Saturday, 17 September 2011

மின்வெட்டு


மின்வெட்டு


ஆலமரத்தினடியில்
மழைக்கு ஒதுங்கியிருந்தது
அந்த ரயில் நிலையம்...


வலுத்த மழையில் நனைந்தவைகளனைத்தும்
இப்போதும் வெலுக்கத்துவங்கியிருந்தது...


மேகங்கள் ஏதும்
முட்டிக்கொள்ளவில்லையென்றாலும்
மின்னல் வெட்டியது
ஆலமரத்தடியில் மட்டும்...

கருகிய ரயில் நிலையத்தினின்று
வெளிப்பட்டது சிம்னி விளக்கினூடே
ஒரு மெல்லிய மின்னல்...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)