என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday 26 July 2020

உங்கள் எண் என்ன - கேள்வி பதில்கள்

இப்போதுவரை கிட்டியிருக்கும் கேள்விகளும் அவைகளுக்கான பதில்களும் கீழே:
******************************************************


கேள்வி:
மனிதர்களின் மனம் நாளுக்கு நாள் மாறக்கூடியது.  மாறக்கூடியவைகளை எண்களாக்குவது சரியாக வருமா?

பதில்:
மாறக்கூடியவைகள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிவது, நாம் இன்னும் முதிர்வடையாததையே காட்டுகிறது. மாறாதவைகளும் இருக்கின்றன. நீங்கள் ஒரு introvert ஆக இருந்தால், இறுதி வரை introvert ஆகத்தான் இருப்பீர்கள். நீங்கள் ஒரு conservative ஆக இருந்தால் இறுதி வரை conservative ஆகத்தான் இருப்பீர்கள். நீங்கள் organized person ஆக இருந்தால் இறுதி வரை organized ஆகத்தான் இருப்பீர்கள். இந்தப் பண்புகள் வாழ்வின் இறுதி வரை மாறாதது. நாவல், இவைகளைத்தான் எண்களாக்க வேண்டும் என்கிறது. ஆகையால் தான், நாவலெங்கும் 'விருப்பங்கள்','தேர்வுகள்' என்ற வார்த்தைகளை அது பயன்படுத்துவதில்லை. மாறாக, அர்த்தங்கள் என்றே குறிக்கிறது. ஆங்கிலத்தில், essence என்பார்கள்.

**********************************************************


கேள்வி: 
பிற  நாவல்களில் வருவது போல் உறவுச்சிக்கல்களால் கதாபாத்திரங்கள் துய்க்கும் அவஸ்தை, வேதனை, துக்கங்கள், துன்பங்கள் குறித்த விரிவான விவரணைகள் ஏதும் உங்கள் நாவலில் இல்லையே?

பதில்:
விரும்பி யாரும் உறவுச் சிக்கலில் உழன்று வீழ்வதில்லை. எல்லாமே தெரியாமல் நடப்பதுதான். நீங்கள் சொல்லும் நாவல் உலகம், இப்படியாக வீழ்ந்த ஒருவனை, அவன் எப்படியெல்லாம் வீழ்ந்தான், எப்படியெல்லாம் அல்லலுற்றான் என்பதையெல்லாம் வெகு சிலவற்றில் மட்டும் நியாயமான பார்வையுடனும், பலவற்றில் அதீத கற்பனையுடனும் பல்வேறு கலை அம்சங்களை உள்ளடக்கி விவரிக்க முயல்கிறது. இக் கலைஆக்கங்களை எழுத ஆண்டு முழுவதும் 'வித்தியாசமான, இதுவரை கேட்டிராத' ஒரு கதைக்காக, அதாவது 'அல்லலுற்ற ஒருவனுக்காக' தேடி அலைந்து, அப்படி ஒருவன் சிக்கினால், அவன் 'கதையை' எப்படியேனும் தெரிந்துகொண்டு. பின் தனக்கிருக்கும் புரிதலை வைத்து அந்தக் கிசுகிசுவை கதையாக விஸ்தரிக்கவேண்டும். அவனது வீழ்ச்சியை, படைப்பானபிறகு, எல்லோரும் வாசித்து 'உச்சு கொட்டுகிறார்கள்'. இது, நம் போலவே இருந்த, விதியின் வசத்தால் வீழ நேர்ந்துவிட்ட ஒருவனை நாமே அவமரியாதை செய்வது என்று தோன்றுகிறது.

என் கேள்வி என்னவென்றால், ஒரு உறவுச்சிக்கலை புரிந்துகொள்ள, தி.ஜாவின் ஒரு "மோக முள்" போதாதா? வருடத்திற்கு பதினைந்து நாவல் தேவையா என்பதுதான்.

சாலையில் கடந்து செல்லும் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கூடத் தரவிடாமல் நம்மை கடந்து போக வைக்கும் விசை என்னவென்று  நினைக்கிறீர்கள்? அந்த ஒரு ரூபாயால் எந்தப் பிச்சைக்காரனின் வீழ்ச்சியையும் சரி செய்துவிடமுடியாது என்கிற கையாலாகாத தனம் தான். நமக்கு அவனை மேன்மையுறச்செய்திட எல்லா மனமும் இருக்கிறது. ஆனால், நம் யாரிடமும் எல்லா பிச்சியக்காரர்களையும் இல்லாமலாக்கும் பணவசதி இல்லை. நம்மால் தர முடிந்த அந்த ஒரு ரூபாய் அவனுக்கு எதற்காகவும் ஆகப் போவதில்லை. இந்த நிதர்சனம் தான் நம்மைக் கடந்து போக வைக்கிறது.

ஒரு வாழ்ந்து கெட்டவனிடம் நீங்கள் ஒரு ரூபாய் தந்தால் , அவனது பதில்,

"உன்னிடம் நான் பிச்சை கேட்டேனா? ஏதோ என் போறாத காலம். இப்படி நேர்ந்துவிட்டது. என்னால் என் கைகளை ஊன்றியே எழுந்து நிற்க முடியும். முடிந்தால், நான் எங்கே வீழ்ந்தேனோ அங்கே இன்னொருவன் வீழாதவாறு ஏதாவது செய். உன் உதவியை, முயற்சியை அதற்கு செலவிடு. மாறாக என் போன்ற ஒருவன் வாழ்வில் வழுக்கி விழும்வரை பொறுமையாக மெளனம் காத்து, அமைதியாக இருந்துவிட்டு, விழுந்தவுடன் ஒரு ரூபாயை தூக்கிக்கொண்டு வந்து, என்னைப் பிச்சைக்காரனாக்குவதன் மூலம் 'நான் வாழ்வில் மேன்மை நிலையில் இருக்கிறேன்' என்று நீயாக எண்ணிக்கொள்ள வகை செய்துகொள்ளாதே. அது போல் ஒரு கேவலம் வேறு இல்லை' என்பதாகத்தான் இருக்கும்.

என் நாவல் இந்த இடத்தைத்தான் தொட வேண்டும் என்று 2016ல் நான் எண்ணியதன் விளைவுதான் நீங்கள் குறிப்பிடும் 'விவரணைகள் ஏதும் இல்லாத தன்மை' ஆகும். "உங்கள் எண் என்ன?" நாவலின் நோக்கங்களும் ஒன்று, ஒருவன் எப்படி வீழ்ந்தான் என்று விவரிப்பதல்ல. அதன் நோக்கம், 'இனி ஒருவன் வீழாமல் இருக்க என்ன தேவை?" என்பதுதான்.


**********************************************************


கேள்வி: மனிதத் தேவைகளை, விருப்பங்களை எண்களில் சுருக்கி விட முடியுமா?

பதில்: இது தவறான அணுகுமுறை. அப்படியானால், சரியான அணுகுமுறை என்ன?

நீங்கள் ஒரு பெரிய வணிக வளாகம் செல்கிறீர்கள். அங்கே flour plan இல்லை. உங்களிடம் அரைமணி நேரம் தான் இருக்கிறது. Calvin Klein கடையில் ஒரு ஆடை வாங்க வேண்டும். எப்படி வாங்குவீர்கள்? அதற்கு முதற் கண் தேவை flour plan என்றாகிறது. அது இருந்தால் தான் கொடுக்கப்பட்ட அரை மணி நேரத்தில், வாங்க வேண்டியதை வாங்கிக்கொள்ள முடியும் என்றாகிறது அல்லவா?

அது போலத்தான் இந்த நாவலும். மனித உறவுகளில் ஒரு flour plan ஐ  நிறுவுவது தான் இந்த நூல்.

பூமியின் எந்தக் கலாச்சாரத்திலாவது, பதின்ம வயதை எட்டும் ஒரு ஆண்பிள்ளைக்கோ, பெண் பிள்ளைக்கோ

'இந்தாப்பா... மனித உறவுகளுக்கான அட்டவணை இதுதான். இதைப் படித்துக்கொள். மனித உறவுகளில் என்னென்ன பிரச்சனைகள் வர சாத்தியங்கள் இருக்கிறது? அது என்ன விதமான பிரச்சனைகளாக இருக்கலாம்? உனக்கு என்ன விதமான பிரச்சனை வருவதற்கு அதிகபட்ச சாத்தியங்கள் இருக்கிறது? அதை எப்படி வரும்முன்னே தற்காத்துக் கொள்வது? இதெல்லாம் இதுல கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தடவை படிச்சிக்கோ'

என்று ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டுகிற அணுகுமுறை இருக்கிறதா?

இதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் தான் இந்த 'உங்கள் எண் என்ன?' என்ற இந்த நூல்.

நாவல், ஒரு பதின்ம வயதுப்பிள்ளையிடன் தரப்படவேண்டிய ஒரு குறிப்பேட்டுக்கென உருவாக்கப்பட்ட நாவல். கையேட்டின் நோக்கம், தெளிவடையச்செய்வது. உறவுகளின் சிக்கல்களை, அதனுள் சிக்கும்முன்னே படமாகக் காட்சிப்படுத்துவது.

******************************************************


கேள்வி: ஒரே விதமான எண்ணுள்ளவர்கள் தான் துணையாகச் சேர வேண்டும். இதைத்தானே இந்த நாவலில் சொல்ல வருகிறீர்கள்?

பதில்: இல்லை. முன்பே குறிப்பிட்டது போல், நாவலின் நோக்கங்களுள் ஒன்று, மனித உறவுகளை மேலாண்மை செய்ய, ஒழுங்குபடுத்த ஒரு கணித மாடலை உருவாக்குவது. தோழர் Kamaraj M Radhakrishnan தனது விமர்சனத்தில் பின்வரும் வரிகளால் குறிப்பிட்டது இதைத்தான்.

//இந்த நாவலின் அடிப்படை கணிதவியல் என்பது என்னுள்ளேகூட பலவருடங்களாக வடிவில்லா ரூபத்தில் அலைந்துகொண்டிருந்தது என்பேன். நண்பர்களின் குடும்ப/காதல் சிக்கல்களை ஏதோ ஒரு வகையில் வகைமைப்படுத்த திணறிக்கொண்டிருந்தேன்.//

நாவல், விவரிப்பது ஒரு floor plan ஐ தான். கிட்டத்தட்ட ஒரு blue print போல.
ஒரு பாரிய வணிக வளாகத்திற்குச் செல்கிறீர்கள். ரெஸ்ட்ரூம் எங்கிருக்கிறது, உணவகம் எங்கியிருக்கிறது, எங்கே மின்தூக்கி இருக்கிறது என்பதையெல்லாம் விவரிக்கும் ஒரு floor plan, அந்த வணிக வளாகத்தில் உங்கள் அனுபவத்தை சீராக்க உதவுகிறதல்லவா? அதைத்தான் நோக்கமாகக் கொள்கிறது இந்த நாவலில் விளக்கப்பட்டுள்ள கணித மாதிரி (Math Model). இப்படி இப்படித்தான் ஆணும் பெண்ணும் சேர வேண்டும் என்று சொல்லவில்லை. இப்படி இப்படி சேர்ந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று அர்த்தங்களை முன் வைக்கிறது.

ஒரு blue print ஐ வைத்து எந்தப் பாடத்தைத் தவிர்த்தால் இழப்புகள் குறைவாக இருக்கும், எந்தப் பாடத்தை கட்டாயமாகத் தவிர்க்கக்கூடாது என்று ஒரு திட்டத்திற்கு நம்மால் வர முடிகிறதல்லவா? அது போல் ஒன்றைத்தான் இந்த  நாவல் நூல் விளக்குகிறது. யாரைத் தேர்வு செய்ய வேண்டும், யாரைத் தேர்வு செய்வது அனர்ந்தமாகிவிடலாம், தேர்வு செய்துவிட்டபிறகு ஓர் உறவை செப்பனிட என்ன செய்ய வேண்டும் என்று மனித உறவுகளை மேலாண்மை செய்ய வகை செய்யும் ஒரு Math Model ஐ இந்த நாவல் முன்வைக்கிறது எனலாம்.

******************************************************

கேள்வி: கணிசமானவர்கள், நாவலைப் பாதி படித்ததுடன் ஆர்வம் குன்றி வாசிப்பதைப் பாதியிலேயே கைவிட வாய்ப்பிருக்கிறது.

பதில்: இதற்கும் தோழர்  Kamaraj M Radhakrishnan தனது விமர்சனத்தில் பதிந்த ஒன்றையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

//உண்மையில் இந்தநாவல் ஒரு 25-30 வருடங்களுக்கு முன் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்டிருக்கவேண்டும். அபூர்வமாகத்தான் இதுபோன்ற நாவல் வெளிவரும். வாசகர்களின் உளவியலை பொதுவாக அசைத்துப்பார்க்கும் வகைமையில் இந்த நாவல் ஒரு புயலை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இதனை வாசித்து உள்ளுணர்ந்துகொள்வதற்கே ஓர் பக்குவமும் முதிர்ச்சியும் தேவைப்படும்.//

தோழர் Kamaraj M Radhakrishnan ந் இந்த விமர்சன வரிகளில் வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்.
வெகு ஜனத்தின் பொதுவான உளவியலை அசைத்துப் பார்க்கும் எதுவும் அத்தனை எளிதில் ஆர்வத்தைத் தூண்டுவதில்லைதான். இந்த  நாவல் முன்வைப்பது ஒரு paradigm shift ஐ தான். வெகுஜன உளவியலோடு இந்த நாவலை அணுகினால், நீங்கள் சொல்வது நடக்க மிக அதிக வாய்ப்பிருக்கிறது.

வெகுஜன உளவியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாவல் முன்வைக்கும் அணுகுமுறைக்கான உளவியலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின் இந்த விபத்து நேராது என்று நினைக்கிறேன்.

தோழர் Kamaraj M Radhakrishnan அவர்களின் விமர்சனம்:

https://ramprasathkavithaigal.blogspot.com/2020/07/kamaraj-m-radhakrishnan.html


******************************************************

கேள்வி: ஜோஸ்யத்தையும், எண் கணிதத்தையும் எதோ ஒரு வகையில் இந்த நாவல் நியாயப்படுத்துகிறதா? நாம் கண்டு பிடித்ததுதானே நம்பர்கள் எல்லாமும். திரும்பவும் இது ஒரு கணித அடிப்படையிலான ஜோதிட அல்லது யூக அடிப்படை விளையாட்டு தானே!


பதில்:
ஜோதிடத்தை இந்த நாவலின் கணிதவியலோடு ஒப்பிடுவது சரியான ஒப்பீடாக இருக்க முடியாது.
ஏனெனில் ஜோதிடம் பிறந்த நேரத்தை வைத்து எல்லாவற்றையும் judge செய்துவிடுகிறது. மேலும் அது, தத்துவார்த்த ரீதியில் அமைவதான judgement என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
"உங்கள் எண் என்ன?" நாவலின் கணிதவியல், கிட்டத்தட்ட பள்ளி , கல்லூரிகளில் வழக்கிலிருக்கும் மதிப்பெண்களை ஒத்தது. 8வது வரை ஃபெயிலான ஒருவர், திடீரென்று வெறித்தனமாக படித்து பத்தாவது வகுப்பில் 95 விழுக்காடு எடுத்தால், அவருடைய தகுதி உயர்ந்துவிடுகிறது. நாவலில் உள்ள எண்களும் அப்படித்தான். உங்கள் தகுதிகளை உயர்த்திக்கொள்ள, எண்களும் உயரும். தாழ்த்திக்கொள்ள எண்களும் தாழும்.

மனித உறவுகளுக்கு ஒரு Inference Engine போல் செயல்படுவதே இந்த நாவலில் உள்ள கணிதவியலின் நோக்கம்.

உதாரணமாக, வானிலை கணிப்புகளை மேற்கொள்ளும் வானியல் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து பெறப்படம் தகவல்களை வைத்து அன்றைக்கு மழை வருமா வராதா என்று பொதுஜனத்தால் கணிக்க இயலாது. வானியல் தகவல்கள் பின்வருமாறு இருக்கும்

"main": {
    "pressure": 1016,
    "humidity": 93
  },
  "wind": {
    "speed": 0.47,
    "deg": 107.538
  },
  "clouds": {
    "all": 2
  },
  "dt": 1560350192,
  "sys": {
    "type": 3,
    "id": 2019346,
    "message": 0.0065,
    "country": "JP",
    "sunrise": 1560281377,
    "sunset": 1560333478
  },

இந்தத் தகவலை வைத்து ஒரு குறிப்பிட்ட நாளில் மழை வந்ததா, வெய்யில் அடித்ததா என்பதைச் சொல்ல, இது போன்ற தகவல்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரின் உதவி தேவை. அவர் எதை வைத்து, இந்தத் தகவல்களை உள்வாங்கி ஜீரணித்து, மழை வந்ததா இல்லையா என்று சொல்வாறோ, அது தான் Inference Engine எனப்படுவது.

மனித உறவுகளில் அப்படியான ஒரு Inference Engine ஆக, இந்த கணித நாவலில் வரும் கணிதவியலைப் பார்க்கலாம்.