பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்
▼
பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்
▼
தொலைக்காட்சிகளில்
▼
தமிழ் விருதுகள்
▼
English Awards
▼
இலக்கிய இதழ்கள்
▼
ஆனந்த விகடன்
▼
குங்குமம் வார இதழ்
▼
ராணி வார இதழ்
▼
குமுதம் வார இதழ்
▼
கல்கி
▼
Tuesday, 13 September 2011
கவனிப்பாரின்றி
கவனிப்பாரின்றி
சுற்றிலும் இருளாய்
மத்தியில் வட்டவொளியென
இரவைப் போலவே
அரிதாரம் பூசியிருந்தது
அந்த ரயில் நிலையம்...
அனாதையாய் ரயில் நிலையத்திற்கு
காவலாய் நிற்கின்றன சில
மின் கம்பங்கள் அருகருகே...
மின் கம்பங்களின் தலையில்
வட்ட ஒளியைச்சுற்றிச்சுற்றி
விட்டில் பூச்சிகள் ரீங்கரிக்க
கீழே குட்டைத்தண்ணீரில்
குவிந்துகிடக்கிறது பாலொளி
கவனிப்பாரின்றி...
- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)
