என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Ram's works in global languages

மெட் செயலி - குறுநாவல்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Wednesday, 15 July 2020

பேய் - சொல்வனம் சிறுகதை

//பூமிக்கிரகத்தில் விலங்குகளும், தாவரங்களும் இரண்டு வெவ்வேறு ராஜாங்கங்களாக உதித்தவை. இவ்விரண்டுக்குமான பிரபஞ்சரீதியிலான இருத்தலிய காரணங்கள் வெவ்வேறானவை. உயிர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மிக அரிதாகவே தோன்றுகின்றன. இந்தப் பின்னணியில்,  நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்.  ஒரு கண்ணாடித்தொட்டியில் சில மீன்களுடன் சில தாவரங்கள் இருப்பதே கண்ணாடித்தொட்டிகளுக்கான அர்த்தங்களுக்கு உருவம் தருகிறது. தொட்டி முழுவதும் மீன்கள் எனில், அந்த மீன்கள் தான் தாவரங்களுமெனில் தொட்டி என்னவாகிறது?  தொட்டியின் பிரபஞ்சரீதியிலான இருத்தலிய காரணிகள் என்னாகின்றன? 
கடலில் இலைகளெல்லாம் ஒன்று கூடி மீன்களின் உருவம் கொண்டு நீந்துகின்றன. ஆனால், நிலத்தில் இவைகள் மனித திசுக்களை, நரம்புகளை, எலும்புகளை தாவரங்களாக்கிவிடுகின்றன. முன்பு இலைகள், மரங்களின் கிளைகளோடு பிணைக்கப்பட்டு இருந்தன. இப்போது எல்லா இலைகளும் ஒன்றுகூடி ஒரு பாரிய திமிங்கிலமாக இந்த ஆழ்கடலில் நீந்திக்கொண்டிருக்கின்றன. கூர்ந்து அவதானிக்கின் இவ்விரண்டிலுமே ஒர் ஒழுங்கு இருக்கிறது. 
ஆனால் இந்த ஒழுங்கு, அந்த விண்கல்லின் வருகைக்குப் பின் சற்றே மாற்றம் கண்டிருக்கிறது. இந்த ஒழுங்கு மாற்றத்தின் நோக்கம் என்ன? ஒழுங்கு என்பதே ஒரு மாறிலி நிலைப்பாடு தான் என்பதா?  நடக்கும் எல்லாவற்றையும் என்னளவில் சீர்தூக்கி யோசிக்குங்கால் எனக்கு இதுவே படுகிறது. ஒழுங்கே ஒரு மாறிலி நிலைப்பாடாக இருக்கிறது. ஒழுங்கற்றதே ஒழுங்காக இருப்பதுவும் கூட அப்படி ஒரு மாறிலி நிலைப்பாடு தானோ?.   //
சொல்வனம் 226வது இதழில் வெளியான 'பேய்' என்ற தலைப்பிலான எனது சிறுகதையிலிருந்து....
சிறுகதையை சொல்வனம் தளத்தில் வாசிக்கப் பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்.