என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 1 August 2023

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்....

 சமீபத்திய நீயா நானாவில் 'திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்' நிகழ்ச்சி அருமையாக இருந்தது.. அது குறித்து அப்போதே எழுத நினைத்தேன்.. வாய்ப்பமையவில்லை..

Marriage is no longer worth trying என்ற இடத்திற்கு வந்துவிட்டோம். ஆண் - பெண் இருபாலரில் இது பெண்களுக்கு மிக நன்றாகவே புரிந்திருக்கிறது.. ஆண்களுக்கு இன்னும் புரியவில்லை.  பலர், ஆண் உலகம் பெண்களுக்கென உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்புகளுக்கு எவ்வித பிசகும் இல்லாமல் பெண்கள் இருக்கிறார்கள் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 

இன்றைக்கு அங்குமிங்கும் நடக்கும் திருமணங்களும் பெரும்பாலும் பெண்களின் terms படி நடப்பவைகளே. அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதுவும் கூட ஒரு வித அறியாமை அல்லது சமூக வழமையின் பிரகாரம் தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக்கொண்டதன் பக்கவிளைவு என்றே கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்களிடமே கூட நெருங்கி அமர்ந்து பேசினால், 'ஏதோ தெரியாம பண்ணிட்டேன்' என்கிற ரீதியில் தான் பதிலளிக்கிறார்கள்.

இது யாருடைய தவறும் அல்ல என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு சமூக இயக்கமாகவே திருமணங்கள் தேவையற்ற ஒரு இடத்திற்கு நாம் நகர்ந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். There are other ways we could have handled it, ஆனால், அது நடக்கவில்லை  என்பதில் தான் ஒரு சமூகமாக நாம் தோல்வியடைந்திருக்கிறோம். என்பதை நாம் எல்லோருமே ஒரு மனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போதிருக்கும் சூழளில் நமக்கெல்லாம் தேவை prenuptial agreements/ வாடகைத்தாய் முறைகளை சட்டப்பூர்வமாக்குவது/  திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றலை சட்டப்பூர்வமாக்குவது / விவாகரத்துக்களை normalise செய்வது  போன்றவைகளே.


நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்:


1. நன்றாக ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள்; அந்த உணவு உங்கள் சொந்த உழைப்பின் ஊதியத்தில் பெற்றதாய் இருக்க வேண்டும். 

2. Be fit. Fitness ல் ஆர்வம் செலுத்துங்கள். அதற்கென நேரம் செலவிடுங்கள்.

3. அறிவுசார் தளங்களில் இயங்கத்துவங்குங்கள்; மன ஆரோக்கியத்திற்கு இது அத்தியாவசியம்.

4. Earn the opportunity for sex; அதாவது, உடலுறவுக்கான வாய்ப்பை எதிர்பாலினம் உங்களுக்கு தர விரும்பும் இடத்தில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள்.


இவ்வளவு தான். திருமணங்கள் இனி அருகித்தான் போகும்; ஏனெனில், சமூக நலனுக்கு ஒவ்வாதவைகள் அழிவது தான் நியாயம்.