என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Monday, 10 March 2025

ஜாம்பி மரபணுக்கள்

ஜாம்பி மரபணுக்கள்

கொஞ்ச நாள் முன்பு தானே ஜாம்பி கிரகங்கள் பார்த்தோம். ஆனால், ஜாம்பி மரபணுக்களும் இருக்கின்றன. அதென்ன ஜாம்பி மரபணுக்கள்?

மனிதன் இறந்த பிறகு, உடலிலுள்ள எல்லா செல்களும் தனது இயக்கத்தை நிறுத்திவிடுகின்றன அல்லவா? அதுதான் இல்லையாம். சில செல்கள் மீண்டும் இயங்கத்துவங்குகின்றன. மரணித்த பூத உடலில் உயிரே இல்லாவிட்டாலும், இந்தச் சில செல்கள் தொடர்ந்து இயங்குகின்றனவாம்.

கிட்னி மாற்று அறுவை சிகிச்சைகளில் ஒன்றைச் சொல்வார்கள். சம்பந்தப்பட்ட மனித உடல் மரணத்தை தழுவிய சில மணி நேரங்களுக்குள் உறுப்பை அவ்வுடலிலிருந்து எடுத்து விட வேண்டும். இன்னும் சொல்லப்போனால், சாலச் சிறப்பு என்பது, அந்த மனித உடல் உயிருடன் இருக்கையிலேயே உறுப்பை எடுத்து விடுவது. ஏனெனில், மனித உடல் மரணித்த பிறகு எடுக்கப்படும் உறுப்புகளில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது.

ஒரு பூத உடல் மரணத்தைத் தழுவுகையில் அது உடலிலுள்ள எல்லா செல்களுக்கும் எப்படித் தெரிகிறது என்பது மருத்துவ உலகமே வியக்கும் ஒன்று. இப்படி மரணித்த பிறகு, உயிர்த்திருக்கும் மரபணுக்களை ஜாம்பி மரபணுக்கள் என்கிறார்கள். இது பெரும்பான்மையாக உறுப்பு மாற்று சிகிச்சைகள், ஒரு சில குற்ற வழக்குகளில் எந்த நொடியில் துல்லியமான மரணம் நிகழ்ந்தது என்பன போன்றவற்றைக் கண்டுபிடிக்க இந்த ஜாம்பி மரபணுக்கள் பயன்படுவதாகச் சொல்கிறார்கள். 

மரணித்த பிறகும் உயிர்த்தெழும் மரபணுக்களா! என்று அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது? நம் உடளே ஒரு மாபெறும் மாயாஜாலம் தான். தினம் தினம் இப்படி ஒரு மாயாஜாலத்துடன் தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம்.