Tuesday 13 September 2011
யாருமற்ற தண்டவாளம்
யாருமற்ற தண்டவாளம்
கவனிப்பார் யாருமின்றி
தனித்திருந்தது தண்டவாளம்...
இரவு வானத்தை துளையிட்டு
பால் வெள்ளை வண்ணத்தில்
திருட்டுத்தனமாய் நுழைந்த ஒளி
தண்டவாளத்தின் குறுக்கே விழுந்துகிடந்தது
தற்கொலை செய்ய இருக்கலாம்...
அதன் காரணங்களைப் பற்றி
யாதொரு அசூயையுமின்றி
மெளனித்திருந்தது இரவு...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)