Tuesday 13 September 2011
உதிரும் மின்மினிகள்
உதிரும் மின்மினிகள்
ஆலமரத்தினடியில்
மழைக்குச் சில
ரயில் நிலையங்களும்
ஒதுங்கிவிடுகின்றன...
இரவு வானத்தைத் துளைத்துப்
புகும் பால்வெளிகளை
மின்மினியென நினைத்து
கவர்ந்துவிடுகின்றன
ஆலம் இலைகள்...
இலைகளினின்றும் சொட்டுசொட்டாய்
உதிரும் மின்மினிகளை
கவனமாய்ச்சேகரிக்கிறது
தெளிந்த குட்டையொன்று...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)