12 பிப்ருவரி அதிகாலை என் அப்பா அனுப்பிய குறுஞ்செய்தியில் தான் எனது நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதே தெரிய வந்தது. 14ம் நாள் மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வந்து விருதைப் பெற்றுக்கொள்ளும்படி என் தந்தைக்கு அலைபேசியில் தகவல் சொல்லியிருக்கிறார்கள். விருதை நேரில் சென்று பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்தாலும் இத்தனை குறுகிய கால இடைவெளியில் விமானப் பயணத்திற்கு நேரமே இல்லை என்பதால் அப்பா-அம்மாவையே எனக்கு பதிலாக விருது வாங்கிக்கொள்ள அனுப்பி வைக்க வேண்டியதாகிவிட்டது. கொஞ்சம் முன்னமேயே தெரிவித்திருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை தான். விருதை நேரில் பெற பெருவிருப்பம் இருந்தும் இயலாமல் போவது இது இரண்டாவது முறை: முதலாவது 2022க்கான ஜீரோ டிகிரி இலக்கிய விருது.
பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்
▼
பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்
▼
தொலைக்காட்சிகளில்
▼
தமிழ் விருதுகள்
▼
English Awards
▼
இலக்கிய இதழ்கள்
▼
ஆனந்த விகடன்
▼
குங்குமம் வார இதழ்
▼
ராணி வார இதழ்
▼
குமுதம் வார இதழ்
▼
கல்கி
▼
Thursday, 15 February 2024
வாவ் சிக்னல் - தமிழக அரசு விருதை செய்தித்துறை அமைச்சர் திரு மு.பெ சாமிநாதன் அவர்களிடமிருந்து என் தந்தை பெற்றுக்கொண்டார்.
என் 'வாவ் சிக்னல்' நூலுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலுக்கான விருதை செய்தித்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் திரு மு.பெ சாமிநாதன் அவர்களிடமிருந்து என் தந்தை என் சார்பில் பெற்றுக்கொண்டார்.
