பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை.
எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம்.
- எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்
▼
பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்
▼
தொலைக்காட்சிகளில்
▼
தமிழ் விருதுகள்
▼
English Awards
▼
இலக்கிய இதழ்கள்
▼
ஆனந்த விகடன்
▼
குங்குமம் வார இதழ்
▼
ராணி வார இதழ்
▼
குமுதம் வார இதழ்
▼
கல்கி
▼
Thursday, 3 July 2025
Rebuild
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது.
நம்மளைச் சுத்தி தினம் தினம் குற்றங்கள் நடந்துட்டு தான் இருக்கு. எல்லாத்தையும் நாம கேள்விப்பட்டுட்டு தான் இருக்கோம். அந்தக் குற்றங்கள் நமக்கு நடக்காத மாதிரி நம்மளை நாம தகவமைச்சுக்கிட்டு தான் இருக்கோம். நம்ம சுற்றத்துல, நம்மாளு, வேத்தாளு,வேண்டியவன், வேண்டாதவன்னு தரம் பிரிச்சு நமக்கு வேண்டியவங்களுக்கு மத்தியில ஒரு வாழ்க்கையை நாம அமைச்சுக்கிறோம்.
ஆனா, அது எல்லாத்தையும் மீறி சில சமயங்கள்ல, நாம யாரை நல்லவன்ன்னு நினைச்சோமோ, யாரை வேண்டியவன்னு நினைச்சோமோ, யாரை நம்மாளுன்னு நினைச்சோமோ அவுங்களால தான் நமக்கு பொல்லாப்பும் நடந்துடும். நம்மோட கற்பிதங்களுக்குள்லெல்லாம் அடங்காதது தான் விதி, வாழ்க்கை எல்லாம்.
எவ்வளவு தான் திட்டமிட்டு வாழ்க்கையைக் கொண்டு போனாலும், நடக்கக்கூடாதது நடக்கும் போது, அதுல விழ வேண்டி வந்துடலாம். அது யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம். 'எனக்கெல்லாம் நடக்காது'ந்னு நம்மள்ல யாராச்சும் நினைச்சா, அவுங்க இன்னும் 'விழல'ந்னு தான் அர்த்தம். இதுவரை விழலன்னா, இனிமேல் விழ அதிக வாய்ப்பிருக்குன்னு அர்த்தம்.
எல்லார் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்துல விழ வேண்டி இருக்கும். சின்ன வயசுல விழறதுல இருக்கிற சாதகம் என்னன்னா, எழுந்தா, அதுக்குமேல விழ வேண்டிய தேவை இல்லாத ஒரு நீண்ட நெடுங்காலம் கிடைக்கும். வயசான காலத்துல வீழ்ச்சியை சந்திக்கிறதுல இருக்கிற பிரச்சனை என்னன்னா, எழறதுக்கான தெம்பே இருக்காது. So, சின்ன வயசுல விழறது ஒரு வகையில நல்லது. Its better to fall at an young age.
நமக்கு தெரிய வேண்டியது எல்லாம், விழுந்தா எப்படி எழுறதுங்குறது தான். Build பண்றது ஒரு பெரிய விஷயம் தான். ஆனா,அதை விட பெரிய விஷயம் Rebuild பண்றது. 'Rebuild' பண்ண கத்துக்கோங்க. இந்த உலகம் Build பண்ண ஆயிரத்தெட்டு வித்தை கத்துத் தரும். அதுல, நம்மாளு, வேண்டியவங்கிறதெல்லாம் வித்தைகள். ஆனா, Rebuild? அதை நிச்சயமா இவங்க யாரும் கத்துத்தர மாட்டாங்க? ஏன்னா, Rebuild பண்ண வேண்டிய இடத்துக்கு உங்களைத் தள்றவங்களே இவுங்களாத்தான் இருப்பாங்க...