பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்
▼
பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்
▼
தொலைக்காட்சிகளில்
▼
தமிழ் விருதுகள்
▼
English Awards
▼
இலக்கிய இதழ்கள்
▼
ஆனந்த விகடன்
▼
குங்குமம் வார இதழ்
▼
ராணி வார இதழ்
▼
குமுதம் வார இதழ்
▼
கல்கி
▼
Saturday, 5 March 2016
Friday, 4 March 2016
பாதைகளும், முட்களும்
நாம்
முட்கள் நிறைந்த பாதையில்
பயணிக்கையில்
சில முட்கள்
பாதங்களை பதம் பார்த்துவிடுகின்றன...
சில முட்களை
நாம் மிதித்துவிட்டு
பயணத்தை தொடர்கிறோம்...
முட்களுடனான
நம் பரிச்சயங்களைப் பொறுத்து
அவற்றை
ஒரு காயத்துடனோ,
ஒரு அலட்சியத்துடனோ,
ஒரு கவனத்துடனோ,
ஒரு எச்சரிக்கை உணர்வுடனோ
கடந்து போகிறோம்...
முட்களில்லாத பாதைகள்
என்று எதுவுமில்லை...
முட்களின் வகைகள் தாம்
கற்பனைக்கெட்டாவண்ணம்
வலுத்துக் கிடக்கிறது
நம் பாதைகள் எங்கிலும்...

