என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 13 September 2011

கவனிப்பாரின்றி



கவனிப்பாரின்றி


சுற்றிலும் இருளாய்
மத்தியில் வட்டவொளியென‌
இரவைப் போலவே
அரிதாரம் பூசியிருந்தது
அந்த ரயில் நிலையம்...


அனாதையாய் ரயில் நிலையத்திற்கு
காவலாய் நிற்கின்றன சில‌
மின் கம்பங்கள் அருகருகே...


மின் கம்பங்களின் தலையில்
வட்ட ஒளியைச்சுற்றிச்சுற்றி
விட்டில் பூச்சிகள் ரீங்கரிக்க‌
கீழே குட்டைத்தண்ணீரில்
குவிந்துகிடக்கிறது பாலொளி
கவனிப்பாரின்றி...


- ‍ ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)