என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Monday, 2 November 2020

கவிதைப்போட்டி - நடுவர் - திரு ஏகம்பவாணன் அவர்கள்

பல்வேறு காலகட்டங்களில் பல திரைப்படங்களை என் உறவுக்கூட்டத்தில் குடும்பம் குடும்பமாகப் பார்த்து ரசித்திருக்கிறோம். சிலாகித்திருக்கிறோம். சின்னப்பிள்ளையாக இருந்து கேபிளிலில் பார்த்துப் பழகிய திரைப்படங்கள் அவைகள். அப்படி நாங்கள் பார்த்த பல படங்களின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர் திடீரென உள்பெட்டியில் அணுகினால் எப்படி இருக்கும்? 

அப்படித்தான் இருந்தது திரைப்பட இயக்குநர்கள் சங்க இணைச்செயலாளரும், இணை இயக்குநரும், வசனகர்த்தாவுமான திரு.ஏகம்பவாணன் அவர்கள் முக நூலில் அணுகி தான் நடத்தும் கவிதை குழுவிற்கு 'நீங்கள் நடுவராக இருந்து கவிதைகளைத் தேர்வு செய்து தர வேண்டுகிறேன்'  என்றபோது. 

ஒரு மனிதர் இத்தனைத் திரைப்படங்களில் வேலை பார்த்திருக்க முடியுமா? ஆச்சர்யம் தான். உடனே ஒப்புக்கொண்டுவிட்டேன். சினிமா உலகில் பல திரைப்படங்களில், பல்லாண்டுகளாகப் பல்வேறு பணிகள் செய்திருக்கும் ஒருவருடன், இணையக் கிடைத்த வாய்ப்பாகவே இதைக் கொள்கிறேன். வாய்ப்பளித்த திரு.ஏகம்பவாணன் அவர்களுக்கு எனது நன்றிகளும், அன்பும்.