அவள்
http://youthful.vikatan.com/youth/rampoem160209.asp
கோடையில் பட்டப்பகலில்
கரு கரு இருளில்
பளிங்கு வெள்ளை நிலவு ...
பர்தாவில் அவள் ....
*************************************************
தார் ரோட்டிலும்
தாமரை மலரும் ...
பேருந்துக்கென நீ நிற்பதால்...
*************************************************
ஓடுகிற நதியில்
மலர்ந்தது தாமரை ...
குளிக்கிறாள் என்னவள் ...
*************************************************
அவள் கருவிழி சூரியன்
பார்த்தே மலரும்
தாமரை நான் ....
*************************************************
பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்
▼
பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்
▼
தொலைக்காட்சிகளில்
▼
தமிழ் விருதுகள்
▼
English Awards
▼
இலக்கிய இதழ்கள்
▼
ஆனந்த விகடன்
▼
குங்குமம் வார இதழ்
▼
ராணி வார இதழ்
▼
குமுதம் வார இதழ்
▼
கல்கி
▼
Sunday, 15 March 2009
சமூகம் - யூத்புல் விகடன்
சமூகம்
http://youthful.vikatan.com/youth/ram270209.asp
சூரியனின் உஷ்ணம்
ஏற ஏற
பகல் பொங்கி,
நுரைக்க ஆரம்பித்திருந்த
காலை ..
விடியலின் போது
அழகிய பெண்ணொருத்தி
இமைகளில் இட்டு கொள்ளும்
கருமை போல படர
ஆரம்பித்திருந்த இரவு...
இடைப்பட்ட
குறுகிய நேரத்தில்
எத்தனை ஆயிரம்
மனிதர்கள் ...
ஒவ்வொருவருக்கும்
எத்தனை ஆயிரம்
முகங்கள் ...
முகமூடி கொண்டு
முகத்தை மூடிக்கொண்டு
திறமையாய் நடிக்கும்
முகங்கள் ...
ஏமாறுபவன் பாவியாம்
ஏமாற்றுபவன் அப்பாவியாம் ...
முகமூடிகளை பார்த்தே
உச்சு கொட்டுகிறது
சமூகம்...
முகமூடிகளுக்கென்று
தர முத்திரை கொண்டு
நிஜ முகங்களை தரம்
பிரிக்கும் முட்டாள்
சமூகம்...
வளர்ப்பதென்றால் சுய நலம் ...
வளைப்பதென்றால் விளை நிலம்...
இப்படியே கழிகிறது
பலருக்கு
முன்னேற்ற அளவுகோல் ...
பாசம் ஒரு முழம்
பந்தம் ஒரு முழம்
என்று கணக்கு பார்க்கிறது
ஒரு வட்டாரம் ,
நட்பென்று பெயர்
சூட்டிக்கொண்டு....
இரக்க உள்ளம்
கை அளவு...
இருக்கும் உள்ளங்கள்
உள்ளங்கையளவு ...
உலகம் இவ்வளவுதான்
என்று நினைத்துவிடுகிறது
மனம்...
அது அப்படிதான்
என்று சொல்லி சிரிக்கிறது
சமூகம்...
சீர்தூக்கி ஆராய்ந்ததில்
நாம் இருக்கவேண்டிய சமூகம்
இப்படி இருக்கவேண்டியதில்லை
என்பதே உண்மையென்றே
தோன்றுகிறது ...
ராம்ப்ரசாத், லண்டன்.
http://youthful.vikatan.com/youth/ram270209.asp
சூரியனின் உஷ்ணம்
ஏற ஏற
பகல் பொங்கி,
நுரைக்க ஆரம்பித்திருந்த
காலை ..
விடியலின் போது
அழகிய பெண்ணொருத்தி
இமைகளில் இட்டு கொள்ளும்
கருமை போல படர
ஆரம்பித்திருந்த இரவு...
இடைப்பட்ட
குறுகிய நேரத்தில்
எத்தனை ஆயிரம்
மனிதர்கள் ...
ஒவ்வொருவருக்கும்
எத்தனை ஆயிரம்
முகங்கள் ...
முகமூடி கொண்டு
முகத்தை மூடிக்கொண்டு
திறமையாய் நடிக்கும்
முகங்கள் ...
ஏமாறுபவன் பாவியாம்
ஏமாற்றுபவன் அப்பாவியாம் ...
முகமூடிகளை பார்த்தே
உச்சு கொட்டுகிறது
சமூகம்...
முகமூடிகளுக்கென்று
தர முத்திரை கொண்டு
நிஜ முகங்களை தரம்
பிரிக்கும் முட்டாள்
சமூகம்...
வளர்ப்பதென்றால் சுய நலம் ...
வளைப்பதென்றால் விளை நிலம்...
இப்படியே கழிகிறது
பலருக்கு
முன்னேற்ற அளவுகோல் ...
பாசம் ஒரு முழம்
பந்தம் ஒரு முழம்
என்று கணக்கு பார்க்கிறது
ஒரு வட்டாரம் ,
நட்பென்று பெயர்
சூட்டிக்கொண்டு....
இரக்க உள்ளம்
கை அளவு...
இருக்கும் உள்ளங்கள்
உள்ளங்கையளவு ...
உலகம் இவ்வளவுதான்
என்று நினைத்துவிடுகிறது
மனம்...
அது அப்படிதான்
என்று சொல்லி சிரிக்கிறது
சமூகம்...
சீர்தூக்கி ஆராய்ந்ததில்
நாம் இருக்கவேண்டிய சமூகம்
இப்படி இருக்கவேண்டியதில்லை
என்பதே உண்மையென்றே
தோன்றுகிறது ...
ராம்ப்ரசாத், லண்டன்.