பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை.
எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம்.
- ராம்பிரசாத் SFWA Member
உலகின் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, இலங்கையில் கடந்த ஜனவரி 6 ம் திகதி முதல் 9 ம் திகதி வரை நடந்தேறியுள்ளது. இதன் சிறப்பம்சமாக, 'முகங்கள்' என்ற தலைப்பில் உலகம் முழுவதிலிருந்தும் 50 எழுத்தாளர்களின் 'புலம்பெயர்வு' என்ற கருத்தை முன்வைப்பதான சிறுகதைகளைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பு புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பில் நான் எழுதிய 'இருத்தல் தொலைத்த தமிழ்' என்ற தலைப்பிலான சிறுகதையும் இடம்பெற்றுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி கிடைத்தவுடன் அச்சிறுகதையை வலையேற்றம் செய்யக் காத்திருக்கிறேன். வாய்ப்பளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நட்புடன்,
ராம்ப்ரசாத்
புத்தகத்தின் பெயர் : முகங்கள் சிறுகதை : இருத்தல் தொலைத்த தமிழ் ஆசிரியர் : ராம்ப்ரசாத் விலை : 15 டாலர்
"அதிதி" தொண்டு நிறுவனம் சார்பில் குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட தமிழ் சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய 'விதை' சிறுகதை மூன்றாம் பரிசை வென்றுள்ளது. தொண்டு நிறுவனத்தின் அனுமதியுடன் அச்சிறுகதையை கூடிய விரைவில் வலையேற்றம் செய்யக் காத்திருக்கிறேன்.
வாய்ப்பளித்த அதிதி தொண்டு நிறுவனத்திற்கும், வாழ்த்தி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.