என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 10 April 2009

கார‌ண‌ங்க‌ளும் காரிய‌ங்க‌ளும் - விகடன்

கார‌ண‌ங்க‌ளும் காரிய‌ங்க‌ளும்...
http://youthful.vikatan.com/youth/ramstory09042009.asp

உலகில் எல்லாமும் எல்லாவற்றுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாகவோ அல்லது சார்ந்தோ தான் இருக்கிறது. உதாரணத்திற்கு, என் நண்பர் சென்னை வடபழனியில் வீடு வாங்கினார். அவர் அங்கு வீடு வாங்குவதற்கும், சென்னையில் நூறடிசாலையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் ஒரு நாள் வருமானம் குறைவதற்க்கும் கூட தொடர்பு உண்டு எனலாம்.

எப்படி என்றால், கடலூரிலிருந்து வேலை தேடி, நெர்காணலுக்கு வரும் என் நண்பரின் உறவுக்காரர், என் நண்பர் சென்னையில் இல்லாதிருந்தால், அந்த ஹோட்டலில் தான் தங்கியிருப்பார். ஆனால், இப்போது அப்படி இல்லை. இப்போது, அவருக்கு என் நண்பர் வீட்டில் தங்குவதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு காரணம் உறவுகாரரை சந்திப்பது, இன்னொன்று நண்பர் வீட்டில் தங்குவதன் மூலம் மாமாவுடனான நேசத்தைக் காண்பிப்பது. மறைமுகக் காரணம், ஹோட்டலில் தங்கும் செலவை குறைப்பது.

இந்த காரணங்களே ஒரு மிகப்பெரிய விஷயங்களாக உள்ளன. சரியாக யோசித்துப்பார்த்தால், காரணங்கள் என்பது மனிதர்க்கு மனிதர் மாறுபடும் விஷயமாக தான் உள்ளது. ஆங்கிலத்தில் இதனை relative concept என்பர். இதைத்தான் ஐன்ச்டின் விதி என்று ஆங்கிலேய‌ர்க‌ள் குறிப்ப‌ர்.[ ஆனால், ப‌ல‌ ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌தாக‌வே, த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளில் வாழ்விய‌ல் முறைக‌ளில் இதைத் தெளிவாக‌ உண‌ர்த்தியுள்ள‌ன‌ர். ஏனோ ந‌ம் ம‌க்க‌ளுக்கு ஆங்கிலேய‌ர்க‌ள் கண்டுவிடித்துச் சொன்னால் ம‌ட்டுமே புரிகிற‌து!!!!]

காரணங்கள் என்பது, இன்னும் பல விஷயங்களைச் சார்ந்த ஒரு விஷயமாகவும் உள்ளது. சரி/தவறு, நல்லது/கெட்டது என்பன போன்றவைதான் அவைகள். எல்லோருக்கும், ஒரே விஷயம் சரியாக படுவதே இல்லை.

உதாரணத்திற்கு, உறவுக்காரர் பகட்டு ஆசாமியாக இருப்பின், அல்லது, செலவாளியாக இருப்பின், அல்லது நண்பருடனான உறவு சுமூகமாக இல்லாதிருப்பின், வேண்டுமென்றே ஹோட்டலில் தங்கவும் செய்யலாம். அவரைப் பொருத்தவரை அதுவே அவருக்கு சரி என்று பட்டிருக்கும்.

இதுவே, அவ‌ருக்கு நண்பருட‌ன் ந‌ல்ல‌ ந‌ட்பிருப்பின், ஹோட்ட‌லில் த‌ங்குவ‌துதான் த‌வ‌று என்றாகியிருக்கும். அத‌லால், இந்த ச‌ரி/த‌வ‌றுக‌ளும் கூட‌ ஐன்ச்டின் விதிப்படி, மேலும் சில‌ கார‌ண‌ங்க‌ளைச் சார்ந்து இருக்கிற‌து. அந்த கார‌ண‌ங்க‌ள், த‌ன் ப‌ங்கிற்கு வேறு சில‌ கார‌ண‌ங்க‌ளையோ அல்ல‌து சில‌ விதிக‌ளையோ சார்ந்து இருக்கின்ற‌து. இது ஒரு சுழ‌ற்சி. ஆங்கில‌த்தில் cyclic behaviour என்பார்க‌ள்.

உண்மைதான். சற்றே ஆழமாக தொடர்புபடுத்தி யோசித்தால், உலகில் சற்றேர‌க்குறைய, எல்லாமே இந்த சுழற்சி முறையில் தான் இயங்குகின்றது என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும். காய்கறிக்கடைக்காரனின் பிள்ளையை பள்ளியில் சேர்த்துக்கொள்ள நன்கொடை வாங்கும் துணைவேந்தர், அந்தப் பணத்தை கல்லூரி செல்லும் தன் பேரன்களுக்குக் கைச்செலவுக்குத் தருகிறார். பேரன்கள் அந்த பணத்தை சிறப்பு வகுப்புகள் நடத்தும் பேராசிரியர்களுக்குத் தருகிறார்கள். அப்பேராசிரியரின் மனைவி அந்த பணத்தைக் கொண்டு காய்கறிகாரனிடம் கறிகாய் வாங்குகிறாள். இதுவே சுழற்சி என்பது. இதே கருத்தைத்தான் ஷ்ரி கிருஷ்ணரின் கீதா உபதேசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ' நேற்று உன்னுடையதாயிருந்தது இன்று வேறொருவருடையதாகிறது. நாளை அது மற்றொருவருடையதாகும்'. இன்னும் சொல்லப்போனோல், இது போன்ற பல சாரங்களை, இறைவனின் படைப்பு விதிகளை, மனிதர்களின் இயல்புகளை கீதா உபதேசத்தில் தெள்ளத் தெளிவாகக் காணலாம்.

இதை மானுட‌ம் தெரிந்துகொள்ள‌வேண்டும், வாழ்க்கையை எளிதாக‌ வாழ‌ வேண்டும் என்ப‌ன‌ போன்ற‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ளை வ‌லியுருத்தித் தானோ அன்றைய‌ ந‌ம் முன்னோர்க‌ள் இறைவ‌னின் பெய‌ரால் க‌தையாக‌ச் சொல்லி இல‌க்கிய‌மாக‌ ப‌ல‌ த‌லைமுறைக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ பாதுகாத்து வைத்தார்க‌ள்.

யோசித்துப்பார்த்தால், நாம் எல்லோரும் கால‌த்தின் வெவ்வெறு க‌ட்ட‌ங்க‌ளில், அவ‌ர‌வ‌ர்க்கு உள்ள‌ நிறை/குறைக‌ளுட‌ன், பல்வேறு கார‌ண‌ங்க‌ளால் விளையும் சூழ்நிலைக‌ளில் அந்தந்த நெர‌த்திற்கேற்ப‌ ந‌ம்மை நாம் வெளிப்ப‌டுத்திக்கொள்கிறோம். க‌ணித‌த்தில் ஆங்கில‌த்தில் permutation and combination என்று சொல்வார்க‌ள்.

ஒரு குறிப்பிட்ட‌ குணாதிச‌ய‌ங்க‌ளைக் கொண்ட‌ ப‌ல்வேறு வஸ்துக்க‌ளை ஒன்றாக‌ ஒரு ஜாடியில் போட்டுக் குலுக்கினால், அந்த வ‌ஸ்துக்க‌ள் ஒன்றோடோன்று எவ்வாறெல்லாம் முட்டிக்கொள்கின்ற‌ன‌, எவ்வாறெல்லாம் விளைவுக‌ள் உண்டாகின்ற‌ன‌ என்ப‌துதான் இது. இது போல‌த்தான் நாம் எல்லொரும் உல‌க‌ம் என்னும் ஜாடியில் அவ‌ர‌வ‌ர்க்கு உண்டான‌ த‌ன்மைக‌ளையும், ச‌ரி த‌வ‌று முத‌லான‌ கோட்பாடுக‌ளுட‌ன் சந்தித்துக்கொள்ளும்போது ப‌ல‌ விளைவுக‌ள் உண்டாகின்ற‌ன‌.

ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால், உல‌கின் த‌ன்மையையும், ம‌னித‌னின் த‌ன்மையையும் ச‌ரியாக‌ப் புரிந்துகொண்டால், வெற்றிக்கான‌ வ‌ழி கிடைக்கும் என்றே தோன்றுகிற‌து.


இன்னும் எழுதுவேன்.........................