சுவாரஸ்யங்கள்
ரயில் தண்டவாளங்களையொட்டி
குவிந்துகிடக்கும் கற்கள்
காந்தமென சொல்லக்
கேட்டகாலங்களில்
என் பயணங்களில்
ஜன்னலோர சுவாரஸ்யங்களுக்கு
பஞ்சமிருந்ததில்லை...
இந்த சுவாரஸ்யங்களே
இப்படித்தான்...
காந்தமெனப்படுவதில்
அரண்மனை சிம்மாசனமென
அறுதியிட்டு இருந்தது
கல்லெனப்படுகையில்
காணாமற் போய்விடுகிறது...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
#நன்றி
உயிர்மை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5156)
