என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Tuesday, 18 February 2020

தமிழும், ஒடுக்கப்படுதலும் - 2

தமிழும், ஒடுக்கப்படுதலும் - 2



எனக்கு நினைவு தெரிந்தே தமிழ் மெல்ல மெல்ல சாகிறது என்ற கூக்குரல் கேட்டபடி இருக்கிறது.

அப்படியானால், தமிழை, உலகை ஆளும் மொழிகளோடும், இந்தியாவுக்குள்ளேயே மட்டம் தட்டும் மொழிகளோடும் ஒப்பீடு செய்தால் தமிழும், தமிழரும் ஒடுக்கப்படுகிறார்கள் என்றே அர்த்தமாகிறது. (ஈழத்தமிழரின் இனவழிப்பையும், அதற்கு மத்திய அரசு காட்டிய மெத்தனத்தையும் கணக்கில் கொண்டால் இந்த கணிப்பு மேலும் மோசமாகக்கூடிய வாய்ப்புக்கள் பிரகாசம்).

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கீடு (reservation) இருக்கிறது.
ஆனால் ஒதுக்கீடுக்கெதிரான பிற ஜாதியினரின் வாதம் என்னவென்றால் ஐயாயிரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மூத்த சந்ததியினரின் தகுதிக்காக , தாழ்த்தப்பட்டவர்களுக்கு நடப்புலகில் ஏன் ஒதுக்கீடு தரவேண்டும் என்பது. உழைப்பவருக்கே பலனும் கிடைக்க வேண்டும் என்பதே சரியான அணுகுமுறையாக பிற ஜாதியினர் முன் வைக்கிறார்கள்.

ஆனால், தமிழின் பெருமை பேச நாம் இன்னும் சங்க இலக்கியங்களையே கையிலெடுக்கிறோம். என் கேள்வி என்னவெனில், ஒரு மொழிக்கான மரியாதை, அந்த மொழியில் ஐயாயிரம் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் இயங்கிய ஆன்றோர்களின் தகுதிக்கா, அல்லது நடப்புலகின் தமிழ் மற்றும் தமிழரின் தகுதிக்கா என்பதுதான்?

'சங்கத்தமிழ் இன்றும் தமிழர்க்கு பயனுள்ளதாக இருக்கிறதா இல்லையா'  என்கிற கேள்வியின் பின் இருக்கும் முரணாக நான் நினைப்பது என்னவென்றால், ஒப்பீட்டளவில் சமமான இரண்டு பிரச்சனைகளுக்கு இருவேறு விதமாக எதிர்வினைகள் ஆற்றப்படுகிறது என்பதே.

தமிழ் நடப்புலகை அதிகம் பேசவேண்டும் என்று நான் கருதுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

உழைப்பவருக்கே அதற்குண்டான பலனும் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படைப் புரிதலைக் கொண்டு இயங்கவே  நான் விரும்புகிறேன். ஏனெனில் அதுதான் அறமும் கூட.