என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Tuesday, 27 January 2015

கதையும் நிஜமும் - 2


கதையும் நிஜமும் - 2


'போலீஸ் வந்துவிட்டால்' என்ற தலைப்பில் என் சிறுகதை ஜூலை 2010 ல் திண்ணையிலும், சிங்கப்பூரின் வல்லினத்திலும் வெளியானது. வல்லினத்தில் தேதி சரிபார்த்துக்கொள்ளுங்கள்.(http://www.vallinam.com.my/issue20/story1.html)

http://ramprasathkavithaigal.blogspot.in/2010/07/blog-post_06.html


இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, 15.04.2013 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் பக்கம் 11ல் 'கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை' என்ற தலைப்பில் வெளியான பெட்டிச் செய்தியின் பிரதி இங்கே.




மீதியை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.



இதனால், சொல்லிக்கொள்ள விழைவது யாதெனில்,

1. இந்தக் கதையை கொல்கத்தா  விபசார பெண்கள், காவல்துறையினர் வாசித்திருந்தால், இப்படியும் குற்றங்கள் நிகழலாம் என்கிற கோணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கலாம்.

ஆக, ஒரு சமூகம் ஏன் புத்தகங்களை நாட வேண்டும், புத்தக வாசிப்பு ஒரு சமூகத்தில் என்ன விதமான மாற்றங்களை கொண்டுவரும், புத்தக வாசிப்பினால் ஒரு சமூகம் அடையும் நண்மைகள் என்ன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம் ஆகிறது.

Monday, 26 January 2015

கதையும் நிஜமும்



பொதுவாக நிஜத்தில் நடப்பதை கதையாக எழுதுவார்கள். மிகச்சில‌ கற்பனைக் கதைகள், பிற்காலத்தில் நிஜத்திலேயே நடக்கும்.

உங்களில் பலர் நடிகர் பிரசன்னா, சேரன் நடித்த முரண் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு அதன் கதை தெரியும் என்று நினைக்கிறேன்.

பின்வருவது நான் 2009ன் முடிவில் எழுதி, 10 ஜனவரி 2010ல் கீற்று என்றொரு இணைய இதழில் வெளியான எனது கதை.


10 Jan 2010 ல் வெளியானது எனது இந்தக் கதை. இணைய இதழில் தேதியை சரிபார்த்துக்கொள்ளவும்
30 Sep 2011 ல் வெளியானது முரண் திரைப்படம்.

மீதியை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்....