என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday 4 November 2021

வாவ் சிக்னல் - விமர்சனம் - Boje Bhojan

எனது 'வாவ் சிக்னல்-அறிபுனை தொகுதி' நூலுக்கு வரும் முதல் விமர்சனம் இது... இதற்கு முன் உதிரியாக அவ்வப்போது வெளியாகும் சிறுகதைகளுக்கு பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.. முழு நூலுக்கென வந்த முதல் விமர்சனம் இதுதான்... நண்பர் Boje Bhojan க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...




வாவ் சிக்னல்- ராம் பிரசாத் - அறிவியல் சிறுகதைத்தொகுப்பு- பதிப்பகம்- படைப்பு- முதல் பதிப்பு, 2020- பக்கங்கள்- 148
வாவ் சிக்னல்- ஒரு அற்புத அறிவியல் சிறுகதைத்தொகுப்பு
எழுத்தாளர் பற்றி:
இந்த நூலை எழுதிய எழுத்தாளர் திரு ராம் பிரசாத் அவர்கள் மயிலாடுதுறையை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தமிழில் 7 நூல்களும். ஆங்கிலத்தில் மூன்று நூல்களும் வெளியிட்டு இருக்கிறார்.
புத்தகம் பற்றி:
மொத்தம் 12 தலைப்புகளும் 148 பக்கங்கள் கொண்ட இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள அனைத்து அனைத்து சிறுகதைகளும் மிகவும் அருமையாக அமைந்துள்ளது .
முதல் தலைப்பான கண்காட்சி என்னும் சிறுகதையில் போன்சாய் மனிதர்கள் பற்றிய கதை என்று சொல்லலாம். உண்மையில் நிகழ்காலத்தில் போன்சாய் மனிதர்கள் என்று இருக்கிறார்களா அல்லது போன்சாய் மனிதர்கள் என்றால் என்ன என்று இணையத்தில் தேடியபோது தான் சில தகவல்கள் கிடைத்தன உண்மையில் போன்சாய் தாவரம் போல நிகழ்காலத்தில் போன்சாய் மனிதர்கள் என்று உருவானால் எப்படி இருக்கும் என்பதே கதை.
அடுத்த தலைப்பான பேய் என்கிற சிறுகதை மிகவும் ஒரு சுவாரசியமான சிறுகதை காரணம் இந்த சிறுகதையில் மின்னலை வைத்துதான் மொத்த கதையும் நகர்கிறது. ஒரு மலைப் பிரதேசத்திற்கு செல்லும் தம்பதிகளில் ஒருவர் காணாமல் போக. அதன்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி கதை
அடுத்த கதையான அவன் என்கிற கதை ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசி பற்றிய கதை இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் மருத்துவமனைக்கு போனவுடன் உயிரோடு இருப்பதாக தகவல் வருகிறது. அதன்பின் நடக்கும் சில சம்பவங்களுக்கு பிறகு அவர் காணாமல் போகிறார் என்ன நடக்கிறது அவர் எப்படி உயிரோடு வந்தார். மீண்டும் எங்கே சென்றார் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்
அடுத்த கதையான பொறி என்கிற கதை . டைம் லூப் என்று சொல்லப்படும் கருத்தை மையமாக வைத்து புனையப்பட்ட கதை
அதுபோல அதிர்ஷ்டம் என்கிற சிறுகதை இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த சிறுகதை என்று சொல்வேன் காரணம் இது ஒரு விபத்து . அதன் பின்னால் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையப்படுத்தி செய்யப்பட்டிருக்கும் ஒரு கதை.
அதுபோல் அடுத்த கதையான ஆதாம் ஏவாள் என்ற சிறுகதையும். விண்வெளியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.
இது மட்டுமில்லாமல் அடுத்த தலைப்பான பூமி, கடவுளைத் தேடி, அவரேஜ், அனாதை போன்ற சிறுகதைகளும் விண்வெளியை மையமாக வைத்து எழுதிய கதை
என்னுடைய பார்வை:
கிட்டத்தட்ட இந்த புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது என்ன சுவாரசியம் இருந்தது அதே சுவாரசியம் கடைசி தலைப்பை படித்து முடிக்கும் வரையிலும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட அறிவியல் தகவல்கள் அதுவும் வரும் காலத்தில் சாத்தியம் என்று நம்பப்படும் தொழில்நுட்பங்கள் இந்த புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறுகதைத் தொகுப்பு இது. — with எழுத்தாளர் ராம்பிரசாத்.