என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 4 April 2023

வெற்றிமாறனின் "விடுதலை" - கலந்துரையாடல்

 வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படம் குறித்த கலந்துரையாடல்...

நிகழ்வுக்கு அழைத்த Jesu SA அவர்களுக்கு எனது நன்றிகள்!!...
May be an image of 5 people and text that says 'Tube Konal Maanal PANEL DISCUSSION VIDUTHALI (Tamil Movie) Part 1 Ilango Meyyappan Ajoy Kumar Sundar Pasupathy Ram Prasath Thursday 6.30PM,PST @konalmanal YouTube Channel Jesu Sundaramaran MadewithPosterMyWall.com வெற்றி மாறன் இளையராஜா'
Like
Comment
Share

Monday, 6 March 2023

Voice of men 360 - உயர் மதிப்பு மிக்க ஆணும் பெண்ணும் ஏன் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை?


 Voice of men 360 - உயர் மதிப்பு மிக்க ஆணும் பெண்ணும் ஏன் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை?


Voice of men 360 வாயிலாக "உயர் மதிப்பு மிக்க ஆணும் பெண்ணும் ஏன் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை?" என்ற தலைப்பில் பேசுகிறேன். அமெரிக்காவைச் சேர்ந்த வனிதாமதி வரதராஜா, கனடாவைச் சேர்ந்த செளந்தர்யா, இலங்கையைச் சேர்ந்த வேல் ராமர் மற்றும் கிருத்திகா ஆகியோருடன் வரும் சனிக்கிழமை மார்ச் 11, 2023 அமெரிக்க நேரம் காலை 10 முதல் 12 வரை இந்த விவாத அரங்கு இணைய வழியில் நடைபெறுகிறது.


திருமண சம்பந்தங்கள்

கலாச்சார போக்குகள்

சமூக அழுத்தங்கள்

இணைந்து தொடர்ந்து வாழுதல்

செவிமடுத்தல், புரிந்துகொள்ளல், முடிவெடுத்தல்

ஆகிய தலைப்புக்களில் உரையாட இருக்கிறோம்.

ஏற்கனவே சொன்னதுதான். ஆண்களின் உடல் மற்றும் மன நலம் சார்ந்த கருத்துக்கள் பேசப்படுவதால் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை முன்மொழியும் செயல்பாடு அல்ல இது. பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் போன்ற கருத்துக்களுடன் உருவாகும் நாளைய சமூகத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும், ஆரோக்கியமான இருபாலருக்கும் நன்மை பயக்கும் வகையில் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் விதமாக ஆண் உலகின் செயல்பாடுகள், இயக்கங்கள் எவ்விதம் அமைய வேண்டும் என்பதான நோக்கில் தான் என் வரையில் விவாதிப்பதாக உத்தேசம். இந்த நுண்ணிய பார்வையை முன்வைக்கத்தான் இதன் நிறுவனரான ஷிவம் வேலாயுதம் என்னை அழைத்திருக்கிறார். அதன் பேரில் கலந்து கொள்ள இருக்கிறேன். 


வாய்ப்புள்ள நண்பர்கள் இணையவழியில் கலந்து கொள்ளலாம்.


Thursday, 2 March 2023

கோணங்கி விவகாரம்

 கோணங்கி விவகாரம்


இணையத்தில் கோணங்கி பேசுபொருளாகியிருக்கிறார், மிகவும் மோசமான வழியில்.. எனக்குக் கோணங்கியையே அவரது அமைப்பையோ தெரியாது.. கோணங்கியை நான் வாசித்ததுமில்லை... ஆயினும், கோணங்கி விவகாரம் உண்மையெனில்,  தன்னை, தன் சிந்தையைச் சீர் செய்யும் நோக்குடன், இலக்கியத்தின் பால் திரும்பும்,  இள ரத்தங்களை தவறாகப் பயன்படுத்தி திசை திருப்புவது கண்டனத்துக்குரியது.. 

I think, going forward, 

இலக்கியத்தின் பால் திரும்புபவர்களின் கவனத்திற்கென்று Do's and Don'ts போல சில படிப்பினைகளை முன்மொழியக்கூடிய இடத்திற்கு நாம் வந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன்.


1. கோணங்கி போல் இள ரத்தங்களை பாலியலின் பக்கம் திசை திருப்பி காயடிப்பது ஒரு புறம்.

2. இதே காயடிப்பதை அமைப்பு ரீதியிலும் சிலர் செய்கிறார்கள்.. சில அமைப்புகளில் ஒரு பொதுவான ஒழுங்கைக் காண இயலும்...


அமைப்பு லாப நோக்கற்ற ஒன்று என்று தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும். இங்கு தான் எல்லா பிரச்சனைகளும் துவங்குகிறது. லாப நோக்கு இல்லை என்பதால், யாருக்கும் ஊதியம் இல்லை. ஆனாலும் அமைப்பை நடத்த மனித ஆற்றல் தேவைப்படுகிறதே? அதற்கு என்ன வழி?


volunteering

இதுதான் வழி. இந்த volunteering ஐயும் unconditional ஆகச் செய்ய யாருக்கும் ஆர்வமில்லை. volunteering என்பது ஒரு சொல்லாடல் மட்டுமே. மற்றபடி, volunteering செய்பவர்கள், தங்களை promote செய்து கொள்ளும் நோக்கத்தில் தான் இதற்குள் வருகிறார்கள்.. அமைப்புக்கான, சஞ்சிகைகள், நிகழ்ச்சிகள் போட்டிகள் என அனைத்தையும் வாரி எடுத்துச் செய்கிறார்கள். அதற்கெல்லாம் மிகப்பல மணித்தியாலங்கள் செலவிடுகிறார்கள். அதெல்லாம் சரிதான்.. ஆனால் இதற்கெல்லாம் இலக்கிய அறிவு தேவை அல்லவா? அங்கு தான் பிரச்சனை.

தங்களுக்கு இருக்கும் கனிந்திடாத, முதிர்ந்திடாத எழுத்தையே 'இலக்கிய அறிவென்று' இவர்களே பிரகடனப்படுத்திக்கொண்டு விடுவார்கள்.. இதற்கு அமைப்பு ஏதும் சொல்வதில்லை.. ஏனெனில், அமைப்பை நடத்துபவர்கள் யாரும் இலக்கிய ஞானத்துடன் இருப்பதில்லை... இலக்கிய தரத்துடன் எழுதினால் இவர்களுக்குப் புரியவும் செய்யாது என்பதுதான் உண்மை... சரி, பார்வையாளனாவது ஏதாவது மறுதலிப்பானா என்று பார்த்தால் அதுவும் இல்லை...  உண்மையில் அவனுக்கு இலக்கியம் குறித்தோ, இலக்கிய உலகம் குறித்தோ, வாசிப்பு குறித்தோ எவ்விதப் பார்வையோ, புரிதலோ இருக்காது... 

சரி, இவர்களுக்கு நடுவில் இலக்கிய ஞானத்துடன் எவனாவது வந்தால் என்னாகும்? ஒன்றுமில்லை.. அவனை ஓரம் கட்ட இவர்களின் அஸ்திரம் volunteering hours தான்.. 

உதாரணமாக, இந்தக் கூட்டத்திற்குள் ஒரு புதுமைப்பித்தன் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.. புதுமைப்பித்தனும் இவர்களும் சந்திக்கும் சந்திப்புகளில் அடுத்தவர்களது ஆக்கங்களைப் புதுமைப்பித்தன் கண்டிப்பாகப் புகழ்ந்தே ஆக வேண்டும். அப்படிச் செய்தால், தான் பதிலுக்கு இவர்கள் புதுமைப்பித்தன் ஆக்கத்தை அதே அளவில் புகழ்வார்கள். புதுமைப்பித்தன் அங்கே இலக்கிய வாசம் தேடிவிட்டு ஒன்றும் அகப்படாததால் அமைதியாக இருந்தால், பதிலுக்கு அதே அமைதி புதுமைப்பித்தன் ஆக்கங்களுக்கும் அங்கேயே கிடைக்கும், சில கள்ள மெளனங்களுடனும், கள்ளச் சிரிப்புகளுடனும்.. புதுமைப்பித்தன்கள் இந்த இடத்தில் அமைப்பை விட்டு விலகிவிட்டால், குறைந்தபட்சம் அவர்கள் தங்களது மன அமைதியையாவது தக்க வைக்கலாம். 

இந்தப் புள்ளியில் வெளியேறாத புதுமைப்பித்தன்கள் அடுத்த கட்ட பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டும்.. உடன் அமைப்பில் இருக்கும் மற்றவர்கள் அமைப்புக்கு முன்பை விட அதிக நேரம் ஒதுக்கி volunteering ஐ intense ஆக்குவார்கள். ஏனெனில், இவர்களால் முடிந்ததும் அது ஒன்று தான்.. அதே அளவிலான volunteering ஐ புதுமைப்பித்தன் செய்தால் அவர் எங்கே இலக்கியம் படைப்பது? எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரங்கள் தானே.. ஆக புதுமைப்பித்தனால் அத்தனை நேரம்volunteer செய்ய முடியாமல் போகும்.. அமைப்புக்கு, இலக்கிய ஞானமா தேவை? volunteering தானே தேவை.. ஆக, இவ்விதம் volunteer hours அதிகமாக்கியவர்கள் அமைப்புக்குள் பதவிகள் தந்து ஊக்குவிக்கப்படுவார்கள்... அடுத்த சந்திப்பில், இலக்கிய ஞானமே அற்ற ஒருவர் சொல்வதைச் செயல்படுத்துபவராக புதுமைப்பித்தன் மாற வேண்டி வரும்... அல்லது புதுமைப்பித்தன் முதுகின் பின்னால், குறை சொல்லத்துவங்குவார்கள்..அல்லது வேறொரு நகுலனை வரவழைத்து வேண்டுமென்றே நகுலனுக்கு முக்கியத்துவம் அளித்து புதுமைப்பித்தனை பழி வாங்க முயற்சிப்பார்கள்...

"என் உடல் பொருள் ஆவி அனைத்தும் தமிழுக்கே" என்ற கோஷத்தை அவர்கள் தன் தாய் மொழிக்காகச் சொல்லுவதில்லை என்பது இக்கணத்தில் தெள்ளத்தெளிவாக  புரிந்துகொள்ளலாம்.. உண்மையில் இது போன்ற கோஷங்களை இவர்கள் ஒரு கருவியாகத்தான் பாவிக்கிறார்கள்.. அதன் நோக்கம், தன்னை promote செய்துகொள்வது மட்டுமே..

சரிப்பா... atleast இந்த வாய்ப்புக்களையெல்லாம் பயன்படுத்தி அவர்களாவது இலக்கியம் கற்கிறார்களா என்றால், அதுதான் இல்லை... ஆண்டுக்கணக்கில் துவங்கிய இடத்திலேயே நின்றுகொண்டிருப்பார்கள்.... இதை எளிதாக ஊர்ஜிதம் செய்யலாம்.. இவர்கள் யாரும் உள்ளூர் இலக்கிய இதழ்களான உயிர்மை, கணையாழி, காலச்சுவடு முதலான இலக்கிய இதழில் எழுதவே மாட்டார்கள்... ஏனெனில், 'படைப்பூக்கம் இல்லை', 'கற்பனை/சிந்தனை வரட்சி' என்றெல்லாம் இவர்களது ஆக்கங்களுக்கு சம்பந்தப்பட்ட இதழ்களிலிருந்து பதில்கள் வரும்.. அதையெல்லாம் இவர்கள் காதும் காதும் வைத்தாற்போல் முயற்சித்துப் பார்த்துவிட்டு, விட்டே விடுவார்கள்... இவர்களால் அதிகபட்சம் முடிவது சுத்தத்தமிழில் எழுதுவதாகவும், பிறமொழிக் கலப்பின்றி எழுதுவதாகவும் தான் இருக்கும்... பார்வையாளர்கள் ஏமாந்தால், அதையே தங்கள் இலக்கிய தகுதியாகச் சொல்லி establish செய்துகொண்டுவிடுவார்கள் .  proof-readerகள் நூல்கள் வெளியிட்டு தங்களை சீரிய எழுத்தாளர்களாக நிறுவிக்கொள்வதெல்லாம் இந்த அமைப்புக்களில் சர்வ சாதாரணம். 

இவர்களிடம் பணம் இருக்கிறது... அதன் பின்னால், வரட்சி பாதித்த பதிப்பகங்கள் நிற்கின்றன... எவ்விதத் தர நிர்ணயமும் இன்றி இவர்கள் நூல்கள் வெளியிட்டுக்கொள்ள இந்தப் பதிப்பகங்கள் உதவும்.... அமைப்புக்களில் இவர்கள் செலவிட்ட volunteering hours க்கு ஈடாக அமைப்புக்கள் இவர்களை 'எழுத்தாளர்கள்' என்று மேடையேற்றி முன்மொழிந்து தங்கள் 'நன்றி நவிலலை' ஆற்றிக்கொள்கிறார்கள்.. அமைப்பில் பங்குபெற்ற எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் 'லாபம்'... இறுதியில் பார்வையாளன், வாசகன் தான் கேனை ஆவான்...

இந்த அமைப்புக்களை நம்பி, இவர்களை இலக்கியவாதிகள் என்று நம்பும் கூட்டத்தை நினைத்தால் தான் பாவமாக இருக்கும்... பணியிடம், வேலைச்சுமை போன்றவைகளை சீராக்கிவிட்டு, எஞ்சிய நேரத்தில் இலக்கியத்தின் பக்கம் முதன் முறையாகத் திரும்பும், இலக்கிய உலகுடன் எவ்விதப் பரிச்சயமோ, வாசிப்போ இல்லாத, ஆழ்ந்த புரிதல் இல்லாத கன்னி வாசகர்களே இவர்களது இலக்கு... 

இப்படியாக வருபவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக ஏமாறுவதில்லை.. ஒரு கட்டத்தில் விவரம் தெரிய வருகையில், கோணங்கியால் பாலியலுக்கு திருப்பப்பட்டவர்கள் போலவே அவர்களும் 'ச்சீய்' என்று தங்கள் வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள்... இது ஒரு மோசமான முன்னுதாரணமாவது மட்டுமல்லாமல், அதன் பிறகு யாருமே இந்தப் பக்கம் வராமல் போகச் செய்துவிடுகிறது என்பது சோகமான உண்மை... இந்தப் புள்ளியிலும் விழிக்காதவர்கள், மிகச்சிறந்த 'அடிமைகளாக' ஆகிறார்கள்... அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... வேறு யாரெல்லாம் இவர்களது இலக்கு? சலூன் கடைகள் போலத்தான்.. முடி கொட்டி வழுக்கை விழுந்தவர்களின் எண்ணிக்கைக்கு நிகராக, பதின்ம வயதில் அடியெடுத்து வைப்பவர்கள் ஒவ்வொரு வருடத்திலும் இருப்பார்கள் தான் அல்லவா? அது போல இலக்கியத்தின் பக்கம் முதன் முறையாகத் திரும்பும் கன்னி வாசகர்கள் ஒவ்வொரு வருடத்திலும் இருப்பார்கள் அல்லவா? 

ஆக, தொடர்ந்து இவர்கள் தங்களைப் promote செய்துகொண்டே இருப்பார்கள்... இலக்கியம் வளர்ந்ததா என்றால் இல்லை...இவர்களாவது தங்களை வளர்த்துக்கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை... 

ஆக, இவ்விதம் தான் பல இயக்கங்கள் இயங்குகின்றன... எழுத்தின் மீது தீராக்காதலுடன், எழுத்தை நேர்மையான வழியில், வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவ்வமைப்புகளிலிருந்தெல்லாம் விலகி இருப்பதுதான் இருப்பதிலேயே இருக்கும் நல்ல உபாயம் என்பது என் வாதம்... 

எல்லாமும் வணிக நோக்கமாகிவிட்ட இனி வரும் காலங்களிலும், இலக்கிய அமைப்புகள் இவ்விதம் இயங்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது... ஆதலால் எழுத்தின் மீது ஈடுபாடு கொண்டு வரும் இளைஞ, இளைஞிகள் சூதனமாக நடந்துகொள்ள வேண்டும். அமைப்புகளை என்ன ஏதென்று கேளாமல் குருட்டாம்போக்கில் நம்பி இறங்கினால் கடும் சேதாரமாகவே வாய்ப்பதிகஃப்ம்... 

போதிய தயாரிப்பு இல்லாமல், போதுமான அவதானம் இல்லாமல், குருட்டாம்போக்கில், உணர்ச்சி வசப்பட்ட மன நிலையில் எழுத்தை, கலை அமைப்புக்களை நம்பி அண்டுபவர்கள் மீது இந்த அமைப்புகள் எவ்விதச் சலுகையும், கருணையும் காட்டுதில்லை... இதுதான் இன்றைய இலக்கிய உலகின் நிலை... 


Sunday, 26 February 2023

Voice of men 360 - காணொளி

 நிகழ்வு இனிதே நடந்தது... காணொளி இங்கே:


Voice of men 360




Tuesday, 21 February 2023

Voice of men 360 - 143rd session


 

இன்றைய தேதியில், சமூகப் பிரச்சனைகளில் கருத்திட்டு பெண்கள் ஆதரவைப் பெற்றுவிடுவது சுலபம்: கண்ணை மூடிக்கொண்டு பெண்கள் என்ன சொன்னாலும் 'சரி' என்று சொல்லிவிட்டால் போதும். அது மிக எளிது. இதைப் பல பேர் செய்கிறார்கள். பல திரைப்படங்கள், குறும்படங்கள் கூச்சமின்றி, எவ்வித சமூகப் பொறுப்புமின்றி, கொஞ்சமும் குற்ற உணர்வின்றிச் செய்கின்றன. அதே போல் கண்ணை மூடிக்கொண்டு ஆணாதிக்கமாகப் பேசி வன்மத்தைக் கக்குவதும் சுலபம். இதையும் முக நூலில் பல இடங்களில் பார்க்கலாம்.
இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை இருக்கிறது. அது மகா கடினம். அது தான் இருபாலரின் தேவைகள், அவர்தம் இயல்புகளின் அடி வேர் காரணிகள், அதனால் சமூகம் அடையும் சாதக பாதகங்கள், ஆரோக்கியமான எதிர்கால உலகிற்கு என்ன தேவை, அதில் இரு பாலரின் பங்கு என்ன என்பது குறித்து நடுவு நிலையுடன் புரிந்து பேசுவது மிக மிகக் கடினம். சராசரியைக் காட்டிலும் அதிகமான புரிதல் கோரும் தலைப்பு இது. இந்த நடுவு நிலைப் புரிதலில் ஒரு பாலருக்கும் தனித்தனியே சொல்ல விடயங்கள் இருக்கின்றன. ஆண்களின் தரப்பைச் சொல்ல என்னை அழைத்திருக்கிறார் கனடாவைச் சேர்ந்த சிவம் வேலாயுதம் அவர்கள். மிகவும் சிக்கலான, அதே நேரம் இக்காலத்திற்கு மிகவும் தேவையான, நடுவு நிலையை அதீதமாகக் கோரும் , மிகவும் சென்ஸிடிவ்வான இத்தலைப்பில் பேச தகுதி வாய்ந்த நபராக நான் கருதப்படுவதில் மகிழ்ச்சி. அமெரிக்காவில் Women's health பத்திரிக்கை பிரபலம். அழகு குறிப்புகள் மட்டுமன்றி, பெண்களின் உடல் நலம், மன நலம் சார்ந்த அனைத்தும் விவாதிக்கப்படும், விழுப்புணர்வு தேவைப்படும் இடங்களில் வெளிச்சம் பாய்ச்சும் ஒரு பத்திரிக்கையாக செயல்படுகிறது. அப்படியானால், ஆண்களுக்காகவும் ஒன்று இருக்க வேண்டுமல்லவா? Men's Health அப்படியான பத்திரிக்கை தான். ஆண்களின் உடல் மற்றும் மன நலன் சார்ந்த கருத்துக்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் இவ்விதழில் வெளியாகும். ஆனால், இவ்விரண்டும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகத்தை மையப்படுத்தியது. தமிழ்ச் சமூகத்தில், பெண்களின் உடல் நலம் மன நலம் குறித்து பொதுத்தளத்தில் மிகப்பல விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டதின் பலனை இப்போதைய பெண்கள் அனுபவிக்கிறார்கள். பெண் ஏன் அடிமையானாள், நம் தந்தையரைக் கொல்வது எப்படி போன்ற நூல்களை எல்லாம் படித்து பிரித்து மேய்ந்தாகிவிட்டது. நீதிமன்றங்கள், சட்ட நடைமுறைகலெல்லாம் பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. போலவே தமிழ்ச் சமூகத்தில் ஆண்களின் உடல் மற்றும் மன நலம் சார்ந்த கருத்துக்களுக்கான வெளிப்பாடு தளங்கள் என்று நம்மிடம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. Voice of men 360 அமைப்பு இந்த வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் செயல்படும் ஒன்று. கனடாவைச் சேர்ந்த ஷிவம் வேலாயுதம் பொறுப்பேற்று நடத்துகிறார். இதைச் சொல்லும் போது இன்னுமொன்றையும் சொல்லவேண்டும். ஆண்களின் உடல் மற்றும் மன நலம் சார்ந்த கருத்துக்கள் பேசப்படுவதால் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை முன்மொழியும் செயல்பாடு அல்ல இது. இந்த நுண்ணிய பார்வையை முன்வைக்கத்தான் இதன் நிறுவனரான ஷிவம் வேலாயுதம் என்னை அழைத்திருக்கிறார். அதன் பேரில் கலந்து கொள்ள இருக்கிறேன். இந்நிகழ்வுக்கு என்னைப் பரிந்துரைத்த திரு Ravi Chokkalingam அவர்களுக்கு இத்தருணத்தில் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். என்னைப் பொறுத்தமட்டில், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் போன்ற கருத்துக்களுடன் உருவாகும் நாளைய சமூகத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும், ஆரோக்கியமான இருபாலருக்கும் நன்மை பயக்கும் வகையில் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் விதமாக ஆண் உலகின் செயல்பாடுகள், இயக்கங்கள் எவ்விதம் அமைய வேண்டும் என்பதான நோக்கில் இந்த அமைப்பில் செயல் திசை அமைய வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேச இருக்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொள்ளலாம்.

Saturday, 18 February 2023

இன்றைய உலகம்

 நீங்கள் பெண் பார்க்கப் போன வீட்டில் "உங்கள் பாங்க் பாலன்ஸ் எவ்வளவு?"  என்று கேட்கும் பெண்ணிடம் பதிலுக்கு அதே கேள்வியைக் கேட்க முடியவில்லையா? 

"என் கடந்த காலம் உனக்கு ஏன்?" என்று கேட்டு பெண் அதிர்ச்சியளிக்கிறாளா?

காதலியுடன் சென்ற டேட்டில் ஹோட்டல் பில் முழுவதையும் நீங்களே ஏற்க வேண்டி வருகிறதா? 

நீங்கள் ஒரு Toxic உறவில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

உங்களால் இது எதையும் எதிர்த்து ஒரு வார்த்தையும் பேச முடியவில்லையா?    நீங்கள் ஒரு பலவீனமான ஆணாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள். 

"இப்போதைக்கு சமாளிக்கலாம். திருமணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்" என்ற எண்ணம் தோன்றுகிறதா? 

அத்திருமணத்திற்குப் பின் Restraining order நீங்கள் பெற வாய்ப்பிருக்கிறது. 

இதையெல்லாம் கேட்க அதிர்ச்சியாக இருக்கிறதா? இதுதான் இன்றைய உலகம். அது உங்களிடம் கோருவது ஒன்றைத்தான். எதைச்செய்தாலும் எதிர்பாலினத்தை முழுக்கப் புரிந்து செய் என்பதைத்தான். இந்த விதியை மீறுபவர்களுக்கு இவ்வுலகில் எந்தச் சலுகையும் இல்லை. 


Thursday, 2 February 2023

Jerusalem College of Engineering - Distinguished Alumni Award - 2023

 Jerusalem College of Engineering - Distinguished Alumni Award - 2023

சென்ற வார இறுதியில் அவசர மூன்று நாள் விமான பயணமாக சென்னை வந்தது ஒரு விசேஷ அனுபவம். நான் பொறியியல் பயின்ற ஜெருசலேம் பொறியியல் கல்லூரி (Jerusalem Engineering College) 'Distinguished Alumni Award' விருதுக்கு என்னைத் தெரிவு செய்திருந்தார்கள். இத்தருணத்தில் இந்நிகழ்வு குறித்து எனக்குத் தெரியப்படுத்திய Anitha Gokulakrishnan அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா, கிடைத்தால் அது நல்ல வேலையாக இருக்குமா, வளர்ச்சி இருக்குமா, பெற்றவர்களுக்கு உறுதுணையாக நிற்க வைக்குமா, போராட்டமாக இருந்துவிடுமோ, இந்தப் பேரலையில் கரை ஏறிவிடுவோமா என்கிற குழப்பங்களுடனும், கேள்விகளுடனும் அந்தக் கல்லூரியின் வளாகங்களில் பல நாட்கள் திரிந்தது இன்னமும் நினைவிலிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, இப்போது அதே கல்லூரி வளாகத்தில் 'Distinguished Alumni' விருதுடன் நின்றது மெய் சிலிர்க்க வைத்த தருணங்களில் ஒன்று.
அப்போது கற்றுத்தந்த ஆசிரியர்களை இப்போதும் சந்திக்கக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. சுபாஷினி கலைக்கண்ணன், மாயா, பவானி சங்கரி போன்ற நெடுங்கால ஆசிரியர்களும், வனிதா ஷீபா, ஜமுனா போன்ற ஆசிரியர்களும் மாணவர்கள் மீது எடுத்துக்கொள்ளும் கவனமும், அக்கறையுமே இன்றளவும் எனக்கு நல்லாசிரியர்களுக்கான பெஞ்ச்மார்க்காக இருந்திருக்கிறது.
எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா என்றெல்லாம் கேள்விகளுடன் மயங்கி நின்ற இடங்களையெல்லாம் சென்று பார்க்கலாம் என்றால், மாணவர்கள் வளர ஏது செய்த கல்லூரியே வளர்ந்திருந்ததில், அவ்விடங்கள் பல மறைந்து போயிருந்தன. பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நான் பொறியியல் பயின்ற போது கல்லூரியில் மொத்தமே மூன்று பிரிவுகள் தான்: ECE, EEE மற்றும் CSE.
இப்போதோ Mechanical, IT, MBA, Bio-medical, Cyber security, Artificial intelligence and data science இவற்றில் M.E. மற்றும் Ph.D படிப்புக்களுடன் மாணவர்கள் கல்லூரிக்குள்ளேயே தங்கும் விதமான ஹாஸ்டல்களுடன் கல்லூரி வளர்ந்திருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. இதில் Autonomous அந்தஸ்து வேறு.
கல்லூரி முழுக்க சுற்றித்திரிந்தேன். எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா என்றெல்லாம் மயங்கி நின்ற இடங்களிலெல்லாம் நின்று விதம் விதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். இன்றளவும் கைகொடுக்கும் Java இந்தக்கல்லூரியில் நான் பயின்றதுதான். உலகை, மனிதர்களை, அவர்களின் ஆதார இயங்கு இயல்பை, இக்கல்லூரியே எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. பார்க்கப்போனால், இந்தக் பாடங்களின் அடித்தளத்தில் தான் நான் இப்போது இயங்கிக்கொண்டிருக்கிறேன் எனலாம்.
ஒரு உண்மையைப் பகிர வேண்டுமானால், கல்லூரி படித்த நான்கு வருடங்களில் கல்ச்சுரல்ஸ், தமிழ் மன்றங்களின் திசையைக் கூட எட்டிப்பார்த்ததில்லை. எனக்குள் ஒரு எழுத்தாளன் ஒளிந்திருப்பதே தெரியாமல், நான்கு ஆண்டுகள் தமிழ் மன்ற செயல்பாடுகளை, கல்லூரியின் பத்திரிக்கை சார்ந்த செயல்பாடுகளை எட்ட நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். இப்போது அதையெல்லாம் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
இந்த இயற்கை எத்தனை ஆச்சர்யம் வாய்ந்தது?!








All

2022 ன் ஜீரோ டிகிரி இலக்கிய விருது

 2022 ன் ஜீரோ டிகிரி இலக்கிய விருது வீடு வந்து சேர்ந்தது...




Wednesday, 1 February 2023

ஐன்ஸ்டனின் சிரிப்பு - கணையாழி (பிப்ருவரி 2023)

 ஐன்ஸ்டனின் சிரிப்பு - கணையாழி (பிப்ருவரி 2023)

கணையாழி (பிப்ருவரி 2023) இதழில் எனது கவிதை பக்கம் 67ல் வெளியாகியிருக்கிறது. கவிதையின் தலைப்பு 'ஐன்ஸ்டனின் சிரிப்பு'.
எனது கவிதையைத் தெரிவு செய்து வெளியிட்ட கணையாழி ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.






All reactions:
Ram Kumar, Mee Manikandan and 12 others

Monday, 16 January 2023

பன்னாட்டு புத்தகத் திருவிழா - சென்னை

சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில்  வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்  விவரங்களுடன் அவர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  இந்தப் பயணம் தொடரும். 

முதன்முறையாக சென்னையில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழா மிகச்சிறப்பாக தொடங்கியுள்ளது. இதில் அமெரிக்கா,கனடா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டன.  அடுத்தடுத்த ஆண்டுகளில் இது மேலும் விரிவு செய்யப்பட்டு தமிழ் நூல்கள் பிற மொழிகளுக்கும்,பிற மொழி நூல்கள் தமிழுக்கும் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்று நம்பலாம்.