என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Sunday, 16 October 2022

புராதான ஏலியன்கள் - விமர்சனம் - Boje Bojan

 புராதான ஏலியன்கள்  - ராம்பிரசாத் -அறிவியல் சிறுகதை தொகுப்பு -பதிப்பகம் ,நியூ லாஜிக் பப்ளிஷர்ஸ்  - பக்கங்கள் 142-  முதல் பதிப்பு ,2022

புத்தகம் பற்றி :

மொத்தம் 142 பக்கங்களும் 10 தலைப்புகளும் கொண்டு இருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் எதிர் கால தொழிநுட்பங்களை  மையமாக கொண்ட கதைகளே எழுதபட்டு இருக்கிறது  அதற்காக எழுத்தாளர் எடுத்து கொண்ட உழைப்பு என்பது இந்த புத்தகம் படிக்கும் பொது நாம் தெரிந்து கொள்ள முடிகிறது . புத்தகத்தில் உள்ள எல்லா தலைப்பு கதைகளும் சிறப்பாக இருக்கிறது அதில் சில கதைகளை பற்றி பார்ப்போம்.

1) முதல் சிறுகதை தொகுப்பான சேஷம் என்னும் கதை ஒரு பெண்ணுக்கும்  பாம்பின்  மரபணு கொண்ட ஸ்டுவர்ட்  என்ற ஆணுக்கும்  நிகழும் உறவு பற்றியும் அதன் பிறகு நடக்கும் சமபவங்களே இந்த கதையின் கரு பொதுவாக மனித மரபணு  இல்லமால் விலங்கின் மரபணு கொண்டு எதிர் கால மனிதர்களை உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி இப்போதும் ஒரு தியரி நிலையில் தான் இன்றும் இருக்கிறது ஒரு வேலை அப்படி பட்ட ஒரு சம்பவம் வெற்றிகரமாக நிகழ்ந்து அதன் மூலம் ஒரு மனிதன் பிறந்தால் இந்த சமூகம் அதை ஏற்றுக்கொளுமா கொள்ளாத என்ற கேள்விக் ஒன்றை மையமாக கொண்டு எழுத பட்டுஇருக்கிறது இந்த கதை.

2) குளம் : மூன்றாவது சிறுகதையாக இருக்கும் குளம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிறுகதை என்று இதற்கான காரணம் என்ன என்று பார்ப்பதற்கு முன் இதன் கதையை பார்த்து விடலாம் தஞ்சை மாவட்டம் தள்ளாகுளம் என்று கிராமத்தில் ஒரு குளத்தில் கரும்பள்ளம் தோன்றி இருக்கிறது என்ற செய்தி வருகிறது. இந்த செய்தி வந்தவுடன் அந்த ஊருக்கு ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள் அதில் இருவர் தான் தியாகு மற்றும் ராஜிவ் இவர்கள் இருவரும் இந்த மர்மத்துக்கான விடை கண்டுபிடித்தார்களா இல்லயா என்பதை வித்யாசமான முறையில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் பொதுவாக simulation theory என்னும் ஒரு தியரி சில ஆய்வாளர்களால் முன்னிறுத்த படுகிறது அப்படி பட்ட அந்த தியரியை மையமாக வைத்தே இந்த கதையை சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

இது தவிர எப்போதும் பெண் என்ற கதையில் gene editing பற்றியும் , காதல் என்ற கதையில் கால பயணம் பற்றியும் , பிரதி என்ற கதையில் clone பத்தியும் சொல்லி இருக்கிறார் இது தவிர மற்ற கதைகளும் கவனிக்கபட வேண்டிய ஒன்று தான். கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு சிறுகதை தொகுப்பு இது.