந்து வலமாக சோதிக்கிறேன். நீ வலமிருந்து இடமாக நுண்ணியிரிகளைச் சோதனைக்கு உள்ளாக்கி சோதி." என்று கட்டளையிட்டபடி, க்ளாரா கூண்டின் இடது பக்கமிருந்து சில உயிர்களை எடுத்து, நுண்ணோக்கியில் வைத்து சோதிக்கலானாள்.


நான்சி தானும் சிறிய அளவில் உயிர்கள் எடுத்து சோதிக்க, இருவரும் தாங்கள் கண்டுகொண்டவைகளைக் குறிப்பெடுத்துக்கொண்டார்கள். 


பல முறைகளாக நடந்த சோதனைகளில் குறிப்பிடத்தகுந்த பிறழ்வுகள் ஏதும் சிக்காமல் இருவருமே சோர்ந்துவிட்டிருந்தனர். அந்த நாளின் இறுதி முயற்சியாக, கண்ணாடிக்கூண்டின் மத்தியிலிருந்து சிறிதளவு எடுத்துச் சோதித்தபோது அவர்களின் புருவங்கள் சுருங்கின.


"இதோ, இங்கே பிறழ்வு நேர்ந்திருக்கிறது.  இந்த உயிர்கள் ஏனையவைகளை விட சற்று வித்தியாசமாக இருக்கின்றன." என்றாள் க்ளாரா.


"ஆனால், நிறமாக இல்லையே" 


"அதன் பொருள் அவைகள் பெறுகவில்லை என்பது" 


"அப்படியானால், இவைகள் ஆண்களா?" 


"உருவாகும் வேகத்திலேயே மடிகின்றன. தம்மைத்தாமே தொடர்ந்து உருவாக்குவதில்லை. அப்படியானால், ஆணாகத்தானே  இருக்க வேண்டும். " என்ற க்ளாரா மீண்டும் கதிர்வீச்சுக் கருவியை இயக்கினாள்.


உயிர்களின் வளர்ச்சி வேகத்தில், அன்றிரவே பிறழ்வுகளின் பக்கவிளைவுகளைக் காண முடியும் என்ற ஸ்திதி எழுந்தது. ஆதலால், அன்றிரவு, தொடர்ந்து வேலை செய்வதாய் அவர்களுக்குள் ஒப்பந்தமாயிற்று. நான்சி, தனக்கும், க்ளாராவுக்குமாக நூடுல்ஸ் தயார் செய்து எடுத்து வந்தாள். இருவருமாக சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் கூண்டினருகில் வர, இப்போது வண்ண வண்ண  நிறத்தில் உயிர்கள் வளர்ந்திருக்கக் கண்டார்கள்.


"வாவ்.. எத்தனை அழகழகான நிறங்கள் பார்த்தாயா? பார்க்கவே அழகாக இருக்கிறது" என்று குதூகளித்தாள் நான்சி.


"ம்ம்ம்ம்" 


க்ளாரா சிந்தனை வயப்பட்டிருப்பதை கவனித்தவளாய்,


"என்னாயிற்று? என்ன யோசிக்கிறாய்?" என்றாள் நான்சி.


"பிறழ்வுகள் முதலில் ஆண் இனத்தை உருவாக்கின. ஆனால், பிறழ்வுகளின் பக்க விளைவால், அவைகளால் பால்சாரா இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை.  அதன் பிறகான கதிர்வீச்சு தந்த பிறழ்வுகள் எப்படியோ இந்த ஆண் உயிர்களை பெண் உயிர்களுடன் கூடிப் பெறுகும் இயல்பினதாகவும், அதே நேரம் சில பெண் உயிர்களை பால் சாரா இனப்பெருக்கம் தவிர்ந்து, ஆண் உயிர்களுடன் கூடிப் பெறுகும் இயல்பினதாகவும் மாற்றியிருக்கின்றன. அதன் பக்க விளைவாக வந்த உயிர்கள் பற்பல  நிறங்களில் தங்களை வெளிப்படுத்துகின்றன. ஏனெனில்,  உயிர் தழைப்பின் மூலக்கூறுகள் இரு உயிர்களிலிருந்தும் பெறப்படுவதால், வரிசை மாற்ற சேர்க்கை சாத்தியங்கள் உருவாகியிருக்கின்றன.  இந்த சாத்தியங்களின் வழி உயிர்களின் அகத்தோற்றத்தின் சாத்தியங்களும் அதிகரித்திருக்கின்றன. இதனால், கூண்டிற்கு என்னானது என்பதை கவனிக்கிறாயா?"


நான்சி கண்ணாடிக் கூண்டை ஒரு முறை முழுமையாகப் பார்த்துவிட்டு அதிர்ந்தாள். 


"இதென்ன வினோதம்? அதற்குள் கூண்டு முழுவதும் இந்த புதிய பல் நிற உயிர்கள் வியாபித்துவிட்டனவே?" என்றாள் நான்சி அதிர்ச்சி விலகாமல்.


"இதற்கு ஒரு விளக்கம் தான் இருக்க முடியும். துவக்கத்தில், பெண் உயிர்கள் பெறுகினதாம். ஆனால், அதன் வேகம் கட்டுக்குள் இருந்திருக்கிறது. ஆனால், ஆணும் பெண்ணுமாக இந்தப் புத்துயிர்கள் பெறுகும் வேகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கிறது" 


"அதனால்?" 


"பெண் உயிர்கள் தனித்து இருந்தவரை அவைகளின் பெறுகும் வேகம் மிதமாகத்தான் இருந்திருக்கிறது. தவிரவும் அதிக நிறங்கள் இல்லாது இருந்திருக்கின்றது. ஒரு வேளை அதுதான் சரியோ என்று தோன்றச்செய்கிறது?" 


"பிறழ்வுகளால் உருவான ஆண் உயிர்கள் தங்களைத் தக்க வைக்க பெண்ணுயிர்களுடன் கூடிய பிறகு பெறுகும் வேகம் அதிகரித்திருக்கிறது என்கிறாயா?" 


"இல்லை. இப்படி யோசித்துப் பார். பெண் உயிர்கள் தனித்து, தமக்குள்ளாகவே பெறுகும் வல்லமை பெற்றவை. ஆனால், முதல் பிறழ்வின் பிறகு தோன்றிய ஆண் உயிர்கள் தனித்து பெறுக இயலாமல் தோற்றவை. 'தோற்றவை' என்ற வார்த்தைப் பிரயோகத்தை கவனி. அவைகள் பெண் உயிர்களின் துணை இன்றிப் பெறுக வாய்ப்பின்றி, உருவாக உருவாக, உருவாகும் வேகத்திலேயே அழிந்தன. இரண்டாம் கட்ட பிறழ்வு ஆண்-பெண் கூடிப் பெறுகும் வல்லமையைத் தந்திருக்கிறது. அதாவது, ஆண் உயிர்கள் உயிர்த்திருக்க, தழைக்க, அந்தக் கூடல் உதவியிருக்கிறது. அவ்வாறு பெறுகிய உயிர்கள் பல நிறங்களில் காட்சிக்கு இதமாக அழகாக ரம்மியமாகத் தோன்றுகின்றன" 


"ஆண் உயிர்கள் இல்லையென்றால், பெண் உயிர்களிடம் லட்சணம், அழகு , ரம்மியம், இதம் இல்லாமல் போயிருக்கும் என்கிறாயா க்ளாரா?".


"இல்லை. நீ தவறாகப் புரிந்துகொள்கிறாய். பெண் உயிர்கள் மிதமான வேகத்தில் பெறுகின. அதே வேகத்தில் ஆண்-பெண் கூடிப் பெறுகும் வேகம் அமைந்திருந்தால், இத்தனை நிறங்களில் ஆண்-பெண் கூடிப்பெறுகும் இயல்பின உயிர்கள் தோன்றியிருக்காது. ஆண்-பெண் கூடிப்பெறுகும் வேகம் அதிகரித்ததினாலேயே, தன்னிச்சையாகப் பெறுகும் இயல்பு கொண்ட பெண் உயிர்கள் வழக்கொழிந்து போய் விடலாம். அவ்விதம் ஒருக்கால் நடப்பின் அது பிற்பாடு ஆண் உயிர்கள் ஆதிக்கம் செலுத்தும் சிற்றுலகாகவே இந்தக் கூண்டை உருமாற்றிவிடக்கூடும். அல்லவா?" 


நான்சி தீவிரமாக யோசித்துவிட்டு ஆமோதிப்பாய்த் தலையசைத்தாள்.


"தன்னிச்சையாக இயங்கும் பெண் உயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டால், அதன் பிறகு, இந்தச் சிற்றுலகே ஆண்-பெண் கூடிப்பெறுகும் உலகாகிவிடும். இதன் பொருள் என்ன? பெண் உயிர்களால் ஆண் உயிர்களின் துணை இன்றிப் பெருகவே முடியாமல் போய்விடும். அது நடக்கக்கூடாது. ஏனெனில், பெண் உயிர்கள் தனிச்சிறப்பானவை, நான்சி; தன்னிச்சையாக இயங்கக் கூடியவை; அந்த இயங்கு இயல்பு பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே இனி வரும் காலங்களில் பெண் உயிர்களை அவைகளின் தன் மானத்துடனும், சுய கெளரவத்துடனுடன் பாதுகாக்கும் என்று கருதுகிறேன்" என்ற க்ளாரா கையில் ஒரு கோடாரியுடன்  கண்ணாடிக் கூண்டைத் திறந்தாள். 


வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் ஆண்-பெண் உயிர்களைத் தன்னிச்சையாக இயங்கும் இயல்புடைய பெண் உயிர்களிடமிருந்து பிரித்து, இரண்டுக்கும் இடையே கண்ணாடிச் சுவர் எழுப்பினாள். பின் கண்ணாடிக் கூண்டை மூடிவிட்டு வெளியே வந்தாள். கூண்டுக்குள் இப்போது ஒரு பகுதியில் ஆண்-பெண் கூடிப்பெறுகும் இயல்புடைய உயிர்கள் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் மிக மிதமான வேகத்தில் வெள்ளை நிறத்தில் தன்னிச்சையாகப் பெறுகும் பெண் உயிர்கள் பால் சாரா இனப்பெறுக்கம் வாயிலாகப் பெறுகிக் கொண்டிருந்தன. இரண்டும் அதனதன் இயல்பில் இயங்கிக்கொண்டிருந்தன.


"இந்தக் கண்ணாடி கூண்டுச் சிற்றுலகில், இந்த ஆண்-பெண் கூடிப்பெறுகும் இனத்தில் ஆண் உயிர்கள் பெண் உயிர்கள் மீது ஆதிக்கம் செலுத்தத்துவங்குமேயானால் அது இயற்கைக்கு முரணானதாகிவிடும். அத்தருணத்தில், அவ்வினத்தையே முழுவதுமாக அழித்துவிட்டு மீண்டும் முதலிலிருந்து துவங்க, தன்னிச்சையாக இயங்கும் இந்தப் பெண் உயிர்கள் தேவைப்படும்" என்றறிவித்தாள் க்ளாரா.


"கிட்டத்தட்ட ஆன்ட்ராயிடு (android) அலைபேசிகளில் தொழிற்சாலை மீட்டமைப்பு (factory reset) வசதியைப் போலத்தான் என்கிறாய். சரிதானே?" என்றாள் நான்சி.


"மனித உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு மைல்கற்களில் கூட, இப்படி எங்கோ கண்ணாடிச் சுவர் எழுப்பப்பட்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். இல்லையா க்ளாரா?" என்றாள் தொடர்ந்து.


"பெண் ஏன் அடிமையானாள் என்று  நினைக்கிறாய், நான்சி? இந்த இயற்கை இவ்விதம் கண்ணாடிச் சுவர் எழுப்பாததினால் தான்" என்றாள் க்ளாரா.


நான்சி ஆமோதிப்பாய்த் தலையசைத்தாள். 


“எப்படியோ.. இந்த பரிசோதனையின் வெற்றி உனக்கான பதவி உயர்வைப் பெற்றுத்தருமென்று நம்புகிறேன்” என்றாள் தொடர்ந்து. தீவிரமான சிந்தையில் ஆழ்ந்த நான்சி, ஒரு முடிவுக்கு வந்தவளாய்,


“இந்தப் பரிசோதனையைத் தோல்வி என்று அறிவிக்கப்போகிறேன்,  நான்சி” என்றாள். க்ளாராவின் வார்த்தைகள் நான்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கின. 


“ஏன்?” 


“இப்பூமியில் பெண்கள் தங்களுக்குள் கூடும் ஓரினச்சேர்க்கைத் திருமணங்களில் ஏதேனும் ஒன்றாவது இயற்கை எழுப்பாமல் விட்ட கண்ணாடிச் சுவற்றை எழுப்பினால் அதுதான் பெண் இனத்தின் அறுதி விடியலாக இருக்க முடியும், நான்சி. இப்பரிசோதனை குறித்த அறிக்கையை நிறுவனத்திடம் சமர்ப்பித்தல் அம்முயற்சிக்கு இடையூறாக அமையலாம்“ என்ற க்ளாரா, தொடர்ந்து ‘அழி’ என்ற பொத்தானை அழுத்த கண்ணாடிக் கூண்டு நெருப்பில் எரியத்துவங்கியது.


 - முற்றும்.


Monday, 11 September 2023

ஏ.ஆர்.ரகுமான் கன்சர்ட் விவகாரம்.

ஏ.ஆர்.ரகுமான் கன்சர்ட் விவகாரம்.


ஏ.ஆர்.ரகுமான் பிடிக்கும் என்பதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை.


ஏ.ஆர்.ரகுமான் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும்  உள்நோக்கத்துடனே இந்த கன்சர்ட் நிகழ்த்தப்பட்டிருப்பதாகத்தான் தெரிகிறது. 


சின்ன வயதில் ஒருவர் குறித்துத் தவறாகப் பேசப்படுகையில், அவர் தவறான ஆளாக இருப்பாரோ என்று எண்னியிருக்கிறேன். வளர வளரத்தான், அது ஒரு survival tactic என்பது புரிந்தது. உளப்பூர்வமான புரிதல் இல்லாத இடத்தில் எல்லோரையுமே 'வேண்டியவன் - வேண்டாதவன்' என்கிற இரண்டு சட்டகத்திற்குள் மட்டும் அடைத்துப் பார்க்க முயல்கையில் வேண்டாதவன் என்று கருதப்படுபவனை வடிகட்டி வெளியேற்றும் செயல்பாடே தான் அது.


வளர்ந்த பிறகு, இன்னும் இன்னும் உண்ணிப்பாக கவனிக்கையில் மேலும் நுணுக்கமாகப் பார்த்தபோது புரிந்தது இதுதான்: நீங்கள் ஒரு காரியத்தை சிறப்பாகச் செய்து பாருங்கள்; உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் கூடும். அந்தக் கூட்டம் நல்ல கூட்டமாக இருந்தால் அது அதிர்ஷ்டம். பெரும்பாலும் அது நடக்காது. முதலில் கூடுகிற கூட்டம் டாக்ஸிக்  நோக்கங்களுக்காக இருக்கத்தான் இக்காலத்தில் அதிக வாய்ப்பிருக்கிறது. 


அவர்களின் டாக்ஸிக் நோக்கங்களுக்கு தோதான ஆளாக நீங்கள் இருந்துவிட வேண்டும். இல்லையென்றால், உடனே உள் நோக்கத்துடன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கத்துவங்கி விடுகிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எந்த பேதமும் இல்லை. 


'அந்த ஆளு சரியான சிடுசிடு'

'ரொம்ப கறார் பேர்வழி'

'தலைக்கனம் புடிச்ச ஆளு'

'திறமை இருக்குங்கற திமிரு'

'எப்போமே நெகட்டிவ்வாத்தான் பேசுவாரு'

'ரொம்ப முசுடு..'

'மின்னுவதெல்லாம் பொன்னல்ல'

காரியத்துல கண்ணா இருப்பாரு...செல்ஃபிஷ்'


இப்படியெல்லாம் கிளம்பும் பேச்சுக்களில் பல சமயங்களில் எவ்வித உண்மையும் இருப்பதில்லை..  இப்படியெல்லாம் யார் குறித்தாவது பேச்சு கிளம்பினால், அவர் பிறர் பொறாமைப்படும் அளவிற்கோ, அச்சுறுத்தும் வகைக்கோ செயல்படுகிறார் என்றும், சுற்றி இருப்பவர்களின் மறைமுக நிர்பந்தங்களுக்குப் பணிய மறுக்கிறார் என்றும் புரிந்துகொள்ளப் பழகிவிட்டேன்.


'இளையராஜா தலைக்கனம் பிடித்தவர்' என்று பேசப்பட்டபோதும், அவர் குறித்து பரிதாபமே எஞ்சியது -இத்தனை திறமைகளுடன் தவறான மனிதர்கள் சூழ இருக்கிறாரே என்று. இப்போது ஏ.ஆர்.ரகுமானைக் குறிவைத்திருக்கிறார்கள். 


இப்படியெல்லாம் களங்கம் கற்பித்துவிட்டால், அவரை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுகிறார்கள் போல; ஆம். ஏ.ஆர்.ரகுமானுக்கு வரக்கூடிய வாய்ப்புக்களை தடுத்துவிடலாம் தான். ஆனால், அப்படித் தடுக்கப்பட்ட எல்லா வாய்ப்புக்களும் அவர்  ஏற்கவேண்டிய வாய்ப்புகள் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவருக்கு பயன்படக்கூடிய, அவருக்கு அர்த்தப்படக்கூடிய அந்த ஒரு வாய்ப்பு எதுவென்று அவர் மட்டுமே அறிவார்; அந்த வாய்ப்பின் வாசம் கூட இவர்களின் சிறுமூளைக்கு எட்டாது என்பதே உண்மை.


சற்று உற்று நோக்கினால், சில விடயங்களை நீங்கள் கவனிக்கலாம்.


வெறும் களங்கம் கற்பிப்பவர்களிடம் ஒரு ஒட்டுமொத்த மேடையையுமே தந்து பாருங்கள்? அதை வைத்து மகா கேவலமான ஒரு output ஐ தருவார்கள்; அவர்கள் அதில் செய்வதெல்லாம், தங்களுக்கு வேண்டியவர்கள் கூட்டத்தை வைத்து, அவர்களுக்கு அவர்களே பேச வைத்துக்கொள்வது மட்டும் தான்.  இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும்: கூட்டத்தை வைத்து, ஒரு திறமைசாலிக்கு என்னவெல்லாம் மரியாதைகள் கிடைக்குமோ அதையெல்லாம் அவர்கள் மீட்டுருவாக்கம் தான் செய்வார்கள். ஆனால், அந்தத் திறமைசாலி என்னவெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் அதே கூட்டத்தை வைத்து  செய்ய முடியாது. அதற்குத் திறமை வேண்டும். அதனால், தான் எப்போதும் 'கூட்டம்' விரும்பியாகவே இருக்கிறார்கள். கூட்டத்துடன் இயங்கி இயங்கியே தனித்தியங்கும் ஆற்றலை விட்டு வெகு தொலைவுக்கு சென்றுவிடுகிறார்கள். 

 

அதே நேரம், இதுபோன்ற பிறரது survival tacticகளால் திறமைசாலிகள் தனித்தே இருக்க வேண்டி  நேர்ந்து விடலாம். கூட்டத்தால் தனிமைப்படுத்தப்படுவது ஒரு பிரச்சனை தான்; ஆனால், அது முதல் முறை மட்டும் தான். அந்தத் தனிமையை எதிர்கொள்ளத் துவங்கித்தான் அவர்கள் மகோன்னதப் படைப்புகளை உருவாக்குகிறார்கள்.  The more they are isolated, the more they acquire skills. உண்மையில் தனிமைப்படுத்துதல் என்பது எத்தனைக்கெத்தனை சவாலோ அத்தனைக்கத்தனை அது பலனளிக்கக்கூடியதும் கூட. அசலான திறமைசாலிகள் இந்த வாய்ப்புக்களையெல்லாம் விடவே மாட்டார்கள்.


ஆக, இந்தக் களங்கம் கற்பிப்பவர்கள் தடுப்பது, திறமைசாலிகள் ஏற்க விரும்பாத வாய்ப்புகளைத்தான். அதைச் செய்துவிட்டு அவர்கள் அடையும் குதூகலமே அவர்களின் அறியாமைக்கு சாட்சி. 


நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விழைவதெல்லாம், யார் பெயருக்காவது களங்கம் ஏற்படும் விதத்தில் பேச்சு கிளம்பினால், அவர் பிறர் பொறாமைப்படும் அளவிற்கோ, அச்சுறுத்தும் வகைக்கோ செயல்படுகிறார் என்றும், சுற்றி இருப்பவர்களின் மறைமுக நிர்பந்தங்களுக்குப் பணிய மறுக்கிறார் என்றும் புரிந்துகொள்ளப் பழகிவிடுங்கள் என்பதைத்தான். 


இவ்வுலகில், திறமைகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதற்கு இறைவனின் அருள் வேண்டும்; இதன் பொருள் என்னவென்றால், பிரபஞ்ச இயக்கத்தில் திறமைகளுக்கு ஏதேனும் உயரிய நோக்கங்கள், காரணங்கள் இருக்கும் என்பதுதான். பல கோடி பேர்களின் நுகர்வுப் பலனுக்காய் ஒரு சிலருக்கு இறைவனின் தூதுவர்களாய்த் திறமைகள் அளிக்கப்படும்.   நுகர்வோரும், இறைவனின் தூதுவர்களும் அவரவர் பிரபஞ்ச இடங்களை உணர்ந்திருக்கும் பட்சத்தில், இது போன்ற இடை வீணர்களின் வார்த்தைகள் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை  என்பதே நண்பர்களுக்கு என் பரிந்துரை.


Wednesday, 16 August 2023

வாசகசாலையின் 78வது இதழில் எனது சில கவிதைகள்

வாசகசாலையின் 78வது இதழில் எனது சில கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. வாசித்துவிட்டுக் கருத்துக்கள் பகிருமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

எனது கவிதைகளைத் தேர்வு செய்த வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.


http://www.vasagasalai.com/ram-prasath-kavithaigal-vasagasalai-78/


குற்ற உணர்வின் ஆலோசனை - கவிதை



மூன்று சென்ட் இடத்தில்

இரண்டு சென்டில் வீடு கட்டினேன்...

எஞ்சிய ஒரு சென்டில்

மரங்கள் நடுமாறு

ஆலோசனை தந்துவிட்டுப் போனது

தன் இரண்டு சென்ட் நிலத்தில்

இம்மியளவும் இடம் மிச்சமில்லாமல்

வீடு கட்டியிருக்கும்

பக்கத்து வீட்டுக் குற்ற உணர்வு..


 - ராம்பிரசாத்


**********************************


குளிர் விரட்டி - கவிதை


குளிர் விரட்டியபடி

தன் ஆயுளை

எண்ணிக்கொண்டிருக்கும்

விறகுக்கட்டை

இறுதித்தருணங்களில்

தனக்குப் பின்

குளிர் விரட்டுவது யாரென

அலைபாய்கிறது

ஒரு தீ கங்கென...


 - ராம்பிரசாத்


*****************************

முனைப்பின் தீவிரம் - கவிதை



இந்த உலகம் இப்படித்தானென

முன்பே தெரிந்திருப்பின்

இந்த உலகுக்கே வராமலொன்றும்

இருந்திருக்கப்போவதில்லை....


கொஞ்சம் தயாராக

வந்திருக்கலாம்..

அவ்வளவுதான்...


 - ராம்பிரசாத்


*****************************


ஹல்க்கின் சாபங்கள் - கவிதை


சூப்பர் மேன் என்றும்,

ஸ்பைடர் மேன் என்றும்,

தாங்கள் நினைத்தது

மலையைப் புரட்டும்,

கண்டங்கள் பாயும்,

ஹல்க்கைத்தான்

என்று தெரிந்துகொள்ள,

சூப்பர் மேன் என நினைத்தவர்களுக்கு

பத்து வருடங்களும்,

ஸ்பைடர் மேன் என நினைத்தவர்களுக்கு

இருபது வருடங்களும்

பிடிக்கலாம்...


இந்தப் பத்து இருபது வருடங்களுக்கு

ஹல்க் என்று கைகாட்டப்படும்

யார் யாரையோ

வறட்சி மிகுந்த புன்னகையுடன்

எட்ட நின்று

ஹல்க் வேடிக்கை பார்க்கையில்

வேறு யாருக்கும்

எவ்விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை...


இன்னும் சொல்லப்போனால்,

'ஹல்க்கை இப்போதாவது

மேடையேற்றினோமே'

என்று ஹல்க்குடனே அமர்ந்து

உருகி மாய்கிறார்கள்....


 - ராம்பிரசாத்


Monday, 14 August 2023

சில கவிதைகள்

 மனைவியின் பாய் பெஸ்டி - கவிதை

தன் மனைவியின்
பாய் பெஸ்டியை
ஒரு கணவன்
தேடத்துவங்கினான்...
அவளின் வாட்ஸாப் ஹேக் ஆனது..
முகநூலில் இன்னுமொரு போலிக்கணக்கு
நட்பு வட்டத்தில் இணைந்தது...
நள்ளிரவில் குரட்டைச்சத்தங்கள் செயற்கையாயின...
மனைவியின் பள்ளிக்கால புகைப்படங்கள்
பரணிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன....
மனைவியின் நெருங்கின தோழிகளின் புகைப்படங்களுக்கு
விருப்பங்கள் தெரிவித்தவர்கள் எண்ணப்பட்டார்கள்....
திடுமென முன்னறிவிப்பின்றி
வீட்டுக்குள் நுழைந்துவிட்டு
என்ன காரணம் சொல்வதென தடுமாறினான் அவன்...
பயன்படுத்திக்கொண்டிருந்த கணிணியின்
பிரௌசர் ஹிஸ்டரி பீராயப்பட்டது....
எங்கெங்கெல்லாமோ தேடியும்
இறுதியில்,
திருமண ஆல்பத்தில் தான் சிக்கினான்
அவன் மனைவியின் பாய் பெஸ்டி....
அதில்
பட்டு வேட்டி,
பட்டு சட்டையில்,
அவளருகே
அந்த பாய் பெஸ்டி அமர்ந்திருக்க,
அவனது சடலம்
வரதட்சணை சீர்வரிசைகளில்
கிடந்தது...
- ராம்பிரசாத்
*********************************
பழி பாவங்களின் நிழல் - கவிதை

'ஷாப்பிங்' முடித்தவர்களை
விழுங்கியபடி அந்த உயர் ரக கார்
சாலையில் நழுவ எத்தனிக்கையில்
கைக்குழந்தையுடன் ஓடிவந்து
ஜன்னலோரம் கையேந்துகிறாள் பெண்ணொருத்தி...
காசு தராமல் செல்பவர்களை
கடுஞ்சொற்களால் ஏசுகிறாள்...
காதலிப்பதாய் வாக்களித்து வயிற்றை நிரப்பிவிட்டு
நழுவிச்சென்றவனை ஏசியபோது கூட
அத்தனை மோசமாக வார்த்தைகளை
அவள் பயன்படுத்தியிருக்கவில்லை...
இப்படித்தான்,
அவளுக்குள்ளிருந்த காதலியை
அவளுக்கு அறிமுகம் செய்த
ஒற்றைக் காரணத்திற்காய்
பழி பாவங்களின் நிழல் கூட விழாமல்
தப்பித்துவிடுகிறார்கள்
அனேகம் கயவாளிக் காதலன்கள்...
- ராம்பிரசாத்
*********************************

முதல் முத்தம் - கவிதை
ஆயிரம் கவிதைகள் எழுதிவிட்ட பிறகு
முதல் கவிதை எதுவென்று கேட்டார் ஒருவர்.
தனக்கு வந்து முதல் முத்தத்தை
நினைவில் வைத்திருக்கும் குழந்தையும்
உண்டா என்ன?
- ராம்பிரசாத்
All reacti

Tuesday, 1 August 2023

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்....

 சமீபத்திய நீயா நானாவில் 'திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்' நிகழ்ச்சி அருமையாக இருந்தது.. அது குறித்து அப்போதே எழுத நினைத்தேன்.. வாய்ப்பமையவில்லை..

Marriage is no longer worth trying என்ற இடத்திற்கு வந்துவிட்டோம். ஆண் - பெண் இருபாலரில் இது பெண்களுக்கு மிக நன்றாகவே புரிந்திருக்கிறது.. ஆண்களுக்கு இன்னும் புரியவில்லை.  பலர், ஆண் உலகம் பெண்களுக்கென உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்புகளுக்கு எவ்வித பிசகும் இல்லாமல் பெண்கள் இருக்கிறார்கள் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 

இன்றைக்கு அங்குமிங்கும் நடக்கும் திருமணங்களும் பெரும்பாலும் பெண்களின் terms படி நடப்பவைகளே. அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதுவும் கூட ஒரு வித அறியாமை அல்லது சமூக வழமையின் பிரகாரம் தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக்கொண்டதன் பக்கவிளைவு என்றே கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்களிடமே கூட நெருங்கி அமர்ந்து பேசினால், 'ஏதோ தெரியாம பண்ணிட்டேன்' என்கிற ரீதியில் தான் பதிலளிக்கிறார்கள்.

இது யாருடைய தவறும் அல்ல என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு சமூக இயக்கமாகவே திருமணங்கள் தேவையற்ற ஒரு இடத்திற்கு நாம் நகர்ந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். There are other ways we could have handled it, ஆனால், அது நடக்கவில்லை  என்பதில் தான் ஒரு சமூகமாக நாம் தோல்வியடைந்திருக்கிறோம். என்பதை நாம் எல்லோருமே ஒரு மனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போதிருக்கும் சூழளில் நமக்கெல்லாம் தேவை prenuptial agreements/ வாடகைத்தாய் முறைகளை சட்டப்பூர்வமாக்குவது/  திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றலை சட்டப்பூர்வமாக்குவது / விவாகரத்துக்களை normalise செய்வது  போன்றவைகளே.


நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்:


1. நன்றாக ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள்; அந்த உணவு உங்கள் சொந்த உழைப்பின் ஊதியத்தில் பெற்றதாய் இருக்க வேண்டும். 

2. Be fit. Fitness ல் ஆர்வம் செலுத்துங்கள். அதற்கென நேரம் செலவிடுங்கள்.

3. அறிவுசார் தளங்களில் இயங்கத்துவங்குங்கள்; மன ஆரோக்கியத்திற்கு இது அத்தியாவசியம்.

4. Earn the opportunity for sex; அதாவது, உடலுறவுக்கான வாய்ப்பை எதிர்பாலினம் உங்களுக்கு தர விரும்பும் இடத்தில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள்.


இவ்வளவு தான். திருமணங்கள் இனி அருகித்தான் போகும்; ஏனெனில், சமூக நலனுக்கு ஒவ்வாதவைகள் அழிவது தான் நியாயம்.


Monday, 3 July 2023

திருமதி சுமித்ரா அம்மையார் நினைவு சிறுகதைப் போட்டி-2023

 கதிர்'ஸ் பல்சுவை மின்னிதழ் - இளவல் ஹரிஹரன் இணைந்து நடத்திய அன்னை திருமதி சுமித்ரா அம்மையார் நினைவு சிறுகதைப் போட்டி-2023 ல் எனது சிறுகதையான 'வாடகைத்தாய்' தேர்வாகியிருக்கிறது என்பதை இப்பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த தேர்வுக்குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.







Friday, 30 June 2023

Lust Stories - 2

Lust Stories -2 ல் இருந்த நான்கில் எனக்கு உருப்படியாய்த் தோன்றுவது மிருனால் தாக்கூர் நடித்த முதலாவது தான். 




அதில் வரும் அந்தப் பாட்டி சொல்வது அத்தனையும் happy path மட்டுமே என்பது என் வாதம். பெரும்பான்மையோர்க்கு happy path நிகழ்வதில்லை என்பதே இந்தப் பகுதியை எல்லோருக்குமானதாக்குவதில்லை.

இக்காலத்தில் திருமணங்களே முப்பதுகளின் மத்தியில் தான் நடக்கின்றன. இந்த வயதில், ஆரோக்கியமான உடல், வசீகரமாகவும் வைத்திருக்க மிகப்பல  மெனக்கெடல்கள் தேவைப்படுகின்றன. அதற்கெல்லாம் வணங்கக்கூடிய உடல் இங்கே பலருக்கும் வாய்ப்பதில்லை என்பதே நிஜம். திருமணம், தாய்மை ஆகிய மைல்கற்கள்களுக்குப் பிறகு உடல் அழகைத் தக்க வைப்பது பலருக்குக் கடினமாகத்தான் இருக்கிறது. இந்த இடத்தில், உடல் அழகு, வனப்பு மட்டுமே காமத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதில்லை என்று யாரேனும் வாதம் செய்யலாம். உண்மை தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவ்விதமான விருப்பம் கொள்ள, குறிப்பிட்ட துணையிடம் ஏதேனும் ஒன்றாவது பிடித்திருக்க வேண்டும்; அது அந்தத் துணையை ரசிக்க வைக்க வேண்டும்; அது அவ்வுறவைப் படுக்கை வரை நீட்டிப்பதில் ஆட்சேபிக்காதவாறு அமையவேண்டும். அதற்கு அது இயல்பிலேயே மரியாதை, மற்றும் மதிப்பை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். அறிவுப்பூர்வமான பேச்சில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். நகைச்சுவைப் பேச்சில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். நடனத்தில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். கட்டான உடலில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். பயண அனுபவங்கள் சேகரிப்பவர்களிடம் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதிலெல்லாம் ஒன்றே ஒன்று பொதுவாக இருந்திருக்கிறது.

ஒரு ஆண் தன்னிடம் flirt செய்யும் போது, அந்த courtshipஐ விரும்பும் பெண்கள் அவனைத் துணையாகத் தேர்வு செய்வதில்லை. தன்னிடம் மட்டும் தான் flirt செய்கிறானா என்று பார்க்க முயல்கிறார்கள். ஏன்? ஏனெனில், அவன் எல்லா பெண்களிடமும் flirt செய்கிறான் என்னும்போது, அது தனக்கானது இல்லை என்றெண்ணுகிறார்கள். அது அவன் மீதான மரியாதையை, மதிப்பைக் குறைத்துவிடுகிறது. இதுதான் காரணம். 

வசீகர உடல் தோற்றம் இல்லாதவர்க்கும் உறவுகள் வாய்ப்பது வேறெப்படி சாத்தியமாகிறது? 

புத்திசாலித்தனமாகப் பேசுபவராக இருந்து intellectual companionship வழங்குவதன் மூலமாக எதிர்பாலினத்திடம் மரியாதை, மதிப்புடன் கூடிய ஈர்ப்பைச் சம்பாதிப்பவராக இருந்தால் சாத்தியமாகிறது. பெண்ணோ, பையனோ, புத்திசாலித்தனமான பேச்சில் மயங்கும் ஆளாக இருப்பின் இவ்வழி பொருந்தும். அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பது கடினம். ஆக, சிரிக்க வைப்பவராக இருப்பதன் மூலமாக எதிர்பாலினத்திடம் மரியாதை, மதிப்புடன் கூடிய ஈர்ப்பைச் சம்பாதிப்பவராக இருந்தால் சாத்தியமாகிறது. எதிர்பாலினத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதன் மூலமாக, அவரிடமிருந்து மரியாதை, மதிப்பைப் பெற்று அதன் மூலம் ஈர்ப்பைப் பெறுபவராக இருந்தால் சாத்தியமாகிறது; பணம் படைத்தவர்கள் இந்த வழியைக் கைகொண்டு நான் பார்த்திருக்கிறேன்.

ஆக, வெறும் உறவுகள் தான் எனினும், அதற்கு அடித்தளமாவது மரியாதை, மதிப்பு போன்றவைகள் தாம்.

ஆனால், நிஜம் இப்படி எளிமையாக அமைவதில்லை. 

நல்ல வருமானம் ஈட்டக்கூடிய துணை, சமூக அந்தஸ்து, வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற இடங்களில், இவைகளே பிரச்சனையாகிவிடுகின்றனவோ என்று யோசிக்க வைக்கிறது இன்றிருக்கும் சமூகச் சூழல். இரு பாலரிலும் இது நடக்கிறது. அடுத்த நூல்களிலிருந்து ஐடியாக்களைத் திருடி, சொந்தப் பெயரில் நூல் வெளியிட்டுக்கொண்டார் என்ற காரணத்திற்காய், கணவர் மீது மரியாதை இழந்து விவாகரத்து பெற்ற பெண்களை நான் பார்த்திருக்கிறேன். உண்மையில், அந்தப் பெண்கள் மீது இருந்த மரியாதையை விவாகரத்துக்கான இந்தக் காரணம் பன்மடங்காக்க மட்டுமே செய்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால், பொதுச்சமூகம் அந்தப் பெண்களை 'இதுக்கெல்லாமா விவாகரத்து பண்ணுவாங்க' என்று குறை சொல்லும் தான். படுக்கையறைக்குள் சமூகத்துக்கு என்ன வேலை? 

போலவே, பெண்களிலும் பலர் புகுந்த வீட்டின் செழுமையில் மூழ்கி, முழுச்சோம்பேறிகளாகி விடுவது, அவர்தம் கணவர்களான ஆண்கள் அவர்கள் மீது மரியாதை மதிப்பிழந்து போகச் செய்துவிடுகிறது.. சென்னையில் ஒரு மருத்துவரைத் தெரியும். இவர் பார்க்க அரவிந்தசாமி போல இருப்பார். கெட்டப்பழக்கங்கள் ஏதும் இல்லை. ஐந்தடி தான் உயரம். பெற்றவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் அதற்கேற்றார்போல் பெண் பார்த்துத் திருமணம் செய்தார்கள்.அந்தப் பெண் இவர் அளவுக்கு இல்லை. ஒரு குழந்தை பிறந்த பிறகு இன்னும் குண்டாகிவிட்டார். ஒரு கட்டத்தில் வீட்டு டிரைவருடன் ஓடிவிட்டார். 'டாக்டர் சம்சாரம் டிரைவரோட ஓடிடிச்சு' என்று பேசினார்கள். இந்த மருத்துவர் அலட்டிக்கொள்ளவே இல்லை. மேலோட்டமாகப் பார்க்க, டாக்டர் தான் சரியில்லை என்ற தோற்றம் தரலாம். மருத்துவரின் மனைவியுடன் மருத்துவர் நெருக்கமாக இல்லாமல் இருந்ததற்கு அந்த மனைவியே கூட காரணமாக இருக்கலாம் என்றெல்லாம் யாருக்கும் யோசனை போகாது. வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வந்துவிட்டால், எதையுமே புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? ஆனால், பலர் இப்படித்தான் இயங்குகிறார்கள். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள நேரமிருந்தும், ஒரு விதமான சோம்பல் இவர்களை ஆட்கொண்டு விடுகிறது. குருட்டுச் சமூகத்தின் வழமையை, இவர்கள் தங்கள் தவறுகளை மறைக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், இது எவ்வகையிலும் இவர்களை எவ்வித மரியாதைக்கோ, மதிப்புக்கோ தகுதியானவர்களாக்குவதில்லை. 

திருமணம், குடும்பம் என்ற பெயரில் யாரும் யாரையும் எதற்குமே நிர்பந்தித்து விட முடியாது. காமம் அற்புதமானதுதான். ஆனால், மரியாதையும், மதிப்பும் இல்லாத இடத்தில், இக்குறும்படத்தில் சொல்வது போலெல்லாம் யாராலும் முழு மனதுடன் நடந்து கொள்ள முடியாது..