என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday 23 October 2024

ஆனந்த விகடனில் எனது கவிதை 'கைத்தட்டல்கள்'

 30.10.2024 தேதியிட்ட இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் கவிதைகளுக்கான சொல்வனம் பகுதியில் எனது 'கைத்தட்டல்கள்' கவிதை வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனது கவிதையைத் தெரிவு செய்த ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.


இதோ உங்கள் பார்வைக்கு எனது கவிதை.




இன்டர்ஸ்டெல்லார் - தெரியாத தகவல்கள்

 புரிந்துகொள்ள மிகவும் சிக்கலான படம் என்றால் அது Interstellar. எனக்கு மிகவும் பிடித்தமான அறிவியல் புனைவுத் திரைப்படமும் கூட. என்னைக்கேட்டால் உண்மைக்கு மிக நெருக்கமாக எடுப்பது என்பார்களே அது போல மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்ட படம் இன்டர்ஸ்டெல்லார். அதுகுறித்து சில புதிய தகவல்கள் 



1. இந்தத் திரைப்படத்திற்கு முதலில் எழுதப்பட்ட க்ளைமாக்ஸ், கூப்பர் வார்ம்ஹோலில் விழுவது தானாம். அதன் பிறகே, கூப்பர் தன் மகளின் நினைவுக்கிடங்கல் புகுந்து சில வேலைகளைப் பார்ப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் இந்த இடத்தை சற்றே சொதப்பிவிட்டார்கள் என்பதே என் வாதம். இதன் படி, கூப்பர் தன் மகளுக்கு மார்ஸ் கோட் மூலமாகக் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் கூப்பர் அந்த ரகசிய இடம் செல்வார், அதன் பிறகே விண்வெளி செல்வார். ஆக விண்வெளி செல்வதற்கு அவரை அவரே தூண்டிக்கொண்டதாகத்தான் அர்த்தமாகிறது. பிறகு ஏன் அழுகை?

2. நோலன், டாக்டர் மேனின் கதைக்கு ஒரு prequel எழுதி அதை காமிக் நாவலாக வெளியிட்டிருக்கிறார்.

3. இந்தத் திரைப்படத்தில் முதல் சில காட்சிகளில் வரும் தூசிகளால் ஆன புயலுக்கு cardboard ஐ தூளாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

4. இந்தத் திரைப்படத்தில் வரும் TARS ஐ சினிமாவுக்கென்று டம்மியாக உருவாக்காமல் உண்மையாகவே உருவாக்கியிருக்கிறார்கள்.

5. ஜொர்டான் மற்றும் ஹங்கேரியில் திரைப்படமாக்கப்ப 'Martian' திரைப்படம் போல், interstellar திரைப்படத்தைப் கனடாவில் ஷூட் செய்திருக்கிறார்கள். நான் வசிக்கும் ஊரான ஜியார்ஜியாவில் எடுக்கப்பட்ட படம் 'Greenland'.

6. இது ஒரு புதுமையான ரெக்கார்டு. இதுவரை மிக அதிகம் முறை சட்டத்துக்குப் புறம்பாக, நகலெடுக்கப்பட்ட படம் interstellar தானாம். மொத்தம் 46 மில்லியன் முறைகள். இது ஜுராசிக் வோர்ல்டு, ஃபூரியஸ் போன்ற திரைப்படங்களையும் விட அதிகம் என்கிறார்கள்.




Monday 21 October 2024

ஐந்நூறு மீட்டர் அகல தொலைநோக்கி

ஐந்நூறு மீட்டர் அகல தொலைநோக்கி


சீனாவின் FAST தான் உலகின் மிகப்பெரிய தொலை நோக்கி. செல்லமாக 'வானத்தின் கண்' அதாவது 'Sky eye telescope'. இதன் துளை அதாவது aperture சுமார் ஐந்நூறு மீட்டர். (போதுமா!?) இந்தப் படத்தில் பாருங்கள். எத்தனை பிரம்மாண்டமாய் இருக்கிறது? ("இன்னுமா இதையெல்லாம் ப்ளாட்டு போட்டு விக்காம இருக்காய்ங்க?" என்று தானே தோன்றுகிறது?

ஜூன் 14 அன்று சீன ஆராய்ச்சியாளர்கள், இந்தத் தொலை நோக்கியில் வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து சமிஞைகளைப் பெற்றதாகத் அறிவித்திருந்தார்கள். 2019ல் ஒன்றும், 2022ல் இரண்டும்.

குறுகிய கட்டு சமிஞைகள் அதாவது narrow-band signals இயற்கையாக உருவாகுவன அல்ல. அவற்றைச் செயற்கையாக யாரேனும்  உருவாக்க வேண்டும். கிடைத்த சமிஞை அப்படிப்பட்டன என்றதும் சீன ஆராய்ச்சியாளர்கள் குழு துள்ளிக் குதித்தது. சமிஞை கிடைத்த அந்தப் பகுதியையே தொடர்ந்து ஆராய்ந்தது. இரண்டு வருடங்கள் ஆராய்ச்சிக்குப் பின்னர் தெரிய வந்திருப்பது moey moey ரகம்.



அந்த சமிஞைகள் வெறும் Radio signal interference தானாம்.

எல்லா குழப்பமும் தொலை நோக்கியின் அளவிலிருந்து தான் துவங்குகிறதாம். இது போன்ற பாரிய தொலை நோக்கிகள் மிகவும் உணர்திறன் மிக்கதாக இருக்குமாம். அதனால் இவைகள் பூமியிலிருந்து வெளிப்படும் சமிஞைகளையே வேற்று கிரகத்திலிருந்து வந்த சமிஞைகள் போல் கண்டுபிடித்து நம்மை ஏமாற்றுகின்றன என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. 2022ல் கிடைத்த சமிஞைகளை ஆராய்ந்ததில் இந்தக் கூற்றுடன் ஒத்துப்போவதாகத் தெரிய வந்திருக்கிறது. 

என்னடா வேற்று கிரக உயிர்கள் ஆராய்ச்சியை பிடிச்ச சோதனை என்று தானே நினைக்கிறீர்கள்?

சரி. இந்தத் தொலை நோக்கியை சிறிதாக வைத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் நினைப்பதற்கில்லை. விண்வெளியிலிருந்து வரும் சமிஞை அளவு மிகவும் குறைவு. விண்வெளியிளேயே மிகவும் வடிகட்டப்பட்டுத்தான் நம்மை வந்தடைகின்றன. அதிக அளவிலான சமிஞைகள் கிடைத்தால், விஸ்தீரணமாக ஆராய முடியும் என்பதற்காகத்தான் தொலை நோக்கியின் அளவைப் பெரிது படுத்த வேண்டி இருக்கிறது. இப்போது அதிலும் சிக்கல். சிக்கல் என்னவென்றால், நாம் உருவாக்கும் சமிஞைகளையே நாம் முதலில் வடிகட்ட வேண்டும். இதைச் செய்வது எப்படி என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இத்தோல்விகள் மறைமுகமாக உணர்த்தும், fermi paradoxக்கு சொல்லப்படும் விளக்கங்களுள் ஒன்று: ஒரு இனம் வேற்று கிரக உயிர்களைக் கண்டுபிடிக்கும் முன்னரே அழிவை சந்தித்துவிடுவது.

இப்போதைக்கு, ஒன்றை ஆணித்தரமாகச் சொல்ல வேண்டுமானால், இப்படிச் சொல்லலாம். 

"எல்லோரும் இன்புற்று வாழ மட்டுமே இந்த உலகம். எல்லோரிடமும் அன்பு செய்யுங்கள்."

பிக் பாஸ் - so far

 இன்றைய நாளை "தினம் தினம் எதிர்பாராத திருப்பங்களுடன்..." என்று சொல்லி முடிக்கிறார் பிக் பாஸ்.


முதல் வாரத்தில் பட்டிமன்றம் டாஸ்கில் பெண்கள் அணி சார்பில் ஜெயித்தது முத்து.

இரண்டாம் வாரத்தில் பஸ்ஸர் டாஸ்கில் பெண்கள் அணி சார்பில் ஜெயித்தது தீபக். ஆண்கள் பஸ்ஸரை அடிக்கப் பாய்ந்த வேகத்தைப் பார்த்தால், ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் போட்டி போல் தோன்றாமல் இல்லை.

இந்த வாரத்தில் உணவுக்கான டாஸ்கில் பெண்கள் அணி சார்பில் ஜெயித்தது ஜெஃப்ரீ. ஜெஃப்ரீ மட்டும் ஜெயிக்கவில்லை என்றால் பெண்கள் அணிக்கு அந்த இரண்டாயிரம் கூட கிடைத்திருக்காது.  இதை சவுன்ட் என்கிற செளந்தர்யா, ரஞ்சித்திடம் சொல்லவே செய்துவிட்டார். ஜெஃப்ரீ மட்டும் ஜெயித்திருக்காவிட்டால் சோத்துக்கு சிங்கிதான் என்று...


அடுத்தடுத்த வாரங்களில், பெரும்பான்மையான டாஸ்குகளில் பெண்கள் அணி சார்பில் வென்று தருபவர் ஆணாகத்தான் இருப்பார் என்பதை முன்தீர்மானமாகச் சொல்லிவிடமுடியும்.



இப்படி ஜல்லி அடிக்கும் பிக் பாஸில் ஒரே ஆறுதல், வார இறுதிகளில் வரும் விஜய் சேதுபதி தான். டி20க்கு தோனி விளையாடுவது போல் ஒவ்வொரு பாலையும் சிக்ஸருக்கு விரட்டுகிறார். சிலது ஸ்டேடியத்துக்கு வெளியேயே சென்றும் விடுகிறது.


இதில் என்ன எதிர்பாராத திருப்பங்களுடன்...... தினம் தினம் எதிர்பார்த்த திருப்பங்களுடன் தொடர்கிறது பிக் பாஸ்... ஆண்களா? பெண்களா? என்ற தலைப்புக்கும், டாஸ்க்குகள் நடக்கும் விதத்திற்கும் தொடர்பில்லாமல் எங்கோ எதுவோ துருத்திக்கொண்டே இருக்கிறது.


எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் தோணுதா? யாராவது சொல்லுங்க ப்ளீச்...

Sunday 20 October 2024

வீனஸுக்கு களன் அனுப்பும் சீனா

வீனஸ் கிரகத்திலிருந்து காற்றை பூமிக்கு வரவழைக்க முயற்சிகள் எடுக்கத்துவங்கியிருக்கிறது சீனா. 

பூமியிலும் காற்று மாசடைகிறது. தொடர்ந்து மாசடைந்து கொண்டே போனால் ஒரு கட்டத்துக்கு மேல், பூமி வீனஸ் கிரகம் போல் ஆகிவிடும். வீனஸ் கிரகத்தில் என்ன பிரச்சனை? வீனஸ் கிரகத்தை ஒரு அடர்த்தியான கார்பன் டைஆக்ஸைடு படிமம் மூடியிருக்கிறது. இதனால்  ஊடுறுவும் ஒளி கிரகத்தை விட்டு வெளியேற விடாமல், கிரகத்தின் காற்று மண்டலம் தடுக்கையில், அது கிரகத்தின் வெப்ப நிலையை அதிகரிக்கச்செய்கிறது. இதனால் வீனஸ் கிரகத்தில் எப்போதும் சல்ஃப்யூரிக் ஆசிட் மழை தான்.



பூமிக்கும் அந்த நிலை வரலாம். எது, பூமியை, வீனஸ் கிரகம் ஆக விடாமல் தடுக்கும் புள்ளி என்பதைத் தெரிந்துகொள்ளவும், வீனஸ் கிரகத்தின் காற்று மண்டலத்தை ஆராயும் வீனஸ் கிரகத்துக்கு களன் ஒன்றை அனுப்ப முடிவு செய்திருக்கிறது சீனா.


கேட்கவே பகீரென்று இருக்கிறதல்லவா? கேள்வி என்னவென்றால் செவ்வாய் கிரகத்தில் உலவும் சீனாவின் Zhurong போல இது இருக்காது. வீனஸின் காற்று மண்டலம் ஆசிட் மழை , புயல் வீசக்கூடியது. எந்தக் களனை அனுப்பினாலும் அதனைப் பொசுக்கிவிடும் தன்மை அந்தக் காற்று மண்டலத்துக்கு இருக்கிறது. ஆசிட் மழையில் பொசுங்கிவிடாமல், ஆராய்ச்சிக்குத் தேவையான மாதிரிகளைக் களன் சேமித்துவிட்டு பூமிக்குத் திரும்ப வேண்டும். 


இந்த சவால்களை ஏற்கவும், செய்து முடிக்கவும் சீனாவுக்குத் திறமை இருக்கிறது என்று தான் நம்புகிறேன். ஒரு நாள் சீனா இதனைச் செய்து முடிக்கும். மனித இனத்தின் கவனமின்மை, பொறுப்பின்மை ஆகியவற்றை இந்தப் புண்ணிய பூமி இன்னும் எத்தனை காலம் தான் பொறுக்கும் என்பதற்கு திட்டவட்டமான எண்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள நானும் ஆவலாகத்தான் இருக்கிறேன்.


Saturday 19 October 2024

மரணமற்ற வாழ்வு

மரணமற்ற வாழ்வு


ஆம். இப்போது அது தான் பெரும்பணக்காரர்களின் தேடலாக இருக்கிறது. அதை விடவும் கவர்ச்சிகரமான இன்னுமொன்று, என்றென்றைக்கும் இளமை.

அதற்கு எதிரியாகப் பார்க்கப்படுவது என்னவென்று நினைக்கிறீர்கள்? நம் உடல் தான். ஆம். இதற்கு எத்தனை தீனி போடவேண்டி இருக்கிறது? முனுக்கென்றால் ஜலதோஷன் தலைவலி, வயிற்று வலி..அதுவும் இல்லையென்றால் நோய்க் கிருமிகள். இப்படி ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் செலவும், மெனக்கெடலும் தேடைப்படுகிறது இந்த உடலைப் பாதுகாக்க, பராமரிக்க. 



இந்தத் தொழில் நுட்பத்தை whole brain emulation என்கிறார்கள். 1945ம் ஆண்டுக்குள் இந்தத் தொழில் நுட்பம் பரவலான பயன்பாட்டிற்கு வந்துவிடுமாம். 

ஆனால், இதில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஒரு சிறிய எலியின் ஒரு க்யூமிக் அளவுள்ள மூளையை வெட்டி எடுத்து அதனுள் சென்று சேரும் தகவல்களை கணிப்பொறியில் சேமிக்க முயன்றிருக்கிறார்கள். அந்த அத்தனையூண்டு மூளைத்துணுக்கில் சுமார் ஒரு லட்சம் நியூரான்களும் அவைகளால் சேகரிக்கப்படும் நினைவுகள் சுமார் 2 மில்லியன் கிகாபைட்டுகள் என்றும் தெரியவந்திருக்கிறது.  ஒரு சிறிய எலியின் மூளையின் இந்த விதமாக கணிணிப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால், சிக்கலே இனிமேல் தான்.

ஒரு மனித மூளை முழுக்கவே சுமார் 2000 exabyte அளவிலான தகவல்களைச் சேமிக்க வல்லது. புரியவில்லை தானே?

ஒரு ஒப்பீட்டிற்குச் சொல்லவேண்டுமானால், நாம் தினந்தோறும் அணுகும் கூகுளின் மொத்த மெமரி 15 exabyte தானாம். கூகுள் தன்னிடம் உள்ள பல பணக்கார வாடிக்கையாளர்களுக்கு அவர்தம் நினைவுகளைச் சேகரிக்க உதவியிருக்கிறதாம். 

அவ்விதம் சேகரித்து சேர்த்து வைக்க ஆகும் செலவு ஒரு மாதத்திற்கு ஒரு மூளைக்கு சுமார் பத்து பில்லியன்கள். கேட்கவே தலைசுற்றுகிறது. இல்லையா? ஆனால் இந்தத் தொழில் நுட்பத்தின் சாதகங்கள் வியக்க வைக்கின்றன. இப்படி ஒரு உடலே இல்லாமல், வெறும் பிரஞை/மனத்தை நம்மால் ஒரு cloud storageல் சேமிக்க முடிந்தால்? அந்த மனம் ஆட்கொள்ள ஒரு இயந்திர உடல் தந்துவிட்டால்? என்றென்றைக்கும் இளமை சாத்தியம் தானே? மரணமற்ற வாழ்வும் சாத்தியம் தானே? அதுமட்டுமா? ஒளியின் வேகத்தில் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்கும் பயணித்துவிடலாம். எந்த கிரகத்திலும் குடியேறலாம். இல்லையா?

இதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, கொஞ்சம் சீக்கிரம் பிறந்துவிட்டோமே என்று தோன்றாமல் இல்லைதான்.

Friday 18 October 2024

அருவி மலர்

 அருவி மலரில் வெளியானது...

இருப்பினும்,
'ஆங்கில/அமெரிக்க விருதுகள் அங்கீகாரங்கள்' பகுதியில் சேர்க்க இன்னுமொரு பாயின்ட் சேர்ந்துவிட்டது. அதனை இங்கே தருகிறேன்.
2. Allegory Science Fiction, Fantasy & Horror Magazine has honored his work with an 'Honorable Mention' in its issue 46/73, 2024.
Note: This is yet to appear in the magazine.




Agora!

 Agora!


Agora ஒரு முக்கியமான திரைப்படம் என்பேன்.  அது கிருத்துவம் ஒரு மதமாக வேறூன்றத் துவங்கியிருந்த நேரம். அப்போது எப்படி கிருத்துவத்தின் வளர்ச்சி அப்போதைய அறிவுசார் தளங்களை அழித்தது என்பதைப் பேசும் கதை Agora.

இதில் வரும் Hypatia என்ற பெண் அப்போதிருந்த பூமியை மத்திமமாகக் கொண்ட Heliocentric model ஐ  கேள்விக்கு உட்படுத்தி ஆராய்வார். கிருத்துவம் அதைக் கடுமையாக எதிர்க்கும். தொடர்ந்து அவள் பணி செய்வதைத் தடை செய்யும் விதமாக, அந்த நூலகம் எரிக்கப்படும்.

அந்தக் காட்சிகள் தத்ரூபமாக, எப்படி மனித இனத்தின் பொக்கிஷங்களான நூல்கள் அழிந்தன என்பதைக் காட்டும் காட்சிகளாக அமைந்திருக்கும்.  

இஸ்லாம் இனங்களால் நாலந்தா, விக்ரமஷிலா அழிந்ததை , சீன ஹன்களால் தக்ஷஷீலா நூலகம் அழிந்ததை, பாரசீகர்களின் டெஸிபோன் நூலகம் அழிந்ததை, அலெக்ஸாண்டிரியாவின் செராபியம் நூலகம், இன்னும் இன்னும் பல நாடுகளில் பல நூலகங்கள் அழிந்ததை காட்சிப்பூர்வமாக ஆவணப்படுத்தும் விதத்தில் இந்தத் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படம் என்று கூடச் சொல்லலாம்.

ஒரு காலத்தில் எந்த நூல்களை நூலகங்கள் தேடித்தேடி அழித்தார்களோ, அதே நூல்களை, புராணக் கதைகளை இப்போது அவற்றின் வெகு மதியை உணர்ந்து தேடோ தேடென்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். கிடைக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.  




பூமியின் பூர்வீகம் குறித்த பல அகழ்வாராய்ச்சிகளை நடத்தியிருக்கும் போதிலும் ஒரு முக்கிய அகழ்வாராய்ச்சி மூக்கின் மேல் விரல் வைக்க வைத்திருக்கிறது. அது மனித மரபணுவில் பூமியின் சரித்திரத்தை, விலங்கின சரித்திரத்தை பின்னோக்கிச் செல்லுதல்.


இந்த விதமான ஆராய்ச்சியில் தெரிய வந்திருப்பது என்னவென்றால் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கூட பூமியில் நாகரீகமடைந்த இனங்கள் வாழ்ந்திருக்கின்றன என்பதுதான். அப்படியானால் அவர்கள் யார்? இப்போது அவர்கள் எங்கே? நாமெல்லாம் யார்? அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? இப்படிப் பல கேள்விகள் விடை தெரியவராமல் அறிவு சார் தளங்களைத் திணறடிக்கின்றன. பல மில்லியன் டாலர்கள் கொட்டி ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அவர்கள் குறித்த தகவல் மத வளர்ப்பில் அழிந்த நூல்களில் இருந்திருக்கலாம் என்பது தான் அறிவியல் உலகின் பதைப்பாக இருக்கிறது. மத வளர்ப்பு குறித்து, இப்போது போல் வேறெப்போதும் மனித இனம் குற்ற உணர்வு கொண்டிருக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவு. மத வளர்ப்பு குறித்து செலவு செய்யப்படும் ஒவ்வொரு நாழிகையும், ஒவ்வொரு மனித ஆற்றலும் எதிர்காலத்தில் குற்ற உணர்வுக்கு மட்டுமே இட்டுச் செல்லும் என்பதும் திண்ணம்.

ஒரு மதத்தை, பிற மத நூல்களை அழித்து வளர்ந்தது எப்பேற்பட்ட தவறு என்பதை கடந்த சில நூற்றாண்டுகள் மனித இனத்துக்குப் புரிய வைத்திருக்கிறது எனலாம்.

நம் எல்லோருக்கும் ஒரு மதம் நிச்சயமாகத் தேவை என்றால் அது அறிவியல் மட்டும் தான் என்பதை இனி வரும் காலங்கள் நிரூபிக்கும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை. நாம் எத்தனை விரைவில் இதைப் புரிந்துகொள்கிறோம் என்பதை வைத்துத்தான் நம் மூளைச்சூடு தீர்மானிக்கப்படும்.

Thursday 17 October 2024

Halley's Comet!

 Comet Tsuchinshan அக்டோபர் 20 தேதி வரை வானில் தெரியும் என்கிறார்கள். அதன் வெகு நீ......ளமான சுற்று வட்டப்பாதையை (80000 ஆண்டுகள்) கணக்கில் கொண்டால் ஒப்பீட்டளவில் ஹாலீஸ் காமட்டின் 75 ஆண்டுகள் சுற்றுவட்டப்பாதை ஒன்றுமே இல்லை எனலாம்.


ஆயினும், ஹாலீஸ் காமட்டை கிரேக்கத்தில் கி.முக்கு முன்பே கண்டுவிட்டதாக பிரிட்டீஷ் நூலகத்தில் இருக்கும் பாபிலோனியன் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால், அப்போது அது மீண்டும் மீண்டும் பூமியை அண்மிக்கும் காமட் என்பது தெரியாமல் அதன் ஒவ்வொரு அண்மையையும் தனித்தனி காமட் வரவாகத்தான் குறித்து வைத்திருந்திருக்கிறார்கள்.


காமட் தெரிந்தால் ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்கிற அளவில் மட்டுமே அப்போதைய புரிதல் இருந்திருக்கிறது. 


அதன் பிறகு வந்த கோபர்னிகஸின் கணக்குகள் தாம் விண்வெளியில் தோன்றும் கற்களின் துல்லியமான இருப்பிடம், பயணப்பாதை ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் கணக்குகளை உள்ளடக்கி வெளிவந்தன. உண்மையில் இந்தக் கணக்குகள் தான் அப்போதைய விடிவெள்ளி எனலாம். இந்தக் கணக்குகள் மட்டும் இல்லையென்றால் விண்ணில் தோன்றும் பலவற்றைத் தொடர்புபடுத்த இயலாமல் எல்லாவற்றையும் தனித்தனி நிகழ்வுகள் என்கிற அளவில் புரிந்துகொண்டிருந்திருப்போம். கொபர்னிகஸ் தான் முதன் முதலாக சூரியமை மையமாகக் கொண்ட உலகை முன்மொழிந்தார்.


கோபர்னிகஸுக்கு ஒரு மாபெரும் சல்யூட்.


கோபர்னிகஸின் கணக்குகளின் அடிப்படையில் வளர்ந்த வானியலின் அடுத்தடுத்த கட்டமாக, ஹாலீ தான், 1531, 1607 and 1682 ஆகிய வருடங்களில் வந்த காமட்டின் வரவுகளில் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து, அது அனைத்திலும் வந்தது ஒரே காமட் தான் என்பதைக் கண்டுபிடித்தார். அதனால் அந்தக் காமட்டுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அவர் மட்டும் அதைக் கண்டுபிடித்திருக்காவிட்டால், ஒரே காமட்டை பல்வேறு பெயர்களில் நாம் அழைத்துக் கொண்டிருந்திருப்போம்.